Q455:1
கேள்வி – (1910)-1- பூரண அன்பின் இலக்கினை அடைந்துள்ளவர்களும், தப்பறையினால் தங்களையே குருடாக்கிக்கொண்டவர்களுமான சத்தியத்திலுள்ள ஜனங்களில் யாரேனும் திரள்கூட்டத்தினராகக் கூடுமா?
பதில் – நான் புரிந்திருக்கிறவரைத் தேவனுடைய ஜனங்களில் யாராய் இருப்பினும் சரி – அதாவது தற்கால சத்தியத்தில் இருப்பவர்கள் மாத்திரம் இல்லாமல், தேவனுடைய ஜனங்களில் யாராக இருப்பினும் சரி – பூரண அன்பின் இலக்கு என்று நாம் அழைக்கின்றதான குணலட்சண வளர்ச்சிக்கான இலக்கினை அடைந்தவர்களாய் இருக்கையில், அவர்கள் பூரண அன்பின் இலக்கிலேயே தங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இலக்கை அடைந்த பிற்பாடு அவர்களை அலைக்கழிக்கும் பிரச்சனைகளினாலும், சோதனைகளினாலும் இலக்கினின்று நகர்ந்து தள்ளிப் போய்விடாதபடிக்கு இருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது; நான் அறிந்திருக்கிறவரை இவர்களில் சிலர் தற்காலிகமாக இலக்கிலிருந்து நகர்ந்து விடுபவர்களாய் இருப்பார்கள் மற்றும் தேவனுடைய கிருபையினால் குணமடைபவர்களாய் இருந்து, இன்னமும் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாகக் கர்த்தரால் கருதப்படும் பாத்திரங்களாய் இருப்பார்கள். ஆனால் சிலர் இலக்கினின்று முழுமையாய்த் தவறான மனநிலைக்கு அல்லது நடத்தைக்குள் விலகிப்போய், மரணத்திற்கு ஏதுவான பாவம் செய்து, எவ்விதமான எதிர்காலமும் இல்லாமல் போவதுமுண்டு. இன்னும் சிலர் பூரண அன்பின் இலக்கை அடைந்த பின்னர், உரிய வைராக்கியம் கொண்டிராமல் இருப்பார்கள்; மற்றும் இவர்கள் இலக்கை விட்டுவிலகாமல் இருப்பினும், கர்த்தருடைய வைராக்கியமுள்ள பின்னடியார்களெனத் தங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறிப்போய், திரள்கூட்ட வகுப்பினராகக் கருதப்படுவார்கள்.