Q14:3
கேள்வி (1911)-3- முற்பிதாக்கள் எப்போது தேவனுடன் உடன்படிக்கை உறவில் காணப்படுவார்கள்?
பதில் – புதிய உடன்படிக்கையினுடைய ஏற்பாட்டின்கீழ் உயிர்த்தெழுந்தது முதல், இவர்கள் புதிய உடன்படிக்கையின் வாயிலாக தேவனுடன் உடன்படிக்கையின் உறவில் காணப்படுவார்கள்; ஆனாலும் ஆயிர வருஷங்களின் முடிவுவரை, அதாவது புதிய உடன்படிக்கையினுடைய மத்தியஸ்தர் அனைத்தையும் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு, புதிய உடன்படிக்கை இனிமேலும் இல்லை எனும் காலத்திற்கு முன்புவரை, இந்த முற்பிதாக்கள் பிதாவுடன் எந்த நேரடியான மற்றும் தனிப்பட்ட விதத்திலுள்ள உறவினையும் கொண்டிருப்பதில்லை. பின்னரே இவர்கள் தேவனுடன் தனிப்பட்ட உடன்படிக்கை உறவுமுறையில் காணப்படுவார்கள் – அதாவது நீங்களும், நானும் இப்பொழுது எப்படி கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவுகொண்டிருக்கின்றோமோ, அப்படியே ஆகும்.