Q704:1
கேள்வி (1909)-1- “சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே (1 கொரிந்தியர் 14:34,35).
“ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே (1 கொரிந்தியர் 11:5).
முதலாம் வேதவாக்கியத்தை, இரண்டாம் வேதவாக்கியத்தோடு இசையப்பண்ணி விளக்கவும்?
பதில் – இந்த வேதவாக்கியங்களானது மிகவும் விலாவாரியாகவும், மிகவும் முழுமையாகவும் கையாளப்பட்டிருப்பதையும் மற்றும் இது விஷயத்திலான இன்னும் அநேக காரியங்களும் கையாளப்பட்டிருப்பதையும் ஆறாம் தொகுதியில் நீங்கள் பார்க்கலாம். நீங்கள் ஆறாம் தொகுதியினைப் போதுமான அளவிற்கு ஆராயவில்லையென்று நான் எண்ணுகின்றேன். ஏழாம் தொகுதியானது எப்போது வெளிவரும் என்று அறிய சிலர் விரும்புகின்றனர். ஆனால் ஆறாம் தொகுதியானது முழுமையாய் அதிகம் உள்வாங்கப்படுவது வரையிலும், ஏழாம் தொகுதி வருவதற்குக் கர்த்தர் அனுமதிக்க மாட்டார் என்று நான் எண்ணுகின்றேன்.