Q538:3
கேள்வி (1911 – Z.4833)-3- புதன்கிழமை மாலை சாட்சிக்கூட்டத்திற்கு எதைத் தலைப்பாக நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?
பதில் – இந்தக் கூட்டங்களுக்கு வேறுபாடற்ற தலைப்பைப் பெற்றிருப்பதின் நன்மை குறித்து நாம் பல ஆலோசனைகள் கொடுத்திருந்தோம். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியில் இடம்பெறும் ஆலோசனையைத் திரும்பக்கூறும் விதமாக, சாட்சிக்கூட்டங்கள் சரியான விதத்தில் நடத்தப்படுகின்ற இடங்களிலும் மற்றும் ஒரு மாதக்காலமாகிலும் சாட்சிக்கூட்டங்களை நண்பர்கள் நடத்தின அனுபவம் காணப்படும் இடங்களிலும், சாட்சிக்கூட்டங்களைக் காட்டிலும் வேறெந்தக் கூட்டங்களும் மிகவும் உதவிகரமாக இருக்கவில்லை என்று நாம் தெரிவிக்கின்றோம். வருடங்களுக்கு முன்னதாக ஒருவர் எப்படி மனமாற்றம் அடைந்தார் அல்லது எப்படி ஒருவர் சத்திய அறிவினைப் பெற்றுக்கொண்டார் என்பது பற்றின சாட்சிகள் பகரப்படுதல் என்பது பொது மாநாடுகள் முதலானவைகளில் மிகவும் அருமையானதாய்க் காணப்படும்; ஆனால் இத்தகைய சாட்சிகளானது வாராந்திர வகுப்புகளில் மிகவும் சோர்வூட்டுகிற மற்றும் சலிப்பூட்டுகிற காரியமாய் இருக்கும் என்று நாம் நிச்சமாய்க் கருதுகின்றோம். இனிமேல் தாங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன அனுபவங்கள் பெறப்போகின்றார்கள் என்று உங்களிடத்தில் தெரிவிப்பது என்பது நண்பர்களுக்கும் கூடச் சலிப்பூட்டுகின்றதாய்க் காணப்படும். முந்தின வாரத்தினுடைய நெஞ்சைத் தொடும் சம்பவங்களும், அனுபவங்களும் பற்றின தற்போதைய சாட்சியங்களே விரும்பப்படத்தக்கவையாகவும் மற்றும் புத்துணர்வூட்டுபவையாகவும் காணப்படும். இக்கூட்டங்களானது சபையாரிலுள்ள அனைவரையும் தேவனுடைய வழி நடத்துதல்களையும் மற்றும் தினந்தோறுமுள்ள, ஒவ்வொரு மணிநேரமுள்ள படிப்பினைகளையும் கவனிப்பதில் மிகவும் கவனம்கொள்ளச் செய்திடும். இப்படியாக தினந்தோறும் மிகவும் விலையேறப்பெற்ற அனுபவங்களானது அடையப்பெறக்கூடும் – அதாவது (ஜீவியத்தின்) அக்காரியங்களானது சற்றே கவனிக்கப்பட்டு அல்லது கவனிக்கப்படாமல் கடந்து போவதினால் அடையப் பெறுவதைக்காட்டிலும், தினந்தோறும் மிகவும் விலையேறப்பெற்ற அனுபவங்களானது அடையப்பெறக்கூடும்.
இத்திட்டத்தினை / கூட்டத்தினைப் புதன்கிழமை மாலையில் பெற்றிருப்பதற்கு நாம் பரிந்துரைக்கின்றோம் மற்றும் ஒவ்வொரு புதிய வாரத்திற்குமான – அதாவது புதன் இரவு கூட்டத்துடன் நிறைவு பெறும் ஒவ்வொரு புதிய வாரத்திற்குமான தலைப்பாக வியாழக்கிழமையின் மன்னாவானது பயன்படுத்தப்படலாம்.
இந்த யோசனையில், அடிமைத்தனத்திற்கடுத்த எதுவுமில்லை. இதை அங்கீகரிப்பவர்கள், இதை ஏற்றுக்கொண்டிடலாம் மற்றும் இதை அங்கீகரியாதவர்கள், வேறுவிதத்தில் செய்திடலாம். இது ஒவ்வொரு சபையாருடைய காரியமாய் இருக்கின்றது. Vow / வாக்குறுதியும், அதன் ஜெபமும் தினந்தோறும் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரையும் கிருபையின் சிங்காசனத்திடத்திற்கு இழுத்துக்கொள்வதை அறிந்துகொள்வது நமக்கு மிகவும் அருமையானதாகக் காணப்படுவது மாத்திரமல்லாமல், இன்னுமாக இதேபோல் அனைவருமே ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய வழிநடத்துதல்கள் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருப்பதை அறிந்துகொள்வதும் இனிமையானதாகக் காணப்படும்.