Q235:2
கேள்வி (1905)-2- அலிகெனியில் (Allegheny) உள்ள சபையில் ஸ்திரீகள் வழிநடத்துபவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்களா என்பதை எனக்குத் தயவுக்கூர்ந்து தெரிவிக்கவும்? ஒருவேளை இல்லையெனில் ஏன் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது? ஸ்திரீகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றதே.
பதில் – இல்லை, இப்படியாக நடந்ததில்லை. அலிகெனியிலுள்ள சபையில் எந்தச் சகோதரிகளும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சகோதரிகளை அப்போஸ்தலர்களாகவோ அல்லது எழுபது சீஷர்களாகவோ கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் இயேசு, சகோதரிகளை நேசித்தார். அவர் மார்த்தாளையும், மரியாளையும் நேசித்தார். அவர்களுடைய சகோதரனாகிய லாசருவையும் நேசித்தார். கர்த்தர் ஒருபோதும் சகோதரிகளைச் சபையில் பேச்சாளர்களாக (speakers) நியமிக்கவில்லை மற்றும் இதற்கு மாறாய் வித்தியாசமாகப் பேசுவதற்கு நமக்கு அதிகாரமும் இல்லை. கர்த்தருடைய திட்டம் சிறப்பானதென நான் எப்போதும் எண்ணுகின்றேன். இங்குள்ள சபையை நடத்துவதற்கான கர்த்தருடைய திறமையை நான் சந்தேகிக்க ஆரம்பிப்பேனாகில், பரலோகத்தை நடத்துவதற்கான அவருடைய திறமையையும் நான் சந்தேகிப்பவனாகிவிடுவேன். அவருடைய வழியிலேயே நாம் நடக்க வேண்டும். மாறாக நமக்குரிய சொந்த வழியைத் தெரிந்துகொண்டு, கர்த்தரை நம்முடைய வழியில் நடக்க வரும்படி கேட்கக்கூடாது.