Q237:1
கேள்வி (1910)-1- ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சபையார் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்துகின்றார்கள் என்று நாம் புரிந்துள்ளோம். நாங்கள் ஒரு சகோதரனை எங்களுக்கு மூப்பராக ஊழியம் புரிவதற்கெனத் தேர்ந்தெடுத்த பின்னர், நாங்கள் அவரைக்குறித்து கருதினவைகளுக்கு ஏற்ப அவர் இல்லை என்று பின்நாட்களில் கண்டுபிடிக்கும்போது, அது சபையாரின் தவறு என்றா? அல்லது கர்த்தருடைய தவறு என்றா? நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் – யாரிடத்தில் தவறு உள்ளது என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. சபையார் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதே தெரிகின்றது. சபையார் யாரையாவது மூப்பராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே அவரைக் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். நூதன சீஷனைத் (சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவரை) தேர்ந்தெடுக்கக்கூடாது என்று அப்போஸ்தலர் கூறுகின்றார். ஒரு நூதன சீஷனைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. ஒருவேளை இப்படிச் செய்திருப்பீரானால், இப்பிரச்சனைகள் வேண்டியதே. ஒருவேளை குறிப்பிட்ட காலம் ஒரு நூதன சீஷனை மூப்பராகப் பெற்றிருப்பதின் வாயிலாக நீர் நல்ல படிப்பினையையும் பெற்றுக்கொள்வீர். மேலும் ஒருவேளை சபையிலுள்ள நண்பர்கள் இப்படியானதொரு காரியத்தைச் செய்திருப்பார்களானால், அநேகமாக இது முடிவில் நன்மையாகக் காணப்படும் மற்றும் அவர்களும் அடுத்தமுறை மிகவும் கவனமாகக் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வார்கள். ஆனால் இவ்விதத்தின் மூலம் அவர்கள் படிப்பினை பெற்றுக்கொள்ளத்தக்கதாகக் கர்த்தர் அனுமதிக்கும் காரியமானது, கர்த்தரும் அறியாமல் செய்துவிட்டார் என்பதைக் குறிக்காமல், மாறாக தமது கட்டளையைப் பின்பற்றாமல், ஒரு நூதன சீஷனைத் தேர்ந்தெடுத்ததற்காக வருங்காரியங்களை அவர்கள் அனுபவிக்கத்தக்கதாக அவர் அனுமதித்துவிட்டார் என்பதாகவே இருக்கும். நூதன சீஷன் என்பவன் சபையின் விஷயங்களில் புதிதானவன் ஆவான். மேலும் ஒருவேளை அவன் இவ்விஷயங்களில், புதிதாய் இருப்பானானால், இதைக் குறித்துச் சபையார் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். ஏனெனில் அவனுக்காக வாக்களிப்பதற்கு (vote) முன்னதாகவே அவன் எப்படிப்பட்டவன் என்பதை அவர்கள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள்.