அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-9

அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?

Was humility characteristic of the apostles?

“எபே 3:8 – “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.”

R1885 [col. 1 P5]

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் தன்னடக்கத்தோடு தன்னுடைய ஆவிக்குரிய நிலையையும், பலத்தையும் மதிப்பிடுகிறார். புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படி தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரமாக அவர் இருந்தபோதிலும் தன்னைதான் அவர் மேன்மையாக எண்ணவில்லை. அவர் தன்னை மிகப் பெரிய அப்போஸ்தலன் என்று நினைக்கவும் இல்லை. தனக்குள் வீண் பெருமையும் கொள்ளவில்லை. மாறாக, மற்ற சபை ஜனங்களுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தி, மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணினார். அவர் ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, அவருடைய சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார். (1கொரி 9:27) மேலும், அவர் மற்றவர்கள் முன் நிலையில், கிறிஸ்துவை தேவனுடைய வல்லமை என்றும், தேவனுடைய ஞானம் என்றும் எடுத்துரைத்தார். அவருடைய மீறுதல்களை போக்க, கிறிஸ்துவின் ஈடுபலி மட்டுமே’ என்று அறிக்கையிட்டு, அவருடைய மாதிரியை பின்பற்றுவதற்கு நான் அதிகமாக பிரயாசப்படுகிறேன் என்றும் அவர் தாழ்மையாக அறிவித்தார். இப்படியாக, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிக பெரிய தடையான “சுய – திருப்தியை (நம்பிக்கை)” அவருடைய வாழ்க்கையிலிருந்து அகற்றிவிட்டார். ஒருவர் ஆவிக்குரிய இலக்கை அடைந்துவிட்டோம் என்று எண்ணி திருப்தியடைந்தால், அந்த நொடிப்பொழுதிலிருந்து அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி குறையத் துவங்கும். கிறிஸ்துவைப் பின்பற்றி அவருடைய மாதிரியை பூரணமாக பிரதிபலிக்க விரும்பும் உண்மையுள்ளோர் அனைவரும், தங்களுடைய இக்காலத்து முயற்சிகளில் என்றுமே திருப்தியடையமாட்டார்கள். ஆனால் நாம் கிறிஸ்துவை விட்டு நம்முடைய கண்களை எடுத்துவிட்டால் உடனடியாக இந்தக் குணம் நம்மை பற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட எண்ணங்கள் நமக்குள் வளரும் பட்சத்தில் நம்முடைய குறைகள் அனைத்தும் மறைந்துவிடும் அல்லது நமக்குள் ஒளிந்துவிடும். மேலும் இருதயத்தில் இருக்கும் பெருமையினால் நம்மை நாமே (புது சிருஷ்டி) தொலைத்து விடுவோம். ஏனெனில், நம்முடைய நன்மையான காரியங்கள் மட்டுமே வெளிப்படுத்த இந்த மாம்சம் முயற்சிக்கும். நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலில் வளர்ச்சி அடைவதை குறித்தே நாம் சிந்திக்கவேண்டும். அப்போஸ்தலரை போல், அவர் புரண நிலையை அடைந்திருந்தாலும், அதை அடைந்துவிட்டோம் என்று எண்ணாமல், பின்னானவைகளை விட்டுவிட்டு முன்னானவைகளை நாடி இலக்கை நோக்கி தொடருகிறேன் என்று சொல்லியபடி நாமும் அவருடைய மாதிரியை பின்பற்ற வேண்டும். இப்படிப்பட்ட மனநிலை – தேவனுடைய கிருபையை அதிகமாக பெறுவதற்கும், மனத்தாழ்மையுள்ள சிந்தையில் இருப்பதற்கும் வழிவகுத்தது. மேலும் மற்ற சகோதரர்களின் சோர்வுகளிலும், குறைச்சல்களிலும் உதவிச் செய்யும்படி பவுலை தூண்டியது. ஆனால் மேட்டிமையான சிந்தையுள்ளவர்களும், சுய – திருப்தியுள்ளவர்களும், தங்களுடைய கண்களில் இருக்கும் உத்தரத்தை மறந்துவிட்டு, மற்றவர்கள் கண்ணிலிருக்கும் தூசியை எடுக்க வகைத்தேடுவார்கள்.

R2826[col. 1P3-5]

வேதாகமத்தில் உள்ள மிக அற்புதமான புத்தகத்தை குறிப்பாக எவ்வளவு எளிய முறையில் அப்போஸ்தலன் அறிமுகப்படுத்துகிறார் என்று சற்று கவனியுங்கள். நம்முடைய வேதாகமத்தில் காணப்படுகிறபடி – “திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்” என்று யோவான் எழுதவில்லை. சொல்லப்போனால், இது பரிசுத்தவானும், வேத சாஸ்திரியுமான யோவானுக்கு வெளிப்படுத்தினதாகும். இதன் அடிப்படையில் யோவான் தனக்காக எந்த நற்பெயரையும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெளிப்பாடு அவருடையதல்ல என்றும் பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததுமான விசேஷம் என்று மிக தெளிவாக குறிப்பிடுகிறார். தன்னை விசேஷித்த வகையில் குறிப்பிடாமல், ஒரு ஊழியக்காரனாக அறிமுகப்படுத்துகிறார். இந்த ஒரு மனநிலை எல்லா அப்போஸ்தலர்களிடமும் காணப்பட்டது. இப்படிப்பட்ட ஜனங்களை மட்டுமே நம்முடைய ஆண்டவர் விசேஷித்த ஊழியக்காரர்களாக அனுப்புகிறார். ஆனால் இன்று இந்தக் கோட்ப்பாடுகளுக்கு முரண்பாடாக, பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள், தங்களுக்கு மிக உயர்வான பட்டப் பெயர்களை (ரெவெரெண்டு) சூட்டிக்கொள்கிறார்கள். அதவாது கிறிஸ்துவின் ஆவியை இந்த உலக ஆவி வெகு எளிதில் அவித்துப் போடுகிறது. ஆனால் இதற்கு எதிராக தேவனுடைய ஜனங்கள் பூர்வ பாதையை (எரே 6:16) பக்தி வைராக்கியத்தோடுத் தேடுகிறார்கள். அதேநேரத்தில் இந்த உலக பிரகாரமான உயர்ந்த பட்டப் பெயர்கள் மிக மேன்மையாக தோன்றுகிறது. அவைகள் அனைத்தும் மாயையும், வீண் பெருமைக்குரியதும், வஞ்சிக்கக்கூடியதுமாக இருக்கிறது.

ஆசியா நாடுகளுக்கு கண்காணியாக இருந்த யோவான் தன்னுடைய பெயரோடு மிக பெரிய பட்டப் பெயர்களை இணைத்துக்கொள்வதற்கு பதிலாக, உபத்திரவப்படும் சகல சகோதரர்களோடும், கிறிஸ்துவின் பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு “உங்கள் சகோதரன்” என்று தன்னை அறிமுகப்படுத்தினார். அவர் கிறிஸ்துவின் பங்காளியும், பாடுகளில் அவருடைய சரீரத்தின் ஐக்கியமும், அவருடைய இராஜ்யத்தில் உடன் வேலையாளுமானார், எல்லாவற்றிற்கும் மேலாக மகிமையை அடையும்படிக்கு அவருடைய சீஷர்களின் உபத்திரவங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் உடன் சகோதரரானார். பொதுவாக யோவான் மிகவும் உபத்திரவப்பட்டவர் என்று அனைவரும் அறிந்ததே. வெளிப்படுத்தலின் இந்தக் காட்சிகளை காண்கையில் அவர் மத்தியத் தரைக்கடலில் உள்ள பத்மு என்ற சிறிய தீவில் நாடு கடத்தப்பட்டிருந்தார். அங்கு சலவைகல் சுரங்கத்தில் பணிச்செய்வதற்கு குற்றவாளிகள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். இவர் மிக கஷ்டப்பட்டு வேலைசெய்தார். ஆனால், தேவன் மேல் உள்ள விசுவாசத்தினாலும், இயேசு தான் கிறிஸ்து என்று சாட்சியினாலும், இப்படிப்பட்ட கொடுரமான உபத்திரவத்தையும், வெளிக்காட்டாமல், மிகவும், தன்னடக்கத்தோடு அந்த நாட்களை எளிமையாக கடத்தினார்.

அவர்களுடைய வார்த்தைகளினால் நம்முடைய கவனத்தை திருப்பி, இந்த ஊழியத்தை பெருமைக்காகவும், பூமிக்குரிய நன்மைகளை அல்லது பரிசுகளை பெறவும், வீண் புகழ்ச்சிகாகவும் நடப்பிக்காமல், தேவனுடைய ஊழியக்காரர்களாக அவருடைய சித்தத்தின்படி நடக்க விரும்பி, தங்களை தாங்களே எந்த விதத்திலும் பொருட்படுத்தாமல், சபைக்கு தேவைப்பட்ட காரியங்களில் மட்டுமே தங்களைக் குறித்து சொல்லும் அளவுக்கு எல்லா அப்போஸ்தலர்களின் எழுத்துக்களில், எளிமையையும், தன்னடக்கத்தையும் நாம் காணலாம். ஆண்டவரின் அனைத்து சீஷர்களும் இந்த விசேஷித்த குணத்தை குறிப்பாக நோக்கவேண்டும். மேலும் இப்படிப்பட்ட குணத்தை உடையவர்களை மட்டுமே அவர் அப்போஸ்தலர்களும், நமக்கு மாதிரிகளுமாக தேர்வுசெய்திருக்கிறார். நாமும் இதற்கு இசைவாக ஆண்டவரின் ஆவியை பெற்றால், இப்படிப்பட்ட குணங்களை நாமும் வெளிப்படுத்துவோம்.

F210 [P2] through F212 [P1]

மற்ற எந்தச் சீஷர்களும் அப்போஸ்தலர்களாக தேர்வு செய்யப்படாமலிருந்தாலும், அனைவரும் ஆண்டவரால் நேசிக்கப்பட்டார்கள். அந்தப் பன்னிருவரும் பொதுவான வேலைகளுக்காக நியமிக்கப்பட்டதினால், சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் அனைவரும் முழுமையாக இரக்கம் பெற்றார்கள். நம்முடைய ஆண்டவர் எதன் அடிப்படையில் இந்தத் தேர்வுகளை செய்தார் என்பது குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் செய்த ஜெபத்தின் குறிப்பு நமக்கு ஒரு காரியத்தை தெளிவாக்குகிறது – “நீர் தெரிந்தெடுத்து எனக்கு கொடுத்த உம்முடையவர்கள்.” மீண்டுமாக “நீர் எனக்கு கொடுத்தவர்கள்.” என்று இயேசு ஜெபித்தார். பிதாவாகிய தேவன் எந்த அடிப்படையில் இந்தப் பன்னிரெண்டு பேர்களையும் தேர்வு செய்தார் என்பது நமக்கு அவசியமில்லை. ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி மனத்தாழ்மை என்ற ஒரு குணத்தை அவர்கள் அடிப்படையாக பெற்றிருக்கவேண்டும். மேலும், அவர்கள் செய்த தொழில் மற்றும் அவர்கள் அந்நாள் வரைக்கும் பெற்ற அனுபவங்கள் அவர்களை தாழ்மைப்படுத்தினதுமின்றி, அவர்களுக்கு தேவையான நம்பிக்கையும், உறுதியும், விடாமுயற்சியுள்ள தன்மையையும் உருவாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, இயேசுவை பின்பற்றின மற்றவர்கள் இந்த அளவுக்கு சிறப்பாக செயலாற்றிருக்க முடியாது. பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் காத்திராதபடிக்கு, முன்னதாகவே அந்த பன்னிருவரும் இயேசுவோடு கூட இருந்து அவருடைய செய்திகளைக் கேட்டு, ஏற்றகாலத்தில் நமக்கு தேவனுடைய சகல ஜனங்களுக்கும் தேவனுடைய அற்புதமான வேலைகளை குறித்து சாட்சி கொடுப்பதற்கும், இயேசுவின் மூலம் ஜீவனுள்ள வார்த்தை வெளிப்பட்டதைக் குறித்து அறிவிப்பதற்கும் தேவன் ஆயத்தப்படுத்தினார் – லூக் 17:24,44-48. அப் 10:39-42.

அப்போஸ்தலர்களை பொறுத்தவரையில் தேவனுடைய சொத்துக்களின் மேல் உக்கிராணக்காரர்களாக இருந்தார்கள். மற்றபடி மற்ற விசுவாசிகளைக் காட்டிலும் இவர்கள் மேன்மையுள்ளவர்கள் அல்ல. மேலும் இந்தப் பன்னிருவரும் தேவனுடைய தெய்வீக பிரமாணத்தை செயல்படுத்த முழு அதிகாரம் பெற்றிருந்தார்கள். “அனைவரும் சகோதர சகோதரிகளாக இருக்கிறீர்கள்,… கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகரும் குருவுமாக இருக்கிறார் என்பதை இவர்கள் நினைவில் கொள்ளவேண்டியதாக இருந்தது. அவர்களின் அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ள – அன்பின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து, சிறுப்பிள்ளைகளை போல மனத்தாழ்மைப்பட்டால் மட்டுமே தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமுடியும். இவர்களுக்கு எந்தவிதமான துணைப் பெயர்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இவர்களின் கிரியைகளைக் கண்டு பிதாவை கனப்படுத்தும்படியாக இவர்கள் மந்தைக்கு மாதிரியாக இருக்கவேண்டும். பயன்படுத்தவேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள். இவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுபவர்களுக்கு நல்ல மாதிரிகளாக இருக்கவேண்டும். புது சிருஷ்டியின் அங்கத்தினர்களாக, திவ்விய சுபாவத்தை தேடுபவர்கள், அழியாமையையும், கனத்தையும் மகிமையையும் அடைவார்கள்.

ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும், சகோதர்களுக்காக ஜீவனை கொடுப்பதற்கும் கடமை பெற்றிருந்தார்கள். சுவிசேஷத்தை பிரஸ்தாபப்படுத்துவதே இவர்களின் விசேஷித்த பணியாக இருந்தது. (ஏசா 61:1.2. லூக்க 4:17-21. மத் 10:5-8. மாற் 3:14-15. லூக் 10:1-17) என்று தீர்க்கதரிசி சொல்லியபடி நம்முடைய போதகருக்குக் கொடுக்கப்பட்ட அபிஷேகத்திற்கு இவர்கள் பங்காளிகளானார்கள். இவர்களுக்கு மட்டும் அல்ல இவர்களுக்குபின் வந்த சகல புது சிருஷ்டிகளுக்கும் இதே அபிஷேகம் கொடுக்கப்படுகிறது.