Q-9
“எபே 3:8 – “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.”
R1885 [col. 1 P5]
அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் தன்னடக்கத்தோடு தன்னுடைய ஆவிக்குரிய நிலையையும், பலத்தையும் மதிப்பிடுகிறார். புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரமாக அவர் இருந்தபோதிலும் தன்னைதான் அவர் மேன்மையாக எண்ணவில்லை. அவர் தன்னை மிகப் பெரிய அப்போஸ்தலன் என்று நினைக்கவும் இல்லை. தனக்குள் வீண் பெருமையும் கொள்ளவில்லை. மாறாக, மற்ற சபை ஜனங்களுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தி, மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினார். அவர் ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, அவருடைய சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார். (1கொரி 9:27) மேலும், அவர் மற்றவர்கள் முன் நிலையில், கிறிஸ்துவை தேவனுடைய வல்லமை என்றும், தேவனுடைய ஞானம் என்றும் எடுத்துரைத்தார். அவருடைய மீறுதல்களை போக்க, கிறிஸ்துவின் ஈடுபலி மட்டுமே’ என்று அறிக்கையிட்டு, அவருடைய மாதிரியை பின்பற்றுவதற்கு நான் அதிகமாக பிரயாசப்படுகிறேன் என்றும் அவர் தாழ்மையாக அறிவித்தார். இப்படியாக, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிக பெரிய தடையான “சுய – திருப்தியை (நம்பிக்கை)” அவருடைய வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட்டார். ஒருவர் ஆவிக்குரிய இலக்கை அடைந்துவிட்டோம் என்று எண்ணி திருப்தியடைந்தால், அந்த நொடிப்பொழுதிலிருந்து அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி குறையத் துவங்கும். கிறிஸ்துவைப் பின்பற்றி அவருடைய மாதிரியை பூரணமாக பிரதிபலிக்க விரும்பும் உண்மையுள்ளோர் அனைவரும், தங்களுடைய இக்காலத்து முயற்சிகளில் என்றுமே திருப்தியடையமாட்டார்கள். ஆனால் நாம் கிறிஸ்துவை விட்டு நம்முடைய கண்களை எடுத்துவிட்டால் உடனடியாக இந்தக் குணம் நம்மை பற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட எண்ணங்கள் நமக்குள் வளரும் பட்சத்தில் நம்முடைய குறைகள் அனைத்தும் மறைந்துவிடும் அல்லது நமக்குள் ஒளிந்துவிடும். மேலும் இருதயத்தில் இருக்கும் பெருமையினால் நம்மை நாமே (புது சிருஷ்டி) தொலைத்து விடுவோம். ஏனெனில், நம்முடைய நன்மையான காரியங்கள் மட்டுமே வெளிப்படுத்த இந்த மாம்சம் முயற்சிக்கும். நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலில் வளர்ச்சி அடைவதை குறித்தே நாம் சிந்திக்கவேண்டும். அப்போஸ்தலரை போல், அவர் புரண நிலையை அடைந்திருந்தாலும், அதை அடைந்துவிட்டோம் என்று எண்ணாமல், பின்னானவைகளை விட்டுவிட்டு முன்னானவைகளை நாடி இலக்கை நோக்கி தொடருகிறேன் என்று சொல்லியபடி நாமும் அவருடைய மாதிரியை பின்பற்ற வேண்டும். இப்படிப்பட்ட மனநிலை – தேவனுடைய கிருபையை அதிகமாக பெறுவதற்கும், மனத்தாழ்மையுள்ள சிந்தையில் இருப்பதற்கும் வழிவகுத்தது. மேலும் மற்ற சகோதரர்களின் சோர்வுகளிலும், குறைச்சல்களிலும் உதவிச் செய்யும்படி பவுலை தூண்டியது. ஆனால் மேட்டிமையான சிந்தையுள்ளவர்களும், சுய – திருப்தியுள்ளவர்களும், தங்களுடைய கண்களில் இருக்கும் உத்தரத்தை மறந்துவிட்டு, மற்றவர்கள் கண்ணிலிருக்கும் தூசியை எடுக்க வகைத்தேடுவார்கள்.
R2826[col. 1P3-5]
வேதாகமத்தில் உள்ள மிக அற்புதமான புத்தகத்தை குறிப்பாக எவ்வளவு எளிய முறையில் அப்போஸ்தலன் அறிமுகப்படுத்துகிறார் என்று சற்று கவனியுங்கள். நம்முடைய வேதாகமத்தில் காணப்படுகிறபடி – “திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்” என்று யோவான் எழுதவில்லை. சொல்லப்போனால், இது பரிசுத்தவானும், வேத சாஸ்திரியுமான யோவானுக்கு வெளிப்படுத்தினதாகும். இதன் அடிப்படையில் யோவான் தனக்காக எந்த நற்பெயரையும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெளிப்பாடு அவருடையதல்ல என்றும் பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததுமான விசேஷம் என்று மிக தெளிவாக குறிப்பிடுகிறார். தன்னை விசேஷித்த வகையில் குறிப்பிடாமல், ஒரு ஊழியக்காரனாக அறிமுகப்படுத்துகிறார். இந்த ஒரு மனநிலை எல்லா அப்போஸ்தலர்களிடமும் காணப்பட்டது. இப்படிப்பட்ட ஜனங்களை மட்டுமே நம்முடைய ஆண்டவர் விசேஷித்த ஊழியக்காரர்களாக அனுப்புகிறார். ஆனால் இன்று இந்தக் கோட்ப்பாடுகளுக்கு முரண்பாடாக, பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள், தங்களுக்கு மிக உயர்வான பட்டப் பெயர்களை (ரெவெரெண்டு) சூட்டிக்கொள்கிறார்கள். அதவாது கிறிஸ்துவின் ஆவியை இந்த உலக ஆவி வெகு எளிதில் அவித்துப் போடுகிறது. ஆனால் இதற்கு எதிராக தேவனுடைய ஜனங்கள் பூர்வ பாதையை (எரே 6:16) பக்தி வைராக்கியத்தோடுத் தேடுகிறார்கள். அதேநேரத்தில் இந்த உலக பிரகாரமான உயர்ந்த பட்டப் பெயர்கள் மிக மேன்மையாக தோன்றுகிறது. அவைகள் அனைத்தும் மாயையும், வீண் பெருமைக்குரியதும், வஞ்சிக்கக்கூடியதுமாக இருக்கிறது.
ஆசியா நாடுகளுக்கு கண்காணியாக இருந்த யோவான் தன்னுடைய பெயரோடு மிக பெரிய பட்டப் பெயர்களை இணைத்துக்கொள்வதற்கு பதிலாக, உபத்திரவப்படும் சகல சகோதரர்களோடும், கிறிஸ்துவின் பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு “உங்கள் சகோதரன்” என்று தன்னை அறிமுகப்படுத்தினார். அவர் கிறிஸ்துவின் பங்காளியும், பாடுகளில் அவருடைய சரீரத்தின் ஐக்கியமும், அவருடைய இராஜ்யத்தில் உடன் வேலையாளுமானார், எல்லாவற்றிற்கும் மேலாக மகிமையை அடையும்படிக்கு அவருடைய சீஷர்களின் உபத்திரவங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் உடன் சகோதரரானார். பொதுவாக யோவான் மிகவும் உபத்திரவப்பட்டவர் என்று அனைவரும் அறிந்ததே. வெளிப்படுத்தலின் இந்தக் காட்சிகளை காண்கையில் அவர் மத்தியத் தரைக்கடலில் உள்ள பத்மு என்ற சிறிய தீவில் நாடு கடத்தப்பட்டிருந்தார். அங்கு சலவைகல் சுரங்கத்தில் பணிச்செய்வதற்கு குற்றவாளிகள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். இவர் மிக கஷ்டப்பட்டு வேலைசெய்தார். ஆனால், தேவன் மேல் உள்ள விசுவாசத்தினாலும், இயேசு தான் கிறிஸ்து என்று சாட்சியினாலும், இப்படிப்பட்ட கொடுரமான உபத்திரவத்தையும், வெளிக்காட்டாமல், மிகவும், தன்னடக்கத்தோடு அந்த நாட்களை எளிமையாக கடத்தினார்.
அவர்களுடைய வார்த்தைகளினால் நம்முடைய கவனத்தை திருப்பி, இந்த ஊழியத்தை பெருமைக்காகவும், பூமிக்குரிய நன்மைகளை அல்லது பரிசுகளை பெறவும், வீண் புகழ்ச்சிகாகவும் நடப்பிக்காமல், தேவனுடைய ஊழியக்காரர்களாக அவருடைய சித்தத்தின்படி நடக்க விரும்பி, தங்களை தாங்களே எந்த விதத்திலும் பொருட்படுத்தாமல், சபைக்கு தேவைப்பட்ட காரியங்களில் மட்டுமே தங்களைக் குறித்து சொல்லும் அளவுக்கு எல்லா அப்போஸ்தலர்களின் எழுத்துக்களில், எளிமையையும், தன்னடக்கத்தையும் நாம் காணலாம். ஆண்டவரின் அனைத்து சீஷர்களும் இந்த விசேஷித்த குணத்தை குறிப்பாக நோக்கவேண்டும். மேலும் இப்படிப்பட்ட குணத்தை உடையவர்களை மட்டுமே அவர் அப்போஸ்தலர்களும், நமக்கு மாதிரிகளுமாக தேர்வுசெய்திருக்கிறார். நாமும் இதற்கு இசைவாக ஆண்டவரின் ஆவியை பெற்றால், இப்படிப்பட்ட குணங்களை நாமும் வெளிப்படுத்துவோம்.
F210 [P2] through F212 [P1]
மற்ற எந்தச் சீஷர்களும் அப்போஸ்தலர்களாக தேர்வு செய்யப்படாமலிருந்தாலும், அனைவரும் ஆண்டவரால் நேசிக்கப்பட்டார்கள். அந்தப் பன்னிருவரும் பொதுவான வேலைகளுக்காக நியமிக்கப்பட்டதினால், சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் அனைவரும் முழுமையாக இரக்கம் பெற்றார்கள். நம்முடைய ஆண்டவர் எதன் அடிப்படையில் இந்தத் தேர்வுகளை செய்தார் என்பது குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் செய்த ஜெபத்தின் குறிப்பு நமக்கு ஒரு காரியத்தை தெளிவாக்குகிறது – “நீர் தெரிந்தெடுத்து எனக்கு கொடுத்த உம்முடையவர்கள்.” மீண்டுமாக “நீர் எனக்கு கொடுத்தவர்கள்.” என்று இயேசு ஜெபித்தார். பிதாவாகிய தேவன் எந்த அடிப்படையில் இந்தப் பன்னிரெண்டு பேர்களையும் தேர்வு செய்தார் என்பது நமக்கு அவசியமில்லை. ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி மனத்தாழ்மை என்ற ஒரு குணத்தை அவர்கள் அடிப்படையாக பெற்றிருக்கவேண்டும். மேலும், அவர்கள் செய்த தொழில் மற்றும் அவர்கள் அந்நாள் வரைக்கும் பெற்ற அனுபவங்கள் அவர்களை தாழ்மைப்படுத்தினதுமின்றி, அவர்களுக்கு தேவையான நம்பிக்கையும், உறுதியும், விடாமுயற்சியுள்ள தன்மையையும் உருவாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, இயேசுவை பின்பற்றின மற்றவர்கள் இந்த அளவுக்கு சிறப்பாக செயலாற்றிருக்க முடியாது. பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் காத்திராதபடிக்கு, முன்னதாகவே அந்த பன்னிருவரும் இயேசுவோடு கூட இருந்து அவருடைய செய்திகளைக் கேட்டு, ஏற்றகாலத்தில் நமக்கு தேவனுடைய சகல ஜனங்களுக்கும் தேவனுடைய அற்புதமான வேலைகளை குறித்து சாட்சி கொடுப்பதற்கும், இயேசுவின் மூலம் ஜீவனுள்ள வார்த்தை வெளிப்பட்டதைக் குறித்து அறிவிப்பதற்கும் தேவன் ஆயத்தப்படுத்தினார் – லூக் 17:24,44-48. அப் 10:39-42.
அப்போஸ்தலர்களை பொறுத்தவரையில் தேவனுடைய சொத்துக்களின் மேல் உக்கிராணக்காரர்களாக இருந்தார்கள். மற்றபடி மற்ற விசுவாசிகளைக் காட்டிலும் இவர்கள் மேன்மையுள்ளவர்கள் அல்ல. மேலும் இந்தப் பன்னிருவரும் தேவனுடைய தெய்வீக பிரமாணத்தை செயல்படுத்த முழு அதிகாரம் பெற்றிருந்தார்கள். “அனைவரும் சகோதர சகோதரிகளாக இருக்கிறீர்கள்,… கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகரும் குருவுமாக இருக்கிறார் என்பதை இவர்கள் நினைவில் கொள்ளவேண்டியதாக இருந்தது. அவர்களின் அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ள – அன்பின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து, சிறுப்பிள்ளைகளை போல மனத்தாழ்மைப்பட்டால் மட்டுமே தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இவர்களுக்கு எந்தவிதமான துணைப் பெயர்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இவர்களின் கிரியைகளைக் கண்டு பிதாவை கனப்படுத்தும்படியாக இவர்கள் மந்தைக்கு மாதிரியாக இருக்கவேண்டும். பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். இவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்களுக்கு நல்ல மாதிரிகளாக இருக்கவேண்டும். புது சிருஷ்டியின் அங்கத்தினர்களாக, திவ்விய சுபாவத்தை தேடுபவர்கள், அழியாமையையும், கனத்தையும் மகிமையையும் அடைவார்கள்.
ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும், சகோதர்களுக்காக ஜீவனை கொடுப்பதற்கும் கடமை பெற்றிருந்தார்கள். சுவிசேஷத்தை பிரஸ்தாபப்படுத்துவதே இவர்களின் விசேஷித்த பணியாக இருந்தது. (ஏசா 61:1.2. லூக்க 4:17-21. மத் 10:5-8. மாற் 3:14-15. லூக் 10:1-17) என்று தீர்க்கதரிசி சொல்லியபடி நம்முடைய போதகருக்குக் கொடுக்கப்பட்ட அபிஷேகத்திற்கு இவர்கள் பங்காளிகளானார்கள். இவர்களுக்கு மட்டும் அல்ல இவர்களுக்குபின் வந்த சகல புது சிருஷ்டிகளுக்கும் இதே அபிஷேகம் கொடுக்கப்படுகிறது.