Q482:2
கேள்வி ( 1916 )- 2 – அலுவல் கூட்டங்கள் முதலானவைகளை நிர்வகிப்பதற்குரிய துணைவிதிகள் சிலவற்றை Los Angeles – இல் உள்ள சபையார் ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
பதில் – சகோதரர்களில் சிலர் துணைவிதிகள் அல்லது சட்டங்களுக்கு மிகவும் ஆர்வம் கொண்டவர்களாய் இருக்கின்றனர். சில விதிகள் நிச்சயமாகவே அவசியமாய் இருக்கின்றன; ஏனெனில் அவைகள் இல்லையெனில் நாம் ஒழுங்கின்மையுடையவர்களாய் இருப்போம்; எனினும் அன்பு மற்றும் நீதியின் பிரமாணத்தை நாம் கைக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பிரமாணங்கள் விசேஷமாய்க் கைக்கொள்ளப்பட்டால், இவை கிட்டத்தட்ட அனைத்தையுமே ஒழுங்குப்படுத்துகிறதாக இருக்கும். எனினும் நீதியானது எப்போதும் முதலாவதாக இடம்பெற வேண்டும். நான் எல்லா விஷயத்திலும் உங்களிடத்தில் நீதியுடன் காணப்பட வேண்டும்; எனினும் உங்களிடத்தில் நான் பதிலுக்கு நீதியை எதிர்ப்பார்த்து வற்புறுத்திடக்கூடாது. எனினும் நீதிக்குக் குறைவாக எதையும் எனக்குச் செய்திடுவதற்கு நீங்கள் விரும்பிடக்கூடாது மற்றும் நானும் நீதிக்குக் குறைவாய் எதையும் உங்களுக்குச் செய்திடக்கூடாது. மேலும் நான் கண்டிப்பாய் நீதியைச் செய்ய வேண்டியவனாய் இருப்பினும், அதை நான் உங்களிடத்தில் எதிர்ப்பார்த்திடக்கூடாது; உங்களிடத்தில் குறைவாகவே நான் எதிர்ப்பார்த்திடலாம். நீதி மற்றும் அன்பு எனும் இந்த இரண்டு துணைவிதிகள் செயல்பாட்டில் இருக்கையில் நமக்கு மிக அதிகப் பிரமாணங்கள் தேவைப்படாது. மிக அதிகமாய்த் துணைவிதிகளை நாம் பெற்றிருக்கலாம்; ஆனால் இவ்விரண்டு பிரமாணத்தையும் மனதில் உறுதியாய்ப் பெற்றிருக்கையில், இவைகள் அநேக சந்தர்ப்பங்களில் உதவி செய்கிறதாய் இருக்கும்.