Q446:1
கேள்வி (1912)-1-தற்போது ஆதாமிடம் ஏதேனும் ஜீவ-உரிமைகள் இருக்கின்றனவா?
பதில் – இல்லை. தற்போது ஆதாமிடம் எந்த ஜீவ-உரிமைகளும் இல்லை; உண்மையாகவே – கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளவர்களாகிய சொற்பமானவர்கள் தவிர, மற்றபடி ஆதாமுடைய பிள்ளைகள் யாரிடமும் இல்லை. “குமாரனை உடையவன் ஜீவனை உடையவனாய் இருக்கின்றான்.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரது நிபந்தனைகளின்கீழ் வந்தவர்கள் தவிர, மற்றப்படி வேறு யாரிடமும் ஜீவ-உரிமைகள் இல்லை. முற்பிதாக்களுக்குக் கூட இன்னமும் ஜீவ-உரிமைகள் இல்லை; மேலும் ஏற்றவேளை வருகையில் அவர்களே (பூமிக்குரிய தளத்தில்) முதலாவது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, தேவனுடன் இணக்கத்தில் வருவார்கள்; மேலும் ஆயிர வருஷங்கள் முடிவதற்கு முன்னதாக, இவர்கள் ஜீவ-உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. அனைவருமே தங்களுக்குரிய ஜீவ- உரிமைகளை, அந்த ஆயிர வருஷங்களின் முடிவில் பெற்றுக்கொள்வார்கள். நம்மை ஆயத்தம் பண்ணுவதில் கர்த்தராகிய இயேசு தமது பங்கை ஆற்றினார்; ஆனால் நியாயாதிபதியாகிய தேவனே நித்திய ஜீவனைக் கொடுப்பவர் ஆவார். அவருடைய பிள்ளைகளாக இருக்கப்போகும் யாவருக்கும் அவரே தகப்பனாவார். ஆகையால் தற்காலத்தில் ஆதாமிற்கு அல்லது அவரது பிள்ளைகளுக்கு ஜீவ- உரிமைகள் இல்லை. ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளது; மேலும் மாபெரும் திட்டமானது நிச்சயமாகவே வெளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது மற்றும் அது நிறைவடையும். “வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்ற வார்த்தைகள் சொல்லப்படுவதற்குரிய காலம் வரும்; அப்போது இசைவிற்குள்ளாக வருபவர்கள், தங்களுக்குரிய ஜீவ-உரிமைகளைப் பெற்றுக்கொள்வார்கள். மீண்டும் சொல்லுகின்றேன்… ஆதாமிடம் தற்காலத்தில் ஜீவ-உரிமைகள் இல்லை; ஆனால் அவருக்கும், அவரது பிள்ளைகளுக்குமான நேரம் நெருங்கி வந்துக்கொண்டிருக்கின்றது.