Q517:1
கேள்வி (1915 – Z.5807)-1- “ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே, என்று தீமோத்தேயுவுக்குக் கொடுக்கப்பட்டதான அப்போஸ்தலனின் ஆலோசனையை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? இது முறையான ஓர் ஏற்படுத்துதலைக் குறிக்கின்றதா?
பதில் – தீமோத்தேயுவுக்குப் பேசப்பட்டதான அப்போஸ்தலன் பவுலினுடைய வார்த்தைகளானது பல்வேறு விதங்களில் புரிந்துகொள்ளப்படலாம். ஒருவேளை நாளைய காலை செய்தித்தாளில் யாரோ ஒருவர் ஒரு மனுஷன்மீது அவசரப்பட்டுக் கைகளை வைத்துவிட்டார் என்று வாசிப்போமாகில், அம்மனுஷன் தாக்கப்பட்டிருக்கின்றார் என்று நாம் புரிந்துகொள்வோம்; ஆனால் இப்படியாக இதற்குக் கிரேக்கில் அர்த்தம் காணப்படுகிறதில்லை. சரியான அர்த்தம் என்று தாங்கள் எண்ணினவற்றை மொழிப்பெயர்ப்பாளர்கள் வழங்கியுள்ளனர் என்று நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதி சபையினர் தங்களது மூப்பர்கள், உதவிக்காரர்கள் முதலானவர்களின் தலைகளின் மீது கைகளை வைக்கும், ஒரு வழக்கத்தின் ஆசரிப்பைப் பெற்றிருந்தனர். ஆனால் அப்போஸ்தலர்கள் இதைச் செய்த போது, அது பரிசுத்த ஆவி பகிரப்பட்டதைச் சுட்டிக்காட்டினதாய் இருந்தது. இதை அப்போஸ்தலர்கள் அல்லாமல் வேறு யாராலும் அருளிட முடியாது. ஊழியர்களை நியமிக்கும் விஷயத்தில் சபைகள் தங்கள் மத்தியில் சில ஆசரிப்பு வழக்கங்களைப் பெற்றிருந்திருக்கலாம்; அப்படியாக அவர்கள் செய்கையில் அது அவர்கள் அந்நபர்களை அங்கீகரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்.
வாட்ச் டவர் Bible மற்றும் Tract சொசைட்டி ஏதோ ஒருவகை விசேஷித்த ஊழியத்திற்கென ஒரு பயண ஊழியரை அனுப்பிவைக்கையில், மேலே சொல்லப்பட்டுள்ள ஆசரிப்பு வழக்கத்திற்கு ஒத்த ஒன்றைக் கைக்கொள்ளுவதில் எதுவும் தவறு இருக்காது. சொசைட்டியின் பணியாளர்கள் முன்வந்து பயண ஊழியரின் தலையின் மீது தங்கள் கைகளை வைத்து, “நீங்கள் சொசைட்டியுடைய பிரதிநிதியாகக் காணப்படுகின்றீர்கள் என்று சொல்லிடலாம். முற்காலத்தில் ஆசாரியர்கள் பலிச் செலுத்தப்படப் போகின்ற விலங்கானது தங்களை அடையாளப் படுத்துகின்றது என்று காண்பிக்கத்தக்கதாக, விலங்கினுடைய தலையின் மீது தங்கள் கைகளை வைத்தார்கள். ஆகையால் ஒருவர் சொசைட்டியால் அனுப்பி வைக்கப்படலாம்; மேலும் கைகளை வைத்தல் ஆசரிப்பானது, பார்வைக்குரியதாய்க் காணப்பட்டு, “நீங்கள் இன்னின்ன ஊழியங்களுக்கென்று நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற வார்த்தைகளைத் தவிர வேறெந்த அதிகாரத்தையும் உடையதாய் இருப்பதில்லை.
கர்த்தருடைய ஜனங்கள் அடங்கும் ஒவ்வொரு சிறுசிறு கூட்டத்தாரும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஓர் ஆசரிப்பு வழக்கத்தையும் பயன்படுத்திடலாம். எப்பிஸ்கோப்பலியன்ஸ் மற்றும் கத்தோலிக்கர்கள் அதிக அளவில் ஆசரிப்பைப் பெற்றிருக்கின்றனர்; மற்றப் பிரிவினர்கள் குறைவான ஆசரிப்பைப் பெற்றிருக்கின்றனர். நாமும் விரும்புகிறதற்கு ஏற்ப பெரிய அல்லது சிறிய ஆசரிப்பைப் பயன்படுத்துவதற்கான உரிமையினைப் பெற்றிருக்கின்றோம் என்று நாம் நம்புகின்றோம். ஏற்படுத்துதல் என்ற வார்த்தைக்கான அர்த்தமானது அங்கீகாரம் அளித்தலாகும். உண்மையான ஏற்படுத்துதல் என்பது, முதலாவதாகப் பரிசுத்த ஆவியினால் ஏற்படுவதாக இருக்கின்றது; இரண்டாவதாகச் சுவிசேஷச் செய்தியுடன் ஊழியக்காரனை அனுப்பி வைத்திடும் அமைப்பினால் ஏற்படுவதாகஇருக்கின்றது.