CD-EVILSPEAK-Q-2
R2443 (col.2 P2): –
இந்தக் கோணத்திலிருந்து அப்போஸ்தலரின் வாக்கியத்தை காணும் போது, அவருடையக் குற்றச்சாட்டு, இன்றைய கிறிஸ்தவ ஜனங்களுக்கு அபாய ஒலியாயிருக்கிறது. எத்தனை பேர் தங்களுடைய நாவினால் சக கிறிஸ்தவர்களைக் காயப்படுத்துகிறார்கள்? அதே நாவினால் தேவனுக்கு துதிகளையும் செலுத்துகிறார்கள். உடன்படிக்கை செய்த தேவனுடைய ஜனங்கள் வேறு எல்லா பாவங்களை விட இந்தத் தவறை அதிகதிகமாக செய்து கொண்டு வருகிறார்கள். எந்த விதமான உணர்வும் இல்லாமல் இதில் தவறுகிறார்கள். சுவாசிப்பது போல இயல்பாக செய்யப்படும் இந்தத் தவறுகள் அநேகரிடம் காணப்படுகிறது. அவதூறாக பேசுவதையும், தீமையாக பேசுவதையும் எதிர்த்து, வேத வசனங்களில் உள்ள கட்டளைகளை காண்பித்து பிரசங்கிக்கும் அநேகர் உண்டு. இந்தப் பாடங்களை நன்கு புரிந்திருக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் சொந்த நடத்தை அல்லது ஒழுக்கத்தை மறந்தவர்களாக மற்றவர்களைக் குறித்து அவதூறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அநேக வருடங்களாக புது சிந்தையின் கவனத்திற்கும் வராதளவுக்கு இந்தத் தீமை விழுந்துபோன மனித சிந்தையில் ஆழமாக பதிந்திருப்பதற்கு ஆதாரமாக நாம் இதை கூறுகிறோம். ஏனெனில், தேவனுடைய வார்த்தைகளின் படி நடந்து, உண்மையான தேவ ஜனங்களாக இருக்க விரும்புவோர், தங்களை திருத்திக்கொள்வார்கள், ஆனால் இந்தச் சிந்தையில்லாதவர் இந்தப் பாவத்தை கவனியாமல் விட்டுவிடுகிறார்கள்.