Q479:1
கேள்வி (1960)-1- மூப்பர்கள் விசாரணை சங்கத்தில் அமர்வதுபோல் காணப்படுவதும் மற்றும் ஒழுங்கற்ற விதத்தில் நடப்பவர்களாகத் தென்படுபவர்கள், மூப்பர்கள் முன்பு ஆஜராகும்படிக்கும், நடத்தைகளுக்கான காரணத்தை விளக்கும்படிக்கும் அழைக்கப்படுவதும் மூப்பர்களுக்குத் தகுதியான காரியமாய் இருக்குமா? அல்லது மத்தேயு 18:15-18 வரையிலான வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளதான கர்த்தருடைய ஆலோசனையானது பின்பற்றப்பட வேண்டுமா?
பதில் – குறிப்பிடப்பட்டிருக்கும் வேதவாக்கிய பகுதியில் இடம்பெறும் கர்த்தருடைய கட்டளைக்கு இசைவாய்க் காரியமானது கையாளப்பட வேண்டும் என்று மேற்காணப்படும் கேள்வியின் வாயிலாய் வெளிப்படும் யோசனையை நான் அங்கீகரிக்கிறேன். மூப்பர்கள் சங்கத்தாரோ அல்லது வேறு எவரோ அந்நிய காரியங்களில் தலையிடுகிறவர்கள் ஆகிடுவதற்குக் கர்த்தருடைய வார்த்தை அங்கீகரிக்கிறதில்லை. இப்படிச் செய்வது என்பது பரிசுத்த விசாரணையின் போதான இருண்ட யுகங்களின் பழக்கங்களுக்குத் திரும்புவதாக இருக்கும் மற்றும் பரிசுத்த விசாரணையை மேற்கொண்டவர்கள் கொண்டிருந்த அதே ஆவியினை நாமும் வெளிப்படுத்துகிறவர்கள் ஆகிடுவோம். கர்த்தர் காரியத்தினை எளிமையான விதத்தில் வைத்துள்ளார் மற்றும் அதனை நாம் மேலும் சிறப்பாக்கிட முடியாது. “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய் என்று வேதாகமம் கூறுகின்றது. இதுவே காரியத்தின் முடிவாக இருக்க வேண்டும். ஒருவேளை இதனால் பலன் உண்டாகவில்லையெனில் வேதவாக்கியங்களானது அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தெரிவிக்கின்றது. “அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ என்று நாம் வாசிக்கின்றோம். ஒருவேளை தவறு செய்தவர் இந்த இரண்டு அல்லது மூன்று பேரின் புத்திமதிக்குச் செவிகொடுத்துத் தனது தவறான செய்கையை நிறுத்திக்கொள்வாரானால் அதுவே காரியத்தின் முடிவாயிருக்கும். அவருக்கு ஏதேனும் வகை தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோ அல்லது கொடுப்பதற்கு முற்படுவதோ நமக்கு அடுத்தக் காரியமல்ல. “கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்று கூறும் அவருடைய வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை தவறு செய்தவருக்குத் தண்டனை ஏதேனும் அவசியப்படுமானால், கர்த்தர் அதை அவருக்குக் கொடுப்பார் என்று நாம் நம்பிட வேண்டும் மற்றும் அக்காரியத்தினை நம்முடைய சொந்தக் கரத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கைக்கொள்ள வேண்டும். நாம் தவறு செய்தவரை, தவறு செய்வதிலிருந்து நிறுத்திட முற்படுவதே நமக்கடுத்தக் காரியமாகும். ஆனால் ஒருவேளை தவறு செய்தவர் தொடர்ந்து தவறு செய்துகொண்டும், மனந்திரும்பாமலும் காணப்பட்டால் மற்றும் ஒருவேளை காரியமானது போதுமான அளவுக்கு முக்கியமானதாய்க் காணப்படுமாயின், அப்பொழுது காரியமானது சரிச்செய்யப்படத்தக்கதாக நாம் சபையாருடைய கவனத்திற்குக்கொண்டுவர வேண்டும். (மத்தேயு 18:15-18)
சிறு அல்லது அற்பத்தனமான காரியங்கள் எதையும் நாம் சபையின் முன்னிலையில் கொண்டு வரக்கூடாது. என்னுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதான இவ்வகையான காரியங்களானது, நான்கில் மூன்று பகுதி கண்டுகொள்ளாமல் விட்டுவிடப்பட வேண்டியவைகளாகவும், அவைகள் விஷயத்தில் எதுவுமே செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லாதவைகளாகவும் காணப்பட்டுள்ளது. எனினும் சில விவகாரங்களில் காரியங்களானது, தனிப்பட்ட நபரைத் தாண்டி முழுச்சபையாரையும் சம்பந்தப்படுத்தும் அளவிற்குள்ள விவகாரங்களாகக் காணப்படும். இம்மாதிரியான நிகழ்வுகளில், காரியத்தினைத் தனிப்பட்ட விதத்தில் கையாளுவது கூடாத காரியமாய் இருக்கும். அப்போது மூப்பர்கள் குழு / committee ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் இவ்விவகாரத்தைப் பார்த்துக்கொள்வதற்கும், தவறானது தடுக்கப்பட முடியுமா அல்லது சரிசெய்ய முடியுமா? என்று பார்த்துக்கொள்வதற்கும் என்று ஏற்பாடுபண்ணப்பட வேண்டும். காரியமானது தனிப்பட்ட நபரைத் தாண்டி கடந்துசெல்கிறதானால் தேவனுடைய வார்த்தைக்கு மிஞ்சி எங்களுக்கு எந்த ஆலோசனையும் இல்லை. பாபிலோன் போல் ஆகிடாமலிருப்பதற்கும், விசாரணைகள் நடத்திடாமல் இருப்பதற்கும் மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்திடாமலிருப்பதற்கும், கவனமாய் இருப்போமாக; தேவனுடைய வார்த்தை நமக்கும் போதுமானதாய் இருக்கின்றது மற்றும் நாம் அதைக் கவனமாய்க் கைக்கொண்டு இப்படியாகக் குழப்பங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.