CD-KNOWLEDGE-Q-1
மத்.4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
“அப்பம்” என்ற வார்த்தை பொதுவாக, உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது பசியை போக்கி, பலத்தை கொடுத்து, வளர்ச்சியை ஊக்குவித்து, தொடர்ந்து ஜீவனை தக்கவைக்கக்கூடியதாக இருக்கிறது. தேவன் அவருடைய ஜனங்கள் பலப்பட்டு, வளர்ச்சியடைந்து, பரலோக வாசிகளாக நித்திய ஜீவனை பெருவதற்கு, தேவன் ஏற்படுத்தின அவருடைய வார்த்தைகளை நம்முடைய ஆண்டவர் அப்பத்தை அடையாளமாக சொல்லுவது, மிகவும் பொறுத்தமாக இருக்கிறது. தெய்வீக சத்தியமானது, ஆவிக்குரிய உணவை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில் தெய்வீக திட்டத்தில் இயேசுவே “வழியும் சத்தியமும் ஜீவனுமாக” இருப்பதால், தேவனுடைய ஜனங்களுக்கு அவரே “வாழ்வு தரும் அப்பமாக” இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாம் நம்முடைய நம்பிக்கையான நித்திய ஜீவனை அடைய, நாம் புசித்து அல்லது அவருக்குள் நமக்கு கொடுக்கப்படும் இலவசமான ஜீவனைப் பெற்று அதற்கு பங்காளிகளாக வேண்டும்.
R 3200(Col.2): –
அடிப்படை சத்தியத்தை பொறுத்தவரைக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஸ்தாபிக்கப்பட்ட விசுவாசம் அதிகமாக குறைவுப்படுகிறது. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” “ஓரு வேளை என்னுடைய கருத்து சரியானதாகவும் இருக்கலாம், தவறானதாகவும் இருக்கலாம்” என்று பேசுவது வழக்கமானது. ஆனால் எனக்குள் அதிகமான விசுவாசம் உண்டு என்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் எதை விசுவாசிக்கிறார்களோ, எதை போதிக்கிறார்களோ, அதைப்பற்றி கவலையில்லை. தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவரோடும் நான் கை குலுக்குகிறேன். அவர் கிறிஸ்துவை வாசலாக வைத்து வழிகாட்டினாலும் சரி அல்லது வேறு வழியை காட்டினாலும் சரி, அனைவரையும் கிறிஸ்தவ அன்பில் நான் ஏற்றுக்கொண்டு, அவர்களின் அனைத்து போதனைகளும் வெற்றி பெற நான் ஜெபித்து அவர்களை ஊக்குவிப்பேன்.” என்று கூறுகிறார்கள்.
பெருந்தன்மையுள்ளவர்கள் மற்றும் சாந்த குணமுடைய பொதுவான கிறிஸ்தவர்கள் மத்தியில் இக்காரியங்கள் அனைத்தும், காணப்படும். ஆனால் உண்மையில், சத்தியத்தை எதிர்ப்பதினால் தேவனையும் எதிர்ப்பவர்களோடு உறவு கொள்வதற்கு பதிலாக, விசுவாசத்தில் பலவீனமானதால் இடறி விழுவதை காட்டிலும், கிறிஸ்துவினிமித்தம் துன்பத்தை சகிக்கவேண்டும்.
தேவன் மேல் உண்மையான விசுவாசம் உள்ளவர்கள், அவருடைய வார்த்தைகளை கைகொண்டு, அடிப்படை சத்தியங்களின் கோட்பாடுகளை, நீண்டகாலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குள் ஸ்திரப்படுத்தியிருப்பார்கள். பொருத்தப்படவேண்டிய தங்கம், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கற்கள் முன்னதாகவே செப்பனிடப்பட்டு கொண்டிருப்பதை போல இதுவும் நடந்து வருகிறது. தேவனுக்கு உண்மையும் விசுவாசமும் உள்ளவர்களாக இருந்தால், அதாவது உண்மைகளுக்கும், தவறுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்துக்கொள்ள முடிந்தால், அதற்கான வேலைகள் சீராக நடைப்பெற்றுக்கொண்டிருக்கும். இந்த ஒரு தகுதியை அடையாளம் கண்டுக்கொண்ட யோவான் – “ஓருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.” (2யோவான் 10) என்று கூறுகிறார். நாம் எவைகளை விசுவாசிக்கிறோம் என்றும், அவைகளை எதற்காக விசுவாசிக்கிறோம் என்றும் முதலில் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு பின் அக்காரியங்களை எந்தவிதமான சாக்குபோக்குகளுக்கு இடம் கொடாமல் தைரியமாக அறிக்கையிடவேண்டும். “அந்தபடி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?”
மீண்டுமாக (1கொரி.2:6-10) “அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே (முத்துக்களை பன்றிகள் முன் போடாதீர்கள்) ஞானத்தை பேசுகிறேன், இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துப்போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையும் அல்ல, உலக தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைய மாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.” என்று அப்போஸ்தலன் கூறுகிறார்.
இந்த உலகத்தின் வான சாஸ்திரம் மற்றும் நில அமைப்பியலை குறித்தும், இப்பிரபஞ்சத்தின் அதிபதி அறிந்திருகிறான். ஆனால் தெய்வீக திட்டத்தில் மறைந்திருப்பது, இனி வரக்கூடிய யுகங்களில் விசுவாசமுள்ள பரிசுத்தவான்கள் பெறப்போகும் ராஜரீகமான மகிமைப் பற்றிய ஞானத்தையும் அறியாதிருக்கிறான். இந்த உலகம் அதற்கு விருப்பமான காரியங்களை அதனுடைய கண்ணோட்டத்தில் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் பெற்றிருக்கும் இந்த ஒரே வாய்ப்பிற்காக நம்மை அர்பணிப்போம். “புத்தியீனமான தர்கங்களையும், வம்ச வரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமானத்தை குறித்து உண்டாகுகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்” (தீத்து 3:9) இவைகளை தவிர்போம். கேட்க விருப்பமுள்ள சாந்தமானவர்களுக்கு நமக்கு ஒப்புவிக்கப்பட்ட சுவிசேஷத்தை அறிவிப்போம் (ஏசா.61:1) மிகவும் அருகாமையில் இருக்கும் ஆட்டுக்குட்டியானவருடைய திருமணத்திற்கு கிறிஸ்துவின் மணவாட்டி தன்னைத்தான் ஆயத்தப்படுத்திக்கொள்ளட்டும். (வெளி. 19:7)