CD-FAITH-Q-3
இந்த இரண்டு காரியங்களுக்கு இடையில் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நிச்சயமாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். மில்லியன்கணக்கான ஜனங்கள் நம்பக்கூடியவைகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான காரியங்களை நம்பி, அநேக பாரம்பரிய மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருக்கிறார்கள். மேலும், இந்த மண்ணுலகில், இவர்கள் நம்பத் தகுதியில்லாத காரியங்களையும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதில் மில்லியன்கணக்கான ஜனங்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை தரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையற்ற மூட நம்பிக்கைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, தவிர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படவேண்டும். உண்மையான விசுவாசம் ஊக்குவிக்கப்பட்டு, வளர்ந்து, பலப்படுத்தப்பட்டு விருத்தியடையவேண்டும். தேவன் மேல் வைக்கும் விசுவாசமே – மெய்யான விசுவாசமும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. இதன் அடிப்படையில் மட்டுமே தெய்வீக வாக்குத்தத்தங்கள் கட்டப்பட முடியும். மாறாக, மனித பழக்கவழக்கத்தின் அடிப்படையிலோ, தத்துவ ஞானத்திலோ, கற்பனையிலோ இவைகள் கட்டப்படமுடியாது.