Q477:1
கேள்வி (1911)-1- புரூக்கிளினிலுள்ள சபையிலுள்ள மூப்பர்கள், சபையாருடைய தேர்ந்தெடுத்தல் முதலானவைகள் இல்லாமலேயே வகுப்புகளை நடத்துவதற்கென்று உதவிக்காரர்களை நியமிப்பதுண்டா?
பதில் – அது மேய்ப்பருக்கான வேலையாகக் கருதப்படுகின்றது மற்றும் அது மூப்பர்களுக்கான வேலையல்ல. புரூக்கிளினிலுள்ள சபையாருக்கான மூப்பர்களில் ஒருவர் கூட்டங்களைப் பார்த்துக்கொள்வதற்குரிய பொறுப்பினைப் பெற்றவராய் இருக்கின்றார் மற்றும் இது விஷயத்தில் அவர் மேய்ப்பருக்கு உதவியாளராகக் காணப்படுகின்றார் மற்றும் மேய்ப்பரது ஒப்புதலின்பேரில் அவ்வப்போது இந்த ஒரு வேலைக்கு என்றும், அந்த ஒரு வேலைக்கு என்றும் உதவிக்காரர் ஒருவர் தெரிந்துகொள்ளப்படுகின்றார். இதுவே மேய்ப்பரைத் தேர்ந்தெடுப்பதற்கான நோக்கமாகக் கருதப்படுகின்றது, அதாவது சபையாருடைய தேவைகளை மேற்பார்வையிட்டு, தேவைக்கேற்ப இங்குமங்குமாய்த் தேவையைப் பூர்த்திச் செய்வதாகும். ஆனாலும் இப்படித் தெரிந்தெடுக்கப்படுபவர்கள், சபையாரினால் மூப்பர் தெரிந்தெடுக்கப்படுவது போன்று, ஓர் ஊழியத்திற்கென்று நிரந்தரமாய் நியமிக்கப்படுவார்கள் என்பதாக இல்லை. அது ஒரு தேவையைப் பூர்த்திச் செய்வதற்குரிய தற்காலிகமான காரியம் மாத்திரமே மற்றும் உதவிக்காரர் பரீட்சித்துப் பார்க்கப்படத்தக்கதாக ஒரு வாய்ப்பளிக்கும் காரியம் மாத்திரமேயாகும்