Q-5
“2 பேது 1:6 “ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்..”
R2037 (col.1 P7)
இந்த அறிவு, ஓர் உண்மையும், நன்மையுமான இருதயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காலப்போக்கில் “சுய கட்டுப்பாடு” என்ற கனியைக் கொடுக்கும்.” தனக்குள் நம்பிக்கையாக இருப்பவன் தன்னை சுத்திகரித்துக் கொள்ளுகிறான். தன்னைத்தான் கட்டுப்படுத்தி பழைய புளித்த மாவை புறம்பே கழித்துப்போடுகிறான். “இப்படியாக நமக்குள் சுய கட்டுப்பாடு இருந்தால், நமக்குள் பொறுமை வளர்ச்சி அடையும். மற்றவர்களிடம் காட்டப்படும் இரக்கமும், பொறுமையுடன் நமக்குள்ளே வளர்ச்சி அடைய நாமே நமக்கு ஆசிரியர்களாக இருப்போம். இப்படிப்பட்ட பொறுமை, வளர்ச்சியடைந்தால், நம்மை அடுத்த மேன்மையான குணலட்சணமாகக் குறிப்பிடப்படும் அன்புடன் கூடிய தேவபக்தியை நமக்குள் அதிகரிக்கும். இந்த ஒரு நிலையில் அவருடைய சகல விதமான சிந்தைகளும், வார்த்தைகளும், கிரியைகளும் தேவனுடைய அன்பாக நம்முடைய இருதயங்களில் பொழியப்படும். இது நமக்குள் சகோதர சிநேகத்தை வளர்ச்சியடையச் செய்யும். தேவனுடைய அன்பில் நிலைநின்று, சத்தியம் மற்றும் நீதி என்ற அடிப்படையில் சகோதரர்கள் மேலும், அயலகத்தார் மேலும் சகோதர அன்பு அதிகரிக்கும். இப்படிப்பட்ட சகோதர அன்பு தேவனுடைய கிருபைகளை இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதற்கு வழிவகுத்து பிரதான குணமாகிய தெய்வீக அன்பை நமக்குள் நிலை நாட்டும். தேவன் பேரில் நாம் கொண்டுள்ள அன்பு, இது தூய்மையானதும், ஆழமானதும், உண்மையானதுமாக இருக்கும். இது எந்த விதமான தீமையையும் எண்ணாது. மற்றவர்களை எளிதில் குற்றம் சாட்டாது, எப்பொழுதும் சத்தியத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கும். இன்றைய காலகட்டத்தில், இதுவே ஒரு கிறிஸ்தவன் அடையும் உச்சக்கட்ட நிலையாகும். கிருபையின் மேல் கிருபை பெற்று, மங்காத அன்பில் வளர்ந்து உயிர்த்தெழுதலின்போது கிடைக்கப்பெறும் புதிய சரீரத்தில் பூரணப்படுவார்கள். “