CD-LOVE-Q-21
F364 P1 through F367 P2
இந்தப் புது சிருஷ்டி தேவனுடனும், மற்றும் அவரது பிரமாணங்களுடனும் கொண்டுள்ள தொடர்பு மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறானதும் தனிப்பட்டது மாகும். அவர்கள் விசுவாசத்தினால் தேவனோடு ஒரு புதிதானதும் நல்ல நிலையையும் உடையவர்களாக எண்ணப்படுகிறார்கள். அது நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறபடி நீதிமானாக்கப்பட்ட நிலை அல்ல அப்படி எண்ணப்பட்ட நிலையாகும். இந்த நீதிமானாக்கப்பட்ட நிலை அவர்களுக்குக் கிறிஸ்துவின் பலியினால் உண்டான புண்ணியத்தினிமித்தம் கொடுக்கப்பட்டது. அது கடந்த காலத்தின் பரிபூரணமற்ற தன்மைகளை மூடுவது மாத்திரமன்றி, அவர்களோடே இருந்து ஒரு மூடுகிற, நீதிமானாக்குகிற, நீதியின் வஸ்திரமாக உள்ளது. இந்த புண்ணியத்தினால் மனப்பூர்வமாக செய்யப்படாத ஒவ்வொரு குறையையும், வார்த்தையில், சிந்தனையில் அல்லது செயலில் உள்ள கறையையும் மூடிவிடுகிறது. புது சிருஷ்டிகளாக அவர்கள் எல்லோரும் வெண் வஸ்திரத்தினால் உடுத்திவிக்கப்படுவதாக கற்பனை செய்து பார்க்கப்படுகிறார்கள். அந்த வஸ்திரம் பரிசுத்தவான்களின் நீதியும், அவர்கள் தலையாயிருக்கின்ற மீட்பரால் அளிக்கப்பட்ட நீதியுமாகும். இந்தப் புதுசிருஷ்டிகள் அவர்களுடைய அன்பை வெளிக்காட்டும் போது அவர்களுடைய நிலைக்கும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்கள் என்ற உறவு முறைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். தேவனுடைய குமாரனின் மரணத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் இரக்கத்தையும், கிருபையையும் அவர்கள் அவ்வளவாய் உணர்ந்திருக்கிறார்கள். அவர் மூலமாக நீதிமானாக்கப்பட்டதையும், அவர்கள் அதன்மூலம் அவர்களுக்கு எல்லா ஈவுகளையும் கொடுக்கிறவரை நேசிப்பதாலும், திவ்விய அழைப்புக்கு ஏற்ப தங்கள் சரீரங்களை ஜீவ பலியாய் ஒப்புக்கொடுப்பதில் அவர்களுக்குச் சந்தோஷம் உண்டு என்பதை வெளிப்படுத்துவதின் மூலமாய் அவர்களுடைய அர்ப்பணிப்பைத் தெரிவிக்கிறார்கள்.
பூலோகத்தின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும், குறிக்கோள்களையும், எதிர்காலத்திட்டங்களையும் அர்ப்பணிப்பது, அல்லது பலியாக செலுத்துவது என்பது பயத்தினாலோ அல்லது வெகுமதி கிடைக்கும் என்று சுயநல ஆசையினாலோ வருவது அல்ல, ஆனால், சுத்தமான அன்பினாலும், திவ்விய அன்பை உணர்ந்துகொள்வதாலும், தேவனுக்கு நேராகத் தன்னுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற வாஞ்சையாலும், அவருடைய எல்லாவிதமான அற்புதமான திட்டங்களோடும் ஒத்துப் போவதாலும் வருவதாகும். இப்படியாக அன்பையும், வாஞ்சையையும் வெளிப்படுத்தும்போது, அது ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது, அவருடைய ஆவி கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தேவ புத்திரர் என்றும், பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் என்றும் எண்ணப்படுகிறார்கள். “பிரியமானவர்களே. இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போம் (ஆண்டவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற புதிய மறுரூபமாக்கப்பட்ட சரீரங்களை நாம் பெறும்போது, எப்படிப்பட்ட மாற்றத்தை நாம் அனுபவிப்போம்) என்று இன்னும் வெளிப்படவில்லை ஆகிலும் அவர் வெளிப்படும் போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். (இந்தச் சிந்தனை நமக்கு திருப்தியாயிருக்கிறது.) 1 யோவா 3:2.
பரலோகப் பிதா தன்னுடைய தேவபுத்திரரை (தேவதூதர்களை) சீனாய் மலையின் நியாப்பிரமாணத்திற்குக் கீழாக்கியிருக்கிறாரா? அவர்களுக்கு வேறு தேவர்கள் இருக்கக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கிறாரா? அவர்கள் யாதொரு சொரூபத்தையும் உண்டாக்கக்கூடாது. அவர்களை நமஸ்கரிக்கவும் கூடாது, அவர்கள் இச்சியாமலும், திருடாமலும், பொய் சொல்லாமலும், கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறாரா? நாம் இல்லை என்று சொல்லுகிறோம். நிச்சயமாகவே அவர் தன்னுடைய தேவ தூதர்கள் மேல் இப்படியான ஒரு பிரமாணத்தை வைக்கவில்லை. அப்படியானால் ஏன் இப்படியான ஒரு பிரமாணம் புது சிருஷ்டிக்குக் கொடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும்? பரலோக தகப்பன் இந்தப் புது சிருஷ்டிப்புகளைத் (தேவ தூதர்) தன்னுடைய குமாரராக ஏற்றுக் கொள்ளவில்லையா? மேலும் அவர் தன்னுடைய ஆவியை அவர்களுக்குக் கொடுக்க வில்லையா? மேலும் தங்களுடைய சுபாவத்தின் படியான சுய நல நோக்கங்கள் அல்லது சித்தத்திற்குப் பதிலாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இப்படிப்பட்ட பிரமாணங்களைக் கொடுபபது அவசியமாயிருக்குமா? பணிவிடைக்காரரை பிரமாணங்களுக்குக் கீழாகப் போடுவது சரியானதென்று நாம் பார்க்கக்கூடும், ஏனெனில் அவர்கள் முக்கியமாக பொதுவான நலத்தில் நாட்டமுள்ளவர்கள் அல்ல, மேலும் தங்களுடைய எஜமானருடைய ஆவியையோ அல்லது நோக்கத்தையோ முழுமையாகப் பெற்றிராமல் இருக்கலாம். ஆனால் பரிபூரணமான ஒர் எஜமான் பரிபூரணமான குமாரர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். அவருடைய சித்தத்தைச் செய்ய வாஞ்சை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவருடைய மகிமையான திட்டம் எல்லாவற்றிலும் அவரோடு சக வேலையாட்களாக இருக்க விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது இப்படிப்ட்ட ஒரு தகப்பனுக்கு இப்படிப்பட்ட குமாரர்களை இப்படிப்பட்ட பிரமாணங்களுக்குக் கீழாக வைப்பது எப்படி அவசியமாகும்?
“மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கு உண்மையுள்ளவனாய் இருந்தான்.” அவர் வீட்டிலுள்ள பணிவிடைக்காரர்கள் அனைவரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழாக இருந்தார்கள். “வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாக கூட்டப்பட்டது. “மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு, பிரமாணமானது நீதியானது என்பதைக் காட்டுவதற்காக மாத்திரம் அல்லாமல், மாம்சத்தில் தன்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தும்படியாகவும் அவர் உலகத்தை மீட்கக்கூடும் என்பதற்காகவும் அவர் மரணத்தின் கீழாகத் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்தார். மரித்தோரிலிருந்து அவர் எழும்பி “மரித்தோரிலிருந்து முதற்பலனான போது” அவர் புது சிருஷ்டியின் தலையாக அநேக சகோதரருக்குள் முதற்பலனானார். மாம்சத்தின்படி அவர் பிரமாணத்திற்குக் கீழாக இருந்தார், ஆனால் புது சிருஷ்டியாகிய உயிர்த்தெழுந்த ஆண்டவர் பிரமாணத்திற்குக் கீழாக இல்லை, மேலும் அவர்தாமே குமாரர்களின் புதிய வீட்டிற்குத் தலைவரானார். “கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார். அவரை பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்” நாம் இன்னும் மாம்சத்தில் இருந்தாலும், புதிய சிருஷ்டிகளாகிய நாம் மாம்சத்திற்குரியவர்கள் அல்ல, மேலும் நாம் மாம்சத்திற்குரியவர்களாக எண்ணப்படுவதில்லை. உலகத்தில் உள்ள மற்றவர்களை எண்ணுவதுபோல, நாம் தேவனால் எண்ணப்படுவதில்லை. ஆனால் புது சிருஷ்டிகளாக ஒரு கூடாரத்தில் அல்லது தற்காலிக வாசஸ்தலத்தில் சுவிகாரத்திற்காகக் காத்திருந்துகொண்டு சொல்லப்போனால் நம்முடைய முழு சரீரமும் விடுதலை அடையும்படி, ஏற்கெனவே மகிமை அடைந்த நம்முடைய தலையாக இருக்கிறவரோடு அவரைப் போல இருக்கும்படி, சொற்பகாலத்திற்குப் பரதேசிளாக இருக்கிறோம். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்திற்குட்பட்டவர்களாயிராமல் (தேவனால் அப்படி எண்ணப்படுகிறோம்) ஆவிக்குட்பட்ட வர்களாயிருப்பீர்கள்.” (ரோமர் 8:8-9)
இந்த திவ்விய நோக்கோடு இதைப் பார்க்காவிடில், யாரும் இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியினால் பிறந்த இந்தப் புது சிருஷ்டிகள் எல்லாம், அவர்கள் ஒரு தேவனைத் தவிரவேறு தேவனை உடையவர்களாய் இருக்கும்படியாக நினைக்கவும் முடியாது. அவர்களால் சொரூபங்களை உண்டாக்கவோ அவைகளைத் தொழுது கொள்ளவோ நினைக்க முடியாது. அவர்களால் தேவனுடைய நாமத்தை தூஷிக்கும்படியாகவும் நினைக்க முடியாது. அவர்களால் மற்றவர்களிடமிருந்து திருடவும் நினைக்க முடியாது. கொடுக்கத்தான் விரும்புவார்கள், அவர்களால் மற்றவர்களுக்கெதிராக பொய் சாட்சி சொல்லவும் நினைக்க முடியாது அதற்குப்பதிலாக அவர்களுக்குள் இருக்கின்ற அன்பு, கறைகளை மூடவும் மறைக்கவும் முயற்சிக்கும், அதுவும் சகோதரருக்குள் உள்ளவைகளை மாத்திரம் அல்ல பொதுவாக உலகத்தாருடையதையும் கூட, அவர்களால் சக சிருஷ்டியைக் கொல்ல நினைக்கமுடியாது அதைக்காட்டிலும், அவர்கள் தங்களுடைய ஜீவனை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள், அதுவும் பரிபூரணமாக, ஆம் அவர்களுடைய பரிசுத்த ஆவி அவர்களுடைய சகோதரருக்கென அவர்களுடைய ஜீவனையே கொடுக்கும்படியாக தூண்டும். அதே பரிசுத்த ஆவி நம்முடைய இரட்சிப்பின் தலையானவரை தன்னையே மீட்கும் பொருளாகக் கொடுக்கத் தூண்டியது போன்று தேவன் புது சிருஷ்டிக்கென ஒரு பிரமாணத்தை குமாரர்களின் வீட்டாருக்கும், பணிவிடைக்காரர்களின் வீட்டாருக்கும் கொடுத்தது போன்று கொடுத்திருப்பாரென்றால், அது முற்றிலுமாகப் பொருத்தமற்றதாக முழுவதுமாக தகுதியற்றதாக இருந்திருக்கும் என்று நாம் பார்க்கவில்லையா? இந்த “குமாரர்களின் வீட்டின் அங்கத்தினர்கள்,” பரிசுத்த ஆவியை இழந்து போகாமல், புது சிருஷ்டியாக இருப்பது நின்று விடாமல் இப்படியான ஒரு பிரமாணத்திற்கு ஒத்துப்போக முடியாது. “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் (மனம், சிந்தை) அவருடையவன் அல்ல” (ரோம 8-9)
ஆனால் எப்படி இந்தப் புது சிருஷ்டிகள் ஒரு பிரமாணமோ, சில ஒழுங்குகளோ இல்லாமல் இருக்கமுடியும்? திவ்விய பிரமாணத்தின் உன்னத செய்தி அன்பு என்று நாம் பதில் கூறுகிறோம். தேவனுடைய கட்டளைகள் அவ்வளவு விரிவாக, ஆழமானதாக, கணுக்களையும் ஊணையும் பிரிக்கத்தக்கதாயும் உள்ளது, ஆகவே அவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டுமென்றால் அன்பினாலேயேயன்றி முடியாது. பிரமாணத்தின் ஒவ்வொரு பகுதியும் கண்டிப்புடன் நிறைவேற்றப்பட்டாலும், தேவனுக்கென்று பயபக்தியுடன் கூடிய அன்பின் உணர்வு இல்லா விட்டால், திவ்விய பிரமாணம் திருப்தி அடையாது. அதற்கு மாறாக, அன்புதான் பிரமாணத்தின் நிறைவாகும். மேலும் எங்கு அன்பு ஆட்சி செய்கின்றதோ, அங்கெல்லாமல் திவ்விய ஒழுங்கின் ஒவ்வொரு பகுதியும். ஒவ்வொரு அம்சமும், சிருஷ்டியினால் முடிந்த அளவுக்கு தேடிப்பிடிக்கப்பட்டு, மனப்பூர்வமாகக் கீழ்ப்படிதலினால் நிறைவேற்றப்படும். அதுவும் பலவந்தத்தினால் அல்ல. ஆனால் மகிழச்சியினாலும், அன்பினாலும் அப்படி ஆகும்.
இப்படியான தேவனுக்கான அன்பையும், அவருடைய நீதியையும் புது சிருஷ்டியானது அர்ப்பணிப்பின் போது பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது. மேலும் அன்பே அதன் பிரமாணமாயிற்று, அது மரணபரியந்தம் கூட அன்பினால் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. உடன்படிக்கையிலான உறவின்படி பிரமாணத்திற்கு எவ்விதத்திலும் கீழ்ப்படியாமல் இருப்பது ஒரு மீறுதலாகும். அறிவின்படி இயன்ற அளவுக்கு அந்த அன்பின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவது என்பது சுய தியாகமும், உலகத்தின் ஆவியின் மேல் வெற்றியும், மாம்ச பெலவீனங்களின் மேல் வெற்றியும் சத்துருவின் மேல் வெற்றியும் ஆகும். மனப்புர்வமாகச் செய்யப்படாத கறைகளை ஆண்டவருடைய கிருபை ஈடு செய்கிறது. மேலும் இப்படிப்பட்ட வெற்றி பெற்றவர்களை அவருடைய சொந்த நாமத்தினாலும் புண்ணியத்தினாலும் கொண்டு வருவதும் ஆகும். ஆகவே, இன்னொரு பக்கம் மனப்பூர்வமாக அதற்குக் கீழ்ப்படியாமல் இருப்பது, இந்த அன்பின் பிரமாணத்தை வேண்டுமென்றே, அடிக்கடி மீறுவது என்பது சுவிகாரத்தின் ஆவியை இழந்துபோதல் என்றும், பரிசுத்த ஆவியை அவித்துப் போடுதல் என்றும், புது சிருஷ்டி இறந்துவிட்டது அல்லது இல்லாமல் போய்விட்டது என்று பொருள்படும்.