Q404:1
கேள்வி (1913-Z5316)-1- சபையினுடைய நீதிமானாக்கப்படுதல் தொடர்புடைய உங்களது கண்ணோட்டத்தினை மாற்றி உள்ளீர்களா? அப்படியானால், இத்தலைப்பு தொடர்புடைய வேதாகமப் பாடங்களினுடைய முதலாம் தொகுதியின் கருத்துகள் இனிமேலும் உங்களுடைய கருத்தல்ல என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?
பதில் – நிச்சயமாக இல்லை! எங்களிடத்தில் மாற்றுக்கருத்துகள் இருக்குமானால், பின்னர் நாங்கள் ஏன் அத்தொகுதியினை வெளியிட்டு பரப்புவோம்? “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்” (நீதிமொழிகள் 4:18). ஆகையால் நீதிமானாக்கப்படுதல் எனும் தலைப்பு தொடர்புடைய காரியங்களானது, கர்த்தருடைய அருமையான ஜனங்களில் அநேகரை நாளுக்கு நாள் தெளிவுப்படுத்திக்கொண்டுவருகின்றது. அவர்களால் முன்பு தெளிவாய்ப் புரிந்துகொள்ளப்படாத நீதிமானாக்கப்படுதலின் அம்சங்களானது, இப்பொழுது மிகவும் தெளிவாகிக்கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்குப் பார்ப்போமானால், விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் என்பது படிப்படியான செயல்முறை எனும் காரியத்தினைக் கடந்த காலங்களில் அநேகர் பார்க்கத் தவறியுள்ளனர்; சிலர் இன்றும் காணத் தவறுகிறவர்களாகவே காணப்படுகின்றனர். விசுவாசத்தினுடைய ஒவ்வொரு படியும் climax/உச்சநிலை அடையத்தக்கதாக நம்மை அருகாமைக்குக் கொண்டுவந்தது.
ஆனாலும் கர்த்தருக்கான நமது கீழ்ப்படிதல் மூலமாயும், அர்ப்பணிப்பில் முழுமையாய்ச் சரணடைந்துவிடுவதன் மூலமாயும், நமது விசுவாசமானது அதன் பூரணத்தினை வெளிப்படுத்தாதது வரையிலும், அந்த உச்சநிலையானது/climax முழுமையாய் அடையப்பட முடியாது. பின்னர் நமது மகா பரிந்துபேசுபவர் நமது அர்ப்பணிக்கப்பட்ட சரீரங்களை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தம்முடைய புண்ணியத்தினைத் தரிப்பித்து, நீதிக்கு முன்னதாக – அதைப் பரம பிதாவின் பார்வையில் முழுமையாய்த் தகுதிப்படுத்துகின்றார். பின்னர் முழுமையாய் நீதிமானாக்கப்பட்டுள்ள ஆத்துமாவை/ஜீவியைப் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிப்பதன் மூலம் பரம பிதா ஏற்றுக்கொள்கின்றார். அதுமுதல் அவன் ஒரு புதுச் சிருஷ்டியாகவும், ஆவிக்குரிய தளத்தில் ஜெநிப்பிக்கப்பட்ட ஒரு புத்திரனாகவும் காணப்படுகின்றான்.விசுவாசத்தில் வளரும் காலப்பகுதியின்போது, நீதிமானாக்கப்படுதலானது படிப்படியாக அடையப்படுகின்றது; மேலும் அந்நபர் அதிகமதிகமாய்த் தெய்வீகத் தயவைப் பெறுகிறவனாகுகின்றான். எனினும் இறுதி படியினை அடியெடுத்து வைக்காதது வரையிலும், ஒருவன் மனித சுபாவத்திற்கு முழுமையாய் நீதிமானாக்கப்பட முடியாது – பூமிக்குரிய தளத்தில் ஒரு புத்திரனாக்கப்பட முடியாது. மேலும் ஒரு கணம்தான் அவன் அந்நிலையில் காணப்படுகின்றான். பின்னர் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட காரியமானது, தகுதிப்படுத்தப்பட்டுள்ள/பூரணப்படுத்தப்பட்டுள்ள நபரின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது; மேலும் ஒரு புதுச்சிருஷ்டியென அவனது துவக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.தற்காலிகமான மற்றும் உண்மையான புத்திரத்துவம் – SUB HEADINGஇவைகள் அனைத்துமே யுகங்களைப்பற்றின வரைபடத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. N – தளம் பல்வேறு படிகளில் நீதிமானாக்கப்பட்டுள்ள நிலைமையினைச் சுட்டிக்காட்டுகின்றது. இப்படியாக ஆபிரகாமும், பழைய ஏற்பாட்டு காலங்களிலுள்ள மற்றவர்களும், அவர்களது விசுவாசத்தின் காரணமாய்த் தேவன் முன்னிலையில் நீதிமானாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜீவனுக்கேதுவாக நீதிமானாக்கப்படுகிறதுமில்லை, குமாரத்துவத்திற்கேதுவாக நீதிமானாக்கப்படுகிறதுமில்லை. இவர்கள் தேவனுடைய தோழமையை, தயவை, கண்காணிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நீதிமானாக்கப்பட்டனர். இயேசு மரித்து, உயிர்த்தெழுந்து பரமேறி, தம்முடைய புண்ணியத்தினைச் சபையின் சார்பாகச் செயல்படுத்தினபோது, முழுமையான அர்ப்பணத்தின் வாயிலாக அவரது அடிச்சுவட்டில் நடக்க விருப்பமாயிருக்கும் இந்தச் சபை வகுப்பார் யாவருக்கும் அவர் பரிந்துபேசுபவரானார். அவரது புண்ணியம் தரிப்பிக்கப்படும் காரியமானது, ஒவ்வொருவருக்குமான நீதிமானாக்குதலின் வேலையினை உள்ளடக்குகின்றது; மேலும் இதன் காரணமாகத் தேவன் ஒருவனுடைய பலியை ஏற்றுக்கொள்ள முடிபவராகவும், புதிய சுபாவத்திற்கு ஜெநிப்பிக்க முடிபவராகவும் ஆக முடிந்தது.ஆபிரகாம் தேவனுடைய நண்பன் என்று அழைக்கப்பட்டார்; காரணம் அவரது விசுவாசமும், தேவனுடன் இசைவாய்க் காணப்பட வேண்டும் என்ற வாஞ்சையும் ஆகும். இப்படியாகவே யோவான் ஸ்நானனும் காணப்பட்டார்; இவரைக்குறித்து நாம் வாசிப்பதாவது: “மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்” (யோவான் 3:29). “Servant/வேலைக்காரன்” எனும் வார்த்தையானது, வேதாகமத்தில் விசேஷமாக மோசேயினுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ்க் காணப்படும் யூதர்களைக்குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் வாயிலாக அவர்கள் தேவனுடைய பராமரிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்தார்கள்; அவரது வேலைக்காரர்களாக இருக்கும்படிக்கும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆபிரகாமும், இன்னும் மற்ற அநேகரும் தேவனுடைய நண்பர்களாக இருந்தபோதிலும், குமாரத்துவம் அடைவதற்கான சிலாக்கியங்களுக்கு முழுக்கத் தகுதியானவர்களாகக் காணப்பட்டிருப்பார்கள் என்ற போதிலும், இவர்கள் புத்திரர்களாக அங்கீகரிக்கப்படுவது என்பது தெய்வீக ஏற்பாட்டின்படி கூடாத காரியமாக இருந்தது; ஏனெனில் அப்போஸ்தலன் விவரித்துள்ளதுபோல, “குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்;” மேலும் கிறிஸ்துவின் பலியானது, பாவம் மற்றும் மரணம் இரத்து செய்யப்படுவதற்குரிய வழியினைத் திறவாததுவரை, யாரும் தெய்வீகப் புத்திரத்துவத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.இதுபோலவே தேவனுடைய புத்திரர்கள் என்ற நம்முடைய நிலையும் தற்காலிகமானதேயாகும். நாம் தேவனுடைய அன்பில் நிலைத்திருந்தால், நாம் அவரது புத்திரர்களென நிலைத்திருந்து, ஏற்றகாலத்தில் பூரணப்படுத்தப்படுவோம். ஆனால் ஒருவேளை ஒருவன் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்வதற்கு என்றும், அந்தப் பாவத்திற்காக ஊழியஞ்செய்வதற்கு என்றும் பின்வாங்கிப் போவானேயானால், அவன் தனது புத்திரத்துவத்தை இழந்துபோவான். அவனது பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்படும். பிதாவிடம் பரிந்துபேசுகிறவர், அத்தகையவனை அங்கீகரிப்பதை நிறுத்திக் கொள்வார். அத்தகையவன் குமாரனிடத்தில் எந்த உறவு நிலையினையும் கொண்டிருக்கமாட்டான்; மேலும் அத்தகையவனுடைய இடத்தை அபிஷேகிக்கப்பட்ட சரீரத்தின் அங்கத்தினன் என, இன்னொருவன் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவான்.ஆகையாலே அப்போஸ்தலன்: “பிரியமானவர்களே இப்பொழுது (கருநிலையில்) தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் (நமது மீட்பர், நமது தலை) வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார் (1 யோவான் 3:2). அதாவது நமது தற்போதைய புத்திரத்துவம் தற்காலிகமானதாகும்/tentative. நிஜமான புத்திரத்துவமானது, நமது தகுதியை ஆராய்ந்திடும் பரீட்சையில் நாம் வெற்றியடைந்த பிற்பாடே துவங்கும். யாரெல்லாம் தங்களது விசுவாசம் மற்றும் நேர்மையின் காரணமாய் அங்கீகரிக்கப்படத்தக்கவர்களெனத் தங்களை நிரூபிக்கின்றார்களோ, அவர்கள் முழுமையான விதத்தில் மகிமையான உயிர்த்தெழுதலுடைய மாற்றத்தின் மூலம் புத்திரர்களாக்கப்படுவார்கள். இப்படியாக முழுமையான அர்ப்பணம்பண்ணாதது வரையிலும், யார் ஒருவரும் N – தளத்தில் முழுமையாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை; அதுபோலவே L – (பூரண ஆவிக்குரிய ஜீவிகள் நிலை – தொகுதி: 1, பக்கம்: 285) தளத்தை அடையாதது வரையிலும் ஒருவர் குமாரத்துவத்திற்குள் முழுமையாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை.மேன்மையான உயிர்த்தெழுதல் – SUB HEADINGபூர்வகால பாத்திரவான்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தீர்க்கத்தரிசிகள் முதலானவர்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று அழைக்கப்பட முடியாது மற்றும் அவர்கள் அப்படியாக அழைக்கப்படவுமில்லை; இதற்குக் காரணம் அவர்கள் அந்த ஸ்தானத்திற்கோ, பெயருக்கோ பாத்திரவான்கள் இல்லை என்பதினால் இல்லை (எபிரெயர் 11:38-40). இதை அப்போஸ்தலன் நமது கவனத்திற்குக் கொண்டுவந்து, அவர்கள் “தேவனுக்குப் பிரியமாயிருந்தார்கள்” என்றும், பூரணமான இருதயத்திற்குக் குறைவான எதுவும் அவரைப் பிரியப்படுத்துவதில்லை என்றும் நமக்கு உறுதிப்படுத்துகின்றார். அவர்கள் குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தடையாக இருந்த ஒரே காரியம், அவர்கள் சார்பாக பாவநிவாரண இரத்தம் முதலாவது முன்வைக்கப்பட வேண்டிய அவசியமேயாகும். முற்பிதாக்கள் பெறப்போகின்ற “மேன்மையான உயிர்த்தெழுதலில்,” அவர்கள் பூரண மனுஷர்களாக வருவார்கள் என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலாக இருக்கின்றது. அவர்கள் ஆதாம் பாவம் செய்வதற்கு முன்னதாக இருந்ததுபோல பூரணர்களாகவும், மனங்கள் மற்றும் இருதயங்கள் மற்றும் சித்தங்கள் விஷயத்தில் வளர்ச்சிப்பெற்றவர்களாகவும், பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், பரீட்சிக்கப்பட்டவர்களாகவும், தேவனுக்கு நேர்மையானவர்களென நிரூபிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவார்கள். அந்தப் பரிபூரணமான நிலைமையில் அவர்கள் மாதிரிகளாகக் காணப்படுவார்கள், அதாவது மேசியாவின் ஆளுகையின்போது கீழ்ப்படிதல் வாயிலாக மனுக்குலம் அடையப்போகும் அனைத்திற்கும், மாதிரிகளாகக் காணப்படுவார்கள்.அவர்களுடைய உயிர்த்தெழுதல் முதற்கொண்டு, இந்தப் பரிபூரண மனிதர்கள், ஆதாமிற்கு இருந்ததுபோலவே, தேவனிடம் வருவதற்குரிய அதே உரிமையினைப் பெற்றவர்களாய்க் காணப்படுவார்கள்; மேலும் ஆதாம் போலவே, தேவனுடைய புத்திரர்கள் என்று அழைக்கப்படுவதற்கு முழு உரிமையினை அளிக்கப்பெற்றவர்களாய்க் காணப்படுவார்கள்; ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு காணப்படும். அதென்னவெனில், முற்பிதாக்களும், மீதமுள்ள மனுக்குலமும் மேசியாவின் ஆயிர வருஷ இராஜ்யத்தின்போது புதிய உடன்படிக்கையினுடைய மத்தியஸ்தரின் கரங்களில் காணப்படுவார்கள். வேதவாக்கியங்களின்படி அந்தக் காலப்பகுதியின் முடிவிலேயே, அவர் இராஜ்யத்தைப் பிதாவினிடத்தில் ஒப்படைப்பார்.ஆகையால் கிறிஸ்துவினுடைய ஆளுகையின் இறுதி காலத்திற்கு முன்புவரை, அதாவது பிதாவே, “சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கும்,” அனைத்தும் நேரடியாக அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கும் வேண்டி, அனைத்தையும் கிறிஸ்து பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுக்கும் இறுதிகாலத்திற்கு முன்புவரை, பிதாவுடன் குமாரர்களென இந்த முற்பிதாக்கள் நேரடியான கையாளுதலைப் பெற்றிருப்பதில்லை. எனினும் ஆயிர வருஷங்களின்போது, கிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஏற்பாடுகளின்கீழ், பூரணராக்கப்பட்ட முற்பிதாக்களும், மற்றவர்களும், தாங்கள் அடைந்துள்ள பூரண அளவிற்கேற்ப சிலாக்கியங்களையும், ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பார்கள்; ஏனெனில் அவர்கள் அனைவரும் இனிமேலும் பாவம், மரணம் மற்றும் “இவ்வுலகத்தின் அதிபதியாகிய” சாத்தானுடைய ஆளுகையின்கீழ்க் காணப்படாமல், மாறாக ஜீவாதிபதியின்கீழும், ஜீவனுக்கு ஏதுவான நீதியான அவரது ஆளுகையின்கீழும் காணப்படுவார்கள்.