Q518:2
கேள்வி (1916 – Z.5939) -2- ஒரு கேள்வி பட்டியலைத் தொகுத்து, இக்கேள்விகளுக்குச் சொசைட்டியிடம் திருப்திகரமான விதத்தில் பதிலளிக்கும் நபர், திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரனாகக் கருதப்படுவார் என்று கூறுவதில், சொசைட்டிக்குக் காணப்படும் நோக்கமென்ன?
பதில் – அக்கேள்விகளானது, நீண்டகாலமாய் வாஞ்சிக்கப்பட்டதை நிறைவு செய்யும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கேள்விகளானது, மதவெறியின் அடிப்படையானது அல்ல; அவை யாவும் வேதவாக்கியங்களின் அடிப்படையினாலானதாகும். இப்பொழுது ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயண ஊழியர்களிடமிருந்து அல்லது எதிர்க்காலத்தில் சொசைட்டியின் பிரதிநிதிகளாய், பயண ஊழியர்களாய்க் காணப்படப் போகின்றவர்களிடமிருந்து, கிறிஸ்துவின் சுவிசேஷம் தொடர்புடையதான இந்த அடிப்படையான கேள்விகள் பற்றின அவர்களது புரிந்துகொள்ளுதல்களையும், அவர்களது கருத்துக்களையும், அவர்களது சிந்தனைகளையும் அறிந்துகொள்வதற்குக் சொசைட்டியானது விரும்புகின்றது. அக்கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பிடாத எந்தச் சகோதரனும், மனதில் குழப்பம் கொண்டிருப்பவராகவும், உறுதியற்றவராகவும், இதினிமித்தம் போதிப்பதற்குத் தகுதியற்றவராக, “போதகசமர்த்தனாய் இல்லை என்பதாகவும் கருதப்படுவார். இது அவர் தொடர்ந்து சகோதரராக இல்லை என்பதைக் குறிக்கின்றதாய் இராது; மாறாக பயண ஊழியத்திற்குப் பொருத்தமான சகோதரனாக அவர் கருதப்படுவதில்லை என்பதையே குறிக்கின்றதாய் இருக்கும். இன்னுமாக அச்சகோதரன் பிரசங்கிக்கக் கூடாது என்பதைக் குறிப்பதாய் இராது; மாறாக சொசைட்டியானது அவரைத் திவ்விய வார்த்தையின் விரிவுரையாளராய்ப் பரிந்துரைக்காது என்பதை மாத்திரமே குறிக்கின்றதாய் இருக்கும்.
எந்த ஒரு சகோதரன் கேள்விகளுக்குப் பதிலளிக்க விருப்பமுள்ளவனாகக் காணப்பட்டும், ஆனால் தன்னுடைய பதில்களில் கொஞ்சம் குழப்பத்தினை வெளிப்படுத்துகிறவராக இருப்பாரானால், இது அவர் சொசைட்டிக்கும், தேவனுடைய வார்த்தைத் தொடர்புடையதாக எது சத்தியம் என்று சொசைட்டியினால் நம்பப்படுபவைகளுக்கும் பிரதிநிதியாகிடுவதற்கும் முன்னதாக, இன்னும் அதிகமான போதனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்று எங்களுக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கும். அத்தகைய சகோதரன் அநேகமாக Brooklyn / புரூக்கிளினுக்குக் கொண்டுவரப்பட்டு, கொஞ்சக்காலம் மற்ற ஊழியங்களில் பங்கெடுப்பதற்கு வாய்ப்பு அருளப்படுவார் மற்றும் ஒவ்வொரு மதிய வேளையிலும் நடைபெறும் வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளிலும் பங்கெடுக்கும் வாய்ப்பினை அடைவார்; இன்னுமாக முழுக்காரியமும் முழுமையாய்ச் சரியாகிவிடவும், தெளிவாய்ப் பார்த்து, புரியப்படத்தக்கதாகவும் சத்தியம் தொடர்பான பாடங்களில், எவ்வகையான கேள்விகளைக் கேட்பதற்கான வாய்ப்பினை முழுச்சுயாதீனத்துடன் பெற்றிருப்பார்.
சிநேக பாவமான ஒரு யோசனை – SUB HEADING
பெத்தேல் குடும்பத்திலுள்ள / Bethel family சகோதரிகளில் அநேகர், இக்கேள்விகளைக் குறித்துக் கேள்விப்பட்டவர்களாக, பயிற்சியாய் இருக்கும் மற்றும் அறிவடைதலாய் இருக்கும் எனும் கண்ணோட்டத்தில், இக்கேள்விகளுக்குத் தாங்கள் பதில் கொடுக்கத்தக்கதாக, தங்களுக்கு அக்கேள்வி பட்டியலைத் தரும்படிக்கு விசேஷித்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதைப்போலவே பல்வேறு சபைகளிலுள்ள மூப்பர்களும், உதவிக்காரர்களும் கேள்விகளுக்காக வேண்டிக்கொண்டுள்ளனர். சொசைட்டியினுடைய V.D.M. degree / பட்டத்திற்குத் தகுதியடையத்தக்கதாக, இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிகின்றவர்களை, மூப்பர் ஊழியத்திற்குத் தேர்ந்தெடுப்பது என்பது, அனைத்து இடங்களிலுமுள்ள வேதமாணவர்கள் அடங்கியுள்ளதான சபையார் யாவருக்கும் நன்மை பயக்கின்றதாய் இருக்கும். இது மூப்பர்கள் மத்தியில் அநேகம் மாற்றங்களைக் கொண்டுவந்திடும்; ஆனாலும் அவை நன்மையான மாற்றமாய் இருக்குமென நாங்கள் நம்புகின்றோம். இன்னுமாகச் சத்தியத்தினை, அதாவது சத்தியத்தினை மாத்திரம் போதித்திட உள்ளப்பூர்வமாய் விரும்புகின்றதான மூப்பர்கள் யாவரும், இக்கேள்விகளால் கிடைக்கப்பெறும் உதவியினைப் பெற்றுக்கொள்வதில் சந்தோஷமடைவார்கள் என்று நாம் நம்புகின்றோம் .
சிலசமயம் அருமையான நண்பர்களில் சிலர், தாங்கள் மூப்பர்களாகத் தெரிந்துகொள்ளும் அல்லது ஏற்படுத்தும் நபர்களின் விஷயத்தில் எவ்வளவு அஜாக்கிரதையாய்க் காணப்படுகின்றனர் என்று பார்க்கையில் – கர்த்தருடைய வார்த்தைகளின் கட்டளைக்கு முரணாக பெரும்பாலும் நூதன சீஷர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, இப்படியாய் நூதன சீஷனுக்கும், சபையாருக்கும் பாதகம் உண்டாக்குவதைப் பார்க்கையில் – நமக்கு ஆச்சரியமே ஏற்படுகின்றது (1 தீமோத்தேயு 3:1-7). மூப்பர் ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட, ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையை மாத்திரமே தேர்ந்தெடுக்கும் விஷயத்திற்கு அடுத்தப்படியாக இருக்க வேண்டிய கேள்வி – எந்தளவுக்கு அச்சகோதரன் ஆராய்ச்சியையும், அறிவடைவதற்கான சிலாக்கியங்களையும் பயன்படுத்தியுள்ளார்? என்பதேயாகும். ஒருமுறையேனும் வேதாகம பாடங்களின் ஆறு தொகுதிகள் / volumes அனைத்தையும் வாசித்திராத அல்லது வாட்ச் டவர் இதழின் தொடர்ச்சியான வாசகனாக இராத, எந்த ஒரு சகோதரனையும் மூப்பராகத் தேர்ந்தெடுப்பது ஞானமற்றக் காரியமாய் இருக்கும் என்பது எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது. சொசைட்டியானது எந்த அதிகாரத்தையும் செலுத்தவில்லை, எந்த விமர்சனமும் செய்யவில்லை, மாறாக கர்த்தருடைய காரணங்கள் மற்றும் கர்த்தருடைய ஜனங்களின் நலனுக்காய், அறிவுரை மாத்திரமே கொடுப்பதாக நினைவில் வைக்கப்படுவதாக.