இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-17

இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?

How may purity of heart be attained?

R2734 [col.1 p5] through R2735 [col.1 p1]

ஆனால் சுத்திகரிக்கப்பட்ட இருதயத்தின் நிலையை நாம் எப்படி பெறுவது?

“உங்கள் இருதயங்களை சுத்திகரியுங்கள்” என்ற செய்தியை நாம் பாவிகளுக்கு அறிவிக்கிறோமா? இல்லையே, பாவிகள் தங்களுடைய இருதயங்களை சுத்திகரிப்பதற்கு சுவிசேஷம் அழைக்கவில்லையே. ஏனெனில் பாவிகளுடைய இருதயங்கள் சுத்திகரிக்கப்படுவது இயலாத காரியம். தேவனோடு நல்லுறவு கொண்டு, பரிசுத்தமான அவருடைய சித்தத்தை அறிந்துக் கொள்ளக்கூடிய நோக்கமுடையவர்களே தேவனுடைய பார்வையில் பரிசுத்தவான்கள் என்று அங்கீகரிக்கப்படுகிறார்கள். இதற்கு எதிராக பாவிகள் மனந்திரும்பும்படியாக அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் இருதயம் கலகத்தினாலும், அசுத்தத்தினாலும், தீமையினாலும் நிறைந்திருக்கிறது. ஒரு பாவி பாவத்திற்காய் வருந்தினபின்பு தேவனோடும் அவருடைய நீதியோடும் இசைந்திருக்க விரும்பினால், தன்னுடைய பாவத்திற்கு ஏற்ற பலியை பெற்றுக் கொண்டு தேவனோடு ஒப்புரவாகுவதற்கு மிகப் பெரிய இரட்சகரிடத்திற்கு அவர் வரவேண்டும். ஒரு பாவி இந்த ஒரு படியை கடந்து, தன்னால் முடிந்தவரைக்கும் சீர்பொருந்தப்பட்டு, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவர் கொடுக்கும் மன்னிப்பை பெற்று நீதியின் பாதையில் நடக்க முயற்சித்தால் அவர் நீதிமானாக்கப்படுகிறார். “கிறிஸ்துவின் இரத்தத்தின் மேல் உள்ள விசுவாசத்தினால் நீதிமானக்கப்படுதல்” என்ற வசனத்திற்கு அவர் உட்படுவதினால், எல்லா காரியங்களிலும் அவர் விடுதலைப் பெற்று தேவனோடு நல்லுறவு கொண்டு, தேவனுடைய மன்னிக்கக்கூடிய அன்பினால் வரும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவர் இவைகளை செய்து முடித்து விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்ட நிலையை அடைந்தபின் அந்தப் பாவி, தேவனுடைய பார்வையில் இனி ஒருபோதும் பாவியாக எண்ணப்படுவதில்லை. ஆகையால், தேவனோடு தொடர்பு கொள்ளும்போது “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக்குறித்து,” (ரோம 3:25) என்ற வசனத்தின்படி அவருடைய இருதயம் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருக்கிறது. இப்படிச் சீர்திருத்தப்பட்டவரை பற்றி, ஒரு புதிய கேள்வி எழும்புகிறதே, மேலும் சாத்தானின் சோதனைகள் நமக்கு எதிர்கொண்டு நிற்கிறதே. அந்த நீதிமான், தொடர்ந்து நீதியின் பாதையில் நடக்க துவங்குகையில், மாம்சம், உலகம், பிசாசால் சோதிக்கப்பட்டு அகப்படுகிறார். அவர் என்ன செய்யவேண்டும்? அப்பொழுது அவர் தன்னுடைய இருதயத்தை தேடினால் தன்னைத்தான் வழி நடத்திக் கொள்வதற்கு அவர் திராணி இல்லாதவரும், அவர் பெற்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள இயலாதவருமாய் இருக்கிறார். அவர் சரியான பாதையில் செல்வதற்கு, மிகப்பெரிய இரட்சிப்பான இரண்டாவது படியில் அவர் கிடக்க வேண்டியதாய் இருக்கும். மற்றொரு வார்த்தையில் சொல்லப்போனால் மற்றொரு தெய்வீக கிருபையை ஏற்றுக்கொள்ளவேண்டும் – “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” (ரோம 12:1) என்று நம்முடைய ஆண்டவர் அப்போஸ்தலர் மூலம் சொல்லிய வார்த்தைகளுக்கு அவர் செவி கொடுக்க வேண்டும்.

நீதிமானாக்கப்பட்டவர் சரியான முறையில் சரியாக போதிக்கப்பட்டிருந்தால், தன்னுடைய சுய பலத்தில் கிறிஸ்துவுக்குள் நிற்பது கூடாத காரியம் என்பதை அவர் நன்கு உணர்ந்து கொள்வார். மேலும் இந்த நீதிமானாக்கப்பட்ட நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு தேவனால் மட்டுமே கூடும் என்பதை அறிந்து கொள்வார். முதலில் தேவனோடு ஐக்கியப்படும் போது என்னுடைய விருப்பத்தின்படி, தேவனுடைய சித்தத்தின்படி செய்வேன் என்று சொல்லலாம். ஆனால் இது நம்முடைய ஆண்டவருக்கு திருப்தியளிக்காது, என்பதை சரியான போதனையைப் பெற்றபின் அவர் கண்டறிவார். தேவனுடைய சித்தத்தை, தேவன் விரும்பியபடி செய்தால் மட்டுமே, தேவன் அவரை பொறுப்பெடுத்துக் கொள்வாரென்றும், அவர் செய்யக்கூடிய காரியங்கள் தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்கப்படும் என்பதையும் உணர்ந்துக் கொள்வார். இப்படிப்பட்டவர்களுக்கு, முழுமையாக தங்களுடைய விருப்பத்தை, தேவனுடைய சித்தத்திற்கு அர்ப்பணித்து தங்களுடைய முழு இருதயத்தில் அதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு, நித்தியமான கன மகிமையை வாக்களிக்கிறார்.

ஒரு பாவி இத்தனை நிலைகளை கடந்தபின் ஆண்டவரிடத்தில் தன்னுடைய இருதயத்தை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியும். அன்பின் பிரமாணத்தின் கீழ் இருதயத்தில் சுத்தமுள்ளவர்களைப் பற்றி மட்டுமே, நம்முடைய பாடம் விவரிக்கிறது. ஆனால் இருதயத்தின் சுத்திகரிப்பும், நோக்கங்களும், இலக்குகளும், சித்தங்களும், ஆண்டவரின் கற்பனைகளை நிறைவேற்றுவதற்கு பாத்திரமாய் இல்லாவிடில் அவர் ஒரு யுத்தக்களத்தில் போராட வேண்டியதாயிருக்கும். இருதயத்தில் ஆழமாய் வேரூன்றி வளர்ந்திருக்கும் சுய நலம் தேவனுடைய அன்பின் புதிய பிரமாணத்திற்கு எதிராய் செயல்படும். ஆகையால் ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பாக இந்தக் கற்பனையை முழுமையாக நாம் கடைபிடிக்க முடியாமல் போனாலும் நம்முடைய இந்தப் பாடத்தில் தெய்வீக அன்பின் பிரமாணத்தின் பொருளை நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை அப்போஸ்தலர் ஆலோசனை கூறுகிறார். ஆயினும் இந்தக் கற்பனையை முழுமையாக கடைபிடிக்க முடியாமல், இந்தக் கற்பனையை கடைபிடிப்பதற்கு, சுத்த இருதயம், நல்ல நோக்கங்களும் குறையாமல் இருக்க வேண்டும். மாம்சத்தின் பலவீனம், சாத்தானின் வஞ்சகம் மற்றும் சோதனைகள் வரும்போது நாம் தோல்வியடையும், ஒவ்வொரு நேரமும் நம்முடைய பரிசுத்தமான இருதயங்கள் அல்லது சித்தங்கள் அவைகளை தடுக்கவில்லையென்பது உறுதியாகிறது.

இவ்விடத்தில் ஆண்டவரின் வாக்குறுதிகள் நமக்கு உதவுகிறது. ஏனெனில், நம்முடைய பலவீனங்களும் அபூரண நிலையையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். அன்பின் ஆவிக்கு எதிராக செயல்படக்கூடிய சாத்தானின் வலைகளையும், உலகத்தின் ஆவியும், அபூரண நிலையின் காரியங்கள் எவ்வளவு வல்லமை உள்ளது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் தவறு செய்யும் போதெல்லாம் கிருபாசனத்தண்டைக்கு இலவசமாய் சென்று அவருடைய இரக்கங்களை இலவசமாய் பெற்று இந்தக் காரியங்களை மேற்கொள்வதற்கு நம்முடைய ஆண்டவர் நமக்கு வழிவகுத்து வைத்துள்ளார். ஆகவே பரிசுத்தமான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவைப்பட்ட ஒவ்வொரு நேரங்களிலும் தேவையான கிருபைகளை உதவியாகப் பெறலாம். நம்முடைய மகா பெரிய பிரதான ஆசாரியர் வழியாக கிடைக்கப்பெற்ற இந்த வாய்ப்புகளையும் கிருபைகளையும் அன்றாடம் பயன்படுத்தினால் பாவங்களுக்கு எதிரான நல்லப் போராட்டத்தில் சிறப்பாக வெற்றி அடைய முடியும். அப்பொழுது நம்முடைய மாம்சத்தின் வழியாக நம்முடைய இருதயத்திற்குள் சென்றிருக்கும் தேவையற்ற சகல காரியங்களையும், வெளியேற்றிவிடலாம். இப்படிச் செய்வதின் வழியாக மட்டுமே கிறிஸ்தவர்கள் தங்களுடைய இருதயத்தை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு நல்ல போராட்டத்தை போராடி, இந்த உலகத்தையும் அதன் ஆவியையும், வெற்றிகரமாய் ஜெயிப்பார்கள். இந்த அன்பின் பிரமாணத்தை பொறுத்த வரையில் நம்முடைய மாம்சத்தின் சிந்தனையும், மாம்சமும் பல வழிகளில் நம்மை ஏமாற்றுவதற்கு எத்தனிக்கும். மாம்சத்தின் சிந்தை புது சிந்தையோடு இணைந்து செயல்பட வகைத்தேடி சில விதிமுறைகளுக்குட்பட்டு அன்பின் பிரமாணத்தை வாழ்க்கையின் பிரமாணமாக ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படும். மாம்சத்தின் சிந்தை வார்த்தைகளினாலும் தொழில் ரீதியாகவும், தெய்வீக வடிவத்திலும் அன்பை எதிர்பார்க்கும். இப்படிப்பட்ட அன்பு சுயநலமான இருதயங்களிலிருந்து புறப்பட்டு தங்களையும், மற்றவர்களையும் ஏமாற்ற முயற்சிக்கும். அவர்கள் உதடுகளில் புன்னகையும், வார்த்தைகளில் புகழ்ச்சியும் அன்பும், கனிவும் காணப்படும். ஆனால் இருதயத்திலோ, சுயநலமான உணர்வுகளும், கசப்புகளும் பகைகளும் மறைந்திருக்கும். சாதகமான சூழ் நிலைகளில் இருதயத்தில் மறைந்திருக்கும் இந்தத தீய குணங்கள் அவதூறான பேச்சுக்களாகவும், வதந்திகளாகவும், பின்னாக பேசுவதும், புறணியாகவும் வெளிப்படும். அல்லது இப்படிப்பட்ட காரியங்கள் தொடர்ந்து இருதயத்தில் நிலைத்திருந்தால், சாதகமான சூழ்நிலைகளில் சுத்தமான இருதயத்தில் காணப்படும் புதிய உடன்படிக்கையின் அன்பின் பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரிடையான மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளான கோபத்தையும் பகையையும் வாக்குவாதத்தையும், துன்மார்க்கமான கிரியையும் வெளிப்படுத்தும்.

ஆகவே நமக்காக செய்யப்படும் சகலவிதமான தெய்வீக காரியங்களும், நமக்காக கொடுக்கப்பட்ட சகல தெய்வீக வாக்குத்தத்தங்களின் முக்கியத்துவங்களும் இறுதியில் நமக்குள் தெய்வீக குணமாகிய அன்பை வளர்ப்பதே மையக்கருத்தாக இருக்கிறது. இந்தத் தெளிவான உண்மையை நம்முடைய சிந்தைக்கு முன்பாக எப்போதும் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், தேவன் அன்பாகவே இருக்கிறார். இப்படிப்பட்ட அன்பு நமக்குள் வளர்ச்சியடைய தேவனுடைய அன்பின் பிரமாணத்துக்கு இசைவாகவும் சாத்தானின் சுயநலமான பிரமாணத்திற்கு முற்றிலும் எதிரான பரிசுத்தமான இருதயம் மிகவும் அவசியமாயிருக்கிறது. மேலும் இதற்கு நல் மனசாட்சியும் தேவைப்படுகிறது. ஏனெனில் மனசாட்சியும் தீய காரியங்களை வலியுறுத்தும். விழுந்துபோன சுபாவத்தில் மனசாட்சியும் விழுந்துபோன நிலையில் உள்ளது. ஆகவே மனசாட்சியில் சரியான நேரத்தை காண்பிப்பதற்கு முதலில் மனசாட்சியை சீர்ப்படுத்த வேண்டும். நேரம் காட்டும் கடிகாரத்தை ஒருவர் சாவி கொடுத்து இயக்குவதுபோல நம்முடைய மனசாட்சியை தினமும் சத்தியத்தின் காரியங்களை செயல்படுத்துவதற்கு நித்தமும் நாம் அதற்கு நீதியின் வரிசையை காண்பிக்கவேண்டும். அப்பொழுது நாம் தவறு செய்யும் பொழுது அதை தவறு என்றும் சரியான காரியங்களை செய்யும் போது சரி என்றும் நமக்கு அறிவுறுத்தும். இந்த மனசாட்சி நீதியாக செயல்படுவதற்கும் இதனுடைய ஸ்பிரிங்கை (Spring) புதிய சிந்தையுடனும், பரிசுத்தமான சித்தத்துடனும் இணைக்க வேண்டும். அப்பொழுது அந்த மனசாட்சி தேவனுடைய அன்பின் பிரமாணத்திற்கு முழு இசைவோடு செயல்படும்.