CD-FAITH-Q-5
ரோமர் 10:17 “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.”
A13(P 1)
தேவனுடைய நோக்கங்கள் வெளிப்படுத்திய காரியங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் மேன்மையான பணி வேறொன்றுமில்லை – “இவைகளை உற்றுப்பார்க்க தேவ தூதர்களும் ஆசையாயிருக்கிறார்கள். “(1பேது 1:12) உண்மையில் தேவனுடைய ஞானம் வருங்கால தீர்க்கதரிசனங்களைக் குறித்தும், கடந்த காலத்தில் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்து நிர்விசாரமாக வாழ்ந்த, “எந்த மனுஷனையும் இரட்சிக்க மத்தேயு 5 ஆம் அதிகாரம் இருக்கிறதே” என்று சொல்லும் மதியீனமான சில தேவ ஜனங்களைக் கண்டித்தக் காரியங்கள் மற்றும் நிகழ்காலத்தைப் பற்றியவைகளை அறிவிக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும், வருங்காலத்தில் சம்பவிக்கும் காரியங்களை அறிந்துகொள்வதிலுள்ள ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே தீர்க்கதரிசனங்கள் கொடுக்கப்படுவதில்லை. உடன்படிக்கை செய்த பிள்ளைகள் காலப்போக்கில் தேவனுடைய திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்காகவும், அதன் மூலமாக அந்தத் திட்டங்களை இம்மையிலும், மறுமையிலும் செயலாற்ற ஊக்கமளிப்பதற்காகவும் இந்தத் தீர்க்கதரிசனங்கள் கொடுக்கப்படுகிறது. இப்படியாக, அவர்கள் தேவனுடைய வேலைகளில் ஆர்வத்தோடு செயல்படும்பொது, ஒரு ஊழியக்காரரைப் போல் மாத்திரம் இல்லாமல், தேவனுடைய புத்திரராகவும், சுதந்திரவாளியாகவும், புரிந்துகொள்ளக்கூடிய ஆவியின் வல்லமையினால் நிரப்பப்படுவார்கள். இப்படிப்பட்ட அறிவின் வெளிப்பாட்டை பெற்றுக்கொள்ளும்பொது, அவைகள் இன்றைய சூழ்நிலைகளுக்குப் பாதகமாகவோ அல்லது எதிராகவோ இருக்கிறது. இதில் ஜாக்கிரதையாக செயல்பட்டு, விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொண்டு, பரிசுத்தப்படுவதற்கு நாம் சுத்திகரிக்கப்படவேண்டும்.
சாதாரணமாக மனிதர்களுடைய வெறும் கற்பனைகளை விட்டு திரும்பி, “வழக்காடுவோம் வாருங்கள்” (ஏசா 1:18) என்று தேவனுடைய அழைப்புக்கு இணங்கி வசனங்களைக் கவனமாக ஆராய்ச்சி செய்பவர்கள், பரலோக ஆசீர்வாதங்களைக் கண்டறிவார்கள். விசுவாசம் மற்றும் நீதிமானாக்கப்பட்ட நிலைமையிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடையாமல், தெளிவான சத்தியத்தைப் புரிந்துகொள்வது இயலாத காரியம் என்று நாம் மறுத்துவிடக்கூடாது. “நீதிமானுக்காக வெளிச்சமும் (சத்தியம்) விதைக்கப்பட்டிருக்கிறது.” (சங் 97:11) என்று சங்கீதக்காரர் கூறுகிறார். ஏனெனில், தேவனுடைய பிள்ளைகளுக்கு, அவர்களுடைய பாதையிலிருந்து இருளை அகற்ற, பிரகாசிக்கும் வெளிச்சம் வீசும் விளக்கு கொடுக்கப்படுகிறது.
“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங் 119:105) ஆனால் “நீதியின் பாதைக்கு” இந்த வெளிச்சம் கொடுக்கப்படுகிறது. “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.” (நீதி 4:18) உண்மையில் ஒருவரும் நீதிமான் இல்லை, ஒருவராகிலும் இல்லை. (ரோமர் 3:10) ஆகவே இங்கு விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்ட நிலைமையில் இருப்போரைக் குறித்துப் பேசப்படுகிறது. இந்த ஒரு வாய்ப்பு பெற்றால் மட்டுமே அதிகமதிகமாகப் பிரகாசிக்கும் இந்தப் பாதையில் நடக்க சிறப்புரிமைப் பெறமுடியும். இந்தப் பாதையில் நடப்பதற்காகவும், இன்று வெளிப்படும் தேவனுடைய திட்டங்களை அறிந்துகொள்வதற்காக மட்டும் அல்லாமல், வரவிருக்கும் அனைத்துக் காரியங்களையும் அறிந்துகொள்வதற்காகவும் இது வாய்ப்பளிக்கிறது. ஒவ்வொரு விசுவாசிகளுடைய பாதைகளும் உண்மையில் பிரகாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வாக்கியம் விசேஷமாக, நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் இருப்போருக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது. கடந்த காலத்தில் வாழ்ந்த முற்பிதாக்கள், தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் பரிசுத்தவான்கள் அனைவரும் படிப்படியாக வெளிச்சம் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்நாள்வரைக்கும் இந்தப் பாதையில் வெளிச்சம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் – அனைவரும் பரிபூரண நிலையை அடையும் அந்த முடிவு நாள் வரைக்கும் – இந்த வெளிச்சம் இன்னும் அதிகமதிகமாகப் பிரகாசித்து கொண்டே இருக்கும். இது ஒரே தொடர் பாதையும் (வழி), காலப்போக்கில் வெளிச்சம் அதிகரித்துக் கொண்டே போகக்கூடியதாகவும் இருக்கிறது என்று பதிவுகள் எடுத்துக்காட்டுகிறது.
ஆகவே, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத்திருக்கும் நாம் (நீதிமான்கள்) – “கர்த்தருக்குள் களிக்கூறுவோம்.” அநேகரிடம் இந்த விசுவாசம் குறைவாகக் காணப்படுகிறதினால் அவர்கள் அதிகமதிகமான வெளிச்சத்தைத்தேட பிரயாசப்படுவதில்லை. இவர்களின் அவிசுவாசத்தினாலும், நிர்விசாரத்தினாலும் அதிக பிரகாசமுள்ள வெளிச்சத்தைத் தேடாமல், இருளில் அமர்ந்திருப்பதை விரும்புகிறார்கள். தேவனும் இவர்கள் விரும்பியதை அனுமதிக்கிறார்.
R1719 (col. 1P 8)
நாம் முடிவு பரியந்தம், எல்லா பாடுகளிலும், உபத்திரவங்களிலும் நீடிய பொறுமையோடிருப்பதற்கு, தேவையான வல்லமையைப்பற்றி யோவான் வலியுறுத்துகிறார் – 1யோவ 5:4. அதாவது வெற்றியடைய தேவையான வல்லமை – விசுவாசமே என்கிறார். “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” என்று அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். விசுவாசம் என்பது நம்பிக்கையோ, அறிவோ மட்டும் அல்ல, மாறாக, நாம் பெற்ற அறிவை ஏற்றவாறு, ஏற்றசமயத்தில் பயன்படுத்தவேண்டும் – இப்படிப்பட்ட விசுவாசம், நம்முடைய பழக்கத்தில் ஒரு பகுதியாகவும், நம்முடைய கிரியைகளுக்கு அடித்தளமாகவும், நம்மை ஆவிக்குரிய வளர்ச்சியில் ஊக்குவிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். இதன்மூலமாக பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்கள் இதில் சோர்வின்றி ஓடி, அனைத்தையும் மேற்கொண்டு வெற்றிகரமாக முடிவு பரியந்தம் நிலைத்து நிற்க நமக்கு உதவிசெய்யும்.
R2411(col. 1P5)
நம்முடைய இந்தப் பள்ளிப்படிப்பில் “விசுவாசம்” ஒரு முக்கியமானப் பாடமாக இருக்கிறது. இந்த விசுவாசத்தின் வழியாக நாம் தேவனுடையவர்களாகி அவருடைய பள்ளியில் சேர்ந்து வளர்ச்சியடைய வேண்டும். மேலும், நம்முடைய விசுவாசம் தேவனை அறியும் அறிவினால் மட்டுமே வளர்ச்சியடைய முடியும். (இங்கு உலகத்தின் அறிவைப்பற்றி பேசப்படவில்லை) அவருடைய திட்டங்கள், செயல்முறைகள், அவருடைய குணநலன்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ளும்போது அவருடைய அறிவைப் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அவருடைய வார்த்தைகளை கூர்ந்து கவனித்து, அவருடைய கட்டளைகளை தனிநபர்களாகக் கடைபிடிக்கவேண்டும். நாம் முதன்முதலில் அவரை விசுவாசிக்கும் பொழுது இவைகளை நாம் ஒப்புக்கொண்டோம். இந்தக் காரியங்கள் நம்மை தேவனுடைய அறிவில் விருத்தியடையச்செய்யும். நம்முடைய ஆண்டவர் நம்மேல் வைத்த அன்பின் ஆழமும், உயரமும், அகலமும், நீளமும் எவ்வாறாக அளவற்று இருக்கிறதோ, அப்படியே நாம் கொண்டுள்ள விசுவாசமும் விருத்தியடையும்.