அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-13

அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?

What is the relation between love and purity of heart, and how may we purify our hearts?

தீத்து 1:15,16 “சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்னுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப் படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்தநற்கிரியையுஞ் செய்ய ஆகாதவர்களு மாயிருக்கிறார்கள்”

R2517[col.1 P6 to end]:

அசுத்தமான சிந்தைகளினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளோம் தாங்கள் என்று கண்டுபிடித்தவர்கள் எந்த வழியை பின்பற்றி செல்லுவது? – நன்மையை காட்டிலும், தீமையை ஊகிப்பதற்கு மனங்கள் விருப்பம் கொள்கிறது. பொறாமை, சுயநலம், கோபம், கசப்பு, மன்னியாமை போன்ற மனம் உடையவர்கள், தங்களை நேசித்து, புகழ்ந்து பரப்புபவர்களையே விரும்புவார்கள். இவைகளுக்கு ஏதாகிலும் நம்பிக்கை உண்டா? இப்படிப்பட்டவர்களை தேவன் முற்றிலும் புறக்கணித்துவிடுவார் அல்லவா?

தேவன் மகா இரக்கமுள்ளவர், “நாம் அனைவரும் கசப்பான பிச்சிலும் பாவ கட்டிலும்” இருக்கும் போதே நமக்காக அவர் மீட்கும் கிரயத்தை கொடுத்தார். தங்களுடைய தூய்மையற்ற நிலையை கண்டு, தாங்கள் சுத்திகரிக்கப்படவேண்டும் என்று விரும்பக்கூடிய அனைவருக்கும் நம்பிக்கை உண்டு.

“அவரின் இரத்தம் மோச அசுத்தத்தையும் சுத்திகரிக்கும். அவர் இரத்தம் எனக்கு என்றும் இருக்கும்.”

ஆனால் உண்மையான மனம் வருந்துதல் என்பதற்கு செய்ததற்கிரங்கி, சீர்த்திருத்தல் என்பதே பொருளாகும். நாம் சீர் பொருந்துவதற்கு உதவும்படி. இப்படிப்பட்ட நடத்தை சார்பான எல்லா வியாதிகளையும் சுகமாக்க வல்லவராகிய, நம்முடைய பரம வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்று எழுதியிருக்கிறது. அவரால் சுத்திகரிக்கப்பட்ட அனைவரும், “நாங்கள் அனைவரும் வியாதிப்பட்டிருந்ததினால், “அவருடைய பணியை செய்வதற்கு நாங்கள் அனைவரும் “அபாத்திரர்கள்” என்று சொல்லுவது பாதுகாப்பாக இருக்கும். உண்மையில், ஒரு முறை சுத்திகரிக்கப்பட்டு, சேற்றில் புரளும் பன்றியை போல, மீண்டும் பாவத்திற்கு திரும்புவது இன்னும் மோசமான நிலையாகும் ஆனால், பரம வைத்தியரின் மருந்துகளை விடாமுயற்சியோடு முன் எடுத்தது போல தொடர்ந்து எடுத்து கொண்டால் இன்னும் நம்பிக்கையோடிருக்கலாம். மனசான்று, தூய்மையற்ற நிலைக்கு சென்றால் மட்டுமே மிகுந்த அபாயங்கள் நேரிடலாம். ஏனெனில், கசப்பை தித்திப்பு என்றும் தீமையை மற்றும் பகையை, நீதி என்றும், பாவமாகிய சேற்றை அழகுள்ள பரிசுத்தம் என்று நியாயத்தீர்ப்பை திசை திருப்பிவிடலாம். இந்த விதத்தில், இது நம்பிக்கையற்றதாக இருக்கும். சில நல்ல வைத்தியர்கள், இருதயத்தின் அசுத்தங்களுக்கு மாற்று மருந்து அல்லது முறிவு மருந்துகளை ஆயத்தம் செய்திருக்கிறார்கள்.

ஆத்துமாக்களின் நஞ்சுக்கு, நம்முடைய பரம வைத்தியர் சில மாற்று மருந்துகளை குறிப்பிட்டிருக்கிறார். சரியான வழிநடத்துதலின் கீழ், ஒழுங்கான முறையில் இந்த மருந்துகளை உட்கொண்டால், கசப்பான இருதயத்தையும் தித்திப்பாக மாற்றும். பொறாமையை உருவாக்குவதற்கு பதிலாக, அன்பும் அதை சார்ந்த குணமும் வளரும். புறம் கூறுதல், தீமை பேசுதல், பழிச்சொல்லுதலுக்கு பதிலாக, தீங்கு நினையாத அன்பும், அயோக்கியமானதைச் செய்யாத அன்பும், நீடிய சாந்தமும் தயவுமுள்ள அன்பும், தன்னை புகழாத அன்பும், பொறாமை கொள்ளாததும், தற்பொழிவை நாடாத அன்பும் சகலத்தையும் தாங்கும் அன்பும் மற்றும் இது கர்த்தரின் ஆவியும், கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கையின் ஆவியின் பிரமாணமாக உள்ளது. மிக மோசமாக வியாதிப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல, மீண்டும் நல்ல உடல் நலம் பெற்றவர்களின் நன்மைக்காகவும் நாம் அனைவரும் இந்த மருந்துகளை உட்கொள்ளுவோம். சில மருந்துபட்டியலை நாம் காணலாம்.

(1) “அவர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ள வராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” – 1 யோவான் 3:3

நாம் விசுவாசத்தை காத்து கொண்டால், நாம் அவரை போலிருந்து, அவரை கண்டு அவருடைய மகிமையில் பங்கடைவோம் என்ற வாக்குத்தத்தத்தை பெற்ற நாம் தேவனுடைய புத்திரர்களாக தத்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை பற்றி இங்கு குறிப்பிடப்படுகிறது. நம்முடைய சிந்தைகளும், இருதயங்களும் இந்த நம்பிக்கையில் விரிவடையும் போது, அதனுடைய நீளங்களையும், அகலங்களையும், உயரங்களையும், ஆழங்களையும் அளவிடுவதற்கு துவங்கும் போது இது நிச்சயமாக, பரலோக பிதாவின் அன்பும், இரட்சகரின் அன்பும் வானவில் நிறங்களில் நமக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிதாவும் குமாரனும் நம்மை முதலில் நேசித்ததினால், நாம் அவர்களை அதிகபட்சமாக நம்முடைய குறிக்கோளாகிவிடும். மேலும் அதை நாம் ஏற்றவாறு கைமாறு செய்ய தேடி அதை பின்பற்றும் போது, நம்முடைய இருதயங்களில் சுத்திகரிப்பும். தூய்மைப்படுத்தலும் தொடர்ந்து நடைபெறும். சுயாதீனம் மற்றும் அன்பின் பரிபூரண பிரமாணத்தை பார்க்கையில் – நமக்கு கொண்டு வந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த சகலவிதமான சுயநலங்கள் மற்றும் கயமையினிமித்தம் நாம் அதிகதிகமாக வெட்கமடைகிறோம். மேலும், தங்களுடைய உண்மையான வெளிச்சத்தில் இந்த மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகள் என்று கண்டறிந்தபின், சகல விதமான கோபம், பகை, பொறாமை, சண்டை, தீமை பேசுதல், புறம்கூறுதல், வதந்திகள் பரப்புதல், பழிகூறுதல், அவதூறு கூறுதல் போன்றவைகள், நமக்கு அதிகதிகமாக வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கும். இறுதியாக இந்த தீமையான பண்புகளின் சிறிதளவிலானவைகளும், இராஜ்யத்திற்கும், எந்த நற்கிரியைகளை செய்வதற்கு தகுதி இல்லாமல், பொருத்த மற்றவர்களாக நம்மை நாம் காணும்போது, விரைவாக பரவக்கூடிய இந்த சாவுக்குரிய பண்புகளிலிருந்து நாம் விரைந்து ஓடுவோம். நம்முடைய இருதயங்கள் (சித்தங்கள், நோக்கங்கள்) உடனடியாக தூய்மைப்படும். மேலும் நம்முடைய உதடுகளுக்கு மட்டும் அல்ல. நம்முடைய சிந்தையிலும் காவல் வைக்க வேண்டும் அதாவது நம்முடைய வாயின் வார்த்தைகளும் இருதயத்தின் தியானமும் தேவனுக்கு பிரிதியாக இருக்க வேண்டும்.

(2) “அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக் கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்” தீத்து 2:14

நாம் யாரால், எப்போது, எவ்வாறு மீட்கப்பட்டோம் என்ற மிக சரியான சிந்தனைகளை நமக்குள் உருவாக்கவேண்டும். ஆனால் நாம் ஏன் மீட்கப்பட்டோம் என்பதை நாம் மறந்துவிட்டால், இவை அனைத்தும் நஷ்டமாகிவிடும். கல்லறையின் வல்லமையிலிருந்து மட்டுமே இரட்சிக்கப்படாமல், சகல விதமான அநீதியிலிருந்தும் பிரதானமாக இரட்சிக்கப்பட்டோம். மேலும் நம்முடைய ஆணடவர் வெறும் சிறப்பான ஜனங்களை மட்டும் தேடாமல், விசேஷமாக தனிசிறப்பாக சுத்திகரிக்கப்பட்டு, தூய்மையான ஜனங்களை தேடுகிறார். நம்முடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதிபடுத்திகொள்வதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் இந்த மருந்து, நிச்சயமாக, அநீதியிலிருந்து நம்மை துப்புரவாக்கும்.

(3) “அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு” 2 தீமோத்தேயு 2:22

நாம் சரியான துவக்கத்தை மட்டும் அல்ல. சரியான வழியையும் பின்பற்றவேண்டும். ஒரு விநாடிகூட அநீதியை நாம் பின்பற்றிவிடக்கூடாது. எவ்வளவு செலவானாலும் சரி, நீதி மற்றும் நேர்மையை பின்பற்றவேண்டும். ஆனால் இங்கு சிலருக்கு பிரச்சனைகள் எழும்பலாம். நேர்மையான தீர்ப்பை எவ்வாறு எடுப்பது என்பதை அறியாதிருக்கிறார்கள். காணக்கூடியவைகளின் அடிப்படையிலும், வதந்திகளின் அடிப்படையிலும் நியாயத்தீர்ப்பு செய்வதற்கு இணங்கிவிடுகிறார்கள். அல்லது “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் இவனுடைய இரத்தபழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் வருவதாக” என்று கோஷம் இட்ட திரளானவர்களை போல, இவர்கள் பரிசேயர்கள், வேத பாரகரின் நியாயத்தீர்ப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் நீதியை பின்பற்றியிருந்தால், ஆண்டவரின் நல்ல கிரியைகளிலும், மற்றும் ஜீவனுக்குரிய அவருடைய அற்புதமான வார்த்தைகளிலும் அவருடைய நற்குணத்தை கண்டிருந்திருப்பார்கள். அவர் தேவ தூஷணம் சொல்லாதவரும், “பரிசுத்தரும், பாவமற்றவரும். பாவிகளுக்கு விலகினவர்” என்பதை கண்டிருந்திருப்பார்கள். அவர்மேல் பழிசுமத்தினவர், பகையினாலும் பொறாமையினாலும் இவ்வாறு தீர்ப்பு சொன்னார்கள் என்று கண்டிருப்பார்கள்.

மேலும் கர்த்தருடைய கட்டளையை என்றுமே கடைபிடிப்பது மகிவும் அவசியமானது – “நீதியாக தீர்ப்பு செய்யுங்கள், அதை புறக்கணிப்பவர்கள், தங்களுடைய தலையில் மேல் “இரத்தபழியை சுமப்பார்கள் மேலும், பொய்யாக பழிசொல்லியதால், அந்த தண்டனைக்கு பங்காளிகளாவார்கள். ஆண்டவர் நடத்தப்பட்டது போலவே அவருடைய “சகோதரர்களும்” நடத்தப்படுவார்கள். மேலும் நம்முடைய இருதயங்கள் எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு, வதந்திகளினாலும், புறம் கூறுதலினாலும், தீமை பேசுதலினாலும் நாம் பாதிக்கப்படமாட்டோம். கசப்பான வார்த்தைகள் எழுப்பும் கசப்பான இருதயம் கொண்டவர்கள், அன்பின் இனிமையை அல்ல கசப்பான பிச்சை கொடுக்கும் அசுத்தமான நீர் ஊற்றாக இருக்கிறார்கள் என்பதை அதிகதிகமாக உணர்ந்து கொள்வோம்.

அடுத்து வருவது மெய்ப்பற்று, அதவாது விசவாசம், நம்முடைய ஆண்டவர் தம்முடைய சொந்த விசுவாசத்தை அல்லது மெய்ப்பற்றை அறிவித்தார். மேலும், ஒரு சகோதரனை காட்டிலும் மிக நெருக்கமான ஒரு சிநேகிதனை போல தன்னை வெளிப்படுத்துகிறார். மேலும் உலகரீதியான விசுவாசம் கூட கிருபையாக அங்கீகரிக்கப்படுகிறது. விசுவாசமுள்ள ஒரு சிநேகிதன் வழியாக பலர் திருட்டு அல்லது பொய் சத்தியம் செய்வதுண்டு. இப்படிப்பட்டவர்களால், பெரும்பாலும் இதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால், தேவனுடைய வார்த்தை, நீதியை முதல் வைக்கிறது. விசுவாசம், அன்பு மற்றும் சமாதானம், நீதியோடு மட்டுமே இசைந்து செயல்பட முடியும் ஆனால் அநீதி, ஒரு சகோதரனுக்கு எதிராக நிருபிக்கப்படாததினால், அவரை பொருத்த வரையில் நம்முடைய விசுவாசம் அன்பு, சமாதானத்தை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட வேண்டும். உண்மையில், “காரணமில்லாமல்” பகை, அவதூறான பேச்சுக்கள் மற்றும் துன்மார்க்கத்தின் சகல விதமான தாக்கும் பொறி பறக்கும் ஏவுகனைகளுக்கும் அதிகமாக, வெளிப்படுத்த வேண்டும். இந்த விலையேறபெற்ற மருந்து, எதிராளியாகிய சாத்தான் மிக சுறுசுறுப்பாக பயிரிட்டு கொண்டிருக்கும், கசப்பான வேரிலிருந்து முளைக்கும் விஷத்திலிருந்தும், பிச்சிலிருந்தும் நம்முடைய இருதயங்களை விடிவிப்பதற்கு உதவி அளிக்கும்.

நியாயம் இருதயத்தின் பரிசுத்தம், – அநியாயத்தியிலிருந்து விடுதலை.
நீதி இருதயத்தின் பரிசுத்தம் – அநீதியிலிருந்து விடுதலை.
அன்பு இருதயத்தின் பரிசுத்தம் சுய நலத்திலிருந்து விடுதலை.

(4) “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாயிருக்கிற படியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” 1 பேதுரு 1:22

மற்ற மருந்துகளை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த தூய்மை. சத்தியத்தை கேட்பதினால் மட்டும் அல்ல, நம்புவதினால் மட்டும் அல்ல, அதை கீழ்ப்படிந்தால் மட்டுமே பெறமுடியும் என்று குறிப்பிடுகிறது. வெளிப்புறமான பண்டிகை, பழக்கவழக்கங்கள் மற்றும் பளப்பளப்பான பாணியில் இது வெறும் புறப்பண்புக்குரிய கீழ்ப்படிதல் அல்ல. ஆனால், இது சத்தியத்தின் ஆவிக்கு, கீழ்ப்படிவதன் வழியாகவே இந்த தூய்மையை நாம் அடையமுடியும். இதுவே, உண்மையான உட்பொருள். இவ்வணைத்துமே மாய்மால மற்றதும். மெய்யான கிறிஸ்துவின் “சகோதரர்க்கான” அன்பிடம் உங்களை கொண்டு வந்து சேர்த்தது. முதலில் அனைவரையும் நீங்கள் நவநாகரீகத்தோடும், அன்போடும் நடத்தினீர்கள் ஆனால் அதில் பலரை நீங்கள் விரும்பவில்லை. மிக குறைவாக நீங்கள் நேசித்தீர்கள். ஒருவேளை அவர்கள் தரித்திரராகவோ, படுமோசமான நிலையிலோ, அறியாமையிலோ அல்லது விநோதமாக இருந்திருக்கலாம். ஆனால் சத்தியத்தின் ஆவிக்கு கீழ்படியும் போது, விலையேறபெற்ற இரத்தத்தின் மேல் நம்பிக்கை கொண்டு அன்பான இரட்சகரிடம் தங்களை ஒப்புவித்து எந்த இனமானாலும், நிறமானாலும் கல்வியானாலும், வறுமையானாலும் அல்லது வீடற்றவர்களானாலும் சரி அவருடைய வழிநடத்துதலை பின்பற்ற விரும்பும் யாவரும் “சகோதரர்கள்” என்பதை நீங்கள் கண்டுணர்ந்தீர்கள். சகலவிதமான பகை, பொறாமை மற்றும் சுயநலத்திலிருந்து உங்கள் இருதயம் விடுப்பட்ட நிலையை நீங்கள் அடைந்து, மாயமற்றதும், தூய்மையான அன்போடு “நான் அனைத்து சகோதரர்களையும்” நேசிக்கிறேன் என்று நேர்மையோடு கூறும் அளவுக்கு ஆண்டவருடைய ஆவியை முழுமையாக பெற்றிருப்போம்.

இப்போது இந்த நன்மையான வழியிலே இது வரையில் வந்த நமக்கு நம்முடைய இருதயங்களை தொடர்ந்து பரிசுத்தமாக காத்து கொள்வதற்கு – “ஒருவரில் ஓருவர் பரிசுத்தமான இருதயத்தோடு ஊக்கமாக அன்புக் கூறுங்கள்” என்று அப்போஸ்தலர் வழியாக நம்முடைய ஆண்டவர் கூறுகிறார். ஆம். தூய்மையான இருதயங்கள் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒருவேளை, இந்த பரிசுத்தமான அன்பிலிருந்து எதிராளியின் பொய்யான அன்பின் கண்ணிக்குள் நம்மை வழிநடத்திவிடலாம். ஆனால் உண்மையான அன்பு குளிராகவும், வேறு விதமாகவும் இருந்துவிடக்கூடாது. இது அனலாயும், உறுதியாயும்,” சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக்” முழு விருப்பமுடையதாகவும் இருக்கவேண்டும். (1 யோவான் 3:16)

நம்முடைய இருதயங்களாகிய பலிபீடத்தின் மேல், தேவனுக்காக தகனிக்கப்படுவதை போல் இந்த அன்பு தூபமாக ஏறெடுக்கப்படும் போது, எந்த விதமான சுயநலத்திற்கும், பொறாமையான சிந்தனைக்கும் வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் இடமிராது. இந்த ஆவி அனைவரிடமும் மேம்பட்டிருந்தால் இப்படிப்பட்ட “சகோதரர்களின்” அனைத்து கூடுகைகளும் எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கும்! அது அரை (அ) மூன்றில் (அ) நான்கில் ஒரு பங்கில் செல்வாக்கு பெற்றால், நீதி, மெய்ப்பற்று, அன்பு, சமாதானத்திற்காகவும் மற்றும் பொறாமை. கலவரம், அழுக்கு, அவதூறுகள், வம்பு பேச்சுக்கு எதிராக அது வேகமாக கிருபையின் தாக்கத்தை அனைவர் மீதும் பயிற்றுவிக்கும் என்பதை நாம் சந்தேகிக்கலாமா?

இப்பொழுதும், இனி வரக்கூடிய காலங்களிலும், நம்முடைய ஆண்டவரின் பணியை செய்வதற்கு நம்மை சுத்திகரித்து, ஆயத்தம் செய்ய உகந்ததாக இருக்கும் இந்த மருந்துகளை எல்லா சகோதரர்களும் அதிகதிகமாக எடுத்து கொள்ளட்டும்.

அவர்கள் தீமைச்செய்து, தீமையைப் பேசி, தீமையைச் சிந்திக்கும் அளவுக்கு, அவர்களுடைய உள்ளம் மட்டும் அல்ல, அவர்களுடைய மனசாட்சியும் கெட்டுப்போயிருக்கிறது என்று அப்போஸ்தலர் கருதுகிறார். ஏனெனில், அவர்களின் மனசாட்சியும், மனதும் இசைந்து செயல்படுகிறது. மேலும் அவர்கள் குருடாக்கப்பட்டவர்களும், சுயமாக வஞ்சிக்கப்பட்டவர்களும் என்று வேதவாக்கியங்கள் அறிவிக்கிறது. இது என்ன பயங்கரமான நிலைமை, ஆண்டவருடைய ஜனங்கள் அனைவரும், இருதயத்திலும், சிந்தையிலும் மட்டும் அல்ல மனசாட்சியை மென்மையாகவும், ஆண்டவரின் வார்த்தைக்கு மிக நெருக்கமாக ஒத்திருக்க வேண்டியதில் எவ்வளவு கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். கண்டிப்பாக, அடிக்கடி, தேவன் நமக்கு அளித்திருக்கும் அன்பின் பிரமாணத்தின் வரை அளவின்படியே நம்மை நாம் நியாயந்தீர்த்தால் மட்டுமே இந்த நிலைமையை பராமரிக்கமுடியும்.

R3596[col.1 P2,3]: –

பரிசுத்தராக இருக்க வேண்டும் : தேவனிடமும், மனுஷரிடமும் குற்றமில்லாத ஒரு மனசாட்சியை காத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகள், தீமையான வார்த்தையைப் பிறப்பிக்கும், எந்தவிதமான தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள, கிறிஸ்து இயேசுவை உங்கள் மனதிற்கு முன்பாக, உங்கள் முன்மாதிரியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் தீமை நுழைந்தால், அவர் வாக்களித்தக் கிருபைக்காக உங்கள் இருதயத்தை ஜெபத்தில் உயர்த்துங்கள். “என்னுடைய வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரிதியாக இருப்பதாக, என் தேவனே நீரே என் பலன், நீரே என் இரட்சிப்பு” என்ற சிந்தையையும், ஜெபத்தையும் உங்கள் அருகில் தொடர்ந்து காத்துக் கொள்ளுங்கள். “வேத நூலில், பல்வேறு குறிப்பிட்ட கட்டளைகளை கடைப்பிடித்து, பொக்கிஷமாக சேமிக்கும்போது, தெய்வீக பிரமாணத்தின் கீழிருக்கும் கொள்கைகளை புரிந்துக்கொள்வதற்கும், உணர்வுள்ள ஒருமைப்பாட்டில் வருவதற்கும் அதிகதிகமாக முயல வேண்டும்.

இது ஆண்டவரின் வார்த்தைகளிலும் குறிப்பாக குறிப்பிடப்படாவிட்டாலும், நம்முடைய வார்த்தைகள், சிந்தைகள், மற்றும் கிரியைகளில் சரியான மற்றும் தவறான தீர்ப்புகளை தீர்ப்பதற்கு இது உதவும். உண்மையில், எந்த அளவுக்கு நாம், தெய்வீக பிரமாணத்தின் கொள்கைகளை புரிந்து கொண்டு அதோடு உணர்வுள்ள ஒருமைப்பாட்டை அடைகிறோமோ, அந்த அளவுக்கு தெய்வீக வார்த்தையின் ஆவியை நாம் பெறுவோம் – (சங்கீதம் 119:97-105)