CD-LOVE-Q-35
“தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள்” – யூதா 21
R2649[col.2 P3]: –
இறுதியாக, நம்முடைய வேத வசனத்திற்கு இசைவாக, இது தேவன் கவனிக்கக்கூடிய காரியம் இல்லை, மாறாக இதற்கு நம்முடைய சொந்த கவனம் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனுடைய அன்பை நாம் அறிந்துக் கொள்ளும்படிக்கு அவர் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறார். அதனால் நாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் தேவனுடைய அன்பில் நாம் காத்துக்கொள்வதற்கு இது பொறுப்புள்ளது. மற்றும் அவருடைய அன்பின் கொள்கைகள், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பழகுவதற்கு முயலுவதன் வழியாகவே நாம் அவருடைய அன்பை காத்துக்கொள்ள முடியும். நித்தமும் ஆண்டவருடைய பணிக்காகவும், அவருடைய மதிப்புக்காகவும், சத்தியம் பரப்புவதற்காகவும், நம்மை நாம் பலி செலுத்துவதற்கு தேவனுடைய அன்பு நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கவேண்டும். “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.” என்று அப்போஸ்தலர் கூறுகிறபடி, சகோதர அன்பு நம்முடைய இருதயங்களை நிரப்பப்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். சோதனைகள் மற்றும் கஷ்டங்களில் “ஏங்கி தவிக்கும்” மனுக்குலத்தின் மேல் ஒரு பொதுவான ஒரு பரிவுணர்வுள்ள அன்பை நாம் அனுமதித்து, நாம் தொடர்பு கொள்ளும் அனைவரிடமும், வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களுக்கு நாம் உதவி செய்யும் படிக்கும் அவர்களிடம் அன்பாகவும், தாராளமாகவும் உணர்ந்துக் கொள்ள நம்முடைய இருதயங்களை பயிற்றுவிக்க வேண்டும். நம்முடைய பராமரிப்பில் இருக்கும் முரட்டுத்தனமாக சிருஷ்டிப்புகளின் நலன்களையும் நாம் அலட்சியப்படுத்தாதபடிக்கு, இந்த அன்பை இவர்களுக்கும் நீடிக்க வேண்டும். இவை அனைத்தும் தேவனுடைய அன்பில் நம்மை காத்துக் கொள்வதற்கு மிக அவசியம் என்று தோன்றுகிறது. நாம் அதிகதிகமாக இதை நடை முறைப்படுத்தி, இந்த அன்பில் அதிகதிகமாக பூரணப்படுவோம். இதுவே பிதாவின் ஆவி, நம்முடைய ஆண்டவரின் ஆவி, கிறிஸ்துவின் சரீரத்தின் உண்மையான அங்கத்தினர் அனைவரின் ஆவியாகும்.
அப்படியானால், இந்த பாடத்தில், மேலே குறிப்பிட்டவற்றின் தெய்வீக கட்டளையின் சாராம்சம் என்ன ? (1) துவக்கத்திலிருந்தே நம்முடைய இருதயங்களில், நம்முடைய சொந்த மாம்சத்தின் அபூரணங்களை உணருவதோடு, ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்க வேண்டிய தேவைக்காக எப்போதும், அவரை நோக்கி பார்க்கவேண்டும். (2) நாம் தேவனுடைய அறிவிலும், கீழ்படிதலின் வழியாக அவருடைய அன்பில் நிலைத்திருக்க, நாம் “தேவனுடைய வல்லமையை” நன்மைக்கு ஏதுவாக, நமக்குள் பெற்றிருக்க, பெரிதும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள் ஆராயப்பட வேண்டும். (3) இந்த அறிவை நாம் நடைமுறைப்படுத்தி, நம் மனதில், நம் எண்ணங்களில், வார்த்தைகளில், முடிந்தவரை வாழ்வின் எல்லா செயல்களிலும் ஒழுங்குபடுத்த முயற்சித்தால் மட்டுமே, நமக்கு லாபகரமாக இருக்கும். அவருடைய வார்த்தையின் வழியாக தேவன் நமக்கு இதை ஒரு சிறந்த அளவுகோலாக முன் நிறுவியிருக்கிறார். நாம் அறிவைப் பெற்றிருந்தாலும், நமக்குள் அன்பிராவிட்டால், ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் தெய்வீக ஏற்பாட்டில், முன்கூட்டியே நாம் பெற்ற அறிவுக்கு கீழ்ப்படியாமல், அதிகமாக அறிவில் முன்னேறுவது இயலாத காரியமாக தோன்றுவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் (4) தேவனுடைய பிரமாணத்திற்கு, தொடர்பான நீதி, கருணை மற்றும் பயபக்தியுடன் உள்ள அன்பின் பிரமாணத்திற்கு இப்படிப்பட்ட கீழ்ப்படிதலின் வளர்ச்சிக்குரிய ஆதாரத்தை, நம்மில் அல்லது மற்றவர்களில் நாம் காணும்போது நாம் அதை பாராட்ட வேண்டும். (5) நம்முடைய அனுபவங்களில் துவக்கத்தில், பிதாவின் சித்தத்தை செய்வதில், மகிழ்ச்சியின் முழு விளைவை நாம் எதிர்ப்பார்க்க முடியாது அல்லது துவக்கத்தில், கொள்கைக்கான அன்புக்கு பதிலாக கடமை அன்பை ஒரு கணிசமான அளவு பெறுவதே நோக்கமாக இருந்தால் நாம் சோர்வடைய வேண்டுமா? மேலும் ஆசீர்வாதங்களையும், மேலும் அன்பின் ஆவியால் நிரப்பப்படவும், நாம் ஆண்டவரின் கைகளில் தேட வேண்டும். ஆண்டவர் இந்த பிரபஞ்சத்தை நிர்வாகிக்கும் அடிப்படையான கோட்பாடுகளை படிப்பதற்கும், பாராட்டுவதற்கும் நாம் முயல வேண்டும். நியாயப்பிரமாணத்திற்கும், கொள்கைக்கும், நீதியின் ஆவிக்கும் இசைவாக, நம்முடைய இருதய்ங்களில் இரக்கத்தை வரப்பண்ணுவதற்கு முயற்சிக்கவேண்டும். நம்முடைய அறியாமையின் காரணமாக, நீதியின் கொள்கைகளை, புரிந்துக்கொள்வதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நாம் கர்த்தரை அறிந்துக் கொண்டு, அவருடைய திட்டங்களை சிறப்பாக புரிந்துக்கொள்ளும்போது, நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் இன்னும் விரிவாக திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது “பரிசுத்தவான்கள் அறிந்துக்கொள்வது” மட்டும் அல்ல, அன்பின் தெய்வீக பிரமாணத்தை உள்ளடக்கியிருக்கும். மற்றும் அதன் கொள்கைகளையும் எல்லா பரிசுத்தவான்களோடு அறிந்துக்கொள்ள சாத்தியமாக்கும். இவ்வாறு நாம் தினமும் ஒவ்வொரு மணிநேரமும் நீதியின் கொள்கைகளுக்கும், வளர்ச்சி அடையும் அன்புக்கும் கீழ்ப்படிவதன் மூலம் தேவனுடைய அன்பைக் காத்துக்கொள்வோம். மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவ்ங்களிலும் சோதனைகள், கஷ்டங்கள், துக்கங்கள், ஏமாற்றங்கள்… அனைத்திலும், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எந்தவொரு அல்லது எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய சொந்த குறைபாடுகளை தெளிவாக புரிந்துக்கொள்வதற்கும், அவர் உருவாக்கிய சுயாதீனம் மற்றும் அன்பின் பரிபூரண பிரமாணத்தை இன்னும் தெளிவான புரிந்துக்கொள்வதற்கு உள்ளுணர்வை கொடுப்பார். இதற்கு நம்முடைய விசுவாசமுள்ள இருதயத்தின் முழு அர்ப்பணிப்பு அவருக்கு தேவைப்படுகிறது.
R3553 [col. 2 4]: –
தேவனுடைய இந்த அன்பும் கிறிஸ்துவினுடைய அன்பும் எவ்வளவு அற்புதமானது, அதனுடைய நீளமும், அகலமும், உயரமும், ஆழமும் அளவிடுவது எந்த அளவுக்கும் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. ஆண்டவரை தங்களுடைய இரட்சகர் என்று ஏற்றுக்கொண்டு, அவரோடு உடன்படிக்கையின் உறவுக்குள் பிரவேசித்தவர்கள், அவர்களுடைய சிறிய காரியங்களையும் அவருக்கு கொடுத்து, அவர் ஏற்படுத்தியிருக்கும் எல்லா ஆசீர்வாதங்களிலிருந்தும் ஒரு பங்களிப்பை ஏற்றுக்கொண்ட பின், பலவீனங்கள் அல்லது எதிர்ப்புகளின் காரணத்தால், கீழே தள்ளப்பட்டால், பிதா நம்மேல் வைத்திருக்கும் மகத்தான அன்பையும், அதில் குமாரன் எடுத்துக்கொண்ட பங்கையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்த அன்பு நாம் பாவிகளாக இருக்கும்போதே நம்மை இரட்சித்தது. அதுமட்டுமல்ல, நம்மை இப்படிப்பட்ட அற்புதமான ஆசீர்வாதங்களும், சிறப்புரிமைகளையும் அளித்து, நம்முடைய ஆண்டவராம் கிறிஸ்துவோடு நம்மை பங்காளிகளாக்கினார். அப்படியானால், நாம் அவரோடு பாடுபடுகையில் இந்த அன்பு கொஞ்சம் கூட விலகாது. இந்த அன்பு நம்மை இரண்டாம் மரணத்தில் விழச்செய்வதை காட்டிலும் நம்மை சிட்சித்து, தூய்மைப்படுத்தும். இயேசுவை தொடர்ந்து நம்பி. அவருடைய விசுவாசமுள்ள வார்த்தைகளை தொடர்ந்து பற்றிக்கொள்ளுபவர்களை இந்த அன்பு இறுதியாக சிறு மந்தைக்கோ அல்லது திரள் கூட்டத்திற்கோ அனுப்பிவிடும். ஆனால் எந்த அளவுக்கு தேவன் மேலுள்ள இந்த அன்பு முழுமையாக நமக்குள் வாசம் செய்கிறதோ, அந்த அளவுக்கு கிறிஸ்து நம்முடைய இருதயங்களில், அரியணையில் அமர்ந்திருக்கிறார். அதே அளவில் நாம் திரும்ப செலுத்தக்கூடிய அன்பு, நம்முடைய பிதாவின் பார்வையில் செம்மையும். நம்முடைய கர்த்தருக்குப் பிரியமுமானதும் செய்ய மகிழ்ச்சியாக இருக்கும். அதே அளவிலான அன்பு தேவனுக்கும் நம்முடைய ஆத்துமாக்களுக்கும் இடையில் வரும் எந்த மேகத்தையும் தவிர்க்க எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும். ஆகவே, தெய்வீக அன்பின் நீளம், அகலம், உயரம் மற்றும் ஆழத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் புத்துணர்வூட்டும் புதிய தைரியத்தை நாம் பெறலாம். மேலும், தேவனுடைய அன்பு. அவருக்காக நம்மை. அதிக ஆர்வத்துடனும், பக்தியோடும் இருக்க நம்மை கட்டுப்படுத்தட்டும்.
R3546 [col. 2 P4, 5]: –
மூன்றாவது கனி அல்லது திராட்சை செடியின் உறுப்பினாராக இருக்கக்கூடிய சான்று மற்றும் ஒன்பதாம் வசனத்தில் குறிப்பிட்டபடி, கிளைகளின் தொடர்ச்சியான வளர்ச்சி, அதாவது தந்தையே திராட்சை செடியாகிய இயேசுவை நேசித்தது போல, நம்முடைய இரட்சகர் கிளைகளாகிய நம்மை நேசிக்கிறார். பிதா நம்முடைய ஆண்டவரிடம் கொண்டிருக்கும் அதே அன்பை ஆண்டவர் நம்மீது வைத்திருக்கிறார் என்பது. எவ்வளவு அற்புதமான சிந்தனை, இந்த சிந்தனையை நம்முடைய விசுவாசம் எப்பொழுதும் பற்றிக்கொண்டு, இந்த பிடியை தக்கவைக்குமா? உண்மையில் நாம் எதற்கும் விருப்பப்படுவதற்கோ அஞ்சுவதற்கோ அவசியம் இல்லை. நமது கோடைக்காலம் முழு வருஷமும் நீடிக்கும். ஆண்டவருடைய இரக்கத்தில் உயர்ந்த நிலையை அடைந்த பின், நாம் அவருடைய சீஷர்களாக, நமக்காக அவர் செய்த சகலத்தையும் உண்மையில் புரிந்து பாராட்டினால், அவருடைய அன்பில் தொடர்ந்து நிலை நிற்க விரும்புவோம் என்பதே அடுத்த சிந்தனையாக கருதப்படுகிறது. நாம் அந்த அன்பில் தொடர்வதற்கும், அடுத்த வரிசையில் வரும். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் – அவருடைய கற்பனைகளை காத்து நடக்க வேண்டும். இது ஒரு நியாயமற்ற கருத்து அல்ல என்று நமக்கு காட்டுவதற்கு “நான் என் பிதாவின் கற்பனைகளை காத்துக்கொண்டு அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல…” என்று கூறி, பிதாவாகிய தேவன் நம்முடைய கர்த்தருடனும் இதே விதிமுறையை கையாளுகிறார் என்று அவர் அறிவித்தார். கர்த்தருடைய கட்டளைகளை கவனியாமல். அவருடைய அன்பில் நிலைத்திருப்பது எதிர்பார்க்க முடியாத காரியம். தம்முடைய பிதாவின் மேல் அவர் வைத்த அன்பின் அளவை, அவருடைய கீழ்ப்படிதல் சுட்டிக் காட்டியதை போல, அவர் மேல் நாம் கொண்ட விசுவாசத்தின் அளவை நம்முடைய கீழ்ப்படிதல் குறிப்பிடும். அப்போஸ்தலரும் இதே சிந்தையை குறிப்பிடுவதோடு இன்னும் கொஞ்சம் இணைத்துக் கூறுகிறார். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமான வைகளுமல்ல” 1 யோவான் 5:3 கற்பனைகளை கடைபிடித்தால் மட்டும் போதாது, அவைகளை அன்போடும். உண்மையோடும். நல்ல மகிழ்ச்சியோடும் காத்துக் கொள்ள வேண்டும். இவைகளை நாம் பாராமானவைகளாக எண்ணுவதற்கு பதிலாக, ஆண்டவருடைய நீதியுள்ள முன்னேற்பாடுகளுக்கும். ஒழுங்குகளுக்கும், இசைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டும். நம்முடைய ஆண்டவராம் இயேசுவும். அவருடைய கற்பனைகளிலும் கொடுக்கப்பட்ட நீதியுள்ள கொள்கைகளுக்கு, இசைந்திருக்கும் ஆவியை முழு இருதயத்தோடு அதிகதிகமாக தேடுவோம்.