Q704:2
கேள்வி (1909)-2- மூப்பர்கள் சார்பிலிருந்தோ அல்லது மற்றவர்கள் சார்பிலிருந்தோ ஆரோக்கியமற்றப் போதனைகள் வருகையில், அவற்றைச் சகோதரர்கள் எந்தமட்டும் சகித்திட வேண்டும் மற்றும் இம்மாதிரியான சூழ்நிலைகளுக்குத் தீர்வு என்ன?
பதில் – அருமையான நண்பர்களே, சகிக்க வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன் ஆனாலும் ஆரோக்கியமற்றப் போதனைகளைச் சகித்துக் கொண்டிருப்பது என்பது, தவறான செய்கையில் உடன்படுவதாக இருக்கும் என்றும், நாம் ஆரோக்கியமற்றப் போதனைகளைச் சகிக்கவே கூடாது என்றும் அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். இப்படியானவைகளை யாரேனும் சகித்துக் கொண்டிருப்பார்களானால், எதிர்ப்புரைப்பது அவர்களது கடமையாய் இருக்கின்றது என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் இதற்கென்று அவரது கண்ணோட்டம்தான் சரி என்றும், மற்றவர்களுடைய கண்ணோட்டம் அனைத்தும் தவறு என்றும் அர்த்தமாகிறதில்லை. ஒருவேளை நான் இங்கு டென்வரிலுள்ள சபையாரின் மத்தியில் ஓர் அங்கத்தினனாகக் காணப்படுகின்றேன் என்று வைத்துக் கொள்ளலாம் மற்றும் யாரோ ஒருவர் பொதுக்கூட்டத்திலோ அல்லது ஒருசிலர் மத்தியிலோ (private) போதிக்கிற ஒரு குறிப்பிட்ட விஷயம், தவறான காரியமாகவும், விசுவாச வீட்டாருக்குப் பாதகமான காரியமாகவும் காணப்படுகின்றது என்று வைத்துக்கொள்ளலாம் மற்றும் “வேறு ஒருவர்தான் போதிக்கின்றார், நான் ஒன்றும் தவறானவைகளைப் போதிக்கவில்லையே என்று நான் கூறிக்கொண்டு, அமர்ந்துகொள்வது எனக்குத் தகுதியான காரியமாய் இராது. என்னுடைய அமைதி என்பது ஒப்புதலளிக்கின்றதாய் இருக்கும். அன்புடனும், பொறுமையுடனும், தெளிவாயும் மற்றும் உறுதியாயும் நான் தவறு என்று நம்புகிறவைகளையும் மற்றும் இது விஷயத்திலான வேதாகம போதனைகளையும் முன்வைத்திடுவதற்கான வாய்ப்பிற்காக நான் பார்ப்பது எனக்குத் தகுதியானதாய் இருக்கும். இது விஷயத்தில் என்னுடைய கடமையை நான் செய்தப் பிற்பாடு, அனைவரும் எனது கண்ணோட்டத்திற்கு வரவேண்டும் என்று நான் வலியுறுத்த வேண்டும் என்பதாகாது. நான் என் பங்கிற்குச் சொல்லியிருக்கின்றேன் மற்றும் ஒருவேளை வேறுயாரேனும் விருப்பப்படுவாரானால், அவரும் அவர் பங்கிக்கிற்குக் கூறட்டும். கிறிஸ்துவின் சபையானது குறுகின மனப்பான்மையுடன் காணப்படக்கூடாது, மாறாக அனைவரும் சத்தியத்தினை முன்வைத்திடுவதற்குரிய சிலாக்கியம் உடையவர்களாய்க் காணப்படவேண்டும், ஆனாலும் அனைத்தும் நல்லொழுக்கமாகவும், கிரமமாகவும் செய்யப்பட வேண்டும். பலமுறை சொல்வதற்கு எனக்கு அவசியம் ஏற்படாதளவுக்கு, என்னுடைய விமர்சன அறிக்கைகளையும், அவைகளுக்கான காரணங்களையும் நான் சொல்லிடும் தருணத்துடன் எனது கடமை முடிந்திட வேண்டும். நான் வேதவாக்கியங்களின் அடிப்படையிலான காரணங்களை முன்வைத்திட வேண்டும் மற்றும் அவர்களும் அவர்கள் சார்பிலான காரணங்களை முன் வைத்திடவேண்டும். வேதவாக்கியங்களின் அடிப்படையிலான காரணங்களைக் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் உயர்வான போதனைகளென அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஒருவேளை சபையாரில் பெரும்பான்மையானவர்கள் இவ்விஷயத்திற்கான எனது கண்ணோட்டத்திற்கு எதிராக தீர்மானிக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்படியானால் என்ன செய்வது? நான்: “வேதாகமத்தின் அடிப்படையில் போதிக்காத போதகர் ஒருவர் இங்குக் காணப்படுகின்றார்; ஆகையால் நான் கூட்டங்களில் கலந்துகொள்ளாமலும், சபையாரோடு கூடிக் கொள்ளாமலும் இருந்திடலாமா? என்று எனக்குள் சொல்லிக்கொள்ளலாமா? இல்லை, நான்: “இவ்வளவாய் என்னுடைய கடமைகளைச் சபையாருக்கு நான் செய்திருக்கின்றேன். நான் தொடர்ந்து செய்வேன் மற்றும் எனது கண்ணோட்டங்களை முன்வைப்பதற்குரிய இன்னொரு வாய்ப்பு அநேகமாகக் கிடைக்கலாம் என்றே எனக்குள் சொல்லிடுவேன். இன்னொரு வாய்ப்பு வருகையில், நான் சரி என்று கருதுகிற அளவுக்குத்தக்கதாக என்னுடைய நிலைப்பாட்டினில் நின்றிடுவேன்; ஆனாலும் என்னைக் குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாக்கிக்கொள்ளமாட்டேன்.
வகுப்பில் காணப்படாத மற்றவர்கள் விஷயம் என்ன? “நண்பர்களே, அயலார்களே, உங்களுடைய வார்த்தைகளுக்காக நன்றி; நாங்கள் இவ்விஷயத்தைக் கவனத்தில் எடுத்துப்பார்த்துள்ளோம் மற்றும் காரியத்தினை விட்டுவிட்டோம் மற்றும் இதுகுறித்து நீங்கள் மீண்டுமாகப் பேசிட வேண்டாம் என்று கூறிடுவேன்.
இதற்கான தீர்வு என்ன? ஒருவேளை ஆரோக்கியமற்ற உபதேசம் மூப்பர் சார்பிலிருந்து வந்திருக்குமானால், தேர்ந்தெடுத்தலுக்கான காலம் சமீபமாய்க் காணப்படுகிறது என்றால் காத்திருந்து, ஆரோக்கியமற்ற / தெளிவற்ற நிலையிலுள்ள எவரையும் தேர்ந்தெடுக்காதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர் தெளிவில்லாதவர் என்று அவரைத் தேர்ந்தெடுக்கும்போதே அறிந்திருந்தீர்களானால், தவறு உங்களுடையதாகும். சத்தியத்தில் தெளிவில்லாதவர் என்று நீங்கள் அறிந்திருக்கும் ஒருவருக்கு வாக்கு (vote) அளித்திட உங்களுக்கு உரிமையில்லை. இது விஷயமான அனைத்தையும் ஆறாம் தொகுதியில், இது தொடர்பான தலைப்பின் கீழ் நீங்கள் பார்க்கலாம்.
கர்த்தருடைய ஜனங்கள் தயக்கம் கொள்வதையும் மற்றும் “இன்னென்ன நபர்களுக்கு வாக்களிக்க நான் விரும்பவில்லை இன்னென்ன நபர் மூப்பர் ஊழியத்திற்குப் பொருத்தமானவர்கள் என்று எனக்குத் தோன்றவில்லை என்று கூறுவதைச் சிலசமயங்களில் நான் பார்த்திருக்கின்றேன். அமைதலாய் இருந்து, அவருக்கு வாக்களிப்பதில் நீங்கள் தவறு செய்பவர்களாய் இருப்பீர்கள். குணலட்சணங்களை உடையவர்களையும், கொள்கைகளை அடையாளம் கண்டுகொண்டவர்களையும் மற்றும் அந்தக் கொள்கைக்கு இசைவாய்ச் செயல்படுபவர்களையும் தம்முடைய சபையில் பெற்றிருக்கத் தேவன் விரும்புகின்றார். உங்களது துணிவின்மையை ஜெயங்கொள்வதற்கு, உங்கள் சார்பில் சில ஜெயங்கொள்ளுதல் காணப்பட வேண்டும் மற்றும் இதன் காரணமாகவே நீங்கள் உங்களது கடமையினைச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றீர்கள்; ஏனெனில் ஜெயங்கொள்பவர்கள் தவிர வேறு எவரும் தெரிந்தெடுக்கப்படும் வகுப்பாரில் காணப்படுவதில்லை. சண்டையிடுவதற்கும், தர்க்கம் பண்ணுவதற்கும், மற்றவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துவதற்கும் விரும்பிடாத பண்புகளை நான் கண்டு வியப்பதுண்டு; நாம் இத்தன்மையினைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் காரியங்களைத் தெளிவாய் முன்வைக்கும் விதத்தில் கூறிடுவதற்கான அன்பான, தயவான விதங்கள் இருக்கின்றன மற்றும் நீங்கள் உங்கள் கடமையினைச் செய்யும்போது, நீங்கள் அன்பான நோக்கங்கள் தவிர, வேறெதுவும் பெற்றிருக்கவில்லை என்பதை அனைவரையும் நீங்கள் அறியப்பண்ணிட வேண்டும். தங்கள் மூப்பர்களாக யார் காணப்பட வேண்டும் என்பது தொடர்புடைய விஷயத்தில் சபை காலம் எடுத்து, நிதானிக்க வேண்டும். நீங்கள் கர்த்தரைப் பிரதிநிதித்துவம் பண்ணுகிறீர்கள் மற்றும் உங்களது வாக்கில் (vote) அவரை நீங்கள் பிரதிநிதித்துவம்பண்ணுகிறீர்கள். கிறிஸ்துவினுடைய சபையில், நம்முடைய வாக்கின் (vote) விஷயத்திலுள்ள பொறுப்பினை நாம் அதிகமதிகமாய் உணர்கின்றவர்களாய் இருத்தல் வேண்டும்.