Q497:2
கேள்வி (1912)-2- சீக்கிரம் எதிர்க்காலத்தில் வங்கிகள் அனைத்தும் சீர்க்குலைவிற்குள்ளாகிப் போகும் என்பதை அறிந்திருக்கிற நிலைமையிலும், அதேசமயம் நமக்கும், நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்குமான தேவைகளை நாம் சந்தித்தாக வேண்டிய நமது பொறுப்பை நாம் உணர்ந்திருக்கும் நிலைமையிலும், மூன்று மாதத்திற்குள்ளாக திரும்ப எடுக்க முடியாத விதத்தில், பணத்தை முதலீடு செய்வதற்கான ஞானமான வழிமுறை என்று நீங்கள் கருதுவது என்ன மற்றும் நாம் பெற்றிருப்பவைகளுக்கு நாம் நல்ல உக்கிராணக்காரர்களாய்க் காணப்படத்தக்கதாக இந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஏதேனும் யோசனைகள் கூற முடியுமா?
பதில் – நீங்கள் பெற்றிருக்கும் எல்லாப் பணத்தையும் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்துச் சொல்லவேண்டுமா? அதுதான் கேள்வியா? நீங்கள் பெற்றிருக்கும் அல்லது பெற்றிருக்கப்போகும் பணம் அனைத்தையும் எப்படிப் பயன்படுத்துவது என்பதைவிட அதிகமாய் என்னால் சொல்லமுடியும், ஆனால் அவற்றை நான் சொல்லப்போவதில்லை. இக்கேள்வியிலும் ஒரு நல்ல கருத்துக் காணப்படவே செய்கின்றது. ஒருவேளை குடும்பத்தின் தகப்பன் அல்லது குடும்பத்தின் தாய் சத்தியத்தில் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் … குடும்பத்தின் இந்தக் கடமைகள் தொடர்புடைய விஷயத்தில் அவனது கடமை மற்றும் அவனது நடத்தை எப்படியாக இருக்க வேண்டும்? இப்பொழுது முதற்கொண்டும், இனிமேலும் வீட்டின் நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் தனக்கிருக்கும் கொஞ்சம் பணத்தைக்கொண்டு நிலக்கரியைத் தேவைக்காய் நிரப்பி வைத்துக்கொள்ள பார்த்துக்கொள்ளுங்கள் என்பது என் அறிவுரையாகும். இப்படிச்; சேமித்து வைப்பது என்பது பெலவீனமான விசுவாசத்திற்கான வெளிப்பாடாய் இராதா என்று நீங்கள் கேட்கலாம்; இல்லை என்றே நான் சொல்லுவேன்; ஏனெனில் நாம் நம்முடைய பங்கினைச் செய்தாக வேண்டும். தற்கால சூழ்நிலைகளின்கீழ்க் கெட்டுப்போகாத வகையிலுள்ள சில வகையான உணவுகளைப் போதுமான அளவுகள் சேமித்துவைத்துக் கொள்வது தவறாய் இருக்காது. Tin / தகரப்பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள இறைச்சிகள், தகரப்பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் இன்னும் இதுபோலச் சிலவற்றைக் கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் யோசனைக்கூறுகின்றேன். பயறு வகைகள் சிலவற்றையும் கையிருப்பில் வைத்துக்கொள்ளலாம். உங்களுக்குக் கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குத் தோன்றிடும் பொருட்களை, அதிகமாய்ச் சேமித்து வைக்கத்தக்கதாகப் பார்த்துக்கொள்ளுங்கள்: இப்படிக் கையிருப்பில் பொருட்களை வைத்துக்கொள்வது என்பது எவ்விதத்திலும் தேவன் நம்மை எப்போதேனும் மறந்துபோய்விடுவார் எனும் அச்சத்தையோ அல்லது சந்தேகத்தையோ நாம் பெற்றிருக்கின்றோம் என்பதாகாது. பணம் மற்றும் சொத்துக்களைப் பொறுத்தமட்டில், ஒருவேளை நல்ல அயலகத்தார் மத்தியில் சிறுவீடு ஒன்றைப் பெற்றிருப்பேனாகில், அதை வைத்துக்கொள்வதற்கும் ஏதுவான சூழ்நிலைமை இருக்குமாகில், சத்தியத்தில் இல்லாத மனைவிக்கும், குடும்பத்திற்கும் வேண்டி, அந்த வீட்டை நான் வைத்துக்கொள்வதினால், என் நோக்கங்கள் எப்போதும் நன்மைக்கேதுவானதாகவே இருந்தது என்று என் மரணத்திற்குப் பின்னர்க் காணப்படும் என் குடும்பத்தாருக்கு வெளிப்படும். வரவிருக்கும் உபத்திரவ காலத்தில் சூறையாடப்படும் பெரிய வீடுகளுக்குப் பதிலாகச் சிறு வீட்டினைப் பெற்றிருங்கள். உங்களுக்கு வழிகாட்டுதலாய் இருக்குமென்று இத்தகைய குறிப்புகளை (hint நாங்கள் கொடுக்கின்றோம்.