CD-KNOWLEDGE-Q-23
1 யோவான் 2:20,27- “நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்”, “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக”
F260 thorugh F261: –
ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் பட்சத்தில் அதாவது தெய்வீக திட்டத்தை ஒரளவுக்கு புரிந்துகொண்டவர்கள், முதலாவது அவர்கள் பாவிகளாக இருந்தார்கள் என்றும், அதற்காக அவர்களுக்கு ஒரு இரட்சகர் மிகவும் அவசியமாக தேவைப்பட்டார் என்றும் அறிந்திருக்கவேண்டும். அடுத்து அந்த இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டார் என்றும், அவருடைய சொந்த ஜீவனை பலி செலுத்தி, தங்களை இரட்சித்தார் என்பதையும் தங்களுக்குமுன் நிறுத்தி கொள்ளவேண்டும், என்பதை அப்போஸ்தலர் கூறுகிறார். மேலும் இப்படிப்பட்டவர்களுக்கு எந்த மனுஷனும் அடிப்படை சத்தியத்தை போதிக்க வேண்டிய அவசியமில்லை என்று அப்போஸ்தலன் கூறுகிறார். மேலே சொல்லப்பட்ட கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையை அறியாதிருந்தால் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. பாவத்திற்காக கிறிஸ்து மரித்து, நம்மை நீதிமான்களாக்கும்படியாக அவர் உயிர்த்தெழுந்தார் – மேலும் நாம் பெற்ற இந்த நிலையே, நாளுக்கு நாள் நம்மை சுத்திகரித்து, மகிமையான நம்பிக்கையை கொடுப்பதே நம்முடைய சார்பில் செலுத்தப்பட்ட ஈடுபலியின் பலனாகும். ஒரு வேளை குமாரன் வெளிப்படுவதற்கு முன்னதாக குமாரனை விசுவாசிக்காமல் பிதாவின் மேல் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தாலும், இப்போது, தேவனுடைய குமாரனை மறுதலிக்கிறவன், பிதாவையும் மறுதலிப்பவனாக இருப்பான் என்றும் கூறுகிறார். அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் காரணராகவும், எல்லாவற்றையும் செயல்படுத்துகிறவராகிய பிதாவையும், அவருடைய திட்டத்தை ஏற்றுக்கொள்கிறவன் குமாரனையும் ஏற்றுக்கொள்வான் என்று கூறுகிறார்.
அப்போஸ்தலர் எதை பொருள்படுத்தினார் என்பதை இன்றைக்கு தெளிவாக நாம் அறிந்துக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள், இயேசுவை பிதாவாகிய தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்றும், அவர் மாம்சத்தில் வெளிப்பட்டு, பரிசுத்தமும், பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து நமக்காக ஈடுபலியை கொடுத்தார் என்றும் முதலாவது விசுவாசிக்க வேண்டும். இயேசு தந்த பலியை தேவன் அங்கீகரிப்பதற்குச்சாட்சியாக அவரை மகிமையான இராஜாவாகவும், இரட்சகராகவும் உயிர்ப்பித்தார். இந்த விசுவாசம் இல்லாமல் ஒருவரும் பரிசுத்த ஆவியை அபிஷேகமாக பெற்றுக்கொள்ளமுடியாது. இந்த அபிஷேகம் பெற்றவர்கள் அடிப்படையான உபதேசங்களை மீண்டும் ஆலோசிப்பதற்கு அவசியமில்லை. ஏனெனில், இயேசு தேவனுடைய குமாரனா? அவர்தான் அபிஷேகம் பண்ணப்பட்டவரா? பிதா குறித்தகாலத்தில் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவாரா? என்ற காரியங்களைக் கலந்தாலோசிப்பது நேரத்தை வீணாக்குவதற்கு வழிவகுக்கும். நாம் இதே அபிஷேகத்தை பெற்றிருந்தால், இப்படிப்பட்ட சத்தியங்கள் நமக்குள்ளே இருக்கும் – “அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்கு போதிக்கிறது.” அவருக்குள் நிலைத்திராதவன், வெட்டப்பட்ட திராட்சை கொடி, இவன் உலர்ந்து போவான். ஆனால் அவருக்குள் நிலைத்திருப்பவன், அவருடைய ஆவிக்குள்ளும் நிலைத்திருக்கிறான், நிச்சயமாக இவன் இயேசுவை மறுதலிக்க மாட்டான்.
“அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்கு போதிக்கிறது.” யூத யுகம் முழுவதிலும் பிரதான ஆசாரியனின் தலையின் மேல் ஊற்றப்பட்டு அவருடைய சரீரம் முழுவதையும் நனைத்த அபிஷேக தைலத்திற்கு பரிசுத்த ஆவி அடையாளப்படுத்தப்பட்டது. இப்படியாக யார் ஒருவர் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இயேசு பெற்ற அபிஷேகத்திலும், அந்த வல்லமையான தூண்டுதலிலும் பங்கு பெறுபவர்களாக இருக்கிறார்கள். எண்ணெய் வழுவழுப்பாக இருப்பது போல தேவனுடைய ஆவி அனைவரோடும் சமாதானத்தை ஏற்படுத்தி, கூடுமான வரைக்கும் நீதியின் பாதையில் வழி நடத்தும். உராய்வுகளை உருவாக்கும் பகை, கோபம், ஆத்திரம் போன்றவைகளை இது சரிக்கட்டிவிடும். இப்படிப்பட்ட பரிசுத்த ஆவியின் செயல்பாட்டின்கீழ் மகிழ்ச்சியாக தேவனிடம் கற்றுக்கொள்பவர்கள், வெளிப்பாடுகளில் கருத்துகள் முரண்பட்டாலும், தேவனோடு அவர்கள் தொடர்பு கொண்டதினால் இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகிறது என்று அறிந்து வெகு சீக்கிரத்தில் தேவனுடைய சித்ததிற்கு இசைந்து, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் இருதயத்தில் பரிசுத்தத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
இயேசுவை விசுவாசித்து, அவரே அபிஷேகிக்கப்பட்டவர் என்று அவரை ஏற்றுக்கொண்டு, தங்களுடய இருதயத்தில் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் தேவனுடைய ஆவியை பெற்றுக்கொள்கிறார்கள். தங்களுக்கு மட்டும் அல்ல, கிறிஸ்துவின் சரீர அங்கத்தினராக வளர்ச்சி அடையும் மற்றவர்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. சமாதானம், சந்தோஷம் குறைந்து, தங்களுடைய இருதயத்தில் கோபம், பகை, அகங்காரம், சண்டைகள் போன்றவைகளின் அதிகரிப்பு, நிச்சயமாக பரிசுத்த ஆவியின் குறைச்சலுக்கு ஆதாரமாக இருக்கிறது. உண்மையில் நாம் அனைவரும் ஒரே விதமாக இருப்பதில்லை. அன்பின் செயல்பாடு சிலரிடம் உடனடியாக வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆனால் துவக்ககால கிறிஸ்துவ அனுபவங்களில் இந்த அன்பு இருதயத்திலிருந்து வெளிப்படவேண்டும். நாம் தேவனுடைய ஆவியை பெற்று இயேசுவோடு இருப்பதற்கு இதுவே ஆதாரம். மேலும் வெகு சீக்கிரத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன்பாகவும் நாம் பெற்ற ஆவியை ஆதாரமாக வெளிப்படுத்தவேண்டும்.