Q472:2
கேள்வி (1910)-2- சந்திக்க வந்திருக்கும் சகோதரர் ஒருவர், அவர் சந்திக்க வந்திருக்கையில் சபையாருக்குக் கூட்டத்தை நடத்தும்படிக்குக் கேட்டுக் கொள்ளப்படலாமா?
பதில் – சொசைட்டியால் பயண ஊழியர்களென அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்லது சபையாருக்கு விசேஷமாய் அறிமுகம்பண்ணப்பட்டவர்கள் தவிர மற்றபடி சந்திக்க வந்திருக்கும் சகோதரனிடம் இப்படிக் கேட்பது என்பது நல்லதாய் இருக்காது என்பது என்னுடைய கருத்தாய் இருக்கின்றது; ஏனெனில் அது ஒரு வழக்கமாக உருவாகிவிடும். மேலும் இரண்டாவதாகக் கூட்டத்தை யார் நடத்துவது என்பதைத் தீர்மானிக்கும் ஸ்தானத்தில் மூப்பர் வைக்கப்படவில்லை. மாறாக அவரும்கூடக் கூட்டத்தை நடத்தும்படிக்கு நியமிக்கவே பட்டிருக்கின்றார்; ஒருவேளை இத்தகைய ஒரு சகோதரனைச் சபையார் விரும்புவார்கள் என்று மூப்பர் நிச்சயமாய் உணருவாரானால், பின் அவர் தனி மனிதச் சிறப்புகள் யாவற்றையும் தாழ்த்தி, அத்தகைய ஒரு சகோதரன் அத்தருணத்தில் பேசுவதைக் கேட்பதற்குச் சபையார் விரும்புகின்றார்களா இல்லையா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது என்பது அக்காரியம் தொடர்பான பொறுப்பினைச் சபையாரின் கரங்களில் வைப்பதாகவும், உறவுகள் முறிபடுவது ஏதேனும் இருக்குமாயின் அதிலிருந்து விடுதலையடைவதாகவும் மற்றும் சபையாரைச் சில சமயங்களில் பிரச்சனைக்குள்ளாக்காமல் தப்புவிக்கச் செய்கிறதாகவும் இருக்குமென்று நான் கருதுகின்றேன். சந்திக்க வருகைத் தந்திருக்கும் எந்தவொரு சகோதரனுக்கும் முன்னுரிமை எப்போதும் கொடுக்கப்படுகிற காரியமானது வழக்கமாய்க் காணப்படுமானால் அது அனுகூலமற்றதாகவே இருக்கும்; ஏனெனில் வருகைத்தந்திருக்கும் அந்தச் சகோதரனைச் சபையார் தேர்ந்தெடுத்திருக்கவில்லை. மாறாக தேர்ந்தெடுக்கப்பட்டவரையே தேர்ந்தெடுத்திருந்தார்கள்; ஆகையால் சபையாரால், வழிநடத்துபவருக்கு ஏதேனும் விசேஷித்த சுயாதீனம் கொடுத்திருந்தாலொழிய, மற்றப்படி தங்களுக்கு யார் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்பது தொடர்புடைய விஷயத்தில் ஒருவர் நடத்திடலாமா அல்லது இல்லையா என்பதை அச்சபையாரே கூறவேண்டியவர்களாய் இருக்கின்றனர்.