Q152:2
கேள்வி (1911)-2- அர்ப்பணம்பண்ணியுள்ளவர்கள், ஆனால் ஜெநிப்பிக்கப்படாமல் காணப்படுபவர்கள், ஆவிக்குரிய சுபாவம் அடைவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவார்களா?
பதில் – முற்பிதாக்களுடைய உண்மைக்கும், ஆயிர வருஷங்களின் போதுள்ள இவர்களது ஊழியங்களுக்கும் உரிய வெகுமதியாக, ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவில் இவர்களுக்குச் சுபாவ மாற்றத்தை அருள வேண்டும் என்பது தெய்வீகத் திட்டத்தின் ஒரு பாகமாய் இருக்கின்றது என்றும், ஆயிர வருஷ யுகத்தினுடைய முடிவில் இவர்கள் ஆவிக்குரிய சுபாவத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் எங்களது யோசனை காணப்படுகின்றது. இந்த யோசனையானது பாதி அனுமானமாகவும், வாட்ச் டவர் கட்டுரைகளில் நம்மால் ஏற்கெனவே பார்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில வேதவாக்கியங்களின்படி உண்டான பாதி யோசனையாகவும் காணப்படுகின்றது; அவ்வசனங்களை நாம் முன்னமே பார்த்துள்ளபடியால், அவைகளுக்குள் நாம் இங்குக் கடந்துசெல்கிறதில்லை.