Q521:2
கேள்வி (1916 – Z.5939)-2- தேவனுடைய ஜனங்கள் அடங்கின சபையாரால் தேர்ந்தெடுக்கப்படும் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்கள் யாவரும் திவ்விய ஏற்படுத்துதலின் படியானவர்கள் என்று கருதப்பட வேண்டுமா?
பதில் – இல்லை, பரிசுத்த ஆவியினாலான ஜெநிப்பித்தலை அடையாத எவரும் தெய்வீக ஏற்படுத்துதலின் படியானவர்கள் என்று கருதப்பட முடியாது. தேவனுக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணம்பண்ணியுள்ளதாகவும், பரிசுத்த ஆவியினாலான ஜெநிப்பித்தலை அடைந்ததாகவும் தன்னைக்குறித்து அறிக்கைப்பண்ணிடாத ஒருவரைச் சபையார் ஊழியராக ஏற்படுத்திக்கொள்வது என்பது, சபையார் செய்திடுவதற்குக் கர்த்தரால் அங்கீகாரம் அளிக்கப்படாத காரியத்தினை, அவர்கள் செய்வதைக் குறிக்கின்றதாய் இருக்கும். இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அந்நபர், இப்படியாய் இவரை ஊழியராக ஏற்படுத்தின சபையாரின் பிரதிநிதியாகத்தான் இருப்பாரேயொழிய, கர்த்தருடைய பிரதிநிதியாக இருப்பதில்லை.
ஆனால் ஒரு சகோதரன் குறித்த கர்த்தருடைய அங்கீகாரத்தினை ஒரு சபையார் அடையாளம் கண்டுகொள்வார்களானால் மற்றும் இன்னுமாக அச்சகோதரன் போதக சமர்த்தனாய் இருப்பதையும், தெய்வீக வார்த்தைகளுக்கு ஏற்ப ஊழியத்திற்குப் பொருத்தமான பண்புகளை உடையவராய் இருப்பதையும் அடையாளம் கண்டுகொள்வார்களானால், கர்த்தருடைய நாமத்தில் சபையாரின் பிரதிநிதியாகிடுவதற்கு அச்சகோதரனை முறையாய்த் தேர்ந்தெடுத்திட அல்லது ஏற்படுத்திட வேண்டும். கர்த்தருடைய ஜனங்களின் வேண்டுகோளில்லாமல், எந்த ஒரு சகோதரனும், கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின ஒரு கூட்டத்தாருக்கு ஊழியம் புரிந்திட முற்படக்கூடாது; சபையாருடைய வேண்டுகோள் அல்லது அவர்களது vote / வாக்குகளானது – அந்த ஊழியத்திற்குச் சகோதரனை நியமிக்கின்றதாய் இருக்கின்றது, அதாவது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் சகோதரனை அவர்கள் ஊழியத்திற்காக ஒரு நாளோ அல்லது ஒரு வருஷக்காலமோ நியமிக்கின்றதாய் அல்லது ஏற்படுத்துகின்றதாய் இருக்கின்றது.