சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-8

சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

What lessons may we learn from Jesus’ example of humility?

“பிலி 2:8 – “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”

E111 [P1]-E112

2. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டகரமான ஆலோசனைகளை சாத்தான் நம்முடைய ஆண்டவராம் இயேசுவிடம் கூறினான் – ஆலயத்தின் உச்சியிலிருந்து ஜனங்கள் காணும்படி குதித்து, எந்த விதமான சேதமும் இன்றி தப்பித்தால், நிச்சயமாக இவர் ஒரு அதிசயப்பிறவி என்று ஜனங்கள் நம்பி, அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வார் என்று கூறினான். ஆனால் இப்படிப்பட்ட யோசனைகள் அனைத்தும், தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு முற்றிலும் முரண்பாடானது என்று அறிந்து, நீதியின் கோட்பாடுகளை இயேசு கடைப்பிடித்தார். சாத்தான் தவறாக வசனங்களை பயன்படுத்தினாலும், அவர் கொஞ்சமும் தயங்காமல், தேவனுடைய கிருபைகளை சோதிக்காதபடிக்கு தேவனுடைய வசனங்களைக் கொண்டு சாத்தானை முறியடித்தார். தன்னுடைய நிலையைக் குறித்து அவர் எண்ணாமல், சடுதியில் பதில் அளித்தார். ஏனெனில், அவருடைய தந்தையின் வல்லமையை பற்றி அவர் முழுமையாக அறிந்திருந்தார். தேவன் மேல் வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கை, தெய்வீக கட்டளையின்றி, எந்த அபாயத்தையும் வருவிக்காது. வீணாக பிதற்றுவதோ, அல்லது மற்றவர்களின் முன்னிலையில் தாங்கள் மெச்சிக்கொள்வதற்காகவோ இவைகள் செய்யப்படவில்லை.

ஆண்டவரின் சகோதரர்களுக்கு இப்படியான சோதனைகள் நிச்சயமாக வரும், அப்பொழுது நம்முடைய இரட்சிப்பின் அதிபதி நமக்கு முன் வைத்து போன பாடங்களை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதற்காக நாம் தேவையற்ற ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு, கிறிஸ்துவின் தைரியமான போர்வீரர்கள் என்று நம்மை நாம் மேன்மையாக எண்ணிக்கொள்ளக்கூடாது. “துணிகரமான தீச்செயல்கள்” உலகத்தின் மத்தியில் மட்டும் அல்ல ஆங்காங்கே தேவனுடைய பிள்ளைகள் மத்தியிலும் காணப்படுகிறது. இவைகளை தவிர்க்க தேவனுடைய ஜனங்கள் அதிக தைரியத்தோடே போர்களை நடப்பிக்கவேண்டியதாக இருக்கிறது. உலகம் பாராட்டுவதற்காக வேலை செய்வதல்ல, மாறாக உலகம் பகைப்பதற்காகவும், உபத்திரவப்படுத்துவதற்கான வேலைகளை செய்வதற்கு அழைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவமானத்தை சகிக்கவும், இகழ்ச்சிகளை தாங்கவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரட்சிப்பின் அதிபதியை பின்பற்றுபவர்கள் அவருடைய அடிச்சுவடுகளின் படியே நடக்கவேண்டும். இயல்பான மனிதன் ஆச்சரியப்பட்டு, வியப்படையவும் அளவிற்கு மிக பெரிய அற்புதங்களை நடத்தி, மகத்துவமான காரியங்களை செய்வதை காட்டிலும், தேவனுடைய பணிகளின் நிமித்தமாக, வரும் உலகபிரகாரமான அவமானங்களையும், இகழ்ச்சிகளை உதறித் தள்ள நமக்குள் விசேஷித்த தைரியம் தேவைப்படுகிறது.

இடுக்கமான பாதையின் வழியாக செல்பவர்கள் சுயசித்தத்தை எதிர்ப்பதற்கு நடப்பிக்கும் யுத்தமே மிக முக்கியமானதாகும். தங்களுடைய சித்தங்களை பரலோக தந்தையின் விருப்பத்திற்கு முழுமையாக சமர்பித்து, அவைகளை காத்து, தங்களுடைய இருதயத்தை அவைகளை ஆளச்செய்து, கூடுமானால், பூரணமான மனிதனுடைய நியாயமான விருப்பங்களையும், குறிக்கோள்களையும் நசுக்கி, தங்களுடைய சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, தங்களுடைய பூமிக்குரிய சகலவிதமான விருப்பங்களையும் தேவனுக்காகவும் அவருடைய பணிக்காகவும் முற்றிலுமாக பலிசெலுத்தவேண்டும். நம்முடைய இரட்சிப்பின் அதிபதி இப்படிப்பட்ட சோதனைகளை ஜெயித்து வெற்றி அடைந்தார், அவருடைய சகோதரர்களும் இப்படிப்பட்ட பாடுகளை அனுபவிக்கவேண்டும். “தன் ஆவியை அடக்காத மனுஷன் (தன்னுடைய சித்தங்களை தேவனுடைய விருப்பத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்காதவர்கள்) மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.” அதேபோல, தவறான விசுவாசம் கொண்டு ஆலயத்தின் உச்சியிலிருந்து குதிப்பவர்களும், தேவனுக்காக என்று சொல்லிக்கொண்டு, அவருடைய திட்டத்திற்கு மாறான காரியங்களை நடப்பிப்பவர்களும் இப்படியாகவே இருப்பார்கள். தேவன் மேல் வைக்கும் விசுவாசம், குருட்டுதனமாக எதையும் நம்பி ஏமாறாது. மேலும், தேவனுடைய பாதுகாப்பையும், பராமரிப்பையும் குறித்து, வரம்புமீறிய காரியங்களை கற்பனை செய்யாது. மாறாக, இந்த உலகத்தின் காரியங்கள், பிசாசின் தந்திரங்கள் மற்றும் மாம்சத்தை மேற்க்கொண்டு ஜெயிக்க, தேவனுடைய அற்புதமான விலையேறப்பெற்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்தின் சரியான பாதையில் ஓடி தெய்வீக வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்ப்படியச்செய்யும்.

E423 [ P 1]

தங்களுடைய ஆதிமேன்மையை காத்துக்கொண்ட தூதர்கள் தேவனுடைய சித்தத்தை விசுவாசத்தோடு நடப்பித்து, மனுஷனுக்கு ஈடுபலியாக தங்களை சந்தோஷமாக செலுத்துவதற்கு தங்களை ஒப்புக்கொடுத்திருப்பார்கள் என்பதற்கு சந்தேகமே இல்லை. ஆனால் இப்படிப்பட்ட காரியத்தை செய்வதற்கு சோதனைகளில் உச்சகட்டத்தை எட்டி தேவன் மேல் வைத்த விசுவாசத்தை நிரூபிக்கவேண்டியதாக இருந்தது. மேலும், தங்களுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு தேடக்கூடியவருக்கு (சாத்தான்) வீழ்ச்சியையும், தங்களையே தாழ்த்தி, பரலோக பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து அவருடைய திட்டத்தை நிறைவேற்றக்கூடியவர்களை அவர் மிக மேன்மையான நிலைக்கு உயர்த்தக்கூடிய ஒரு தெய்வீக நோக்கம் இதில் அடங்கியிருந்தது. எனவே, இந்தத் தெய்வீக திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும், தேவன் இந்த உலகத்தின் மேல் வைத்த அன்பிற்காகவும், இந்தத் தெய்வீக வாய்ப்பை பயன்படுத்தி, தன்னுடைய குமாரனின் கீழ்ப்படிதலையும், அன்பையும், மனத்தாழ்மையையும், இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி, தன்னுடைய ஒரே பேறான குமாரனை மகிமைப்படுத்தினார்.

R2201 [col. 2 P3,4]

“நான் உன்னை கழுவாவிட்டால், என்னிடத்தில் உனக்கு பங்கில்லை என்ற நம்முடைய ஆண்டவராம் இயேசு கூறினார். இங்கு “கழுவுதல்” என்ற வார்த்தை மனத்தாழ்மையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும், நேரங்களிலும் இந்தக் கோட்பாட்டை, நன்மைக்கு ஏதுவாக கடைப்பிடிக்க வேண்டும். கூடுமானால், சரீர அங்கங்களுக்கு முடிந்த வரைக்கும் தாழ்மையோடு எல்லா வகையான ஊழியங்களையும் செய்யவேண்டும். அவைகளை ஆண்டவருக்கு செய்வதைபோல் செய்யவேண்டும்.

ஆண்டவரின் பணி முடிந்தபின் அவர் அதனுடைய முக்கியத்துவதை விவரித்தார். முதலாவது மனத்தாழ்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அவர் அங்கு செயலாற்றினார். அவருடைய உண்மையான அங்கத்தினர்களுக்கு எவ்வளவு இழிவான தொண்டுகளைச் செய்ய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை செய்யவேண்டும் என்று காட்டினார். அடுத்து, கால்களை கழுவுவதில் ஒரு மிக பெரிய சத்தியம் அடங்கியிருந்தது. சொல்லப்போனால், ஆண்டவரால் முன்னமே சுத்தகரிக்கப்பட்டவர்கள் அதாவது விசுவாசத்தின் மூலமாக சகலத்திலும் நீதிமானின் நிலையை பெற்றவர்களாக இருந்தாலும், இந்த உலகத்தில் இருக்கும் வரையில் சில மாம்சமான அசுத்தங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஞானஸ்நானம் பெற்று, நீதிமானாக்கப்படும் நிலைமை நீடித்த நாட்களுக்கு தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளப்படவேண்டும். அதாவது ஒவ்வொருவருடைய கால்களும் (நடைகள்) ஜலத்தை அடையாளப்படுத்தும் வசனத்தினால் அடிக்கடி சுத்திகரிக்கப்படவேண்டும். (எபே 5:26) சபையின் ஒவ்வொரு அங்கத்தினர்களும், ஒருவர் மேல் ஒருவர் கவனமுள்ளவர்களாக தங்களை பரிசுத்தத்திலும், நீதியிலும், காத்துக்கொண்டு, உலகம், சாத்தான் மற்றும் மாம்சத்தினால் வரும் சோதனைகளினால் விழாதபடிக்கு ஒருவருக்கொருவர் தாங்கி, ஜெயிக்க முயற்சிக்க வேண்டும்.

R2450 [col.1 P3 and col2 P2]

சடங்காக நடத்தப்பட்ட ஞாபகார்த்தமான இராபோஜனமும், சடங்காக அனுசரிக்கப்பட்ட ஞானஸ்நானமும் ஒரே விதமான முக்கியத்துவம் பெற்றது என்று சில விளக்கம் சொல்லுவதை தவறு என்று நாம் யோசித்தோம். இவைகளுக்குள் எந்த விதமான ஒற்றுமையும் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திற்கும் தாழ்மை மற்றும் சாந்தத்தின் கோட்பாடுகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு சுத்திகரிப்பு, அல்லது எந்தவித உதவிகள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்பட்டால், அவர்களின் சகோதரர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த வேலைகளை செய்யகடமைப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாக ஆண்டவரின் ஆவியை பெற்றவர்கள் அவரைப் போலவே மகிழ்ச்சியோடு இக்காரியங்களை நடப்பிப்பார்கள். ஆனால் இப்பணிகளை செய்யும் தேவ ஜனங்கள் முதலாவது தங்களுடைய கால்களை கழுவி சுத்திகரித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதற்குபின் மற்றவர்களை சுத்திகரிக்க முயற்சிக்கவேண்டும். ஆகவே இயேசு நமக்கொரு மாதிரியின் மூலம் நமக்கு கட்டளைகளை விட்டு சென்றார்.

ஆகவே உண்மையில் இயேசுவை பின்பற்ற விரும்புவோர், அவருக்குள் இருந்த சாந்தம், அமைதல், மனத்தாழ்மை மற்றும் சரீர அங்கத்தினர்களுக்கு ஊழியம் செய்யக்கூடிய மனநிலை – அனைத்தையும் மிக தெளிவாக உணர்ந்து, துல்லியமாகவும் பின்பற்றவேண்டும். இந்த முழு சிந்தனை அவருடைய வார்த்தைகளில் அடங்கியுள்ளது – “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், (இந்த கோட்பாடுகளை வாழ்க்கையின் அனைத்திலும் பொறுத்திக்கொள்ள அறிந்திருந்தால்) இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” (யோவான் 13:17)

R3495 [col.2 last P]

கிணற்றண்டையில் இயேசு அமர்ந்திருக்கையில், தண்ணீர் மொண்டுக் கொள்ள வந்த சமாரிய பெண்ணிடம் இயேசு பேசின காரியங்கள் – சுவிசேஷ யுகத்தின் தெய்வீக சத்தியத்தின் மிக முக்கியமான ஒரு காரியத்தை சுட்டிக்காட்டுகிறது. அநேக சந்தர்பங்களில் நம்முடைய ஆண்டவர் குறிப்பிட்ட காரியங்களை, குறிப்பிட்ட ஜனங்களுக்கு சாதாரணமாக கூறியுள்ளார். அவரை பின்பற்றுபவர்களை இது அதிகமாக ஈர்த்தது. உண்மையில், சுவிசேஷ யுகம் முழுவதிலும் நம்முடைய ஆண்டவரின் கோட்பாடுகள் மிக எளியோரிடத்தில் சொல்லப்பட்டு வந்தது. “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.” ஆனால் தேவன் உலகத்தில் இழிவானவர்களையும், விசுவாசத்தின் ஐசுவரியவான்களையும் தெரிந்துக்கொண்டார். ஆகவே தேவனுடைய கிருபையால், இயேசுவின் மூலம் தெய்வீக சமாதானத்தை அறிந்திருக்கிறோம். எனவே, இந்த உலகத்தின் இழிவான காரியங்களைக் கொண்டு மேன்மையான காரியங்களை சிருஷ்டிக்க நோக்கமாகி, அதன் வழியாக தம்முடைய மகிமையை பிரதிபலிக்கவும், அவரை துதிக்கும் துதி, நித்திய நித்தியமாக கிருபையின் அடையாளமாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொண்டவர்களாக மகிழ்ந்து களிக்கூறுவோம், நம்மை நாம் தாழ்மைப்படுத்துவோம்.