Q-7
யாக்.1:3 – “விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோசமாக எண்ணுங்கள்.”
R2792 (col.1P2)
பொறுமை, நீண்ட காலம் பொறுத்துக்கொள்வது பற்றிய முக்கியக் காரியங்களை நாம் பரிசீலிப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தை எப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். “ நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டத்தை பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.” (எபி 10:36) என்று பவுல் குறிப்பிடுகிறார். தேவனுடைய சித்தத்தை செய்வதே நமக்கு சோதனை என்று பொருள் அல்ல. ஆனால் அந்தக் கட்டத்தை எட்டிப்பிடித்து விட்டால், நம்முடைய இருதயங்களிலும், சிந்தைகளிலும், தேவனுடைய நீதி நிலையாக ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அப்போது நாம் எந்தச் சூழ்நிலையிலும் அந்த நீதியில் நிலைத்திருந்து, தேவனுடைய இராஜ்யத்திற்கு ஏற்ற மனநிலையைப் பெறுவோம். “உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” (யாக் 1:3) என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். சொல்லப்போனால், நம்முடைய சோதனைகளில், விசுவாசத்தில் நிலைத்திருந்தால், நமக்குள் நீடிய பொறுமையை உருவாக்கும். அடுத்து, இந்த நீடிய பொறுமையை நாம் சுதந்தரிக்காவிட்டால், நம்முடைய சோதனைகளில், விசுவாசத்தில் திருப்திகரமாக நிலை நிற்கவில்லை என்பது பொருளாகும். இப்படியிருந்தால், நாம் தேவனுடைய இராஜ்யத்திலும் பொருந்துவதற்கு வாய்ப்பில்லை.
R3245 (col.1 P6)
“பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” என்றும் “விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்றும்”, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” என்று அப்போஸ்தலன் விவரிக்கிறார். பொறுமையினால் அநேக நல்ல குணங்கள் வளர்ச்சியடையும் என்று ஆதாரத்தோடு நீருபிக்கப்படுகிறது. தேவனுடைய ஜனங்களுக்குள் பொறுமையானது, விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மேலும் பொறுமையின் அளவு, நமக்குள் இருக்கும் விசுவாசத்தின் அளவை எளிதில் கணித்துவிடும். எப்போதும் பதற்றமாகவும், அமைதியற்ற மனநிலையும் உடைய கிறிஸ்தவர்கள் விசுவாசம் இல்லாதவர்கள். அவர்களுக்குள் விசுவாசம் இருந்தால், தேவனுடைய வாக்குறுதிகள் மேல் நம்பிக்கை வைத்து பொறுமையாக காத்திருப்பார்கள். எல்லா சூழ்நிலையிலும், நமக்களிக்கப்பட்ட பொறுப்புகளை நாம் செய்துவிட்டு, அதற்குண்டானப் பலனையும், காலங்களையும், நேரங்களையும் தேவனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அமைதலோடு காத்திருக்க வேண்டும்.
R3246 (col.2P1)
இன்றைக்குள்ள தேவனுடைய பிள்ளைகள் தேவனுக்காகக் காத்திருக்கும் விசுவாசம், நீடிய பொறுமை, மற்றும் கீழ்ப்படிதல் என்னும் பாடத்தை தங்களுடைய இருதயத்திற்குக் கொண்டுச்செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். தேவன் வாக்களித்த பகிரங்கமான இராஜ்யத்தின் ஸ்தாபனத்திற்கும், அதனால் வரும் ஆசீர்வாதங்களுக்காவும், சமாதானத்திற்காகவும் நாம் நீண்ட காலமாகக் காத்திருக்கிறோம். மனுஷருடைய கோபம் தேவனை துதிக்கும் துதியாக மாறி, தேவனிடத்தில் அவர்கள் செல்வதற்கான வழியை வகுத்து, காலப்போக்கில், ஏற்ற சூழ்நிலை வரும்போது, அவருடைய இராஜ்யத்தில் அனைவரும் சரியான இடத்தைப் பெறும் வரைக்கும் நீடிய பொறுமையோடு நாம் காத்திருக்க வேண்டும்.