Q247:1
கேள்வி (1913-Z)-1- சபையில் வாக்களிக்க யார் உரிமைப் பெற்றுள்ளனர்?
பதில் – முழு அர்ப்பணம் பண்ணியுள்ளதாக அறிக்கைப்பண்ணி மற்றும் அதை வெளிப்படையான அடையாளமாகிய – தண்ணீரில் மூழ்குதல் மூலம் வெளிப்படுத்தியவர்கள் தவிர வேறு யாரும் வாக்களிக்கக்கூடாது என்பதை எப்பொழுதும் கருத்தில்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பை அடையாளத்தில் காட்டாதவர்கள் சகோதரர்கள் அல்ல என்று தள்ளிவிடாமல், மாறாக சபைக்கு ஊழியஞ்செய்யத் தகுதியானவர்கள் யார் என்பது பற்றிக் கருத்துத் தெரிவிக்கப் போதிய வளர்ச்சியற்றவர்கள் என்றும், சபையின் ஊழியக்காரர்களாக ஆகுவதற்குத் தகுதி பெறாதவர்கள் என்றும் கருதபட வேண்டும்.