ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-12

ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?

Why is self-control an essential qualification in an Elder?

உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ் சாட்டப்படாதவனும், தன் இஷிடப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மது பானப்பிரியமில்லாதவனும், அடியாதவலும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், அந்நியரை உபசரிக்கிறவலும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியள்ளவலும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்…”

F251 [P2]

“நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே.” (1 தீமோத்தேயு 5:17,18) என்று நாம் வாசிக்கிறோம். இந்த வார்த்தைகளின் வலிமையால் பெயர் சபை, ஆளும் மூப்பர்களின் வகுப்பை உருவாக்கியுள்ளது. மேலும் அனைத்து மூப்பர்களுக்கும் ஒரு ஆளும் அதிகாரம் அல்லது சகோதரர்கள் மத்தியில் ஒரு சர்வாதிகார நிலையை கோரியது. “ஆளுகை” என்பதற்கான இத்தகைய வரையறை, வேதத்தின் அனைத்து விளக்கக்காட்சிகளுக்கும் முரணானது. ஒரு மேற்பார்வையாளராக அல்லது மூப்பராக பதவியை வகித்த தீமோத்தேயு, “முதிர் வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும் புருஷரைச் சகோதரரைப்போலவும்… புத்திசொல்லு” என்று அப்போஸ்தலரால் அறிவுறுத்தப்பட்டார். “ஒருவனையும் தூஷியாமலும், சுண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.” ஒரு தன்னிச்சையான ஆட்சி அல்லது சர்வாதிகாரங்களை இங்கு நிச்சயமாக அனுமதிக்காது. சாந்தம், கனிவு, நீடிய பொறுமை, சகோதர அன்பு, பாசம் ஆகியவைகளே முப்பர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் முக்கிய தகுதிகளாக இருக்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் மந்தைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அவர்கள் சர்வாதிகாரமாக இருக்கவேண்டுமானால், அனைவரும் சர்வாதிகாரமாக இருக்கவேண்டும் என்பதே மந்தைக்கு உதாரணமாக இருக்கும் அதேநேரத்தில் அவர்கள் சாந்தமாகவும், நீடிய பொறுமையாகவும், கனிவாகவும், அன்பாகவும், இருந்தால், அனைவரும் அந்த மாதிரிக்கேற்ப இருப்பார்கள். மூப்பர்கள் ஏற்றுக்கொண்ட சேவையில் பொறுப்புகளுக்கு எந்த அளவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு கனத்தையம் மரியாதையையும் வழங்கப்பட வேண்டும் என்று பரிசீலிக்கப்பட்ட பத்தியின் நேரடி அர்த்தத்தை இங்கு காட்டுகிறது. எனவே நாம் இந்த பத்தியை இவ்வாறு வழங்கலாம்:- முக்கியமான மூப்பர்கள், குறிப்பாக போதிப்பதிலும், கற்பிப்பதிலும் கடினமாக உழைக்கக்கூடியவர்கள், இரண்டு மடங்கு மரியாதைக்கு தகுதியானவர்களாக கருதப்படவேண்டும்.

R2157 [col. 1 P1]

கூட்டங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில், “நாவின்” தகுதி, இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி பார்க் கப்படக்கூடாது. கடுமையான நாவுகளை கொண்டவர்களை அல்ல, சாந்தமானவர்களையும், தங்களுடைய நாவுகளை “கட்டுப்படுத்தி”, தேவனுடைய வார்த்தைகளை மட்டுமே மிக கவனமாக பேசக்கூடிய நாவுகளை உடையவர்களை தேர்தெடுக்கவேண்டும். இத்தகைய நாவுகள் கட்டுப்பாடுடன் இருக்கும், மற்றவை அடிக்கடி மற்றவர்களை காயப்படுத்தி, விரட்டும். தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எனவே நாம் “சத்தியத்தை அன்போடு பேசவேண்டும்” என்பதே தெய்விக அறிவுறுத்தலாகும்.

F249 [P2]

அவர்கள் தாராளகுணமுள்ளவர்களும், தூய்மையானவர்களும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவிகள் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் தங்கள் சொந்த குடும்பத்தை எந்த அளவுக்கு நடத்திவருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும், ஏனென்றால், அவர் தனது குழந்தைகளுக்கான கடமையில் தவறினால், அவருடைய சபையின் தேவனுடைய பிள்ளைகள் மத்தியில் சொல்லப்படும் ஆலோசனைகளிலும், பொது ஊழியங்களிலும் அவர் ஞானமற்றவராகவோ அல்லது செயலற்றவராகவோ இருக்கிறார் என்று நியாயமாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும். அவர் இரட்டை நாக்கு அல்லது ஏமாற்றக் கூடியவராகவோ அல்லது சண்டையிடுபவராகவோ அல்லது சர்ச்சைக்குரிய நபராகவோ இருக்கக்கூடாது. சபைக்கு வெளியே உள்ளவர்களிடையே அவர் நல்ல பெயரைப் பெற்றவராக இருக்கவேண்டும். இந்த உலகம் பரிசுத்தவான்களை நேசிதாகவோ அல்லது சரியாகப் பாராட்டுவதாகவோ இல்லை, ஆனால் குறைந்தபட்சம், நேர்மையை மதித்து நேர்மை, ஒழுக்கம், உண்மைத்தன்மை போன்ற அவர்களின் குணத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு விடியத்தையும் சுட்டிக்காட்ட முடியும். சபையில் உள்ள மூப்பர்களின் எண்ணிக்கையை பொருத்தவரையில் எந்த கூரம்பும் இல்லை.

R2447 [col. 2P2]

சபையில் உள்ள பொது ஊழியர்கள் ஓரளவிற்கு அவர்களின் “நாவுகளின்” செல்வாக்கின் பயன்பாட்டை எச்சரிக்கையுடன் கவனிக்கவேண்டும். நன்மைக்காகவா அல்லது தீமைக்காகவா, தேவனுடைய ஜனங்களை ஆசீர்வதித்து அவர்களை கட்டியெழுப்புவதற்காகவா அல்லது அவர்களை காயப்படுத்தி சபிப்பதற்காகவா, என்பதில் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தருடைய சரீரத்தின் நாவுகளாக இருக்கும் அனைத்து ஊழியக்காரர்களும் அவருடைய ஆவியை உடையவர்களாக இருப்பது எவ்வளவு அவசியமாக இருக்கிறது! அவைகளின் செல்வாக்கு சபையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கணிசமான அளவில் வெளியேயும் கேட்கப்படுகின்றன. மேலும் அதே கொள்கை சபையின் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும், அவரது நாவை பயன்படுத்துவதில் பொருந்தும். அவர் அதை புத்திசாலித்தனமாக அல்லது புத்தி இல்லாமல், பரலோக ஞானத்துடன் அல்லது பூமிக்குரிய ஞானத்துடன் பயன்படுத்தலாம். அவர் அதை சண்டைமிடுவதற்காகவும், சகோதரர்களின் விசுவாசம் மற்றும் நற்குணத்தை தகர்க்கவும், அன்பையும் நம்பிக்கையையும் தூக்கி எறிந்துவிடவும் அல்லது ஆவியின் நற்கனிகளை வளர்க்கவும் பயன்படுத்தலாம். தீய விஷயங்கள் மற்றும் விழ்ந்துபோன இயல்பின் குணங்களினால் கிளறி விடுவதால், முழு சரீரத்தையும், சபையையும், அசுத்தப்படுத்தி, இயற்கையின் போக்கையே தீமிட்டுக் கொளுத்துவதற்கு, நாவுக்குப் பெரும் வாய்ப்புகள் உண்டு என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளின் உண்மையை எத்தனை பேர் நிரூபித்திருக்கிறார்கள்! தேவனுடைய ஜனங்களில் வெகு சிலரே. தங்களுடைய நாவை தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படித்தி, தாங்கள் தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் நன்மையையும், நன்மையை மட்டுமே செய்யும் அளவிற்கு அதை வென்றிருக்கிறார்கள்! அன்பார்ந்தவர்களே, இந்த ஆண்டு நமது உடலின் இந்த மிக முக்கியமான உறுப்பைக் கட்டுப்படுத்துவதில் தெய்வீக கிருபையால் (நமக்கு உதவுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள) பெரும் முன்னேற்றத்தைக் காண்பதற்கு தீர்மானிப்போம், மேலும், இருளில் இருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த கர்த்தாதி கர்த்தருக்கும், தேவாதி தேவனுக்கும் ஊழியம் செய்வதில் அதை முழுமையாக அடியணியச் செய்து கீழ்ப்படுத்துவோம்.

R2654 [col.1 P6]

இவர்கள் பேசும் போது, கிறிஸ்துவின் சரீரம் அனைத்தும் கேட்பதற்கு கவனம்செலுத்த வேண்டும். இவர்கள் அமைதியாக இருக்கும் இடத்தில் பேச யாருக்கும் அதிகாரம் இல்லை. மந்தையை போஷித்து அதற்கு பணிச் செய்வதற்கும் விசேஷமாக (எந்த பாடத்தின் மீதான நம்முடைய ஆண்டவர் மற்றும் அப்போஸ்தலர்களின் அறிவுறுத்தல்களைச் சுட்டிக்காட்டுவதற்கு) கற்பிப்பதற்கு ஒரு மூப்பர் தேர்ந்தெடுக்கப்படுகையில், அத்தகைய மூப்பர், தேவனுடைய வார்த்தையினால் ஏவம்பட்ட அதிகாரத்தின் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதில் கிறிஸ்துவின் சரீரத்திற்கு விசேஷமாக உதவியாக இருக்கவேண்டும். இருப்பினும், அதிகாரத்தை பிரயோகிக்காமல், அதிகாரத்தின் வார்த்தைக்கு தன் கூட்டாளிகளின் கவனத்தை ஈர்ப்பதில் கிறிஸ்துவின் சரீரத்தின் எந்த உறுப்புக்கும் அதே பாக்கியம் உள்ளது. சபையில் எந்த விதத்திலும், அதிகாரபூர்வமான பதவியைப் பயன்படுத்தாமல், “மந்தைக்கு முன்மாதிரியாக” இருக்கவேண்டும் என்று அப்போஸ்தலர் மூப்பர்களுக்கு அறிவுறுத்துகிறார். இந்த முப்பர்களை எந்த அளவுக்கு சகோதரர்கள் பிரதிபலிக்கிறார்களோ அந்த அளவுக்கு கர்த்தருடைய ஆவி மந்தையில் மேலோங்கி, ஆவியின் கனிகளும் கிருபைகளும் வெளிப்படும் அளவுக்கு சாந்தம், பொறுமை, சகோதர சிநேகம் போன்ற விஷயங்களில் முப்பர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும். இதற்கு மாறாக, கர்த்தருடைய ஜனங்களின் ஒரு சிறிய கூட்டத்தின் முப்பர் அல்லது தலைவர், சுய நம்பிக்கை, பிடிவாதமான நடத்தை, தொளி அல்லது பார்வை, ஆகியவற்றில் சுயநலவாதியாக இருந்தால், அவரது செல்வாக்கின் கீழ் சண்டைகள், போட்டிகள்… யார் பெரியாவர் போன்ற சணிடை சச்சரவுகள் உருவாகும் என்பதை நாம் அறிவோம்.