Q249:1
கேள்வி (1913)-1- சபையின் தேர்ந்தெடுத்தல் விஷயத்தில், தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றதான வாக்குச் சதவீதத்தில், சபையாரால் பின்பற்றப்படும் அந்த விதிகளானது, உதவிக்காரராக முன்மொழியப்பட்டிருக்கின்ற சகோதரனுக்கான வாக்குகள் விஷயத்திலும் பொருந்துமென நாம் புரிந்துகொள்ள வேண்டுமா?
பதில் – நிச்சயமாக. சபையின் காரியங்களை நிர்வகிப்பது தொடர்புடையதான வேதாகம ஏற்பாடானது, அனைத்துப் பொறுப்பினையும் சபையார் மீதே வைக்கின்றது. நான் பொதுவான அர்த்தத்திலுள்ள சபையாரைக் குறிப்பிடவில்லை, மாறாக சபையை, கிறிஸ்துவின் சரீரமாகிய கூட்டத்தாரை, அதாவது அர்ப்பணிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுகின்றேன். ஒவ்வொரு காரியத்தினையும் நிர்வகிக்கும் திட்டவட்டமான விதிகளைக் கர்த்தர் கொடுக்காததால், கர்த்தருடைய திருவசனத்தைக் கொண்டும் மற்றும் வேதவாக்கியங்களிலுள்ள மாதிரிகள் மற்றும் உதாரணங்களையும் கொண்டும், மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்பப்படும்படி நாடிடுவதற்கான பொறுப்பு ஒட்டுமொத்த சபையின் மீது விடப்பட்டுள்ளது. ஒருவேளை கர்த்தர் காரியத்தினை மிக எளிமையாயும் மற்றும் தெளிவாயும், அவரது ஜனங்களுடைய கைகளில் விட்டிருப்பாரானால், அதை ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது குருமார் வகுப்பாரின் கைகளுக்குத் திசைமாற்றிட நீங்களோ அல்லது நானோ முற்படுவது என்பது முற்றிலும் தவறான காரியமாய் இருக்கும். இதற்கு வேதாகமத்தில் எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாகங்கள் தவறிடுவதுபோல, ஜனங்களும் தவறிடுவது சாதாரண காரியமாய் இருக்கின்றது. உதாரணத்திற்குச், சில தீவுகளில் காணப்படும் ஜனங்கள் தாங்களாகவே நிர்வகித்துக்கொள்வதற்குப் பதிலாக, சில நிர்வாகங்களானது தங்களால் அத்தீவுகளை நன்கு நிர்வகிக்க முடியும் என்று எண்ணுகின்றனர். ஆகையால் ஒருவேளை ஜனங்கள், அதற்கு அடிபணிந்திடுவார்களானால், குருமார் என்று அழைக்கப்படுகின்றதான ஒரு குறிப்பிட்ட வகுப்பார், தங்களுக்கென அதிகாரத்தினை தகாத விதத்தில் உரிமைகொண்டாடி, சட்டங்களையும், விதிகளையும் இயற்றிவிடுகின்றனர். ஆனால் இதற்கான எளிமையான காரணம் – சபையார் தங்கள் கைகளில் கர்த்தர் அதிகாரத்தைக் கொடுத்துள்ளார் என்பதையும், ஒருபோதும் எந்த ஒரு குருமார் வகுப்பாரை அவர் அங்கீகரித்ததில்லை என்பதையும் அறியாமல் இருப்பதேயாகும். கர்த்தர்தாமே போதகராய் இருப்பார் – நீங்கள் அனைவரும் சகோதரராய் இருக்கின்றீர்கள். கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின ஒரு கூட்டத்தாரெனச் சபையாரால் அடையாளம் கண்டுகொள்ளப்படும் வேற்றுமை தவிர, மற்றபடி சகோதரர்கள் மத்தியில் எந்த வேற்றுமையும் காணப்படக்கூடாது மற்றும் சில குறிப்பிட்ட நபர்களை மூப்பர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களெனில், பொறுப்புச் சபையாரிடத்திலேயே இருக்கும். சபையாரிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், மிகுந்த பகுத்துணர்தலையும் மற்றும் விவேகத்தினையும் பயன்படுத்திட வேண்டும் மற்றும் இவ்விஷயத்தில் தாங்கள் கர்த்தருக்காக வாக்களிப்பதாகவும், செயல்படுவதாகவும் நினைவில்கொள்ள வேண்டும். சபையார் தங்களது வழிநடத்துபவர்கள் முதலானவைகள் தொடர்பாக எடுக்கும் தீர்மானம், அக்காரியத்தில் இறுதி தீர்மானமாக இருக்கும் என்பதினால் சபையில் ஒழுங்குமுறைக்குரிய சரியான முறைமை தொடர்பாக, வேதவாக்கியங்களினால் முன்வைக்கப்படுபவைகளை ஆறாம் தொகுதியில் – பிரமாணமாக இல்லாமல், யோசனைகளாகச் சுட்டிக்காட்டிடுவதற்கு நாங்கள் முயற்சித்துள்ளோம்; சதவீதம் குறித்துச் சிலவற்றை நாங்கள் யோசனையாகக் கூறியிருந்தோம்; சதவீதங்கள் குறித்து எதுவும் வேதவாக்கியங்களில் கூறப்படவில்லை எனினும் உலக ஜனங்களுடைய ஒரு சாதாரணமான கூட்டத்தில், உதாரணத்திற்கு ஒரு விஷயத்திற்கென வாக்கெடுக்கப்படுகிறதெனில், ஓர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாய் இருப்பவர்கள், காரியத்தைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள்; 100 பேர்க் கொண்ட சபையார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இதில் 51-பேர்கள் தீர்மானிப்பவர்களாய் இருப்பார்களானால், மற்ற 49-பேரும் பிரதிநிதி என்று யாரும் இல்லாமல் விடப்படுவார்கள்; இது கர்த்தருடைய ஆவியல்ல என்பது நம்முடைய கருத்தாய் இருக்கின்றது. முழுச்சபையுமே நலனுக்கடுத்த விருப்பங்களில் ஏகத்துவத்தினை / ஒற்றுமையினை உணர்வதே கர்த்தருடைய ஆவியாய் இருக்கின்றது. ஆனால் ஒருவேளை பெரும்பான்மையினராய்க் காணப்படும் 51-பேரும் பின்வருமாறு: “ஆம், இது எங்கள் விருப்பம்; இந்தச் சகோதரனை மூப்பராய்ப் பார்த்திடுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம்; இவர் நன்கு தகுதியுடையவராகக் காணப்படுகின்றார் என்று நாங்கள் எண்ணுகின்றோம்; மேலும் எங்கள் சகோதரரிலுள்ள 49-பேரின் விருப்பங்கள் என்னவாக இருப்பினும், அதற்கு நாங்கள் கவனம் கொடுக்கமாட்டோம் என்று கூறுவார்களானால்,இது அன்பின் ஆவியாய்க் காணப்படாது. 51-பேருக்கு மாத்திரமல்லாமல், சிறுபான்மையினராகக் காணப்படும் 49-பேருக்கும் பொருத்தமான பிரயாசம் எடுக்கப்பட வேண்டுமென்று நாங்கள் யோசனை கூறுகின்றோம்; ஒவ்வொருவனும் தனக்கு விருப்பமானதை மாத்திரம் செய்கிறவனாய் இராமல், மாறாக ஒருவர் இன்னொருவரின் உணர்வுகளை மதிக்கவும், ஒருவரையொருவர் மதிக்கவும், ஒருவரிலொருவர் அக்கறை கொள்ளவும் முயற்சித்திட வேண்டும். ஒருவேளை 100-பேர் எண்ணிக்கையுள்ள சபையாரில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானது, உதவிக்காரர்களின் ஸ்தானத்திற்கு ஒருவரைத் தகுதியாக்கிடும் என்று தீர்மானிக்கப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். சகோதரர்கள் A, B மற்றும் C என்பவர்கள், சகோதரர்கள் D, E மற்றும் F – ஐ விட நன்கு தகுதியானவர் என்ற மிகவும் தெளிவான கருத்தினை, சபையாரில் ஒருவனாகிய நான் கொண்டிருக்கலாம் மற்றும் அந்த மூவருக்கும் வாக்கு அளிப்பதற்கு எனக்கு உரிமையும் காணப்படுகின்றது; பின்னர் ஒருவேளை யாரோ ஒருவர் சகோதரர்கள் D, E மற்றும் F – ஐ குறித்து நல்லெண்ணம் கொண்டுள்ளாரெனில், நானோ: ஆம்! அந்தச் சகோதரன் இந்த மற்றச் சகோதரர்களை விரும்புகின்றார்; இச்சகோதரர்களுக்கு எதிராக உண்மையில் ஏதாகிலும் எனக்குத் தெரியுமா? என்று எனக்குள்ளாகக் கேட்டிடுவேன். ஒருவேளை இவர்களுக்கு எதிராய் நான் எதையும் அறியேனாகில் மற்றும் மற்றச் சகோதரரில் அநேகர் இச்சகோதரர்களை விரும்புகிற காரியமானது, மற்றச் சகோதரர்கள் இச்சகோதரர்களைப் பெற்றுக்கொள்வதை நான் காண விரும்பிடுவதற்கு நல்ல காரணமாய் அமைந்திடும். ஒருவேளை நான் மூப்பனாகப் போகிறேன் என்றால், mere majority / வெறும் பெரும்பான்மையினர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருப்பதைக் காட்டிலும், முழுச்சபையாரினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருப்பதே நலமாயிருக்கும். சபையார் யாவரும் தங்கள் மனங்களில் திருப்தியும், மனநிறைவும், மனரம்மியமும் அடைந்திட நான் விரும்பிடுவேன். நான் என்னை அவர்களுடைய இடங்களில் வைத்துப் பார்த்திட விரும்புகின்றேன். எனக்குச் சிறுபான்மையினர் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றேனோ, அதையே நானும் சிறுபான்மையினருக்குச் செய்திட வேண்டுமெனப் பொன்னான பிரமாணமானது எதிர்ப்பார்க்கின்றது. ஒருவேளை நான் சிறுபான்மையினரில் ஒருவராகக் காணப்பட்டு, அவர்கள் பெரும்பான்மையானவர்களாகக் காணப்பட்டிருந்திருப்பார்களானால், என்னைக் குறித்து அவர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளும்படிக்கு நான் எவ்வளவாய் விரும்பிடுவேன்! நான் கவனிக்கப்படும்படிக்கும்கூட விரும்பிடுவேன். அப்படியானால் நாம் மற்றவர்களைப்போன்று சமமாய்ப் பெருந்தன்மையுடன் காணப்பட வேண்டும். இது உண்மையில் முக்கியமாயுள்ள ஏதாகிலும் காரியத்தைக் குறித்து நாம் கவனம் குறைவாகவோ அல்லது அக்கறையற்றோ காணப்பட வேண்டும் என்று குறிப்பதாய் இராது. ஒருவேளை ஒருவர் மோசமான மனுஷனாகவோ அல்லது அர்ப்பணிக்கப்படாத மனுஷனாகவோ அல்லது ஏதேனும் விதத்தில் மூப்பனாகுவதற்கு முற்றிலுமாய்த் தகுதியற்றவராய் இருப்பாரெனில், அப்பொழுது நான் முகமுகமாய் எதிர்த்துநின்று, குறிப்பிட்ட காரணங்களினால் என்னால் இந்தச் சகோதரனுக்கு வாக்களிக்க முடியாது என்று கூறிடுவேன். காரணங்களைத் தெரிவிப்பதை என்னால் முடிந்தமட்டும் நான் தவிர்த்துக்கொள்வேன்; ஆனால் ஒருவேளை காரணங்களைத் தெரிவிப்பது அவசியமாகுமானால், அதை என்னால் முடிந்த மட்டிலுமான அன்பான விதத்தில் செய்திடுவேன். நான் எந்தச் சகோதரனைக் குறித்துமான அன்பற்ற வார்த்தையைக் கூறிடவோ அல்லது தீமை பேசவோ மாட்டேன் என்று சகோதர சகோதரிகள் அறிந்திருக்குமளவுக்கும் மற்றும் முழுமையான அவசியம் காரணமாகத்தான் ஒரு சகோதரனை எதிர்க்கும் கடமையினை – அதாவது தேவனுக்கான மற்றும் சபையிடத்திலுமுள்ள இப்படிப்பட்ட கடமையினை நான் செய்கின்றேன் என்று சகோதர சகோதரிகள் அறிந்திருக்குமளவுக்கும், அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிலைமையினை நான் அடைந்திட முற்காலங்களில் பிரயாசம் எடுத்திடுவேன். நாம் ஒருவரிலொருவர் அந்த நம்பிக்கையினை அடைவோமானால், நாம் சொல்லுகிற எதற்கும், அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் இருக்கும்.