Q14 & Q15
““வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத் 11:28-30)
“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணா 12:3)
“நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.” (மத் 8:8)
“பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.” (யோவா 13:1-17)
R2903 [col.2 P2,3]
குழந்தையாக இருந்த மோசே கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தபடியினால் “அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.” என்று ஸ்தேவான் கூறுகிறார். (அப் 7:20) யூத வரலாற்று ஆசிரியரான ஜோசபஸ் இவரைக் குறித்து எழுதும் போது – “அவரை வீதியில் தூக்கி சென்றபோது ஜனங்கள் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு, அவரை கண்சிமிட்டாமல் பார்ப்பார்கள்……” என்கிறார். ஆதிகாலத்தில் அவர் தன்னுடைய சாந்தமான பெற்றோரிடம் பெற்ற பயிற்சிகளையும் நாம் கவனிக்கவேண்டும். வருங்கால அரசராக எகிப்தில் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற மோசே, எவ்வளவு மேன்மையாக இருந்திருக்கவேண்டும். ஆயினும் “பூமியில் உள்ளவர்களில் மிக சாந்தமான மனுஷன்” என்று அவர் பேர் பெற்றார். மோசே ஜெநிப்பிக்கப்பட்டது முதல் அடிமை தனத்தில் இருக்கும் தன்னுடைய பெற்றோர்களை எண்ணி இப்படிப்பட்ட சாந்தத்தை பெற்றிருக்கக்கூடும். ஏனெனில் அரசர்களின் பிள்ளைகளிடமும், ஆட்சியாளர்களிடமும் இப்படிப்பட்ட குணத்தை காண்பது அரிது. ஆயினும் தேவனுடைய ஜனங்களை வழிநடத்துவதற்காக, மோசே பெற்றிருந்த சாந்த குணம் மிக அவசியமானதாக இருந்தது. நடந்திட்டபடி, மோசே இஸ்ரயேல் ஜனங்களோடு வனாந்தரத்தில் பிரயாணம் பண்னுகையில், தேவனோடு அவர்கள் செய்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய அவர் கானானுக்குள் பிரவேசியாதபடிக்கு தடைசெய்யப்பட்டார். தேவனுடைய நாமத்திற்கு மகிமையை சேர்க்காமல், அந்த அற்புதத்தை தான் செய்வதாக சொல்லி – “கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ” என்று சொல்லி, கன்மலையை அடித்தார்.
நீண்டகாலம் சாந்தமாக இருப்பதற்கு பயிற்சி பெற்று, மிக உன்னதமான நிலையில் இருந்த அவர், சோதனையை ஜெயித்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் தன்னுடைய வருங்காலத்தை வீணடித்துவிட்டார். இஸ்ரயேலுக்காக தேவன் தேர்வு செய்யப்பட்ட மூப்பர், உண்மையில் பெருமையுள்ளவரும், மனமேட்டிமையுள்ளவருமாக இருந்திருந்தால் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும். மோசேயைத் தவிர ஒருவராலும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை நீடிய பொறுமையோடு சகித்திருக்க முடியாது. இதை அடிப்படையாகக் கொண்டு தேவனுடைய ஜனங்களுக்கு ஒரு முக்கிய பாடம் வைக்கப்பட்டுள்ளது. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு மிக சாந்தமும், தாழ்மையுள்ளவர். மேலும் இயேசுவோடுக்கூட உடன்பங்காளிகளாக ஆகும்படிக்கு இந்த உலகத்திலிருந்து அழைப்பு பெற்று, கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக இருப்பவர்கள், தங்களுடைய தலையாகிய இயேசுவின் தாழ்மையையும், சாந்தத்தையும் பெற்றிருக்கவேண்டும். அப்போது இராஜ்யத்தில் உயர்த்தப்படுவோம் என்ற அப்போஸ்தலரின் எச்சரிப்பை நாம் தொடர்ந்து நினைவில் கொள்ளவேண்டும்.