Q-1
நீதிமொழிகள் 25:28 “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.”
நீதிமொழிகள் 16:32 “பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன், பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.”E112 [P1]: – BOLDசுய விருப்பத்திற்கு எதிராக போர் தொடுப்பதே இந்த இடுக்கமான வழியில் நடப்பவர்களின் முக்கிய போர்களில் ஒன்றாகும். தங்களுடைய சித்தங்களை, பரலோக தகப்பனின் சித்தத்திற்கு முழுமையாக கீழ்ப்படித்தி, இயற்கையான பூரண மனிதனுக்கு எழும்பக்கூடிய சுய சித்தங்களையும், இலக்குகளையும் நசுக்கி, இப்படிப்பட்ட தீப்பொறிகளை அணைத்து, தேவனுடைய சித்தமே அவர்களின் இருதயங்களை ஆளவும், அவர்களின் சரீரங்கள் மற்றும் அனைத்து பூமிக்குரிய நலன்களையும் தேவனுடைய வேலைகளுக்காக பலி செலுத்தவும் வேண்டும். இவைகளே நம்முடைய இரட்சிப்பின் அதிபதி வெற்றிப் பெற்ற சோதனைகள் மற்றும் அதன் விருதுகளாகும். இதுவே அவருடைய “சகோதரர்களின்” சோதனைகளும் கூட “பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் (தேவனுடைய சித்தத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தல்) உத்தமன்” விசுவாசத்தின் தவறான கருத்தோடு, ஆலயத்தின் உச்சியிலிருந்து குதிப்பவர் அல்லது வேறு ஏதாவது முட்டாள்தனமான காரியங்களைச் செய்பவரை காட்டிலும் இவர் பெரியவர், தேவன் மீதான உண்மையான விசுவாசம் குருட்டு நம்பிக்கை மற்றும் அவரது தற்காலிக பராமரிப்பை மதிக்கும் ஆடம்பரமான அனுமானங்களில் இல்லை. மாறாக, இது தேவன் கொடுத்திருக்கும் அனைத்து மகா பெரிய மற்றும் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களிலும், அமைதியான நம்பிக்கையிலும், உலகின் பல்வேறு முயற்சிகள், மாம்சம், பிசாசு ஆகியவற்றை எதிர்க்கும் விசுவாசிகளுக்கு அவரது கவனத்தை திசை திருப்ப ஒரு நம்பிக்கையிலும், மற்றும் தெய்வீக வார்த்தையில் நமக்கு குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் வரிகளை கவனமாக பின்பற்றுவதிலும் உள்ளது.R2878 [col 1 P1,2]: – BOLDஅப்படியானால், நாம் எதை எதிர்த்துப் போராடுவோம்? அது ஆண்டவரின் தயவு மற்றும் அவருடைய சேவையை நோக்கி சிறப்பாக வழிநடத்தப்படுவதற்காகவா? நம்முடைய போர் தொடுக்கும் குணம் பாவத்திற்கு எதிராகவும், முதலில் நம்மிடமிருந்து அதன் பயிற்சி தொடங்கவேண்டும், என்று நாம் பதில் அளிக்கலாம். சுயத்துடனான போர் மிகப்பெரிய போராகும். அதற்கான தேவனுடைய வார்த்தை நம்மிடம் உள்ளது. “பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் (தன் மனதின் சொந்த விருப்பமும், சித்தமும்) உத்தமன்.” ஏனென்றால் போர் தொடுக்கும் குணத்தை சரியான திசையில், அதாவது சுய கட்டுப்பாட்டை பயிற்சி செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறாக, பாவம் மற்றும் சுயநலத்துடன் போராடுவதில் நமக்கு கணிசமான அனுபவம் கிடைத்த பின்னர், நம் சொந்த கணிகளில் இருந்த உத்திரத்தை வெளியேற்றி, கோபம், வெறுப்பு, பகை மற்றும் சண்டைகளை நம் இருதயத்தில் இருந்தும், மாம்சத்திலும் இருந்தும் வெளியேற்றிய பின்னர், இந்த கடுமையான போர் மற்றும் அனுபவத்தின் மூலம், சகோதரர்களுக்கு உதவவும், நம் அண்டை வீட்டுக்காரர்களுக்கு அவர்களின் கஷ்டங்களில் உதவவும் நாம் தயாராக இருப்போம். அதாவது அவர்களின் கஷ்டங்கள் மற்றும் பெலவீனங்கவை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவலாம்.தனது சொந்த பலவீனங்கள் மற்றும் பிழைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பு மற்றவர்களின் பாவங்களுக்கு எதிராக போரிடுகிறவர் தவறு செய்யக்கூடியவராக இருப்பார். மற்றவர்களின் போராட்டங்களில் அவர்களுக்கு உதவி செய்வதற்கு முதலில் ஒருவருக்கு மனத்தாழ்மையும், அனுதாபமும் தேவை, முதலில் தன்னுடன் போராடி, எதிராளி எவ்வளவு வலிமையானவன் என்பதை கற்றுக்கொண்டு, மாம்சத்தின் அனைத்து வழிகளிலும் பாவம் மற்றும் சுயநலம் எவ்வளவு முழுமையாக வேரூன்றியுள்ளது என்பதையும் முழுமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒருவர் இந்த மனத்தாழ்மையையும், இரக்கத்தையும் பெற்றுகொள்ள முடியாது. அவர் தனது சொந்த இயலாமைகளை மேற்கொள்வதற்கான தெளிவான புரிதலைபெற்று கொள்ள தன்னுடைய சில போராட்டங்களில், மிக மோசமான நிலைகளுக்கு சென்று, தேவையான கிருபைகளையும் இரக்கங்களையும் பெற பரலோக கிருபாசனத்தண்டைக்கு கட்டாயமாக செல்ல வேண்டியதாக இருக்கிறது. அந்தப்படி நாம் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறோம், நாம் நம்முடைய சுய நம்பிக்கையில் பலமுள்ளவர்களாக இருக்கும் போது, நாம் ஆண்டவரிடம் செல்வதை புறக்கணிப்பதினால், நாம் பலனற்று, போராட்டத்தில் தோல்வி அடையவும், பாவமாகிய எதிரியினால் மேற் கொள்ளப்படுவதற்கும் பொறுப்புள்ளவர்களாகிறோம். – (எபிரெயர் 4:16, 2 கொரிந்தியர் 12:10) என்று அப்போஸ்தலர் சொல்லுவது போல் அவருக்கு இது தேவை.R2892 (sub hond] வெற்றியாளர்களுக்கு வெகுமதிகள்! – SUB HEADINGஇவ்வாறாக, பொய்யான, தகுதியற்ற, அநீதியான, அசுத்தமான மற்றும் இணக்கமற்ற எண்ணங்கள் அனைத்தையும் சலித்து, சோதித்து அவைகளை நிராகரித்தால், அவர்களின் மனதை ஆட்கொள்ள எதுவும் இல்லாமல் இருப்பதை சிலர் உணரலாம், இதை உண்மை என்று பலருடன் சேர்ந்து நாமும் நம்புகிறோம். அனைத்து தீய மற்றும் முறைகேடானவைகள் நிராகரிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டால், அவர்களின் மனம் ஒரு காலத்திற்கு காலியாக இருக்கும் ஆனால் அவர்கள் இந்நிலையில் இருக்கும் நேரத்தில், “நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்களாக”, ஆண்டவர் அவர்களுக்காக வைத்திருக்கும் சத்தியம், தூய்மையான, உன்னதமான போன்ற ஆவிக்குரிய உணவைப் பெற சரியான நிலையில் இருப்பார்கள. மேலே உள்ள அனைத்து முன்மொழிவுகளையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் – தெய்வீக குணம் மற்றும் திட்டத்திற்கு – தன்னை உண்மையுள்ளவர் என்றும், மரியாதைக்குரியவர் என்றும், நீதியுள்ளவர் என்றும், தூய்மையானவர் என்றும் நிரூபிக்கவேண்டும். அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்திப்போம். நாம் தெய்வீக வார்த்தையைப் படித்து, அதன் மூலம், ஒரு தொலைநோக்கியாக, தேவனுடைய வார்த்தையிலும் திட்டத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீக குணத்தின் அழகு, தெய்வீக திட்டத்தின் சிறப்பம்சம்…. யாராலும் அளவிடமுடியாத அதன் நீளம் மற்றும் அகலம் மற்றும் உயரம் மற்றும் ஆழம் மற்றும் பரிசுத்த ஆவியால் பரிசுத்தவான்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்ததையும் மேலும் இயற்கையான மனிதனின் அசுத்தமான எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு பதிலாக, பெற்ற பரிசுத்த ஆவியின் விகிதாச்சாரத்தின் படி பரிசுத்தமான சிந்தை மற்றும் எண்ணங்களை பெறுவதைக் குறித்து நாம் உணர்ந்துகொள்வோமாக. (எபேசியர் 3:18) நம்முடைய வேத பகுதியில், அப்போஸ்தலரால் உரையாற்றப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைவரையும் மதிக்கும் வகையில் அவருடைய வார்த்தையைப் நாம் படிப்பதற்கு எவ்வளவு அருமையான உயர் மதிப்பை தேவன் வைத்திருக்கிறார்! மனதின் அத்தகைய அடக்குதல் ஒரு வெற்றியாகும். அத்தகைய சுயத்தை முழுமையாக கட்டுப்படுதல் ஒரு வெற்றியாகும், இதுவே பெறக்கூடிய மிகப் பெரிய வெற்றியாகும். வசனங்கள் கூறுகிறபடி, பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதிமொழிகள் 16:32) மேலும், நம்முடைய ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவின் வழியாக தேவனுக்கு பிரயமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு நமது குணாதிசய வளர்ச்சிக்குத் தேவையான ஆத்தும ஒழுக்கமே, பரிசுத்தவானகளின் மன ஆரோக்கியத்திற்காக அப்போஸ்தலர் கொடுத்திருக்கும் வைத்தியமுறையாகும்.இராஜ்யத்தில் பங்கு பெறுபவர்கள் இந்த வெற்றியாளர்களே. ஆக, அப்போஸ்தலர் அறிவுறுத்துவது போல – “..நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஒட்டத்தில் பொறுமையோடே ஒடக்கடவோம்” (எபிரெயர் 12:1,2) அவரே நம் பங்கில் இருப்பவர் என்றும், நமக்கு உதவவும், ஒவ்வொரு கஷ்டத்தையும் சுமந்து செல்லவும், அவருக்கு நம்மை முழுமையாக சமர்ப்பித்தால் நமக்கு முழுமையாக அறிவுறுத்தவும், அதனால் ஒளியில் உள்ள பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில் பங்கடைவதற்கும், அவரே நம்மை நேசித்து தனது சொந்த விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நம்மை விலைக்கு வாங்கினார் என்பதை நினைவில் கொள்வோம். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்” என்று வேதம் பொதுவாக மனம், விருப்பம், இருதயம் ஆகியவற்றைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இப்போது அழைக்கப்பட்டு, பந்தயத்தில் ஓடக்கூடிய பரிசுத்தவான்கள் இதை கடைபிடித்தால், மகிமை, கனம் மற்றும் அழியாமையோடு கூடிய அதிகபட்சமான ஜீவனை பெறுவார்கள் என்று பொருள்.அதை புறக்கணிக்கும் போது, சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மறுத்து, சுயநலமான ஆசைகள் நம் மூளையில் கருத்தரிக்கப்பட்டு, தேவனிடமிருந்தும் அவருடைய “இடுக்கமான வழியில் இருந்தும்” விலகி பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை நோக்கி, அதாவது இரண்டாம் மரணத்தை நோக்கி செல்வதை இது பொருள்படுத்தும்.