நீதிமானாக்கப்படுதல் மீதான இன்றைய பார்வை

அட்டவணை
Q8:1 விளம்பரக்காரியங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் நடக்கை
Q11:1 முற்பிதாக்கள் - இரண்டாம் மரணம் தொடர்பாக
Q11:2 முற்பிதாக்கள் எப்படி ஆவிக்குரிய ஜீவன் பெற்றுக்கொள்வார்கள்?
Q11:3 முற்பிதாக்களின் பரீட்சை
Q12:1 முற்பிதாக்கள் ஜீவனுக்கான பரீட்சையின்கீழ்க் காணப்பட்டார்களா?
Q13:1 ஆயிர வருஷ யுகத்தின்போது தேவனோடுள்ள முற்பிதாக்களின் உறவு
Q14:1 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய சுபாவம் தொடர்பாக
Q14:2 முற்பிதாக்கள் - ஆவிக்குரிய தளமா அல்லது இரண்டாம் மரணமா?
Q14:3 முற்பிதாக்கள் - உடன்படிக்கை உறவுமுறை தொடர்பாக
Q14:4 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q15:1 முற்பிதாக்கள் பிராகாரத்தில் அடையாளம் காட்டப்படவில்லை
Q15:2 முற்பிதாக்கள் - நீதிமான்களுடைய ஆவி பூரணராக்கப்படுதல்
Q15:3 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q16:1 முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல்
Q30:1 பின்வாங்கிப் போனவர்களை - எப்படியாக வரவேற்பது?
Q43:3 ஆயிர வருஷ காலத்தில் வேதாகமம் யாரால் பயன்படுத்தப்படும்?
Q50:1 குணலட்சணம் - கிரீடம் எப்போது நம்முடையதாகும்
Q54:1 பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 பிள்ளைகள் - கல்வி
Q58:1 பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்
Q59:1 அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q101:1 சபை - கீழ்ப்படிதல் விஷயத்தில் மனசாட்சித் தவிர்க்கப்படுதல் / அடக்கிக்கொள்ளப்படுதல்
Q102:1 சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
Q103:1 சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்
Q103:2 சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை
Q104:1 சபை - சபையில் எதிர்ப்பு
Q119:2 சபை – சபையில் கனம்பெறுவதற்கான தகுதியான அடிப்படை
Q125:1 சபை – சிலர் யாரையும் சார்ந்திராமல் செயல்படுதல்
Q129:6 தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q144:1 அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q148:1 அர்ப்பணம் - பிற்ப்பாடு வெளியே இருப்பவர்களிடத்தில் ஐக்கியமாயிருத்தல்
Q152:1 பரம அழைப்பின் முடிவிற்குப் பின் அர்ப்பணித்தல்
Q152:2 அர்ப்பணம் - பிற்பாடு ஆவிக்குரிய சுபாவம் பெறுவதற்குரிய வாய்ப்பு
Q152:3 அர்ப்பணம் - ஜெநிப்பிக்கப்படாதவர்களுக்குரிய வெகுமதி
Q161:1 மாநாடுகள் - நீங்கள் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை மாநாடுகளுக்கு ஒப்புதலளிக்கின்றீர்களா?
Q162:1 திருத்தங்கள் - எப்படிச் செய்யப்பட வேண்டும்?
Q175:1 உடன்படிக்கைகள் - கலந்தாய்விற்குப் பின் கருத்துப்பிரிவினை
Q200:1 பெண் உதவிக்கார்களின் (Deaconess) - தேர்ந்தெடுத்தல்
Q209:1 மரணம் - ஆதாமின் நிமித்தமான மரணம் எப்போது நின்றுபோகும்?
Q213:1 இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின் ஆதாமின் நிமித்தமான மரணம்
Q226:3 பிரிவினைகள் - ஒழுங்கில்லாதவர்கள் மற்றும் குழம்பியிருப்பவர்கள்
Q232:3 மூப்பர்கள் - சபையில் அதிகாரம்
Q233:1 மூப்பர்கள் - சபையின் நலன்களுக்கடுத்தவைகளைக்குறித்துப் பேசுவதற்குக் கூட்டம் நடத்துதல்
Q234:1 மூப்பர் - (Presiding Elder ) தலைமை மூப்பரின் வேலை
Q234:2 மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படாததால், ஒருவர் வேறு இடங்களுக்கும் தகுதியற்றவராகிடுவாரா?
Q235:1 மூப்பர்கள் - ஏன் மூப்பர்கள் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்?
Q235:2 தேர்ந்தெடுத்தல் - சபையில் பெண் போதகர்கள்
Q236:1 தேர்ந்தெடுத்தல் – கூட்டத்தலைவர் / chairman
Q236:2 தேர்ந்தெடுத்தல் - வேதவாக்கியங்களின் அடிப்படையிலான தகுதிகள்
Q236:3 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மூப்பர்களின் எண்ணிக்கை
Q237:1 தேர்ந்தெடுத்தல் - கர்த்தருடைய சித்தம் வெளிப்படுத்தப்படுகின்றது
Q237:2 தேர்ந்தெடுத்தல் - கூட்டத்தலைவியை நியமித்தல்
Q238:1 தேர்ந்தெடுத்தல் - அர்ப்பணம் பண்ணினவர்களும், நீதிமான்களாக்கப்பட்டவர்களும் வாக்குகள் (vote) அளிக்கலாமா?
Q238:2 தேர்ந்தெடுத்தல் - தொகுதிகள் (volumes) விநியோகம் பண்ணுபவர்கள் வாக்களித்தல் (vote)
Q238:3 தேர்ந்தெடுத்தல் - சபையைச் சந்திக்க வரும் சகோதர சகோதரிகள் வாக்கு (vote) அளித்தல்
Q239:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களின் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில்
Q239:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்
Q240:1 தேர்ந்தெடுத்தல் - சீட்டு மூலம் வாக்களித்தல்
Q240:2 தேர்ந்தெடுத்தல் - முன்மொழியப்பட்ட வரைக் குறித்துக் கருத்துப்பரிமாறுதல் (discuss)
Q242:1 தேர்ந்தெடுத்தல் - வாக்களிக்காதவர்கள் குறித்துப் பதிவு செய்தல்
Q242:2 தேர்ந்தெடுத்தல் - ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கும் அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றுதல்
Q242:3 தேர்ந்தெடுத்தல் - தகுதியுடையவர், ஆனால் ஞானஸ்நானம் பெறாதவர்
Q243:1 தேர்ந்தெடுத்தல் - எப்போது வேண்டுமானாலும் நடத்தப்படலாம் விசேஷமான நாளென்று ஒன்றில்லை
Q243:2 தேர்ந்தெடுத்தல் - நியமிக்காமல் ஊழியம் செய்தல்
Q244:1 தேர்ந்தெடுத்தல் - மீண்டும் வாக்குச் (vote) செலுத்துதல்
Q245:1 தேர்ந்தெடுத்தல் - (ஏகமன நியதி) ஜூரி விதி
Q245:2 தேர்ந்தெடுத்தல் - வர இயலாதிருக்கும் அங்கத்தினர்கள் கடிதம் மூலம் வாக்குப்பதிவு செய்தல்
Q246:1 தேர்ந்தெடுத்தல் - ஆங்கில மொழிக் கூடுகைகளுக்காக வெளிநாட்டுச் சகோதரர்கள்
Q246:2 தேர்ந்தெடுத்தல் - தகுதியற்றவர்கள் தொடர்பாக
Q247:1 தேர்ந்தெடுத்தல் - யார் வாக்களிக்கலாம்?
Q247:2 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்க்ள் மற்றும் உதவிக்காராக்ளைத் தேர்ந்தெடுத்தல்
Q248:1 தேர்ந்தெடுத்தல் - பதிலாள் மூலம் வாக்கு
Q249:1 தேர்ந்தெடுத்தல் - தேர்ந்தெடுத்தலுக்கான சதவீதம்
Q250:1 தேர்ந்தெடுத்தல் - முன்மொழிதல்களை நிறைவுசெய்தல்
Q253:1 கூட்டங்களில் கலந்துகொள்ளாத மூப்பர்களின் தேர்ந்தெடுத்தல்
Q253:2 தேர்ந்தெடுத்தல் - குழப்பத்திலிருக்கும்போது வாக்களிக்காமல் இருப்பது தவறா?
Q253:3 தேர்ந்தெடுத்தல் - சபைக்கான தகுதியான ஊழியர்கள்
Q254:1 தேர்ந்தெடுத்தல் - வாக்குறுதி (vote) தொடர்பாக
Q255:1 தேர்ந்தெடுத்தல் - மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள்
Q256:1 தேர்ந்தெடுத்தல் - மற்றச் சபையார் மத்தியிலிருந்து மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
Q256:2 தேர்ந்தெடுத்தல் - சதவீதம் தொடர்பாக
Q260:1 எலிசா வகுப்பாரில் யார் காணப்படுவார்கள்?
Q286:3 பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q298:1 திரள் கூட்டத்தார் – உலகத்தின் பாவங்களை ரத்து செய்தல் தொடர்பாக
Q305:2 திரள்கூட்டத்தினர் பூரண அன்பிற்கான இலக்கினின்று விழுந்துபோகுதல்
Q372:2 இயேசு - ஜீவ-உரிமைகள்
Q373:1 இயேசு ஜீவ-உரிமைகளைக் கொடுத்தல்
Q379:2 யூதர்களைத் தேவன் எவ்வாறு கையாளுவார்
Q398:1 நீதிமானாக்கப்படுதல் - முற்பிதாக்கள் மற்றும் சுவிசேஷ யுகத்தில் நீதிமானாக்கப்பட்டவர்கள்
Q404:1 நீதிமானாக்கப்படுதல் மீதான இன்றைய பார்வை
Q429:1 இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
Q444:1 ஜீவ-உரிமைகளுக்கான தேவை
Q445:1 ஜீவ-உரிமைகளானது இயேசுவினால் சபைக்குச் சாற்றப்பட்டுள்ளதா?
Q446:1 ஆதாம் ஜீவ-உரிமைகள் எதையேனும் பெற்றிருக்கின்றாரா?
Q446:4 ஜீவ-உரிமைகள் -- ஜீவிப்பதற்கான உரிமை
Q449:1 அன்பு பூரண அன்பிற்கான இலக்கை அடைதல்
Q454:1 இலக்கு - திரள்கூட்டம் மற்றும் சிறுமந்தை
Q455:1 இலக்கினின்று விழுந்துபோய்த் திரள்கூட்டத்தினராகுதல்
Q455:2 இலக்கு அல்லது பந்தய சாலை - போராடுவதற்கு முன்னதாகவே முடித்தல்
Q459:1 விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q459:2 விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q469:2 கூட்டங்கள் - பயண ஊழியர்களின் கூட்டங்கள், விளம்பரங்கள் முதலானவைகள்
Q470:1 கூட்டங்கள் - சிறு எண்ணிக்கையுள்ள வகுப்புத் தொடர்பாக
Q471:1 கூட்டங்களுக்கான ஒழுங்கு
Q471:2 கூட்டங்கள் - சாட்சிக்கூட்டங்கள்
Q472:1 கூட்டங்கள் - சகோதரர்கள் இல்லாதபோது நடத்துவதற்கான வழிமுறை
Q472:2 கூட்டங்கள் - சந்திக்க வந்திருக்கும் சகோதரர் சபையாருக்குக் கூட்டத்தை நடத்துதல்
Q473:1 கூட்டங்கள் - மூப்பர்கள் அல்லாமல், மற்றவர்கள் கூட்டங்களை நடத்துதல்
Q473:2 சிறிய எண்ணிக்கையுள்ள சபையாருக்கு மிகவும் முக்கியமான கூட்டங்கள்
Q476:1 கூட்டங்கள் -Extension work / புதிய வகுப்புகள் உருவாக்கிடும் வேலைக்கான எண்ணிக்கை
Q477:1 கூட்டங்கள் - புரூக்கிளினிலுள்ள மூப்பர்கள் கூட்டங்களை நடத்துவதற்கென உதவிக்காரர்களை நியமித்தல் தொடர்பாக
Q477:2 உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q478:1 கூட்டங்கள் - போதகர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப்படுதல்
Q478:2 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் கூட்டங்களை நடத்திடலாமா?
Q479:1 கூட்டங்கள் - மூப்பர்கள் விசாரணை சங்கத்தில் அமர்தல்
Q480:1 கூட்டங்கள் - மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் கடமைகள்
Q480:2 கூட்டங்களுக்கான ஏற்பாடுகள்
Q482:1 கூட்டங்கள் - உதவிக்காரர்கள் வாக்களித்தல் (voting)
Q482:2 கூட்டங்கள் - துணைவிதிகளைப் பயன்படுத்துதல்
Q483:1 கூட்டங்களின் வகை
Q483:2 கூட்டங்களின் எண்ணிக்கை
Q486:1 நினைவுகூருதல் இராப்போஜனம் - ஏன் நாம் பங்கெடுக்கின்றோம்
Q486:2 நினைவுகூருதல் இராப்போஜனம் - (Wine) புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்பத்துதல்
Q486:3 பஸ்கா மற்றும் பாவநிவாரண நாள் - எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது?
Q497:2 பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q514:1 உண்மையான ஏற்படுத்துதல் (ordination)
Q515:1 ஏற்படுத்துதலுக்கான (ordination) அதிகாரம்
Q517:1 ஏற்படுத்துதல் (ordination) - கைகளை வைத்தல்
Q518:2 ஏற்படுத்துதல் (ordination) - சொசைட்டியின் கேள்விப்பட்டியலுக்கான நோக்கம்
Q519:1 தற்காலத்தில் ஊழியர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q520:1 ஏற்படுத்துதல் (ordination) - V D M தலைப்பு
Q520:2 ஏற்படுத்துதலை (ordination) - சொசைட்டி நீக்குதல்
Q520:3 ஏற்படுத்துதல் (ordination) - பயண ஊழியரின் ஏறபடுத்துதலை நீக்குதல்
Q520:4 ஏற்படுத்துதல் (ordination) - Watch Tower Bible and Tract Society -இன் ஊழியர்கள்
Q521:1 ஏற்படுத்துதல் (ordination) - மனிதர்களால் அல்ல
Q521:2 மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் ஏற்படுத்துதல் (ordination)
Q524:2 பஸ்கா - எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது?
Q524:3 பஸ்கா - முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்பத்துகின்றனர்?
Q524:4 பஸ்கா - பஸ்காவுக்கும், பாவநிவாரண நாளுக்கும் தொடர்பு
Q525:2 மேய்ப்பர் - நீங்கள் சபையை வந்து சந்திக்க இயலாதிருக்கும் நிலையிலிருக்க, உங்களைத் தேர்ந்தெடுத்தல்
Q525:3 Pastoral work / மேய்ப்பரது வேலை - மூப்பர்கள் இதைக் கண்காணிப்பவர்களல்ல
Q526:1 Pastoral work / மேய்ப்பரது வேலையில் - மூப்பர்கள் மற்றும் சகோதரிகளின் ஒத்துழைப்பு
Q527:1 Pastoral work / மேய்ப்பரது வேலை - சகோதரர்களுக்குரியது அல்ல
Q530:2 ஒரு பணம் குறிப்பது என்ன?
Q532:1 ஆயிர வருட யுகத்தில் - பூரணம்
Q534:3 பயண ஊழியர்கள் - உள்ளூர் பயண ஊழியர்களின் வேலை
Q535:2 பயண ஊழியர்களை உபசரித்தில் முதலானவைகளுக்கான சரியான வழிமுறை
Q538:1 ஜெபத்தில் சகோதரிகள் வழிநடத்துதல்
Q538:3 ஜெபம் - சாட்சிக்கூட்டம்
Q541:1 ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q556:1 உயிரூட்டப்படுதல் (Quickening) மற்றும் இலக்கு
Q568:2 மீட்கும்பொருள் - எங்கே provided/ஏற்பாடு பண்ணப்பட்டது ?
Q568:4 மீட்கும்பொருள் கல்வாரியில் paid/செலுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டதா?
Q569:1 மீட்கும்பொருள் - கடந்த காலத்தில் தற்காலத்தில் - எதிர்க்காலத்தில்
Q569:2 மீட்கும்பொருள் இயேசுவினால் எப்போது (dispose) பகிர்ந்தளிக்கப்படும்?
Q574:2 மீட்கும்பொருள் - ஜீவ-உரிமைகள் என்பதன் அர்த்தம்
Q584:3 திரள்கூட்டத்தார் மற்றும் முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் வரிசை
Q587:1 உயிர்த்தெழுதல்
Q632:1 போக்காட்டிற்குப் பாவநிவாரண பலியில் எப்பங்குமில்லை
Q648:2 துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q660:1 ஆறாம் தொகுதியில் சகோதரிகளுக்கான கட்டுப்பாடுகள்
Q660:2 சகோதரிகள் ஜெபக்கூட்டங்களில் பங்கெடுத்தல்
Q661:1 சகோதரிகள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளாமல் போதித்தல்
Q661:2 சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q662:1 சகோதரிகள் வேதாகம ஆராய்ச்சியில் பங்கெடுத்தல்
Q662:2 சகோதரிகள் ஜெபத்திற்கு நேராய் நடத்துதல்
Q663:1 சகோதரிகள் கேட்டுக்கொள்ளப்படாமலேயே கேள்விகளுக்குப் பதில் அளித்தல்
Q673:2 உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்
Q685:1 ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q704:1 போதித்தல் - ஸ்திரீகள் அமைதியாய் இருத்தல்
Q704:2 போதித்தல் -ஆரோக்கியமற்றப் போதனைகளைச் சகித்துகொண்டிருத்தல்
Q709:2 சாட்சியம் - குறைவான சத்தமுடைய சகோதரர்கள் சாட்சியைக் கூறலாமா?
Q710:1 சாட்சி பகர்தல் - புத்திமதி கூறுவதற்கல்ல
Q803:2; Q825:2 திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்

Q404:1

Q404:1 நீதிமானாக்கப்படுதல் மீதான இன்றைய பார்வை

JUSTIFICATION—View of Today

கேள்வி (1913-Z5316)-1- சபையினுடைய நீதிமானாக்கப்படுதல் தொடர்புடைய உங்களது கண்ணோட்டத்தினை மாற்றி உள்ளீர்களா? அப்படியானால், இத்தலைப்பு தொடர்புடைய வேதாகமப் பாடங்களினுடைய முதலாம் தொகுதியின் கருத்துகள் இனிமேலும் உங்களுடைய கருத்தல்ல என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

பதில் – நிச்சயமாக இல்லை! எங்களிடத்தில் மாற்றுக்கருத்துகள் இருக்குமானால், பின்னர் நாங்கள் ஏன் அத்தொகுதியினை வெளியிட்டு பரப்புவோம்? “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்” (நீதிமொழிகள் 4:18). ஆகையால் நீதிமானாக்கப்படுதல் எனும் தலைப்பு தொடர்புடைய காரியங்களானது, கர்த்தருடைய அருமையான ஜனங்களில் அநேகரை நாளுக்கு நாள் தெளிவுப்படுத்திக்கொண்டுவருகின்றது. அவர்களால் முன்பு தெளிவாய்ப் புரிந்துகொள்ளப்படாத நீதிமானாக்கப்படுதலின் அம்சங்களானது, இப்பொழுது மிகவும் தெளிவாகிக்கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்குப் பார்ப்போமானால், விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பது படிப்படியான செயல்முறை எனும் காரியத்தினைக் கடந்த காலங்களில் அநேகர் பார்க்கத் தவறியுள்ளனர்; சிலர் இன்றும் காணத் தவறுகிறவர்களாகவே காணப்படுகின்றனர். விசுவாசத்தினுடைய ஒவ்வொரு படியும் climax/உச்சநிலை அடையத்தக்கதாக நம்மை அருகாமைக்குக் கொண்டுவந்தது.
ஆனாலும் கர்த்தருக்கான நமது கீழ்ப்படிதல் மூலமாயும், அர்ப்பணிப்பில் முழுமையாய்ச் சரணடைந்துவிடுவதன் மூலமாயும், நமது விசுவாசமானது அதன் பூரணத்தினை வெளிப்படுத்தாதது வரையிலும், அந்த உச்சநிலையானது/climax முழுமையாய் அடையப்பட முடியாது. பின்னர் நமது மகா பரிந்துபேசுபவர் நமது அர்ப்பணிக்கப்பட்ட சரீரங்களை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தம்முடைய புண்ணியத்தினைத் தரிப்பித்து, நீதிக்கு முன்னதாக – அதைப் பரம பிதாவின் பார்வையில் முழுமையாய்த் தகுதிப்படுத்துகின்றார். பின்னர் முழுமையாய் நீதிமானாக்கப்பட்டுள்ள ஆத்துமாவை/ஜீவியைப் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிப்பதன் மூலம் பரம பிதா ஏற்றுக்கொள்கின்றார். அதுமுதல் அவன் ஒரு புதுச் சிருஷ்டியாகவும், ஆவிக்குரிய தளத்தில் ஜெநிப்பிக்கப்பட்ட ஒரு புத்திரனாகவும் காணப்படுகின்றான்.விசுவாசத்தில் வளரும் காலப்பகுதியின்போது, நீதிமானாக்கப்படுதலானது படிப்படியாக அடையப்படுகின்றது; மேலும் அந்நபர் அதிகமதிகமாய்த் தெய்வீகத் தயவைப் பெறுகிறவனாகுகின்றான். எனினும் இறுதி படியினை அடியெடுத்து வைக்காதது வரையிலும், ஒருவன் மனித சுபாவத்திற்கு முழுமையாய் நீதிமானாக்கப்பட முடியாது – பூமிக்குரிய தளத்தில் ஒரு புத்திரனாக்கப்பட முடியாது. மேலும் ஒரு கணம்தான் அவன் அந்நிலையில் காணப்படுகின்றான். பின்னர் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட காரியமானது, தகுதிப்படுத்தப்பட்டுள்ள/பூரணப்படுத்தப்பட்டுள்ள நபரின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது; மேலும் ஒரு புதுச்சிருஷ்டியென அவனது துவக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.தற்காலிகமான மற்றும் உண்மையான புத்திரத்துவம் – SUB HEADINGஇவைகள் அனைத்துமே யுகங்களைப்பற்றின வரைபடத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. N – தளம் பல்வேறு படிகளில் நீதிமானாக்கப்பட்டுள்ள நிலைமையினைச் சுட்டிக்காட்டுகின்றது. இப்படியாக ஆபிரகாமும், பழைய ஏற்பாட்டு காலங்களிலுள்ள மற்றவர்களும், அவர்களது விசுவாசத்தின் காரணமாய்த் தேவன் முன்னிலையில் நீதிமானாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜீவனுக்கேதுவாக நீதிமானாக்கப்படுகிறதுமில்லை, குமாரத்துவத்திற்கேதுவாக நீதிமானாக்கப்படுகிறதுமில்லை. இவர்கள் தேவனுடைய தோழமையை, தயவை, கண்காணிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நீதிமானாக்கப்பட்டனர். இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து பரமேறி, தம்முடைய புண்ணியத்தினைச் சபையின் சார்பாகச் செயல்படுத்தினபோது, முழுமையான அர்ப்பணத்தின் வாயிலாக அவரது அடிச்சுவட்டில் நடக்க விருப்பமாயிருக்கும் இந்தச் சபை வகுப்பார் யாவருக்கும் அவர் பரிந்துபேசுபவரானார். அவரது புண்ணியம் தரிப்பிக்கப்படும் காரியமானது, ஒவ்வொருவருக்குமான நீதிமானாக்குதலின் வேலையினை உள்ளடக்குகின்றது; மேலும் இதன் காரணமாகத் தேவன் ஒருவனுடைய பலியை ஏற்றுக்கொள்ள முடிபவராகவும், புதிய சுபாவத்திற்கு ஜெநிப்பிக்க முடிபவராகவும் ஆக முடிந்தது.ஆபிரகாம் தேவனுடைய நண்பன் என்று அழைக்கப்பட்டார்; காரணம் அவரது விசுவாசமும், தேவனுடன் இசைவாய்க் காணப்பட வேண்டும் என்ற வாஞ்சையும் ஆகும். இப்படியாகவே யோவான் ஸ்நானனும் காணப்பட்டார்; இவரைக்குறித்து நாம் வாசிப்பதாவது: “மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்” (யோவான் 3:29). “Servant/வேலைக்காரன்” எனும் வார்த்தையானது, வேதாகமத்தில் விசேஷமாக மோசேயினுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ்க் காணப்படும் யூதர்களைக்குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் வாயிலாக அவர்கள் தேவனுடைய பராமரிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்தார்கள்; அவரது வேலைக்காரர்களாக இருக்கும்படிக்கும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆபிரகாமும், இன்னும் மற்ற அநேகரும் தேவனுடைய நண்பர்களாக இருந்தபோதிலும், குமாரத்துவம் அடைவதற்கான சிலாக்கியங்களுக்கு முழுக்கத் தகுதியானவர்களாகக் காணப்பட்டிருப்பார்கள் என்ற போதிலும், இவர்கள் புத்திரர்களாக அங்கீகரிக்கப்படுவது என்பது தெய்வீக ஏற்பாட்டின்படி கூடாத காரியமாக இருந்தது; ஏனெனில் அப்போஸ்தலன் விவரித்துள்ளதுபோல, “குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்;” மேலும் கிறிஸ்துவின் பலியானது, பாவம் மற்றும் மரணம் இரத்து செய்யப்படுவதற்குரிய வழியினைத் திறவாததுவரை, யாரும் தெய்வீகப் புத்திரத்துவத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.இதுபோலவே தேவனுடைய புத்திரர்கள் என்ற நம்முடைய நிலையும் தற்காலிகமானதேயாகும். நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருந்தால், நாம் அவரது புத்திரர்களென நிலைத்திருந்து, ஏற்றகாலத்தில் பூரணப்படுத்தப்படுவோம். ஆனால் ஒருவேளை ஒருவன் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்வதற்கு என்றும், அந்தப் பாவத்திற்காக ஊழியஞ்செய்வதற்கு என்றும் பின்வாங்கிப் போவானேயானால், அவன் தனது புத்திரத்துவத்தை இழந்துபோவான். அவனது பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்படும். பிதாவிடம் பரிந்துபேசுகிறவர், அத்தகையவனை அங்கீகரிப்பதை நிறுத்திக் கொள்வார். அத்தகையவன் குமாரனிடத்தில் எந்த உறவு நிலையினையும் கொண்டிருக்கமாட்டான்; மேலும் அத்தகையவனுடைய இடத்தை அபிஷேகிக்கப்பட்ட சரீரத்தின் அங்கத்தினன் என, இன்னொருவன் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவான்.ஆகையாலே அப்போஸ்தலன்: “பிரியமானவர்களே இப்பொழுது (கருநிலையில்) தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் (நமது மீட்பர், நமது தலை) வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார் (1 யோவான் 3:2). அதாவது நமது தற்போதைய புத்திரத்துவம் தற்காலிகமானதாகும்/tentative. நிஜமான புத்திரத்துவமானது, நமது தகுதியை ஆராய்ந்திடும் பரீட்சையில் நாம் வெற்றியடைந்த பிற்பாடே துவங்கும். யாரெல்லாம் தங்களது விசுவாசம் மற்றும் நேர்மையின் காரணமாய் அங்கீகரிக்கப்படத்தக்கவர்களெனத் தங்களை நிரூபிக்கின்றார்களோ, அவர்கள் முழுமையான விதத்தில் மகிமையான உயிர்த்தெழுதலுடைய மாற்றத்தின் மூலம் புத்திரர்களாக்கப்படுவார்கள். இப்படியாக முழுமையான அர்ப்பணம்பண்ணாதது வரையிலும், யார் ஒருவரும் N – தளத்தில் முழுமையாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை; அதுபோலவே L – (பூரண ஆவிக்குரிய ஜீவிகள் நிலை – தொகுதி: 1, பக்கம்: 285) தளத்தை அடையாதது வரையிலும் ஒருவர் குமாரத்துவத்திற்குள் முழுமையாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை.மேன்மையான உயிர்த்தெழுதல் – SUB HEADINGபூர்வகால பாத்திரவான்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தீர்க்கத்தரிசிகள் முதலானவர்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று அழைக்கப்பட முடியாது மற்றும் அவர்கள் அப்படியாக அழைக்கப்படவுமில்லை; இதற்குக் காரணம் அவர்கள் அந்த ஸ்தானத்திற்கோ, பெயருக்கோ பாத்திரவான்கள் இல்லை என்பதினால் இல்லை (எபிரெயர் 11:38-40). இதை அப்போஸ்தலன் நமது கவனத்திற்குக் கொண்டுவந்து, அவர்கள் “தேவனுக்குப் பிரியமாயிருந்தார்கள்” என்றும், பூரணமான இருதயத்திற்குக் குறைவான எதுவும் அவரைப் பிரியப்படுத்துவதில்லை என்றும் நமக்கு உறுதிப்படுத்துகின்றார். அவர்கள் குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தடையாக இருந்த ஒரே காரியம், அவர்கள் சார்பாக பாவநிவாரண இரத்தம் முதலாவது முன்வைக்கப்பட வேண்டிய அவசியமேயாகும். முற்பிதாக்கள் பெறப்போகின்ற “மேன்மையான உயிர்த்தெழுதலில்,” அவர்கள் பூரண மனுஷர்களாக வருவார்கள் என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலாக இருக்கின்றது. அவர்கள் ஆதாம் பாவம் செய்வதற்கு முன்னதாக இருந்ததுபோல பூரணர்களாகவும், மனங்கள் மற்றும் இருதயங்கள் மற்றும் சித்தங்கள் விஷயத்தில் வளர்ச்சிப்பெற்றவர்களாகவும், பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், பரீட்சிக்கப்பட்டவர்களாகவும், தேவனுக்கு நேர்மையானவர்களென நிரூபிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவார்கள். அந்தப் பரிபூரணமான நிலைமையில் அவர்கள் மாதிரிகளாகக் காணப்படுவார்கள், அதாவது மேசியாவின் ஆளுகையின்போது கீழ்ப்படிதல் வாயிலாக மனுக்குலம் அடையப்போகும் அனைத்திற்கும், மாதிரிகளாகக் காணப்படுவார்கள்.அவர்களுடைய உயிர்த்தெழுதல் முதற்கொண்டு, இந்தப் பரிபூரண மனிதர்கள், ஆதாமிற்கு இருந்ததுபோலவே, தேவனிடம் வருவதற்குரிய அதே உரிமையினைப் பெற்றவர்களாய்க் காணப்படுவார்கள்; மேலும் ஆதாம் போலவே, தேவனுடைய புத்திரர்கள் என்று அழைக்கப்படுவதற்கு முழு உரிமையினை அளிக்கப்பெற்றவர்களாய்க் காணப்படுவார்கள்; ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு காணப்படும். அதென்னவெனில், முற்பிதாக்களும், மீதமுள்ள மனுக்குலமும் மேசியாவின் ஆயிர வருஷ இராஜ்யத்தின்போது புதிய உடன்படிக்கையினுடைய மத்தியஸ்தரின் கரங்களில் காணப்படுவார்கள். வேதவாக்கியங்களின்படி அந்தக் காலப்பகுதியின் முடிவிலேயே, அவர் இராஜ்யத்தைப் பிதாவினிடத்தில் ஒப்படைப்பார்.ஆகையால் கிறிஸ்துவினுடைய ஆளுகையின் இறுதி காலத்திற்கு முன்புவரை, அதாவது பிதாவே, “சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கும்,” அனைத்தும் நேரடியாக அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கும் வேண்டி, அனைத்தையும் கிறிஸ்து பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கும் இறுதிகாலத்திற்கு முன்புவரை, பிதாவுடன் குமாரர்களென இந்த முற்பிதாக்கள் நேரடியான கையாளுதலைப் பெற்றிருப்பதில்லை. எனினும் ஆயிர வருஷங்களின்போது, கிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஏற்பாடுகளின்கீழ், பூரணராக்கப்பட்ட முற்பிதாக்களும், மற்றவர்களும், தாங்கள் அடைந்துள்ள பூரண அளவிற்கேற்ப சிலாக்கியங்களையும், ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பார்கள்; ஏனெனில் அவர்கள் அனைவரும் இனிமேலும் பாவம், மரணம் மற்றும் “இவ்வுலகத்தின் அதிபதியாகிய” சாத்தானுடைய ஆளுகையின்கீழ்க் காணப்படாமல், மாறாக ஜீவாதிபதியின்கீழும், ஜீவனுக்கு ஏதுவான நீதியான அவரது ஆளுகையின்கீழும் காணப்படுவார்கள்.