Q245:2
கேள்வி (1912)-2- இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்னரே தேர்தலுக்கான முன்மொழிதல் இடம்பெற்றிருக்க, கைகளை நீட்டுவதன் மூலம் மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, வகுப்பின் இரண்டு (அ) மூன்று அங்கங்கள், நேரில் வரஇயலாதிருக்கும் தருவாயில், தங்கள் வாக்குப்பதிவை கூட்டத் தலைவருக்குக் கடிதத்தின் மூலம் அனுப்புவது அனுமதிக்கத்தகுந்ததா?
பதில் – இதில் மறுப்புக்கிடமானது ஒன்றுமே இல்லை. அரசியலில் ஒரு கட்சி, மற்றக் கட்சிக்கு எதிராக சூழலைச் சாதகமாக்கிக் கொள்ளுகிற கட்சி மனப்பான்மை காணப்படுகிறது. எனினும், இது உங்களிடத்தில் இருக்கலாகாது. மூப்பருக்கான தேர்ந்தெடுத்தலுக்கென்று நீங்கள் ஒன்றுகூடும்போது, ஒவ்வொரு சகோதரன் மற்றும் சகோதரியும் தனது கருத்தைத் வெளிப்படுத்தக்கூடிய முழுமையான வாய்ப்பைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிட வேண்டும். இப்படி விரும்புவது மாத்திரமல்லாமல், ஒவ்வொருவரும் தங்கள் கருத்தினை வெளிப்படுத்திட வேண்டும் என்று நீங்கள் காணப்பட வேண்டும். நமக்கு அவர்களுடைய சொந்தக் கருத்து மட்டுமே அவசியமானது அல்ல, மாறாக சபைக்கான தேவனுடைய சித்தம் இன்னது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இவ்விஷயத்தில், தேவனுடைய சித்தமாக இருக்குமென நாம் நினைப்பது எதுவோ அதை நாம் அனைவரும் வெளிப்படுத்துவோமாக. வரஇயலாதிருப்பவர்கள், கூட்டத்தின் கூட்டத்தலைவரிடத்தில் தங்களின் வாக்குப்பதிவை அனுப்பிவைப்பதற்கு எந்தத் தடையும் இருப்பதாக நான் காணவில்லை. நீங்கள் வந்திருப்பீர்களேயானால், நீங்கள் எண்ணியிருப்பவருக்கு உங்கள் வாக்குப்பதிவைக் கொடுக்கலாம். ஆனால் உங்களுக்காக வேறொரு சகோதரன் அல்லது சகோதரி பதிலாளாக இருந்து, தாங்கள் சிறந்தவர்கள் என்று கருதக்கூடியவர்களுக்கு வாக்களிப்பதற்குரிய உரிமைக் கொடுக்கப்படலாகாது. இவ்விஷயத்தில், அதுவே என் கருத்தாகும்.