Q14:4
கேள்வி (1911)-4- முற்பிதாக்கள் எப்போது தங்களுடைய உயிர்த்தெழுதலை அடைவார்கள்?
பதில் – உலகத்தார் மத்தியில் இவர்களது உயிர்த்தெழுதல் முதலாவது சம்பவிக்கும்; இவர்களே பூமிக்குரிய சுபாவத்தில் உள்ளவர்களில் முதலாவது உயிர்த்தெழுதலை அடைபவர்கள் ஆவார்கள். சபை தனது உயிர்த்தெழுதலை முதலாவது அடைவாள்; அவளது கர்த்தரைப்போன்று ஆவிக்குரிய தளத்தில் அடைவாள்; ஆவிக்குரிய சுபாவத்தை, பரம நிலையை அடைவாள். பின்னர் இரட்சிப்பின் மற்ற பாகம் நடைபெறும், அதாவது உலகத்தின் இரட்சிப்பாகும்; இதில் முற்பிதாக்கள் முதலாவதாகத் தங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் முதலாவதாக அந்தத் தளத்தில் தங்கள் உயிர்த்தெழுதலையும் அடைவார்கள்; இது இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நடைபெறும், ஏனெனில் இந்த இராஜ்யமே உலகத்தை ஆசீர்வதித்து, அவர்களைச் சீர்த்தூக்கிவிடும்.