Q286:3
கேள்வி (1909)-3- ஒருவன் தனக்குத் தன் சகோதரன் என்ன செய்யக்கூடாது என்பானோ, அதையே அவன் தன் சகோதரனுக்குச் செய்யக்கூடாது என்பதாகப் பொன்னான பிரமாணத்திற்கு விளக்கம் கொடுக்கப்படலாமா?
பதில் – இல்லை. பொன்னான பிரமாணமானது எதிர்ப்பார்ப்பவைகளுக்கும் அதிகமாய்ச் செய்வதற்கு அது தடைவிதிக்கும் என்று நான் கருதுகிறதில்லை. ஒருவேளை தாங்கள் ஒரு கிறிஸ்தவன் என்றால், நீங்கள் அதிகமாகவே செய்ய வேண்டும். பொன்னான பிரமாணம் என்பது அனைவருக்கும் பொருந்தும், ஆனால் கிறிஸ்தவனுக்கு வேறொரு பிரமாணம் காணப்படுகின்றது. “புதிதான கட்டளையைக் கொடுக்கிறேன்” என்று இயேசு உலகத்தாரிடமோ, யூதர்களிடமோ சொல்லாமல், சீஷர்களிடமே சொன்னார்; “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்று சீஷர்களிடமே சொன்னார். ஒருவேளை இயேசு நம்மைப் பொன்னான பிரமாணத்தினுடைய அடிப்படையில் மாத்திரம் அன்புகூர்ந்திருந்தாரானால், அவர் நமக்காக மரித்திருக்கவே மாட்டார்; ஆனால் அவர் அதிகமாகவே செய்திட்டார் மற்றும் அவரது பின்னடியார்களென நீங்களும், நானும் ஒருவர் இன்னொருவருக்காய் அதிகமாய்ச் செய்திட வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கின்றார்.