Q710:1
கேள்வி (1911)-1- சாட்சிக் கூட்டத்தில் சகோதரர்கள் நற்கிரியைகளுக்கு ஏவப்படும்படி ஒருவருக்கொருவர் புத்திமதி கூறிட வேண்டுமா அல்லது தங்கள் சொந்த அனுபவங்கள், ஆசீர்வாதங்கள் முதலானவைகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளலாமா?
பதில் – புத்திமதி கூறுதல் என்பது ஒரு காரியமாகவும் மற்றும் சாட்சி பகர்தல் என்பது வேறொரு காரியமாகவும் காணப்படுகின்றது என்று நான் எண்ணுகின்றேன். சாட்சிக் கூட்டமானது, நிச்சயமாகவே புத்திமதி கூறப்படுவதற்கான கூட்டமாகக் கருதப்படக்கூடாது; உங்களது சாட்சியினை நீங்கள் பகிர்ந்து கொள்கையில், அந்தச் சாட்சியே, மற்றவர்கள் சரியான பாதையில் நடக்க முயற்சிப்பதற்கு ஏதுவாய்க் காணப்படும் புத்திமதியாக அமையும் எனும் எண்ணத்தில்தான் சொல்லப்படுகின்றது. இது கொடுக்கப்பட முடிகின்ற மிகவும் ஆற்றல்மிக்க சாட்சியங்களில் ஒன்றாகும். பயபக்தியான வாழ்க்கை வாழ்பவனது அனுபவங்களானது அந்தப் பக்தியான ஜீவியத்திற்குச் சாட்சியைப் பகருகின்றதானால், அந்தச் சாட்சியைப் பகருதல் என்பது, நல்லதொரு ஜீவியம் ஜீவிப்பதற்கு மற்றவர்களுக்கு, இருப்பதிலேயே சிறந்த புத்திமதியைக் கொடுக்கிறதாகக் காணப்படும். அதேவேளையில் ஒருவன் தனது சாட்சியினைப் பகிர்ந்தபிற்பாடு, ஒன்று அல்லது இரண்டு புத்திமதிகளைச் சேர்த்துச் சொல்லுவது குற்றமாக இருக்கும் என்று நான் கருதுகிறதில்லை. ஆனால் சாட்சிபகர்வது என்பது புத்திமதி கொடுப்பதாய் இராமலிருக்க, சாட்சிபகர்வது என்பது புத்திமதி கூறுவதற்குரியது என்று எண்ணுவதில் அநேகர் தவறு செய்கின்றனர் என்பதும், அதிகமாய் அக்கூட்டங்களில் புத்திமதி கூற முற்படுவது தவறு என்பதும் உண்மையே. சாட்சியங்கள் பகிரப்படுவதே நலமென நான் எண்ணுகின்றேன்