பிள்ளைகள் – நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்

அட்டவணை
Q8:1 விளம்பரக்காரியங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் நடக்கை
Q11:1 முற்பிதாக்கள் - இரண்டாம் மரணம் தொடர்பாக
Q11:2 முற்பிதாக்கள் எப்படி ஆவிக்குரிய ஜீவன் பெற்றுக்கொள்வார்கள்?
Q11:3 முற்பிதாக்களின் பரீட்சை
Q12:1 முற்பிதாக்கள் ஜீவனுக்கான பரீட்சையின்கீழ்க் காணப்பட்டார்களா?
Q13:1 ஆயிர வருஷ யுகத்தின்போது தேவனோடுள்ள முற்பிதாக்களின் உறவு
Q14:1 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய சுபாவம் தொடர்பாக
Q14:2 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய தளமா அல்லது இரண்டாம் மரணமா?
Q14:3 முற்பிதாக்கள் - உடன்படிக்கை உறவுமுறை தொடர்பாக
Q14:4 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q15:1 முற்பிதாக்கள் பிராகாரத்தில் அடையாளம் காட்டப்படவில்லை
Q15:2 முற்பிதாக்கள் - நீதிமான்களுடைய ஆவி பூரணராக்கப்படுதல்
Q15:3 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q16:1 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q30:1 பின்வாங்கிப் போனவர்களை - எப்படியாக வரவேற்பது?
Q43:3 ஆயிர வருஷ காலத்தில் வேதாகமம் யாரால் பயன்படுத்தப்படும்?
Q50:1 குணலட்சணம் - கிரீடம் எப்போது நம்முடையதாகும்
Q54:1 பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 பிள்ளைகள் - கல்வி
Q58:1 பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்
Q59:1 அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q101:1 சபை - கீழ்ப்படிதல் விஷயத்தில் மனசாட்சித் தவிர்க்கப்படுதல் / அடக்கிக்கொள்ளப்படுதல்
Q102:1 சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
Q103:1 சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்
Q103:2 சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை
Q104:1 சபை - சபையில் எதிர்ப்பு
Q119:2 சபை – சபையில் கனம்பெறுவதற்கான தகுதியான அடிப்படை
Q125:1 சபை – சிலர் யாரையும் சார்ந்திராமல் செயல்படுதல்
Q129:6 தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q144:1 அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q148:1 அர்ப்பணம் - பிற்ப்பாடு வெளியே இருப்பவர்களிடத்தில் ஐக்கியமாயிருத்தல்
Q152:1 பரம அழைப்பின் முடிவிற்குப் பின் அர்ப்பணித்தல்
Q152:2 அர்ப்பணம் - பிற்பாடு ஆவிக்குரிய சுபாவம் பெறுவதற்குரிய வாய்ப்பு
Q152:3 அர்ப்பணம் - ஜெநிப்பிக்கப்படாதவர்களுக்குரிய வெகுமதி
Q161:1 மாநாடுகள் - நீங்கள் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகளுக்கு ஒப்புதலளிக்கின்றீர்களா?
Q162:1 திருத்தங்கள் - எப்படிச் செய்யப்பட வேண்டும்?
Q175:1 உடன்படிக்கைகள் - கலந்தாய்விற்குப் பின் கருத்துப்பிரிவினை
Q200:1 பெண் உதவிக்கார்களின் (Deaconess) - தேர்ந்தெடுத்தல்
Q209:1 மரணம் - ஆதாமின் நிமித்தமான மரணம் எப்போது நின்றுபோகும்?
Q213:1 இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் ஆதாமின் நிமித்தமான மரணம்
Q226:3 பிரிவினைகள் - ஒழுங்கில்லாதவர்கள் மற்றும் குழம்பியிருப்பவர்கள்
Q232:3 மூப்பர்கள் - சபையில் அதிகாரம்
Q233:1 மூப்பர்கள் - சபையின் நலன்களுக்கடுத்தவைகளைக்குறித்துப் பேசுவதற்குக் கூட்டம் நடத்துதல்
Q234:1 மூப்பர் - (Presiding Elder ) தலைமை மூப்பரின் வேலை
Q234:2 மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படாததால், ஒருவர் வேறு இடங்களுக்கும் தகுதியற்றவராகிடுவாரா?
Q235:1 மூப்பர்கள் - ஏன் மூப்பர்கள் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்?
Q235:2 தேர்ந்தெடுத்தல் - சபையில் பெண் போதகர்கள்
Q236:1 தேர்ந்தெடுத்தல் – கூட்டத்தலைவர் / chairman
Q236:2 தேர்ந்தெடுத்தல் - வேதவாக்கியங்களின் அடிப்படையிலான தகுதிகள்
Q236:3 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மூப்பர்களின் எண்ணிக்கை
Q237:1 தேர்ந்தெடுத்தல் - கர்த்தருடைய சித்தம் வெளிப்படுத்தப்படுகின்றது
Q237:2 தேர்ந்தெடுத்தல் - கூட்டத்தலைவியை நியமித்தல்
Q238:1 தேர்ந்தெடுத்தல் - அர்ப்பணம் பண்ணினவர்களும், நீதிமான்களாக்கப்பட்டவர்களும் வாக்குகள் (vote) அளிக்கலாமா?
Q238:2 தேர்ந்தெடுத்தல் - தொகுதிகள் (volumes) விநியோகம் பண்ணுபவர்கள் வாக்களித்தல் (vote)
Q238:3 தேர்ந்தெடுத்தல் - சபையைச் சந்திக்க வரும் சகோதர சகோதரிகள் வாக்கு (vote) அளித்தல்
Q239:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில்
Q239:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்
Q240:1 தேர்ந்தெடுத்தல் - சீட்டு மூலம் வாக்களித்தல்
Q240:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழியப்பட்ட வரைக் குறித்துக் கருத்துப்பரிமாறுதல் (discuss)
Q242:1 தேர்ந்தெடுத்தல் - வாக்களிக்காதவர்கள் குறித்துப் பதிவு செய்தல்
Q242:2 தேர்ந்தெடுத்தல் - ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கும் அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றுதல்
Q242:3 தேர்ந்தெடுத்தல் - தகுதியுடையவர், ஆனால் ஞானஸ்நானம் பெறாதவர்
Q243:1 தேர்ந்தெடுத்தல் - எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் விசேஷமான நாளென்று ஒன்றில்லை
Q243:2 தேர்ந்தெடுத்தல் - நியமிக்காமல் ஊழியம் செய்தல்
Q244:1 தேர்ந்தெடுத்தல் - மீண்டும் வாக்குச் (vote) செலுத்துதல்
Q245:1 தேர்ந்தெடுத்தல் - (ஏகமன நியதி) ஜூரி விதி
Q245:2 தேர்ந்தெடுத்தல் - வர இயலாதிருக்கும் அங்கத்தினர்கள் கடிதம் மூலம் வாக்குப்பதிவு செய்தல்
Q246:1 தேர்ந்தெடுத்தல் - ஆங்கில மொழிக் கூடுகைகளுக்காக வெளிநாட்டுச் சகோதரர்கள்
Q246:2 தேர்ந்தெடுத்தல் - தகுதியற்றவர்கள் தொடர்பாக
Q247:1 தேர்ந்தெடுத்தல் - யார் வாக்களிக்கலாம்?
Q247:2 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்க்ள் மற்றும் உதவிக்காராக்ளைத் தேர்ந்தெடுத்தல்
Q248:1 தேர்ந்தெடுத்தல் - பதிலாள் மூலம் வாக்கு
Q249:1 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுத்தலுக்கான சதவீதம்
Q250:1 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்களை நிறைவுசெய்தல்
Q253:1 கூட்டங்களில் கலந்துகொள்ளாத மூப்பர்களின் தேர்ந்தெடுத்தல்
Q253:2 தேர்ந்தெடுத்தல் - குழப்பத்திலிருக்கும்போது வாக்களிக்காமல் இருப்பது தவறா?
Q253:3 தேர்ந்தெடுத்தல் - சபைக்கான தகுதியான ஊழியர்கள்
Q254:1 தேர்ந்தெடுத்தல் - வாக்குறுதி (vote) தொடர்பாக
Q255:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள்
Q256:1 தேர்ந்தெடுத்தல் - மற்றச் சபையார் மத்தியிலிருந்து மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
Q256:2 தேர்ந்தெடுத்தல் - சதவீதம் தொடர்பாக
Q260:1 எலிசா வகுப்பாரில் யார் காணப்படுவார்கள்?
Q286:3 பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q298:1 திரள் கூட்டத்தார் – உலகத்தின் பாவங்களை ரத்து செய்தல் தொடர்பாக
Q305:2 திரள்கூட்டத்தினர் பூரண அன்பிற்கான இலக்கினின்று விழுந்துபோகுதல்
Q372:2 இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q379:2 யூதர்களைத் தேவன் எவ்வாறு கையாளுவார்
Q398:1 நீதிமானாக்கப்படுதல் - முற்பிதாக்கள் மற்றும் சுவிசேஷ யுகத்தில் நீதிமானாக்கப்பட்டவர்கள்
Q404:1 நீதிமானாக்கப்படுதல் மீதான இன்றைய பார்வை
Q429:1 இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
Q444:1 ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:1 ஆதாம் ஜீவ-உரிமைகள் எதையேனும் பெற்றிருக்கின்றாரா?
Q446:4 ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q449:1 அன்பு பூரண அன்பிற்கான இலக்கை அடைதல்
Q454:1 இலக்கு - திரள்கூட்டம் மற்றும் சிறுமந்தை
Q455:1 இலக்கினின்று விழுந்துபோய்த் திரள்கூட்டத்தினராகுதல்
Q455:2 இலக்கு அல்லது பந்தய சாலை - போராடுவதற்கு முன்னதாகவே முடித்தல்
Q459:1 விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q459:2 விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q469:2 கூட்டங்கள் - பயண ஊழியர்களின் கூட்டங்கள், விளம்பரங்கள் முதலானவைகள்
Q470:1 கூட்டங்கள் - சிறு எண்ணிக்கையுள்ள வகுப்புத் தொடர்பாக
Q471:1 கூட்டங்களுக்கான ஒழுங்கு
Q471:2 கூட்டங்கள் - சாட்சிக்கூட்டங்கள்
Q472:1 கூட்டங்கள் - சகோதரர்கள் இல்லாதபோது நடத்துவதற்கான வழிமுறை
Q472:2 கூட்டங்கள் - சந்திக்க வந்திருக்கும் சகோதரர் சபையாருக்குக் கூட்டத்தை நடத்துதல்
Q473:1 கூட்டங்கள் - மூப்பர்கள் அல்லாமல், மற்றவர்கள் கூட்டங்களை நடத்துதல்
Q473:2 சிறிய எண்ணிக்கையுள்ள சபையாருக்கு மிகவும் முக்கியமான கூட்டங்கள்
Q476:1 கூட்டங்கள் -Extension work / புதிய வகுப்புகள் உருவாக்கிடும் வேலைக்கான எண்ணிக்கை
Q477:1 கூட்டங்கள் - புரூக்கிளினிலுள்ள மூப்பர்கள் கூட்டங்களை நடத்துவதற்கென உதவிக்காரர்களை நியமித்தல் தொடர்பாக
Q477:2 உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q478:1 கூட்டங்கள் - போதகர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுதல்
Q478:2 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q479:1 கூட்டங்கள் - மூப்பர்கள் விசாரணை சங்கத்தில் அமர்தல்
Q480:1 கூட்டங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் கடமைகள்
Q480:2 கூட்டங்களுக்கான ஏற்பாடுகள்
Q482:1 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் வாக்களித்தல் (voting)
Q482:2 கூட்டங்கள் - துணைவிதிகளைப் பயன்படுத்துதல்
Q483:1 கூட்டங்களின் வகை
Q483:2 கூட்டங்களின் எண்ணிக்கை
Q486:1 நினைவுகூருதல் இராப்போஜனம் - ஏன் நாம் பங்கெடுக்கின்றோம்
Q486:2 நினைவுகூருதல் இராப்போஜனம் - (Wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்பத்துதல்
Q486:3 பஸ்கா மற்றும் பாவநிவாரண நாள் - எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது?
Q497:2 பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q514:1 உண்மையான ஏற்படுத்துதல் (ordination)
Q515:1 ஏற்படுத்துதலுக்கான (ordination) அதிகாரம்
Q517:1 ஏற்படுத்துதல் (ordination) - கைகளை வைத்தல்
Q518:2 ஏற்படுத்துதல் (ordination) - சொசைட்டியின் கேள்விப்பட்டியலுக்கான நோக்கம்
Q519:1 தற்காலத்தில் ஊழியர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q520:1 ஏற்படுத்துதல் (ordination) - V D M தலைப்பு
Q520:2 ஏற்படுத்துதலை (ordination) - சொசைட்டி நீக்குதல்
Q520:3 ஏற்படுத்துதல் (ordination) - பயண ஊழியரின் ஏறபடுத்துதலை நீக்குதல்
Q520:4 ஏற்படுத்துதல் (ordination) - Watch Tower Bible and Tract Society -இன் ஊழியர்கள்
Q521:1 ஏற்படுத்துதல் (ordination) - மனிதர்களால் அல்ல
Q521:2 மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q524:2 பஸ்கா - எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது?
Q524:3 பஸ்கா - முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்பத்துகின்றனர்?
Q524:4 பஸ்கா - பஸ்காவுக்கும், பாவநிவாரண நாளுக்கும் தொடர்பு
Q525:2 மேய்ப்பர் - நீங்கள் சபையை வந்து சந்திக்க இயலாதிருக்கும் நிலையிலிருக்க, உங்களைத் தேர்ந்தெடுத்தல்
Q525:3 Pastoral work / மேய்ப்பரது வேலை - மூப்பர்கள் இதைக் கண்காணிப்பவர்களல்ல
Q526:1 Pastoral work / மேய்ப்பரது வேலையில் - மூப்பர்கள் மற்றும் சகோதரிகளின் ஒத்துழைப்பு
Q527:1 Pastoral work / மேய்ப்பரது வேலை - சகோதரர்களுக்குரியது அல்ல
Q530:2 ஒரு பணம் குறிப்பது என்ன?
Q532:1 ஆயிர வருட யுகத்தில் - பூரணம்
Q534:3 பயண ஊழியர்கள் - உள்ளூர் பயண ஊழியர்களின் வேலை
Q535:2 பயண ஊழியர்களை உபசரித்தில் முதலானவைகளுக்கான சரியான வழிமுறை
Q538:1 ஜெபத்தில் சகோதரிகள் வழிநடத்துதல்
Q538:3 ஜெபம் - சாட்சிக்கூட்டம்
Q541:1 ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q556:1 உயிரூட்டப்படுதல் (Quickening) மற்றும் இலக்கு
Q568:2 மீட்கும்பொருள் - எங்கே provided/ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 மீட்கும்பொருள் கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்
Q584:3 திரள்கூட்டத்தார் மற்றும் முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் வரிசை
Q587:1 உயிர்த்தெழுதல்
Q632:1 போக்காட்டிற்குப் பாவநிவாரண பலியில் எப்பங்குமில்லை
Q648:2 துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q660:1 ஆறாம் தொகுதியில் சகோதரிகளுக்கான கட்டுப்பாடுகள்
Q660:2 சகோதரிகள் ஜெபக்கூட்டங்களில் பங்கெடுத்தல்
Q661:1 சகோதரிகள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல் போதித்தல்
Q661:2 சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q662:1 சகோதரிகள் வேதாகம ஆராய்ச்சியில் பங்கெடுத்தல்
Q662:2 சகோதரிகள் ஜெபத்திற்கு நேராய் நடத்துதல்
Q663:1 சகோதரிகள் கேட்டுக்கொள்ளப்படாமலேயே கேள்விகளுக்குப் பதில் அளித்தல்
Q673:2 உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்
Q685:1 ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q704:1 போதித்தல் - ஸ்திரீகள் அமைதியாய் இருத்தல்
Q704:2 போதித்தல் -ஆரோக்கியமற்றப் போதனைகளைச் சகித்துகொண்டிருத்தல்
Q709:2 சாட்சியம் - குறைவான சத்தமுடைய சகோதரர்கள் சாட்சியைக் கூறலாமா?
Q710:1 சாட்சி பகர்தல் - புத்திமதி கூறுவதற்கல்ல
Q803:2; Q825:2 திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்

Q54:2

Q54:2 பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்

CHILDREN--Training in the Way They Should Go

கேள்வி (1907)-2- “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” பிள்ளைகள் ஏன் அடிக்கடி சரியான வழியினின்று விலகுகின்றனர்?

பதில் – அவர்கள் நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படவில்லை என்பதே பிரதான காரணம் என்று நான் எண்ணுகின்றேன். சத்தியத்திலுள்ள ஜனங்களுக்குப் பிள்ளைகளைப் பயிற்றுவித்தல் விஷயத்தில் சிறு படிப்பினை அவசியம் என்று நான் எண்ணுகின்றேன். அநேகமாக இவ்விஷயத்தில் சில சாதகமின்மைகள் நமக்குக் காணப்படவே செய்யும். உங்கள் இருதயமானது எவ்வளவுக்கு அதிகம் பெரிதாகியும், மன்னிக்கிறதாகியும், தயவுள்ளதாகியும் உள்ளதோ, அவ்வளவுக்கு அதிகமாய் உங்கள் நண்பர்களையும், உங்கள் பிள்ளைகளையும் மன்னிக்கிறவர்களாகுவீர்கள்; ஆனாலும் உங்கள் பிள்ளைகளைக் கையாளும்போது, நீங்கள் அவர்களை மற்ற ஒரு புருஷனையோ அல்லது ஸ்திரீயையோ கையாளுகிறதுபோல கையாளக்கூடாது என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்; நீங்கள் உருவாகிவரும் குணலட்சணத்தைக் கண்நோக்க வேண்டும் மற்றும் கர்த்தருடைய ஒழுங்குகளுக்கு இசைவாக, கர்த்தர் நடத்தப் பிரியப்படும் வழியில் அக்குணலட்சணத்தை வனையத்தக்கதாகப் பயிற்றுவித்திட வேண்டும். ஒருவேளை குணமானது, வளைந்த சிறு கிளையாக இருக்குமானால், வளைந்துள்ள பகுதிகளில் (splint) கட்டைகளை நீங்கள் கட்டி, அது நிமிரத்தக்கதாக உதவிட வேண்டும்; ஏனெனில் இவ்வளைந்த கிளைகளுடன் அதைப் பெரிய மரமாக வளர்வதற்கு நீங்கள் விட்டுவிடுவீர்களானால், பிற்பாடு அது நேராய் நிமிரத்தக்கதாக உங்களால் ஒருபோதும் அதற்குச் கட்டைகளைக் கட்டிட முடியாது. நண்பர்களில் சிலர் பிரம்பினைத் தவிர்த்து, வேதவாக்கியங்கள் கூறுவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர் என்று நான் எண்ணுகின்றேன். பிரம்பு தேவைப்படும்போது, அதை நாம் தவிர்த்திடக்கூடாது. இவ்விஷயத்தில் நாம் தேவனுடைய வழிமுறையினைப் பின்பற்றிட வேண்டும். உங்கள் விஷயத்தில் பிரம்பு தேவைப்படுகையில், அதைத் தேவன் தவிர்த்துக்கொள்கின்றாரா? இல்லவேயில்லை. “உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்.” தேவன் தம் ஜனங்களுக்காக ஒரு கோலையும், ஒரு தடியையும் வைத்திருப்பதற்காக நான் மகிழ்கின்றேன்; நாம் திருத்தப்பட வேண்டியபோது, நம்மைத் திருத்தாமல் அப்படியே அவர் நம்மை விட்டுவிடாமல் இருப்பதற்காய் நான் மகிழ்கின்றேன். ஆனால் இது விஷயத்தில் சரியான ஆவியை உடையவர்களாய் இருப்போமானால்… சிட்சையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சிட்சைக்கான அவசியம் நமக்கு ஏற்படுவதைக்குறித்தே நாம் மிகவும் வருத்தம் அடைகிறவர்களாய் இருப்போம். “நான் சிட்சிக்கப்பட அவசியம் ஏற்பட்டுள்ளப்படியாலும், நான் என்னைத் தானே சரிப்பண்ணிக்கொள்ளாததினாலும் அல்லது என்னை நான் சரியான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாததினாலும் நான் மிகவும் வருந்துகின்றேன்” என்பதே பிரம்பின் காரியமாகும். இதைத்தான் நீங்களும் பிள்ளையினிடத்தில் வளர்த்திட வேண்டும் – பிள்ளையானவன் சில அடிகள் பெற்றுக்கொள்வதல்ல, மாறாக தேவனுடைய பிள்ளையென நீங்கள் (அடிக்கொடுப்பதை) இதைச் செய்வதை உங்களது கடமையாகவும், பொறுப்பாகவும் பெற்றிருக்கின்றீர்கள் மற்றும் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு அடிக்கொடுத்தாக வேண்டும். என்னுடைய ஜீவியத்தில் என் கைகளில் நான் எத்தனை அடிகள் வாங்கினேன் என்று என்னால் சொல்லமுடியும்; ஐந்து முறை அடிகள் வாங்கியிருக்கின்றேன்; மேலும் அவற்றையும், அந்தச் சம்பவங்களையும் நினைவில் வைத்திருக்கின்றேன். மூன்று அடிகளை என் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவைகளில் ஒன்றைக்குறித்துச் சொல்ல விரும்புகின்றேன். எனக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். நான் மிகச் சிறுபிள்ளையாக இருந்தபோது, இடுப்பின்கீழ், அதாவது பிட்டத்தில் சில அடிகள் பெற்றிருந்திருப்பேன், எனக்கு அதுகுறித்து ஞாபகமில்லை ஆனால் ஐந்து வயது இருக்கையில், நான் அடி வாங்கினது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. என் தாயார், அவர்களால் முடிந்தவரை என்னைப் பயிற்றுவித்தார்கள். என் தாயார் ஒரு ஜோடி கோலிகுண்டு முனைகளை உடைய தோல் சாட்டையை பெற்றிருந்தார்கள்; அதன் முனைகள் வலியை உண்டாக்கும், ஆனாலும் உண்மையான சேதம் ஏதும் செய்யாது. அவைகளுக்குக் கிட்டத்தட்ட ஆறு அல்லது எட்டு வால் பகுதிகள் உண்டு – “அவைகளின் வால் முனைகளே வலியை உண்டாக்கும்.” “சார்லஸ் (ரசல்), தோல் சாட்டையை எடுத்துக்கொண்டு மாடிக்குவா” என்று என் தாயார் கூறினார்கள். நானும் தோல் சாட்டையை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். தாயார் என்னை நோக்கி: “இங்கே உட்காரு; நான் உனக்கு வேதத்திலிருந்து சிலவற்றை வாசிக்க வேண்டும்” என்றார்கள். நான் அச்சம்பவத்தில் ஓர் உண்மையைப் புரட்டினதாக அல்லது திரித்துப் பேசினதாக என் தாயார் எண்ணினார்கள்; நான் முழுப்பொய்ப் பேசினேன் என்றல்ல, மாறாக உண்மையினைக் கொஞ்சம் திரித்துப் பேசினதாக அவர்கள் எண்ணினார்கள்; அதாவது விசேஷமாக ஒருவேளை பிள்ளைப் பேசுவதைக் கேட்டு சில வயதானவர்கள் சிரிக்கவும், பேசினது புத்திசாலித்தனமானது (smart) என்று எண்ணுவதற்கும் வாய்ப்புள்ள தருணங்களில், பெரும்பான்மையான பிள்ளைகள் இப்படி உண்மையைக் கொஞ்சம் திரித்துப் பேசுவது போன்று நான் பேசினதாக எண்ணினார்கள்; ஆனால் அப்படியாக நான் எண்ணி ஒருவேளை பேசியிருந்தாலும், பேசுவதைக் கேட்டுச் சிரிப்பதற்கும், பேசினது புத்திசாலித்தனமானது என்று எண்ணுவதற்கும் அங்கு யாரும் இருக்கவில்லை. இப்படியாகச் செய்யக்கூடாது என்று நான் கற்றிருந்தேன். நான் இப்படிப் பேசினதாக என் தாயார் எண்ணினப்படியால், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து, பொய்ப்பேசுபவர்கள் அக்கினியிலும், கந்தகத்திலும் எரிக்கப்படுவார்கள் என்று காணப்படும் வசனங்களை எனக்கு வாசித்துக் காண்பித்துவிட்டு, “சார்லஸ் (ரசல்), அக்கினியிலும், கந்தகத்திலும் சுட்டெரிக்கப்படப் போகிறவர்களோடுகூட நீயும் காணப்பட நான் விரும்பவில்லை மேலும் உன் தாயென உன்னைச் சிட்சிப்பது என் கடமையாக இருக்கின்றது மற்றும் நான் இதைச் செய்தாக வேண்டும். உன்னைச் சாட்டையினால் அடிக்க எனக்கு விருப்பமில்லை, ஆனாலும் உன்னுடைய நன்மைக்காக இதை நான் செய்தாக வேண்டும். இதுவே கர்த்தருடைய வசனத்தின் போதனையாகும் மற்றும் நீ ஒருவேளை வளர்ந்து பொய்யனாய்க் காணப்பட்டாயானால், ஒரு வேளை வளர்ந்து பொல்லாத மனுஷனாய்க் காணப்பட்டாயானால் இப்படியே சம்பவிக்கும்” என்று கூறினார்கள். வேதவாக்கியங்களிலிருந்துள்ள சிறுசிறு அந்த அறிவுரைகளானது என் மனதில் அதிகமாய்த் தாக்கத்தினை ஏற்படுத்தினது. ஒருவேளை காரியங்கள்குறித்து என் தாயார் புரிந்திருப்பார்களானால், அவர்கள் அப்படியாக அவ்வசனங்களைப் பொருத்திக் கூறியிருந்திருக்க மாட்டார்கள்; மாறாக அதற்கொத்த ஆற்றலுள்ள மற்றும் மிக அதிக ஆற்றலுள்ள வேறு ஏதேனும் வேதவாக்கியத்தினைக் கண்டுபிடித்து, எடுத்துக் கூறியிருந்திருப்பார்கள். தேவன் பொய்யர்களைப் பயன்படுத்துவதில்லை எனும் உண்மையானது மிகச் சுலபமாகப் பிள்ளையினுடைய மனதில் பதியவைக்கப்படலாம்.