சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-1

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

What is the importance of self-control?

நீதிமொழிகள் 25:28 “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.”
நீதிமொழிகள் 16:32 “பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன், பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.”E112 [P1]: – BOLDசுய விருப்பத்திற்கு எதிராக போர் தொடுப்பதே இந்த இடுக்கமான வழியில் நடப்பவர்களின் முக்கிய போர்களில் ஒன்றாகும். தங்களுடைய சித்தங்களை, பரலோக தகப்பனின் சித்தத்திற்கு முழுமையாக கீழ்ப்படித்தி, இயற்கையான பூரண மனிதனுக்கு எழும்பக்கூடிய சுய சித்தங்களையும், இலக்குகளையும் நசுக்கி, இப்படிப்பட்ட தீப்பொறிகளை அணைத்து, தேவனுடைய சித்தமே அவர்களின் இருதயங்களை ஆளவும், அவர்களின் சரீரங்கள் மற்றும் அனைத்து பூமிக்குரிய நலன்களையும் தேவனுடைய வேலைகளுக்காக பலி செலுத்தவும் வேண்டும். இவைகளே நம்முடைய இரட்சிப்பின் அதிபதி வெற்றிப் பெற்ற சோதனைகள் மற்றும் அதன் விருதுகளாகும். இதுவே அவருடைய “சகோதரர்களின்” சோதனைகளும் கூட “பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் (தேவனுடைய சித்தத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தல்) உத்தமன்” விசுவாசத்தின் தவறான கருத்தோடு, ஆலயத்தின் உச்சியிலிருந்து குதிப்பவர் அல்லது வேறு ஏதாவது முட்டாள்தனமான காரியங்களைச் செய்பவரை காட்டிலும் இவர் பெரியவர், தேவன் மீதான உண்மையான விசுவாசம் குருட்டு நம்பிக்கை மற்றும் அவரது தற்காலிக பராமரிப்பை மதிக்கும் ஆடம்பரமான அனுமானங்களில் இல்லை. மாறாக, இது தேவன் கொடுத்திருக்கும் அனைத்து மகா பெரிய மற்றும் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களிலும், அமைதியான நம்பிக்கையிலும், உலகின் பல்வேறு முயற்சிகள், மாம்சம், பிசாசு ஆகியவற்றை எதிர்க்கும் விசுவாசிகளுக்கு அவரது கவனத்தை திசை திருப்ப ஒரு நம்பிக்கையிலும், மற்றும் தெய்வீக வார்த்தையில் நமக்கு குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் வரிகளை கவனமாக பின்பற்றுவதிலும் உள்ளது.R2878 [col 1 P1,2]: – BOLDஅப்படியானால், நாம் எதை எதிர்த்துப் போராடுவோம்? அது ஆண்டவரின் தயவு மற்றும் அவருடைய சேவையை நோக்கி சிறப்பாக வழிநடத்தப்படுவதற்காகவா? நம்முடைய போர் தொடுக்கும் குணம் பாவத்திற்கு எதிராகவும், முதலில் நம்மிடமிருந்து அதன் பயிற்சி தொடங்கவேண்டும், என்று நாம் பதில் அளிக்கலாம். சுயத்துடனான போர் மிகப்பெரிய போராகும். அதற்கான தேவனுடைய வார்த்தை நம்மிடம் உள்ளது. “பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் (தன் மனதின் சொந்த விருப்பமும், சித்தமும்) உத்தமன்.” ஏனென்றால் போர் தொடுக்கும் குணத்தை சரியான திசையில், அதாவது சுய கட்டுப்பாட்டை பயிற்சி செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறாக, பாவம் மற்றும் சுயநலத்துடன் போராடுவதில் நமக்கு கணிசமான அனுபவம் கிடைத்த பின்னர், நம் சொந்த கணிகளில் இருந்த உத்திரத்தை வெளியேற்றி, கோபம், வெறுப்பு, பகை மற்றும் சண்டைகளை நம் இருதயத்தில் இருந்தும், மாம்சத்திலும் இருந்தும் வெளியேற்றிய பின்னர், இந்த கடுமையான போர் மற்றும் அனுபவத்தின் மூலம், சகோதரர்களுக்கு உதவவும், நம் அண்டை வீட்டுக்காரர்களுக்கு அவர்களின் கஷ்டங்களில் உதவவும் நாம் தயாராக இருப்போம். அதாவது அவர்களின் கஷ்டங்கள் மற்றும் பெலவீனங்கவை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவலாம்.தனது சொந்த பலவீனங்கள் மற்றும் பிழைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பு மற்றவர்களின் பாவங்களுக்கு எதிராக போரிடுகிறவர் தவறு செய்யக்கூடியவராக இருப்பார். மற்றவர்களின் போராட்டங்களில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு முதலில் ஒருவருக்கு மனத்தாழ்மையும், அனுதாபமும் தேவை, முதலில் தன்னுடன் போராடி, எதிராளி எவ்வளவு வலிமையானவன் என்பதை கற்றுக்கொண்டு, மாம்சத்தின் அனைத்து வழிகளிலும் பாவம் மற்றும் சுயநலம் எவ்வளவு முழுமையாக வேரூன்றியுள்ளது என்பதையும் முழுமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒருவர் இந்த மனத்தாழ்மையையும், இரக்கத்தையும் பெற்றுகொள்ள முடியாது. அவர் தனது சொந்த இயலாமைகளை மேற்கொள்வதற்கான தெளிவான புரிதலைபெற்று கொள்ள தன்னுடைய சில போராட்டங்களில், மிக மோசமான நிலைகளுக்கு சென்று, தேவையான கிருபைகளையும் இரக்கங்களையும் பெற பரலோக கிருபாசனத்தண்டைக்கு கட்டாயமாக செல்ல வேண்டியதாக இருக்கிறது. அந்தப்படி நாம் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறோம், நாம் நம்முடைய சுய நம்பிக்கையில் பலமுள்ளவர்களாக இருக்கும் போது, நாம் ஆண்டவரிடம் செல்வதை புறக்கணிப்பதினால், நாம் பலனற்று, போராட்டத்தில் தோல்வி அடையவும், பாவமாகிய எதிரியினால் மேற் கொள்ளப்படுவதற்கும் பொறுப்புள்ளவர்களாகிறோம். – (எபிரெயர் 4:16, 2 கொரிந்தியர் 12:10) என்று அப்போஸ்தலர் சொல்லுவது போல் அவருக்கு இது தேவை.R2892 (sub hond] வெற்றியாளர்களுக்கு வெகுமதிகள்! – SUB HEADINGஇவ்வாறாக, பொய்யான, தகுதியற்ற, அநீதியான, அசுத்தமான மற்றும் இணக்கமற்ற எண்ணங்கள் அனைத்தையும் சலித்து, சோதித்து அவைகளை நிராகரித்தால், அவர்களின் மனதை ஆட்கொள்ள எதுவும் இல்லாமல் இருப்பதை சிலர் உணரலாம், இதை உண்மை என்று பலருடன் சேர்ந்து நாமும் நம்புகிறோம். அனைத்து தீய மற்றும் முறைகேடானவைகள் நிராகரிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டால், அவர்களின் மனம் ஒரு காலத்திற்கு காலியாக இருக்கும் ஆனால் அவர்கள் இந்நிலையில் இருக்கும் நேரத்தில், “நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்களாக”, ஆண்டவர் அவர்களுக்காக வைத்திருக்கும் சத்தியம், தூய்மையான, உன்னதமான போன்ற ஆவிக்குரிய உணவைப் பெற சரியான நிலையில் இருப்பார்கள. மேலே உள்ள அனைத்து முன்மொழிவுகளையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் – தெய்வீக குணம் மற்றும் திட்டத்திற்கு – தன்னை உண்மையுள்ளவர் என்றும், மரியாதைக்குரியவர் என்றும், நீதியுள்ளவர் என்றும், தூய்மையானவர் என்றும் நிரூபிக்கவேண்டும். அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்திப்போம். நாம் தெய்வீக வார்த்தையைப் படித்து, அதன் மூலம், ஒரு தொலைநோக்கியாக, தேவனுடைய வார்த்தையிலும் திட்டத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீக குணத்தின் அழகு, தெய்வீக திட்டத்தின் சிறப்பம்சம்…. யாராலும் அளவிடமுடியாத அதன் நீளம் மற்றும் அகலம் மற்றும் உயரம் மற்றும் ஆழம் மற்றும் பரிசுத்த ஆவியால் பரிசுத்தவான்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்ததையும் மேலும் இயற்கையான மனிதனின் அசுத்தமான எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு பதிலாக, பெற்ற பரிசுத்த ஆவியின் விகிதாச்சாரத்தின் படி பரிசுத்தமான சிந்தை மற்றும் எண்ணங்களை பெறுவதைக் குறித்து நாம் உணர்ந்துகொள்வோமாக. (எபேசியர் 3:18) நம்முடைய வேத பகுதியில், அப்போஸ்தலரால் உரையாற்றப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைவரையும் மதிக்கும் வகையில் அவருடைய வார்த்தையைப் நாம் படிப்பதற்கு எவ்வளவு அருமையான உயர் மதிப்பை தேவன் வைத்திருக்கிறார்! மனதின் அத்தகைய அடக்குதல் ஒரு வெற்றியாகும். அத்தகைய சுயத்தை முழுமையாக கட்டுப்படுதல் ஒரு வெற்றியாகும், இதுவே பெறக்கூடிய மிகப் பெரிய வெற்றியாகும். வசனங்கள் கூறுகிறபடி, பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதிமொழிகள் 16:32) மேலும், நம்முடைய ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவின் வழியாக தேவனுக்கு பிரயமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு நமது குணாதிசய வளர்ச்சிக்குத் தேவையான ஆத்தும ஒழுக்கமே, பரிசுத்தவானகளின் மன ஆரோக்கியத்திற்காக அப்போஸ்தலர் கொடுத்திருக்கும் வைத்தியமுறையாகும்.இராஜ்யத்தில் பங்கு பெறுபவர்கள் இந்த வெற்றியாளர்களே. ஆக, அப்போஸ்தலர் அறிவுறுத்துவது போல – “..நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஒடக்கடவோம்” (எபிரெயர் 12:1,2) அவரே நம் பங்கில் இருப்பவர் என்றும், நமக்கு உதவவும், ஒவ்வொரு கஷ்டத்தையும் சுமந்து செல்லவும், அவருக்கு நம்மை முழுமையாக சமர்ப்பித்தால் நமக்கு முழுமையாக அறிவுறுத்தவும், அதனால் ஒளியில் உள்ள பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில் பங்கடைவதற்கும், அவரே நம்மை நேசித்து தனது சொந்த விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நம்மை விலைக்கு வாங்கினார் என்பதை நினைவில் கொள்வோம். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்” என்று வேதம் பொதுவாக மனம், விருப்பம், இருதயம் ஆகியவற்றைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இப்போது அழைக்கப்பட்டு, பந்தயத்தில் ஓடக்கூடிய பரிசுத்தவான்கள் இதை கடைபிடித்தால், மகிமை, கனம் மற்றும் அழியாமையோடு கூடிய அதிகபட்சமான ஜீவனை பெறுவார்கள் என்று பொருள்.அதை புறக்கணிக்கும் போது, சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மறுத்து, சுயநலமான ஆசைகள் நம் மூளையில் கருத்தரிக்கப்பட்டு, தேவனிடமிருந்தும் அவருடைய “இடுக்கமான வழியில் இருந்தும்” விலகி பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை நோக்கி, அதாவது இரண்டாம் மரணத்தை நோக்கி செல்வதை இது பொருள்படுத்தும்.