நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-18

நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?

For what should we pray?

பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும்

R3665 [col. 1:2]: –

ஒருவேளை அவர் நீண்ட காலம் தாமதித்தாலும், ஒருவேளை அவர் நமக்கு படிப்படியாக கொடுத்தாலும், கேட்ட உடனடியாக அதை முழுமையாக கொடுக்கா விட்டாலும், நம்முடைய பரலோக பிதா கொடுக்க விரும்பும் காரியங்களை, நிச்சயமாக

நாம் பெற்றுக்கொள்ளுவோம் என்ற உறுதியோடு நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நம்முடைய ஆண்டவர் கூறுகிறார். பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது,

பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.” (லூக்கா 11:13) என்ற நம்முடைய ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிக்கலாம். பரிசுத்த ஆவி என்பது

அன்பின் ஆவியாகும் – தேவனுக்கும் மனுஷனுக்கும், தற்போதைய நிலைமைகளின் கீழ் நமக்கு இது கொடுக்கப்பட முடியாது, பழைய சுயநலம், நம்முடைய இருதயங்களில் உள்ள தவறான ஆவி நீக்கப்படும்போது, படிப்படியாக கொடுக்கப்படும்.

ஆகவே, நாம் தேவனுடைய ஆவியினால் நிரப்பப்படுவதற்கு, நம்முடைய வாழ்நாள் பயணம் முடியும் வரையில் தொடர்ந்து ஜெபிக்கவேண்டும். மேலும் இவ்வாறு ஜெபிப்பது என்றால், தினம் தினம் நாம் உழைக்கும்போது, ஆண்டவர் நம்மை

தொடர்ந்து ஆசீர்வதித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியின் கனிகளை பிறப்பித்து, நம்முடைய வாழ்க்கையில் அதனுடைய சந்தோஷங்களையும், சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் கொடுப்பார் என்பதே. லூக்கா 11:13

“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.”

E222 through E225- பரிசுத்த ஆவிக்காக ஜெபித்தல் (#18கேள்வி காண்க)

“எல்லாமே குமாரனால்” செய்யப்பட்டாலும், பிதாவே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றும் கரணருமாக இருக்கிறார் என்று ஒவ்வொரு இடத்திலும் பிதாவுக்கே மகிமையையும், கனத்தையும் செலுத்துகிறார். மீட்பின் மற்றும் மறுசீரமைப்பின் முழு

வேலையும் தேவனுடைய வேலை – குமாரனின் மூலம். மேலும் தேவனுடைய பரிசுத்தத்தின் ஆவியை அதிகதிகமாக நாம் பெற்றிருப்பதே பிதாவுக்கு மகிழ்ச்சி என்று நம்முடைய ஆண்டவர் அறிவிக்கிறார். மிக உன்னதமான ஆசீர்வாதமாக இதை

தேடவும், கேட்கவும் அவர் நமக்கு கட்டளையிடுகிறார். ஏனெனில், பூமிக்குரிய ஆசீர்வாதங்களைப் பொறுத்தவரை, நமக்குத் என்ன தேவை என்பதை பரலோக தந்தை அறிந்திருக்கிறார் அதாவது நம்முடைய பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் எது

உதவியாக இருக்கும் என்றும் எது தீங்கை விளைவிக்கும் என்றும் நாம் அறிவதை விட அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்று நம்முடைய இரட்சகர் கூறுகிறார். ஆகையால், அபூரணரும், புறஜாதியாரும் செய்வது போல, பூமிக்குரிய

ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தித்து அதற்காக ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக, புத்திரர்கள் என்ற உறவுக்குள் வந்தவர்களாக தேவனுடைய முன்னேற்பாடுகளில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, சிறந்தவைகளை நமக்கு கொடுப்பார்

என்று எதிர்பார்த்து. அவர் தந்திருக்கும் வாக்குத்தத்தங்களிலும், விசுவாசத்திலும் நாம் இளைப்பாறலாம்.

நாம் அதிகதிகமான பரிசுத்த ஆவிக்காக விரும்பி வேண்டுவதில் பரலோகபிதா மகிழ்ச்சியாக இருக்கிறார். அதாவது அவருடைய ஆவியுடன் அதிகதிகமாக இசைந்திருக்கும் மனநிலையை அவர் விரும்புகிறார். இவைகளை விரும்பி. கேட்டு. தேடும்

அனைவரும் தங்கள் நல்விருப்பங்களைப் பெறுவார்கள். இந்த பரிசுத்த ஆவிக்கு தடையாக இருக்கும் விஷயங்கள். அதாவது அவர்களுக்குள் இருந்தாலும் சரி, அவர்களை சுற்றியிருந்தாலும் சரி, தேவனுடைய ஆவியினால் அவர்கள்

நிரப்பப்படும்படிக்கு. அவருடைய அன்பான ஆவி அவர்களுக்குள் பெருகும்படி, தடைகளை அகற்றுவார். ஆனால் இதில் பரிசுத்த ஆவியின் புதிய ஞானஸ்நானம் பற்றி எதுவும் பரிந்துரைக்கப்படவில் ஞானஸ்நானம் ஆரம்பத்தில் வந்தது. இப்போது

செய்ய வேண்டியது எல்லாம். ஒவ்வொரு திசையிலுள்ள மதகுகளை திறக்கவேண்டும். அப்பொழுது அன்பு மற்றும் சத்தியத்தின் பரிசுத்த ஆவி நம்முடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும், சிந்தனையிலும் ஊடுருவி,

வெளிப்படவேண்டும். தடைகளை அகற்றுவதிலும், தேவையற்றவைகளை தடை செய்வதிலும், தேவனுடைய ஞானம் மற்றும் ஏற்பாடுகளின் செயல்பாட்டை உணர்வதற்கு நமக்கு தெய்வீக உதவி தேவை. பரிசுத்தத்தின் ஆவியை ஒருவர்

ஆவலுடன் விரும்பி. ஜெபத்தினாலும். முயற்சியினாலும் தேடினால் மட்டுமே அதை அதிகதிகமாக பெற்றுகொள்ள முடியும். பரிசுத்த ஆவியினால் நம்முடைய சிந்தையும் அதன் தாக்கங்களும் நிரப்படுவதற்கு நம்முடைய இருதயங்களில்

இருக்கும் உலகின் ஆவி அல்லது சிந்தை விரட்டவேண்டும். சுய சித்தமும் இதற்கு இடம் கொடுக்கவேண்டும் அதாவது இவைகளை நாம் முழு விருப்பத்தோடு செய்யவேண்டும். தேவனுடைய பரிபூரணத்தை பெறுவதற்கு ஆயத்தமாக இருப்பதற்கு

ஏற்றவாறு சகலத்தையும் நாம் அகற்றிவிட்டதினாலும், நாம் மற்ற எல்லா மாறுப்பட்ட செல்வாக்கையும் விருப்பத்தையும் அழிக்க ஆர்வமுள்ளவர்களாக இருப்பதினாலும் தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புவதற்கு ஆவலுடன்

இருக்கிறார். இதே கருத்தை எபேசு சபைக்காக அப்போஸ்தலர் செய்த ஜெபத்தில் காணலாம். “அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது

மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர் 3:19) கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பட்டு அவர் வெளிப்படுத்திய அன்பை முழுமையாக புரிந்துகொண்டவர்.

தந்தையின் ஆவியை முழுமையாக பெறுவார்.

வேத வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, எந்த வகையிலும் பரலோகத் தகப்பன் தனது பிள்ளைகள் வேறொரு தேவனைக் கேட்பதில் மகிழ்ச்சி அடையமாட்டார் என்பது தெரிகிறது சமத்துவ தேவனின் திரித்துவத்தில் மூன்றாவது நபராக

இருக்கும் ஒரு தேவன். அத்தகைய சிந்தனை இந்த பகுதிக்கும் அதன் இணைப்புகளுக்கும் ஒவ்வாததாக உள்ளது. அத்தகைய தவறான பார்வையை உற்சாகப்படுத்துபவர்கள், இந்த வாக்குறுதியின் உண்மையான அழகு மற்றும் வல்லமையை

காணாதபடிக்கும் நிச்சயமாக பார்வையற்றவர்களாக இருப்பார்கள். பூமிக்குரிய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அப்பம், மீன் மற்றும் முட்டைகள் கொடுப்பது போல, திரித்துவ தேவர்களின் மூன்றாவது நபரை இன்னொருவருக்கு கொடுப்பது

உண்மையில் விசித்திரமாக இருக்குமே. (முந்தைய வசனங்களை காண்க) தேவனுடைய பிள்ளைகளின் ஆறுதலுக்கும். ஆவிக்குரிய மேம்பாட்டிற்கும் பலவிதமாக வழங்கப்படும் தெய்வீக சிந்தை அல்லது தெய்வீக உந்துதலே பரிசுத்த ஆவி என்று

சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே இந்த பகுதி முரணற்றதாக இருக்கும்.

அன்பான பூமிக்குரிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இயற்கையான உணவைக் கொடுப்பதற்கும். நம்முடைய அன்பான பரலோக பெற்றோர் அவரிடம் கேட்கிறவர்களுக்கு அவருடைய பரிசுத்த ஆவியை கொடுப்பதற்கும் இடையிலான ஒரு

ஒப்பீட்டை நம்முடைய உரை காண்கிறது. பூமிக்குரிய பெற்றோர் தனது குடும்பத்திற்கான உணவை தயாரித்து வைத்தாலும், அதை அவர்கள் மீது கட்டாயப்படுத்தாது போலவே, நம்முடைய பரலோக பெற்றோரும் அவருடைய ஆவிக்குரிய

குடும்பத்தினருக்காக அவருடைய கிருபையான நல்ல ஏற்பாடுகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார், அவரும் நம்மீது கட்டாயப்படுத்துவதில்லை. அதற்காக நாம் பசி தாகமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவைகளை நாம் தேட வேண்டும்,

சந்தேகத்திற்கு இடமின்றி, விசுவாசத்தின் அடிப்படையில், அவருடைய சித்தத்தின் படி நமக்கு நல்ல ஈவுகளை வழங்குகிறார். ஆகையால், பரிசுத்த ஆவிக்காக நாம் ஜெபித்து, நாம் கர்த்தருடைய ஆவியினால் நிரப்பப்படும் போது, நாம் நம்மை

பார்த்து, அவர் இவ்வாறு ஊக்குவித்து வழிநடத்தியுள்ளபடி, இந்த ஜெபங்களுக்கான பதிலுக்காக அவர் அளித்த ஏற்பாட்டைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த முன்னேற்பாட்டை நாம் சத்திய வார்த்தையின்படி காண்கிறோம். ஆனால் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது போதாது நாம் நிரப்பப்பட விரும்பினால் நாம் உண்ணவேண்டும். நிச்சயமாக விருந்தில் பங்கேற்கவேண்டும் அல்லது நமக்கு

வடிவமைத்து கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடுவதன் திருப்தியை நாம் அனுபவிக்க முடியாது. மேஜையிலிருப்பதை முழுமையாக சாப்பிடாதவர் உண்மையில் உணவு இல்லாதவரைப் போல, பட்டினியாகவும், வயிறு காலியாகவும் இருப்பார்.

உணவின் மீதான ஆசீர்வாதங்களை கேட்பது. நம்மை நிரப்பாததினால், நாம் அதில் பங்கெடுக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை நாம் வைத்துகொண்டு, ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் போதாது.

எனவே நாம் தேவனுடைய வார்த்தைகளை உண்டு. அதிலிருந்து அவருடைய ஆவியை பெறவேண்டும். ஆவியே உயிர்ப்பிக்கிறது. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது: நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும்

இருக்கிறது. (யோவான் 6:63) என்று நம்முடைய ஆண்டவர் அறிவித்தார். மேலும் ஆவியினால் நிரப்பப்பட்ட அனைவரும், “உம்முடைய வார்த்தைகளை கண்டு, அவைகளை நான் உட்கொண்டேன்” (எரேமியா 15:16. வெளி 10:9) என்று சொல்லும்

தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உண்மையாக உள்ளது. நாம் ஆவியினால் நிரப்பப்படுவதற்கு வழங்கப்பட்ட சத்தியத்தின் வார்த்தைகளை நாம் புறக்கணித்து. ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்கு ஆவியை தாரும் என்று ஜெபிப்பது முற்றிலும்

பயனற்றது. நாம் பரிசுத்த ஆவிக்காக வெறுமனே ஜெபித்து அந்த சத்திய ஆவியைப் பெறுவதற்கான சரியான வழிகளைப் நாம் பயன்படுத்தாவிட்டால், நாம் தொடர்ந்து “கிறிஸ்துவில் குழந்தைகளாக”, தேவனோடுள்ள உறவுக்கு சான்றாக, அவர்

கொடுத்திருக்கும் சத்திய வார்த்தைகளை விட்டு விட்டு, அதற்கு பதிலாக வெளிபுறமான அடையாளங்களை தேடுகிறவர்களாக இருப்போம்.

ஞானத்திற்காக ஜெபித்தல்.

யாக்கோபு 1:5,6 – “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.”

F686 [2]: –

நமக்காக தெய்விக ஏற்பாடுகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டபின், இந்த உலகத்தின் சார்பாக நாம் எதை கேட்கமுடியும்? ஒன்றும் இல்லை. தேவனுடைய வார்த்தையின் உறுதியளிக்கப்பட்ட மகிமை வாய்ந்த “மறுசீரமைப்பின்

காலங்களில்”, மனிதர்களில் ஞானமுள்ளவர்களின் இதுவரையில் சிந்தித்திராத, அனைத்து மகத்தான எதிர்பார்ப்புகளை காட்டிலும் அதிக அதிகமான காரியங்களை நிறைவேற்றும். அதற்காக நாம் தேவனுக்கு நன்றிகளை மட்டுமே செலுத்தி,

அவருடைய நன்மைகளை ஏற்றுக்கொண்டு, அவரோடுக்கூட இசைந்திருக்க முயன்று, ஞானத்தை பற்றிய நம்முடைய தேவையை நாம் உணரவேண்டும். எனவே, இதற்காக நாம் தேவனுடைய ஆவியை அல்லது வல்லமையை அதாவது

“உன்னதத்தின் ஞானத்தை” உதவியாக கேட்கலாம். “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்,

அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” – (யாக்கோபு 1:5) இந்த ஞானம், நாம் மற்றவர்களுக்கு உதவக்கூடிய விதமாக நம்மை நடத்தி கொள்வதற்கும், பேசுவதற்கும், செயல்படுவதற்கும் நம்மை நடத்தும். ஆகவே, இவ்வழியில் நாம்

செல்லும்போது, முன்னதாகவே தேவன் குறிப்பிட்டுள்ள நல்லதொரு கோட்பாடுகளுக்கும், தாராள மனப்பான்மைக்கும் இசைவாக இணைந்து செயல்படுவதற்காக நாம் ஜெபிக்கவேண்டும். உலகத்திற்கு ஒத்திராதபோதிலும், சிறப்பான

இக்காரியங்களுக்காகவே நாம் ஜெபிக்கவேண்டும்.

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தல்

1 தெசலோனிக்கேயர் 5:25 – சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

யோவான் 17:20 – நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 1:16 – இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,

கொலோசேயர் 4:2,3 – இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை

வெளிப்படுத்துவதற்கு,

அறுவடையாளர்களுக்காக ஜெபித்தல்

மத்தேயு 9:38 – ஆதலால், அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

R2636 [col. 1:3]: –

யூத யுகத்தின் அறுவடையின் முடிவு, சுவிசேஷ யுக அறுவடையை நிழலிட்டு காட்டுகிறது. மேலும் அப்பொழுது இருந்தது போல இப்பொழுதும், அறுவடையின் ஆண்டவர் இயேசுவாகவும், அவருடைய சீஷர்களும், தூதுவர்களும், கூட்டிச்சேர்க்கும்

வேலையின் முகவர்களாக இருக்கிறார்கள். “அறுவடையோ மிகுதி, வேலை ஆட்களோ குறைவு” என்று ஆண்டவர் அன்று சொன்னது போல இப்பொழுதும் கூறுகிறார். நாம் இந்த விஷயத்தில் அவருடைய ஆவியை பெற்று, அவருடைய

வேலைக்காக நம்மை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளும் போது, அவர் அவ்வாறு செய்வதற்கு பிரியமாக இருப்பார். மேலும் பலர் நாளுக்கு நாள் இவ்வாறு ஜெபித்து, அறுவடை வேலையில் தங்கள் கைகளால் என்ன செய்ய முடியும்

என்பதை செய்ய முயலுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் ஊழியத்தை வழிநடத்த ஆண்டவர் கிருபையுள்ளவராக இருந்து, அவர்களின் நலனுக்காகவும், மற்றவர்களின் நலனுக்காகவும் ஆசீர்வதிக்கப்பட்ட முடிவுகளை ஆண்டவர் அவர்களுக்கு

கொடுக்கிறார். அன்று சீஷர்கள் அனைவரும் இந்த ஜெபத்தை செய்து, அறுவடையின் வேலைகளில் ஒரு பகுதியானவைகளை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது போல, இன்றும் அவருடைய உண்மையான சீஷர்கள் இந்த ஜெபத்தை ஏறெடுத்து,

ஊழியத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்க்கவேண்டும்.

நம்முடைய சத்துருக்களுக்காக

மத்தேயு 5:44 – நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்

துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

அப்போஸ்தலர் 7:60 – அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

மன்னா, மார்ச் 21: “நான் உங்களுக்குச் சத்துருக்களைச் சொல்லுகிறேன்; உங்கள் சிநேகியுங்கள்: உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.” (மத்தேயு 5:44)

இப்படிப்பட்டவைகளை குறித்த நம்முடைய சொந்த இருதயத்தின் உண்மையான மனநிலையை ஆய்வு செய்ய இங்கு ஒரு வழி உண்டு. நீங்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு தயவு காட்டி அவர்களுடைய வழியில் இருக்கும் தவறுகளை

காண்பதற்கும் அதை மேற்கொள்வதற்கும், உங்கள் திறனைப்பயன்படுத்தி உதவுவீர்களா? அவர்களுக்காக மென்மையாக ஜெபிப்பீர்களா? அவர்களின் பலவீனங்களையும். அவர்களின் அறியாமைகளையும், வளர்ச்சி குறைவுகளையும்

பொறுமையோடு சகிப்பீர்களா? இன்னும் சிறப்பாக வழிக்காட்டுவதற்கும் ஒரு உன்னதமான மாதிரியாக இருக்க முயற்சிக்க முடியுமா? அப்படியானால், நீங்கள் பாவியை அல்ல பாவத்தை இகழக்கூடியவர்களாக இருப்பீர்கள். என்றுமே, நீங்கள்

பாவியை அல்ல பாவத்தை வெறுக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். பாவமும் அதை செய்த பாவியும் இனி பிரிக்கமுடியாத அளவுக்கு இணைந்திருக்கிறார்கள் என்று தேவனுடைய தவறிழைக்காத நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில்,

உங்கள் அன்பு அந்த சகோதரர் மீது தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கட்டும்.

“எல்லா மனுஷருக்கும், இராஜாக்களுக்கும், அதிகாரத்துக்குள்ளானவர்களுக்கும்” ஜெபித்தல்

1 தீமோத்தேயு 2:1,2 – நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும்

நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.

R3600 [col. 1:4 to end of answer] – பூமிக்குரிய ஆளுனர்களுக்காக ஜெயுங்கள்.

கேள்வி – நாம் எல்லாத் தெய்வபக்தியிலும், நேர்மையிலும் சமாதானமான வாழ்க்கையை அமைதியுடன் வாழ்வதற்கு, “இராஜாக்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும்” ஜெபங்களையும் வேண்டுதல்களையும் செய்வது ஏற்ப்புடையது

என்ற அப்போஸ்தலரின் வெளிப்பாட்டை (1 தீமோத்தேயு 2:1-4) நாம் எவ்வாறு புரிந்துக்கொள்ள வேண்டும்?
பதில் – இந்த உலகம் முழுவதிலும் உள்ள, பெரிய மற்றும் ஏழ்மையானவர்களின் நலன்களில் நாம் ஆர்வம் காட்டவேண்டும். நம்முடைய மாம்சத்தை பொருத்தவரை அவர்கள் நம்முடைய சகோதரர்கள் மற்றும் அயலகத்தார்களாக

இருப்பதினாலும், தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது இரக்கம் கொண்டு, அவருடைய இரத்தத்தினால் அவர்களை இரட்சித்து, அவர்களது மறுசீரமைப்பிற்காக ஒரு இரக்கமுள்ள ஏற்பாட்டை செய்திருப்பதினாலும், நாம் அவர்கள் மீது

அக்கரைக்கொண்டிருக்கவேண்டும். நாம் நம்முடைய கர்த்தருடன் ஒத்துப்போகும் விகிதத்தில், அவருடைய கிருபையான திட்டத்தின் எல்லா அம்சங்களிலும் இணக்கமாக இருக்கவேண்டும். மேலும், இது மனுக்குலத்தின் மீதுள்ள அன்பையும்,

“…நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும். நன்மை செய்வதே….” கலாத்தியர் 6:10 இதன் பொருளாகும்.

உலகிற்காக இத்தகைய உணர்வையும். அவர்கள் மீது அக்கறைக்கொண்ட மனதுள்ளவர்களாகவும், “உம்முடைய இராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக” என்று ஜெபிப்பது

பொருத்தமாக இருக்கும். உண்மையில் மனுக்குலத்தின் நலன்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு காரியமும், அன்பின் பரிசுத்த ஆவியை பெற்றவர்களின் இருதயங்களுக்கு நெருங்கி இருக்கும். ஆகவே, அதிகாரத்தில் உள்ளவர்கள் கெட்ட

சூழ்நிலைகளில், தவறான வழியில் விரைந்து சென்று நிச்சயமாக காயப்படுவார்கள் என்று அறிந்தபோதிலும், நாம் நீதியின் வழியில் நடத்தப்படவும், அவர்களின் நலன்களின் நம்முடைய நல்ல விருப்பங்களை குறிப்பிடும்படிக்கும், சரியான

தருணங்களில் அவர்களுக்காக ஜெபிப்பது பொருத்தமாக இருக்கும்.
எல்லா நேரத்திலும், தேவனுடைய ஜனங்களின் இருதயங்களை தேவ சமாதானம் ஆண்டு கொள்ளும்படியாகவும், இந்த உலகின் அராஜகவாத அல்லது வெறுப்புணர்ச்சியையும், குருடர்களின் குருட்டுத் தலைவர்களிடமும் பயப்படாதபடிக்கு, நாம்

சமாதானத்தோடும், அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த ஜெபங்களை ஆட்சியாளர்களுக்காக ஏறெடுக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். எனவே, நம்மால் முடிந்தளவு அவர்களை பற்றி நல்ல

விஷயங்களைச் சொல்ல முடியாதபோதிலும், நம்முடைய மனசாட்சிக்கு விரோதமாக அவர்களோடு ஒத்துழைக்க முடியாமல்போனாலும், குறைந்தபட்சம் அவர்களுக்காக ஜெபித்து, நாம் எந்த ஒரு மனுஷனைப் பற்றி தீமை பேசுவதில்லை என்று உறுதிக்கொள்ளலாம்.

“நான் உலகத்திற்காக வேண்டிக்கொள்ளாமல்…” என்று யோவான் 17ல், நம்முடைய ஆண்டவரின் ஜெபத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தைகளை அப்போஸ்தலருடைய வார்த்தைகளுக்கு முரண்பாடாக புரிந்துக்கொள்ளக்கூடாது. மாறாக,

“நான் இப்போது இந்த உலகத்திற்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்கு தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.” என்ற அர்த்தத்தை நாம் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆண்டவர் நமக்கு கட்டளையிட்டவைகளுக்கு ஏதோ எதிரானதற்காக நாம் ஜெபிக்கவேண்டும் என்று அப்போஸ்தலர் பொருள்படுத்தினார் என்று நாம் புரிந்துக்கொள்ளவும் கூடாது, உபத்திரவ காலம் அவசியமில்லாமல். அது வராதபடிக்கும்,

இராஜாக்களும் ஆட்சியாளர்களும், தேசங்களும், மனம் மாறவேண்டும் என்று எதிர்பார்த்து ஜெபிக்கவும் கூடாது. இதற்கு எதிராக, இனி நடக்கபோகிற யுகத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு. இந்த உலகின் மனநிலை சரியானதாக இல்லாததினால்,

உபத்திரவ காலம் வரும் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். புதிய ஒழுங்கு முறைகளுக்காக ஆயத்தமாகும்படிக்கு இந்த உலகம் “இரத்தம்”, “அக்கினி”, “கோபாக்கினை” போன்ற ஸ்நானங்களின் வழியாக கடக்கவேண்டியதாக உள்ளது.

ஆகவே, இவைகள் வருங்காலத்திற்கு அநேக ஆசீர்வாதங்களாக இருக்கும். எழுதப்பட்டவைகளுக்கு முழு இசைவாக நம்முடைய ஜெபங்கள் இருக்க வேண்டும், ஆனால் அனைவருக்கான நல்ல விருப்பங்களை இது நம்மை தடை செய்யாது.

மேலும், இந்த உலகின் அதிபதியினால் அவர்கள் குருடாக்கப்பட்டிருப்பதினால், அநேகர் மூர்க்கத்தனமாக இருப்பதை எண்ணி அவர்கள் மேல் அனுதாபமுள்ளவர்களாக இருக்கிறோம்.

ஜெபத்திற்காக விசேஷித்த சந்தர்ப்பங்கள்

R2006 [col. 1:2-7] – நீங்கள் விண்ணப்பம் “பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை” (யாக்கோபு 4:2) 

கிறிஸ்துவுக்குள்ளும், அவருடைய வார்த்தைகளுக்குள்ளும் நிலைத்திருப்பவர்கள், அவரிடம் கேட்பதற்கும். தேடுவதற்கும், கண்டுபிடிப்பதற்கும், அவர்களுக்காக தனித்து வைக்கப்பட்டிருக்கும் அவருடைய தெய்வீக கிருபையின் மிகப்பெரிய பங்கை

தாங்கள் பயன்படுத்திக்கொள்ளாததே, பலரிடம் உள்ள பிரச்சனையாக இருக்கிறது. எல்லா ஜெபங்களும் சுயநலமாக இருக்கக்கூடும் என்று ஒருவரும் எண்ணிவிடக்கூடாது. இதற்கு நேர்மாறாக, தேவனுடைய வார்த்தை மற்றும் அவருடைய

சித்தத்திற்கு முழு இசைவாக, ஜெபத்திற்கான சுதந்திரம்பரந்தளவில் உள்ளது.

விசுவாசம் மற்றும் பொறுமையின் ஒவ்வொரு சோதனையும், ஜெபத்திற்கான தருணம். வெற்றி பெறுவதற்காக அடையும் ஒவ்வொரு தோல்வியும், மன்னிப்புக்காகவும், நம்முடைய சொந்த பலவீனத்தின் படிப்பினை ஆழமாக

புரிந்துக்கொள்ளப்பட்டதால், தெய்விக ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். எனவே இதே போன்ற அடுத்த சோதனையில் நாம் உடனடியாக விண்ணப்பிக்கவும். வாக்குறுதியளிக்கப்பட்ட “கிருபாசனத்தை” பற்றி கொள்ளலாம்.

நாம் நம்மையே உயர்த்திக்கொள்ளாதபடிக்கும். மேட்டிமை அடையாதபடிக்கும். தாழ்மைப்பட்டு, மிகப்பெரிய எதிராளியாகிய சாத்தானுடைய அடுத்த தாக்குதல்களுக்கு கவனத்தோடு இருக்கும்படியாக. நம்முடைய சுயத்தின் மீது நாம்

அடையக்கூடிய ஒவ்வொரு வெற்றியும் ஜெபத்திற்கான சந்தர்ப்பமாக உள்ளது. சத்தியத்திற்காக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஊழியமும், மகா இராஜாவை சேவிக்கக்கூடிய வாய்ப்புக்காக நன்றிகளை ஏறெடுக்கும் ஜெபத்திற்கான சந்தர்ப்பமாக

உள்ளது. மேலும் அவருக்காக ஏதாவது பாடுகளை அனுபவிப்பதற்கும், இன்னும் அவருடைய பணியில் வாய்ப்புகளை பெறுவதற்கும், அவைகளை ஞானமாக பயன்படுத்திக்கொள்வதற்கு கிருபையையும் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஜெயிக்கத்தக்கதான சோதனைகளையும், பரீட்சைகளையும் பெற்றிருந்தால், மேலும் அவைகள் நற்குணங்களாகிய பொறுமை, அனுபவம், சகோதர சிநேகம் இரக்கம் மற்றும் அன்பு போன்றவைகள் உங்களுக்குள் வளர்ச்சி அடைந்தால்,

தெய்விக இரக்கத்தையும் உதவியையும் பெற்றதை ஒப்புக்கொண்டு, மகிழ்ச்சியுடன் நன்றியறிதலான ஜெபங்களை ஏறெடுங்கள். தாங்க முடியாத அளவுக்கு உங்கள் சோதனை பாரமாகவும், உங்களை நொருக்கிபோடும் அளவுக்கு வேதனையாகவும்

இருந்தால், உங்கள் பிரச்சனையை பாரம் சுமப்பவரிடம் கொண்டு செல்லுங்கள். இதை சுமப்பதற்கு உதவியாக. உங்களுக்கு நன்மை செய்யக் கூடிய எந்த காரியத்தையும் கேளுங்கள். உங்களுக்கு நன்மை செய்யாத மற்றும் உங்களை

காயப்படுத்தக்கூடிய எல்லாவற்றிலுமிருந்து உங்களை விடுவிக்கும்படி ஜெபியுங்கள். கர்த்தருடைய கட்டளைக்கும் “சபை கூடிவருதலை விட்டுவிடாதீர்கள்” என்பதற்கும் கீழ்ப்படிய வேண்டும் என்கிற வாஞ்சை தங்கள் இருதயத்தில் நிறைந்திருந்தும்

தாங்கள் ஜெயங்கொள்ள முயன்றும் முடியாது போன ஒரு வழியில் தாங்கள் நியாயமற்ற முறையில் தடையுற்றிருந்தால், இந்த விஷயத்தை ஜெபத்தில் கர்த்தரிடம் எடுத்துச் செல்லுங்கள், தங்கள் ஜெபத்தின்படி கவனித்து காத்திருந்து

பிரயாசப்படுங்கள், நிச்சயமாக தங்கள் சார்பாக தெய்வீக வல்லமையின் வெளிப்பாட்டை தாங்கள் விரைவில் காண்பீர்கள்.

ஒரு உண்மையான சகோதரன், ஒரு போர்சேவகன் தடுமாறிக்கொண்டு ஆபத்திலிருப்பதை நீங்கள் கண்டால், அவரை விடுவிப்பதற்கு உடனடியாக நீங்கள் ஓடுவதோடு கூட, அவரை மீண்டும் புதுபிக்கும் வரையில் அல்லது முழுமையாக அவர்

நெருக்கமான பாதையில் முழு விருப்பத்தோடு பயணிக்கும் வரையில், அவருக்காக இடைவிடாமல் கிருபாசனத்தண்டைக்கு சென்று ஜெபிக்கும் அளவுக்கும் உங்கள் இருதயம் முழுமையான அன்பினால் பெருகக்கடவது. தவறு தங்களுடையதாக

இருக்குமாயின், தங்கள் ஜெபங்களும் முயற்சிகளும் நிச்சயமாக தங்கள் சொந்த ஆதாயத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்டு நீக்கப்படும். மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு உங்களிடம் எந்த விதமான பக்தியும் உங்களிடம்

இல்லை என்றால், அதற்காக விசுவாசத்தோடும், ஆர்வத்தோடும் விடாமுயற்சியோடும் ஜெபியுங்கள், விரைவில் நீங்கள் அதைப் பெறுவீர்கள். சுவிசேஷத்திற்காக நீங்கள் பக்தி வைராக்கியமும் அன்பையும் கொண்டிருந்தாலும், அதை

வெளிக்காட்ட திறமை இல்லாதவர்களாக இருந்தால், நீங்கள் பெற்றிருப்பதை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, அந்த திறனுக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு வைராக்கியமும், திறமையும் இருந்தபோதிலும். வாய்ப்புகள் இல்லை என்றால்,

உடனடியாக அதற்காக ஆண்டவரிடத்திற்கு ஜெபியுங்கள். உங்களுக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் நீங்கள் உண்மையாக பயன்படுத்துகிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். அதற்குபின் உங்கள் கரங்களை மடக்கிகொள்ளாமல், நீங்கள்

எட்டிபிடிக்கும் அளவுக்கு உள்ள குறைவான மற்றும் மிகச் சிறிய வாய்ப்புகளையும் கூட அதிகமாக கவனித்து பயன்படுத்துங்கள்.

உங்கள் வீட்டிற்கும். குடும்பத்திற்கும், மற்றும் தேவனுடைய விசுவாச வீட்டில் உள்ள சகோதரர்களுக்கும், உங்களுடைய சண்டைபோடும் மனப்பான்மை, அல்லது தவறான பழக்கங்கள் பாரமாக இருக்கிறதாக நீங்கள் உணருகிறீர்களா! இதை

ஆண்டவரிடம் ஜெபத்தில் எடுத்துச் செல்லுங்கள், அவைகளை ஜெயிப்பதற்கு கிருபையையும், உதவியையும் கேளுங்கள். இதற்கு இடையில் உங்கள் ஜெபத்திற்கிணங்க உங்கள் சிறப்பான விடாமுயற்சியையும் பயன்படுத்துங்கள்.

தேவனுக்கும் சத்தியத்திற்கும் ஊழியம் செய்வதற்கான உங்கள் முயற்சிகள் பொதுவாக தோல்வி அடையும் அளவுக்கு நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களா? “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும்

சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக் கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5) என்ற வாக்குத்தத்தத்தை நினைவுக் கூர்ந்தவர்களாக, ஆண்டவரிடம்

ஜெபியுங்கள்.

உங்களது தவறான நியாயத்தீர்ப்பு அல்லது மற்றவர்களின் நேர்மையற்ற தன்மை அல்லது ஏழைகளிடம் நீங்கள் காட்டின தாராள குணம் போன்றவைகளினால் உங்கள் தொழிலில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதா? இவைகள் உங்களை குழப்பமடையச்

செய்து, ஆவிக்குரிய விஷயங்களில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறதா? மேலும் இவைகள் புதுசிருஷ்டியின் பொதுநலனை அச்சுறுத்துகிறதா? ஆண்டவருடைய கிருபாசனத்தண்டையில் முன் வைப்பதற்கு இது சரியான விஷயமாகும்.

உங்களுடைய விடுதலை எவ்வாறு வரவேண்டும் என்று நீங்கள் ஆணையிட முயற்சிப்பது சரியானதாக இல்லாவிட்டாலும் உங்கள் புத்திசாலித்தனமான முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேற்ற ஆண்டவர் ஒரு அதிசயத்தை செய்யவேண்டும்

என்று எதிர்ப்பார்க்கவும் கூடாது. ஆயினும் உங்கள் ஞானத்தால் செய்ய முடிந்ததை காட்டிலும், உங்களுக்கு வழிகாட்டுவதற்கும். முடிவுகளை மேற்க்கொள்வதற்கும் அவருடைய ஞானத்தை நீங்கள் கேட்கலாம்.

இங்கு பரந்த அளவிலான பாடங்கள் உள்ளது (அது பரவலாக விரிவாக்கப்படலாம்). அதன் அடிப்படையில் நாம் இயேசுவின் நாமத்தினால் தைரியமாக கிருபாசனத்தண்டைக்கு சென்று தேவனுடைய போதுமான கிருபையை கேட்டு

பெற்றுக்கொள்ளலாம். தேடி கண்டுபிடிக்கலாம். ஆனால் ஜெபத்தில் நாம் தேவனானவரை அணுக முடியாமல் போகக்கூடிய பாடங்களின் அளவும் பெரியளவில் உள்ளது. பெருமை அல்லது சுயநலம் அல்லது லட்சியத்திற்கு ஊழியம்

செய்யும்படியாக நாம் எதையும் கேட்கக்கூடாது. அல்லது மற்றவரை காயப்படுத்தும் எதையும் நாங்கள் கேட்கக்கூடாது அல்லது அவருடைய வார்த்தையின் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய திட்டத்திற்கு முரண்படும் எதையும் நாம்

கேட்கக்கூடாது. ஆஹா! எத்தனை பேர், தங்களுடைய பூமிக்குரிய விருப்பங்களின் மேலுள்ளபற்றினால், “விண்ணப்பம் பண்ணியும்… தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறார்கள்.”

மன்னா ஜூன் 25 தொடர்ந்து ஜெபித்து. நன்றியுணர்வோடு விழித்திருங்கள். கொலோசேயர் 4:2 விசுவாசம் மற்றும் பொறுமையின் ஒவ்வொரு சோதனையும், உதவி அளிக்கும் வாக்குத்தத்தங்களுக்காக ஜெபம் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

வெற்றி பெறுவதற்கான ஒவ்வொரு தோல்வியும், மன்னிப்பைப் பெறுவதற்காக ஜெபிக்கும் ஒரு சந்தர்ப்பமாகும். மேலும் நம்முடைய சொந்த பலவீனத்தின் படிப்பினை ஆழமாக புரிந்துக்கொள்ளப்பட்டதால், இதேபோன்ற அடுத்த சோதனையில் நாம்

உடனடியாக விண்ணப்பிக்கவும், வாக்குறுதியளிக்கப்பட்ட “கிருபாசனத்தை” பற்றிகொள்ளக்கூடிய தெய்விக ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். நாம் நம்மையே உயர்த்திக்கொள்ளாதபடிக்கும். மேட்டிமை அடையாதபடிக்கும்,

தாழ்மைப்பட்டு, மிக பெரிய எதிராளியாகிய சாத்தானுடைய அடுத்த தாக்குதல்களுக்கு கவனத்தோடு இருக்கும்படியாக, நம்முடைய சுயத்தின் மீது நாம் அடையக்கூடிய ஒவ்வொரு வெற்றியும். ஜெபத்திற்கான சந்தர்ப்பமாக உள்ளது.

சத்தியத்திற்காக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஊழியமும், மகா இராஜாவை சேவிக்கக்கூடிய வாய்ப்புக்காக நன்றிகளை ஏறெடுக்கும் ஜெபத்திற்கான சந்தர்ப்பமாக உள்ளது. மேலும் அவருக்காக ஏதாவது பாடுகளை அனுபவிப்பதற்கும். இன்னும்

அவருடைய பணியில் வாய்ப்புகளை பெறுவதற்கும், அவைகளை ஞானமாக பயன்படுத்திக்கொள்வதற்கு கிருபையையும் விண்ணப்பிக்கலாம்.