Q234:2
கேள்வி (1914)-2- ஒரு சபையில் அநேக வருடங்களாக அங்கீகரிக்கப்பட்ட மூப்பராக இருந்து வந்துள்ள சகோதரன் ஒருவர், சபையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக, தேர்ந்தெடுத்தலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு சந்தர்ப்பத்தில் – அவர் அறிமுகமானவராகக் காணப்படும் அருகாமையிலுள்ள சபையார் – ஒருவேளை அவரது தேவச் செய்திகள் பயனுள்ளதாய் இருக்கின்றதெனக் கூறி, அவர் தங்களிடத்தில் வருகைத் தருவதை விரும்பும் பட்சத்தில், அவர் தேர்ந்தெடுக்கப்படாத காரியமானது அச்சபையாருக்குத் தேவச் செய்திகள் கொடுப்பதற்கு அவரைத் தகுதியற்றவராக்கிடுமா? அவர் புதிய வகுப்புகளை உருவாக்கும் வேலைக்கு / class extension work தகுதியற்றவராகிடுவாரா? இதோடுகூட அவர் உபதேசத்தில் ஆரோக்கியமாயும் இல்லாதிருக்கையில், அவரது சொந்த சபையாரின் சில குறிப்பிட்ட அங்கத்தினர்கள் இத்தகைய ஊழியத்தினைத் தடுப்பதற்குத் தங்களது செல்வாக்கினைப் பயன்படுத்துவது நியாயமாய் இருக்குமா?
பதில் – தான் ஊழியம் புரிந்துகொண்டிருந்த சபையின் தேர்ந்தெடுத்தலில் தேர்ந்தெடுக்கப்படாமல்போன அந்த மூப்பர் – ஒருவேளை மற்ற இடங்களிலுள்ள நண்பர்கள், அந்நபர் தங்களுக்கு மூப்பராக ஊழியம் புரிந்திட தகுதியான நபர் என்று நன்கு பகுத்துணர்ந்து எண்ணும்பட்சத்தில் – அவர் மற்ற இடங்களில் ஊழியம் புரிந்திடுவதற்குத் தகுதியற்றவராகிடுவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பகுத்துணர்தலைப் பயன்படுத்திடுவதற்கு உரிமை கொண்டிருக்கின்றனர். ஒருவேளை இச்சகோதரனை மறுத்திட்டதான சபையார், அவர் ஒழுக்க ரீதியிலான குணலட்சணத்திலோ அல்லது போதனையிலோ குறைவுற்றிருப்பதன் காரணமாக, அவரை இப்படிச் செய்திருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவரைத் தேர்ந்தெடுத்த மற்றச் சபையாரின் கவனத்திற்குக் காரியத்தினைக் கொண்டுவருவது இந்தச் / சொந்த சபையாரின் கடமையாகவும், சகோதர சிறப்புரிமையாகவும் இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். மற்றச் சபையார் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களானால், முதலாம் சபையார் பின்வரும் வார்த்தையினை: “அச்சகோதரனுக்கு எதிராக இப்படி ஒரு காரியம் இருக்கின்றது என்று சகோதர்கள் என உங்களுக்கு நாங்கள் முன்னெச்சரிக்கைத் தர விரும்புகின்றோம் மற்றும் இதுகுறித்து உங்களுக்குத் தகவல் கொடுப்பது எங்களுடைய கடமையாக இருக்கின்றது என்று நாங்கள் சிந்தித்தோம் என்று தகவலாக அனுப்பிட வேண்டும்.
புதிய வகுப்புகளை உருவாக்கிடும் வேலையைப் பொறுத்தமட்டில், மூப்பராய் இல்லாத எவரும் சபையாருக்கு, புதிய வகுப்புகளை உருவாக்கிடும் ஊழியத்தினைப் புரிதல் என்பது முறையாய் இராது; ஏனெனில் சொசைட்டியினுடைய ஒத்துழைப்போடு, மூப்பர்களாய் இருப்பவர்களை மாத்திரமே சபையார் இவ்வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்படி இல்லாவிடில் சொசைட்டியானது, இவ்விதத்தில் அவர்கள் கடந்து செல்வதற்கு ஒத்துழைப்புக்கொடுக்க விரும்புகிறதில்லை. ஒருவேளை அவர் வேறொரு சபையாரிடத்திற்குச் சென்று, அவர்கள் அவரை மூப்பராய்த் தேர்ந்தெடுத்து, புதிய வகுப்புகளை உருவாக்கும் வேலைக்கென அவரை அனுப்பிடுவதற்கு அச்சபையார் முடிவெடுத்தார்களானால், அது அவர்களது மற்றும் அவரது காரியமாக இருக்கும். அல்லது அவர் சபையார் அல்லது சொசைட்டியின் பொறுப்பேற்பில்லாமல் கடந்துபோக முடிவெடுத்தாரானால், அது அவரது காரியமாக இருக்கும். அவர் அவரது சொந்த பொறுப்பில்தான் வேலை புரிகிறவராக இருப்பார். அந்த உரிமையினைத் தேவன் நமக்குக் கொடுத்துள்ளார். ஒருவேளை அவர் செல்வம் மற்றும் பேசுவதற்கான தாலந்தைப் பெற்றிருந்து, அவற்றைப் பயன்படுத்த விரும்புவாரானால், அப்படிச் செய்திடுவதற்கு அவருக்கு முழுமையான உரிமை இருக்கின்றதென நாம் நம்புகின்றோம். அவர் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருந்தாரானால், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்ற அழைப்பினை அவர் பெற்றவராய் இருப்பார்.