Q209:1
கேள்வி (1912)-1- மகா உபத்திரவ காலத்திற்குப் பிற்பாடு, எவ்வளவு காலம் ஜனங்கள் ஆதாமின் நிமித்தமான மரணத்தில் மரிப்பார்கள்?
பதில் – கொஞ்சக்காலத்திற்குச் சிலர் தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள். துல்லியமாக எவ்வளவு காலம் என்பதை நான் அறியேன். இக்காரியம் பின்வருமாறு நடைபெறும்: இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகையில், அந்த இராஜ்யத்தை முதலாவதாக உணர்ந்துகொள்பவர்கள் முற்பிதாக்கள் ஆவார்கள். இவர்கள் தேவனுடன் முழு இசைவில் காணப்படுவார்கள் மற்றும் கல்லறையினின்று பூரணமான நிலைமையில் கொண்டுவரப்படுவார்கள். இவர்கள் இராஜ்யம் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் முழுமையாய்ப் போதிக்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் எவ்வளவு காலம் மனுஷர்கள் மத்தியில் காணப்படுவார்கள் என்பதையும் நான் அறியேன். காரியங்களைப் புரிந்துகொள்வதற்கும், உணர்ந்துகொள்வதற்கும் முற்பிதாக்களுக்குச் சிறிது காலம் தேவைப்படும் என்று நாம் எண்ண வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாம் (இக்காலங்களில்) பெற்றிருக்கும் அபூரணங்களாகிய தடைகளை, முற்பிதாக்கள் அப்போது பெற்றிருப்பதில்லை. ஆகையால் அவர்கள் காரியங்களைப் புரிந்துகொள்ளத்தக்கதாக எல்லோரையும்விட சொற்ப காலமே எடுத்துக்கொள்வார்கள். உபத்திரவ காலத்தில், “யாக்கோபின் இக்கட்டுகாலத்தில், அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.” அக்காலத்தில் பெருமளவில் துக்கப்படுதல் காணப்படும்; மேலும் முழு உலகமும் மென்மையடைந்த இருதய நிலைமையில் காணப்படுவார்கள்; மேலும் யூதர்கள் விசேஷமாகக் கர்த்தரை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகக் காணப்படுவார்கள். இவர்கள் சூழ்நிலையினை மிகவும் துரிதமாகக் கிரகித்துக் கொள்வார்கள்; மேலும் இவர்கள் தேவனுடைய இராஜ்யத்தின் கருவாகக் காணப்படுவார்கள். சிலகாலம் இராஜ்யம் இஸ்ரயேல் மயமானதாகக் காணப்படும்; மேலும் இசைவிற்குள் முதலாவது வரும் ஜாதி (யூதர்கள்), மற்ற ஜாதிகளைக்காட்டிலும் பெருமளவில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் மற்றும் தயவையும் அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்; மேலும் இவர்களே தேவனுடைய இராஜ்யம் என்பது என்ன என்று விரைவாய்க் காணத் துவங்குகின்றவர்களாய் இருப்பார்கள். மற்ற ஜாதிகள், யூத ஜனங்கள் மீதுள்ள ஆசீர்வாதங்களைக் காணும்போது, அவர்கள்: “நாம் கர்த்தரின் பர்வதத்துக்குப் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்” என்று கூறுவார்கள். அப்போது செயல்பாட்டில் காணப்படும் புதிய உடன்படிக்கையின் மூலம் தேவனுடன் முழுமையான இசைவிற்குள்ளாகக் கடந்துவரும் அனைவரின் விஷயத்திலும், ஆதாமின் நிலைமை கடந்துபோகத் துவங்கும். அவர்கள் வியாதியினின்று குணமடையத் துவங்குவார்கள் மற்றும் ஆரோக்கியத்திலும், பெலத்திலும் பூரணத்தினை அடைவார்கள். அனுகூலமான சூழ்நிலைகளில் நித்திய ஜீவனானது அவர்களுக்கு வரத் துவங்கும். அவர்கள் இந்த அனுகூலமான நிலைமைகளுக்குள் வருவதற்கு ஒரே ஒரு வழி மாத்திரம் உண்டு; அது அவர்கள் “இஸ்ரயேலர்களாகிடுவதன்” மூலமேயாகும். புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் அனைத்தும், ஆபிரகாமின் பிள்ளைகளுக்கானதாகும். ஆபிரகாம் விசுவாசமுள்ளவர்கள் அனைவருக்கும் தகப்பனாவார்; ஆகையால் ஜனங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாகும்போது, அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் ஆவார்கள். ஆபிரகாமின் குடும்பம் இப்படியாக ஆயிர வருஷங்களின் முடிவுபரியந்தம் தொடர்ந்து வளர்ந்துகொண்டுவரும்; இப்படியாக எண்ணிக்கையில் “கடற்கரை மணலத்தனையாய்” ஆவார்கள். இந்தக் குடும்பத்திற்குள், இதற்கு இசைவாய் வர மறுப்பவர்கள் இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவார்கள். அனைவரும் “ஆபிரகாமின் பிள்ளைகளாகிட வேண்டும்; அதாவது அனைவரும் “தேவனுடைய பிள்ளைகளாகிட” வேண்டும். இராஜ்யத்தின் இந்தக் கருவிற்குள் வராதவர்களிடத்தில், மரணமானது தொடர்ந்து செயலாக்கத்தில் காணப்படும்; இந்தப் பூமியில் மனுஷர் மத்தியில் அக்காலத்தில் காணப்படும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின்கீழ், ஆசீர்வாதங்களானது இறுதியில் இந்தக் கருவிடமிருந்து கடந்து வரும்.