உலகளாவிய மேய்ப்பரது வேலை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5984 (page 331)

உலகளாவிய மேய்ப்பரது வேலை

WORLD-WIDE PASTORAL WORK

அசோசியேடெட் வேத மாணவர்களின் (Associated Bible Students) 500 சபைகளானது இதழாசிரியரைத் தங்கள் மேய்ப்பனாக மனமார தேர்ந்துகொண்டு, வாட்ச் டவர் பத்திரிக்கைகளின் பக்கங்கள் வாயிலாக அவர் உண்மைகளை வெளிப்படுத்தியும், மேய்க்கும் வேலையையும் செய்துகொண்டு வருவதோடுகூட, அவர் தங்களை ஜெபத்தில் நினைவுகூரவும் மற்றும் அவர்களுக்குப் பிரயோஜனமாகவும், கர்த்தருக்கு மகிமையாகவும் காணப்படும் என்று அவர் நம்புகிற ஆலோசனைகளை அவ்வப்போது பிரதிநிதிகள் வாயிலாகவும், தந்தி வாயிலாகவும் தங்களுக்கு அனுப்பும்படிக்கும் வேண்டிக் கொண்டு, அவரை மேய்ப்பனாகத் தெரிந்தெடுத்த காரியத்தினை Watch Tower Bible Tract Society – கு தெரியப்படுத்தியுள்ளனர்.

சகோதரர்கள் மத்தியில் கர்த்தருடைய ஊழியங்கள் நடைபெற்று வருவதைக்குறித்து நாம் சந்தோஷப்பட்டிருக்கின்றோம் மற்றும் மாபெரும் இராஜாவுக்கு ஊழியம் புரியத்தக்கதான மற்றும் அவரது பின்னடியார்களுக்கு உதவத்தக்கதான ஊழியங்களை அவர்கள் செய்யத்தக்கதான வழிகளையும், வழிவகைகளையும் திறந்துகொடுப்பதில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கின்றோம். ஆனால் சமீபத்தில் சகோதரிகள் தங்களுக்கும் மற்றும் கர்த்தருடைய நோக்கத்திற்கும் பிரயோஜனமுண்டாகும் விதத்தில் பங்கெடுக்கக்கூடிய ஒரு பெரிய வேலை எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

அதைக்குறித்து வெளியூர்களில் இருக்கும் சபைகளுக்கு யோசனையாக முன்வைப்பதற்கு முன்னதாக, அதை நியூயார்க் பட்டணத்தில் நடைமுறைப்படுத்தி பரிசோதித்துப்பார்த்தோம். விளைவாகக் கிடைக்கப்பெற்ற வெற்றியானது மிகவும் தெளிவாய்க் காணப்பட்டப்படியால், தங்களது மேய்ப்பராக எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல் தெரிவித்திருந்த சபைகள் யாவரின் கவனத்திற்குக் கொண்டுவர நினைத்து, ஒவ்வொரு சபைக்கும் பின்வரும் கடிதத்தினை – மூப்பர்கள் மற்றும் சபையாரின் பிரயோஜனத்திற்கு என்று சபையின் காரியதரிசிக்கும் ஒன்றும் மற்றும் இன்னொன்றை இந்த வேலையில் மேய்ப்பரது lieutenant / லெப்டினன்ட் – பிரதிநிதியெனத் தேர்ந்தெடுக்கப்படும் சகோதரியின் விசேஷமான பயனுக்காகவும் அனுப்பிவைக்கின்றோம். இக்கடிதங்களை இங்கு வெளியிடுவது என்பது அச்சபைகளிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் முழுக்காரியத்தையும் விளங்கப்பண்ணுகிறதாக இருக்கும்; ஏனெனில் சிலர் சபையில் வாசிக்கப்பட்டவைகளைக் கேட்காமலோ அல்லது கடிதத்தின் காரியங்களை மறந்தும் போயிருக்கலாம்.

இவ்வேலையில் சகோதரிகளின் ஒத்துழைப்பு

பொதுக்கூட்டங்கள், Photo Drama காட்சிகள், தொகுதி விநியோகிப்பவர்கள் கொண்டிருந்த பட்டியல் முதலானவைகளிலிருந்து, மத விஷயங்களில் கொஞ்சம் ஆர்வம் கொண்டவர்களாகவும், சத்தியத்திற்கு ஏறக்குறைய இணங்குபவர்களாகவும் எண்ணப்பட்டுள்ள நபர்களின் முகவரி பெற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பாக, ஒரு முக்கியமான தொடர் வேலை (follow-up work) குறித்து வாட்ச் டவரின் வாசகர்களுடைய கவனத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பாகக் கொண்டு வந்திருந்தோம். அதுமுதற்கொண்டு நாம் இந்த முகவரிகளைப் பிரித்து, ஒழுங்குப்படுத்துவதற்கு முயன்றுகொண்டு வருகின்றோம்; ஆனால் அவை மிக அதிகமாகக் காணப்படுகின்றன மற்றும் நமக்கு நேரமும் மிகவும் குறைவாக இருப்பதினால், நாங்கள் வெகு சொற்பமானவைகளையே திட்டமிட்டப்படி ஒழுங்குபண்ண முடிந்தது. இந்த முக்கியமான வேலையை இன்னும் தாமதித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, மேய்ப்பரது இந்த வேலையில் உதவுபவர்களாக இருப்பவர்களுக்கு முகவரி பட்டியல்களை அனுப்பிவைத்து, அதை மாவட்ட வேலையாட்கள் ஒவ்வொருவரால் பார்த்து எழுதப்பட்டு, பிரிக்கப்படலாம் என்று நாம் எண்ணினோம்.

இப்பிரிவு வேலையானது சகோதரிகளுக்காக மாத்திரமே என்று நோக்கம் கொள்ளப்பட்டிருக்கின்றது, காரணம் அவர்கள் இதில் மிக வெற்றிகரமாய்ச் செயல்பட முடிகிறவர்களாகவும், இவ்வேலையில் ஈடுபடுவதற்கென அதிகம் நேரம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் என்றபோதிலும், I. B. S. A சபைகளைப் புறக்கணிக்கும் எதையும் நாம் முன்மொழிகிறதில்லை. எங்களால் முடிந்த மட்டும் என்னைத் தங்களது மேய்ப்பராகத் தேர்ந்தெடுத்ததாக எங்களுக்குத் தகவல் கொடுத்திட்ட சபைகளுக்கு மாத்திரமே இந்த வேலையைக்குறித்த யோசனையை முன்வைக்கின்றோம்.

ஒவ்வொரு சபையிலும் நேரமும், இவ்வேலைக்கான வேலையாட்களென இத்திட்டத்தின்கீழ் வேலை புரிவதற்கு விருப்பமும் கொண்டிருக்கும் சகோதரிகளைக் கூட்டிச்சேர்ப்பதே திட்டமாகும். இத்தகைய கூட்டத்தில், வேலைக்கென்று அதிகமான தாலந்துடையவர்களாகச் சிலரும், குறைவான தாலந்துடையவர்களாகச் சிலரும் காணப்படுவார்கள் மற்றும் சிலர் வேலையினுடைய ஒரு பாகத்தைச் செய்ய முடிபவர்களாகவும், மற்றப் பாகத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்றவர்களாய் இருப்பார்கள். ஆகையால் சகோதரிகள் தங்கள் மத்தியிலிருந்து, போதுமான நேரத்தையும், போதுமான செயல்படுவதற்குரிய திறமையையும் மற்றும் தனது ஸ்தானத்தை உணர்ந்து, அதைச் சரியாய்ப் பயன்படுத்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் ஞானமாய் வேலையைப் பிரித்துக்கொடுக்க முடிகின்றதான பரந்த மனதையும் பெற்றிருக்கும் சகோதரியை லெப்டினன்ட்டாக தெரிந்துகொள்வது நலமாயிருக்கும். லெப்டினன்ட்டாக [R5984 : page 332] தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக, இது விஷயத்தில் ஞானத்திற்காகவும், வழிநடத்துதலுக்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். நானும் இத்தகைய ஏற்பாடுகளின் மீது விசேஷித்த ஆசீர்வாதங்கள் வரும்படிக்கு ஏற்கெனவே கர்த்தரிடம் வேண்டிக்கொண்டுள்ளேன் மற்றும் தொடர்ந்து வேண்டிக்கொள்வேன். இவ்வேலைக்குத் தகுதியில்லாத எந்தச் சகோதரியும், நோக்கத்திற்கான நன்மைக்காக தன்னை விலக்கி வைத்துக்கொள்ளும் சிலாக்கியத்தினை, தான் பெற்றிருப்பதற்காகக் களிகூர்ந்து வேலைக்குத் தேவையான சாமார்த்தியத்தையும், மற்றத் தகுதிகளையும் உடைய வேறொரு சகோதரிக்கு உதவி செய்திடலாம். கர்த்தர் நம்முடைய இருதயங்களைப் பார்த்து, அவருக்கும், அவரது சத்தியத்திற்குமான நம்முடைய உண்மைக்கேற்ப நமக்குப் பதிலளிப்பாரே ஒழிய, நம்முடைய வேலையின் அளவிற்கு ஏற்ப அல்ல.

இக்குழுவினரின் செயல்களானது, குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்குச் செல்வதும், ஆர்வம் இருப்பதை உறுதிப்படுத்துவதும், தவறான அபிப்பிராயங்களை அகற்றிடுவதும், வேதாகம பாடங்கள் புத்தகங்களை இரவலாக அளித்தல் முதலானவையாகும்; மற்றும் இவ்வேலையின் முக்கிய காரியம், முடிந்தமட்டிலும் அநேகரை ஆர்வத்திற்குள்ளாக்கி, அவர்களை வகுப்புகளாகக் கூட்டிச் சேர்ப்பதாகும் – முதலாவது தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைகளைக் கேட்கவும் மற்றும் பிற்பாடு தொடர்ந்து நடக்கும் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளாக்கிடுவதாகும். காரியம் போதுமான அளவுக்குச் செய்யப்பட்டப் பிற்பாடு, லெப்டினன்ட் I. B. S. A – இன் மூப்பர்களுக்கு, அவர்கள் தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைகளைக் கொடுப்பதற்குரிய முற்றிலும் திறமிக்கவர்களாய்க் காணப்படும் சகோதரர்களை ஏற்பாடு பண்ணும்படிக்குத் தெரிவித்திடலாம். இதற்கிடையில் மூப்பராகிய சகோதரர் இதற்கு ஆயத்தப்பட்டிருக்க வேண்டும். சீக்கிரத்தில் “தெய்வீகத் திட்டத்தின் விளக்கவுரைக்கான குறிப்புத் தாளிற்கான” ஒரு புதிய வெளியீட்டை வெளியிடுவோம்; இது மூப்பர்களுக்கு உதவியாய் இருக்கும் மற்றும் இது இலவசமாகக் கொடுக்கப்படும். இதற்குத் தேவைப்படும் துணியிலான வரைப்படங்களையும் (cloths charts) நாங்கள் சீக்கிரமாய் ஆயத்தம்பண்ணிடுவோம்.

தெய்வீகத் திட்டத்தின் விளக்கவுரைகள் கொடுக்கப்பட்டப் பிற்பாடு மற்றும் ஆராய்ச்சி வகுப்புகள் ஏற்பாடுபண்ணப்பட்டப்பிற்பாடு, இவ்வகுப்புகளுக்குத் திறமிக்கப் போதகர்கள் தவறாமல் வழங்கப்படத்தக்கதாகச் சபையின் மூப்பர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். போதகர்களுக்கான தகுதியை – போதகசமர்த்தனாய் இருக்க வேண்டியது குறித்துக் காணப்படும் அப்போஸ்தலனின் புத்திமதிகளை நினைவில்கொள்ளுங்கள். ஒருதலைச்சார்பு / பாரபட்சம் எதையேனும் செய்வதின் மூலமாகவோ அல்லது மாம்சத்தின்படி கனத்தைக் கொடுக்கவோ, பெற்றுக் கொள்ளவோ நாடுவதன் மூலமாகவோ கர்த்தருடைய வேலையைச் சீரழித்துப் போடாதீர்கள். எல்லாவற்றிலும், “தேவனுக்கு முதலிடம் மற்றும் சுயமும், மாம்சத்தின் அனைத்து வழிகளும் கீழ்ப்பட்டேயிருக்கும் என்பதை நம்முடைய பொன்மொழியாகக் கொண்டிருப்போமாக.

இத்திட்டமானது பிரமிக்க வைக்கும் வெற்றியுடன் பல்வேறு பெரிய பட்டணங்களில் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றது. இவ்வளவு காலம் இந்த வேலையின் முக்கியத்துவத்தை உணராமலும், அதைச் செயல்படுத்தாமலும் இருந்ததைக்குறித்து நாங்கள் விநோதமாகவே எண்ணுகின்றோம். ஆனால் அநேகமாக இது தற்கால வேலையினுடைய ஒரு பாகமாக இருக்கலாம் – அநேகமாக ஏதோ விதத்தில் இது எலியாவின் சால்வையைக் கொண்டு தண்ணீரை அடித்தல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இது நிழலை நிறைவேற்றிடும் என்று நாம் கூறவில்லை, மாறாக அது தொடர்பான விஷயங்களில் இது ஓர் அம்சமாக இருக்கலாம் என்று மாத்திரம் கூறுகின்றோம்.

இந்த வேலையினை இப்படி அறிமுகப்படுத்தி, காரியத்தினைக் கர்த்தருடைய ஜனங்களின் கரங்களில் விடுகின்றோம் மற்றும் மனப்பூர்வமாய் ஒத்துழைக்க விரும்பும் யாவர் மீதும் திவ்விய ஆசீர்வாதம் காணப்படும்படிக்கு வேண்டிக்கொள்கின்றோம்.

இதனோடுகூடச் செயல்முறைக்கான சில யோசனைக்குறிப்புகளையும் இணைத்துள்ளோம்.

கர்த்தருக்குள்ளான உங்களது சகோதரன் மற்றும் ஊழியக்காரன், சி. டி. ரசல்.

பெரிய பட்டணத்தில் ஊழியம் புரியும் இவ்வேலையாட்களுக்கான குறிப்புகள்

சிலசமயம் விசேஷித்த பிரதிநிதிகள் வாயிலாகவும் மற்றும் சிலசமயம் சபையாரின் காரியதரிசி வாயிலாகவும் அனுப்பிவைக்கப்பட்டு, I. B. S. A – சபைகளில் வாசிக்கப்படுகின்றதான மேய்ப்பரது கடிதமானது, விவரிக்கப்பட்டுள்ள வேலைக்குரிய நேரத்தையும், பலத்தையும் பெற்றிருக்கும் சபையாரிலுள்ள சகோதரிகள் அனைவரும் ஒன்றுகூடிடுவதற்கான ஓர் அழைப்பை விடுக்கின்றதாய் இருக்கும். இவர்களது முதலாம் கூடிக்கொள்ளுதலானது, தங்கள் மத்தியில் ஒருவர் லெப்டினன்டாகவும் மற்றும் இன்னொருவர் இவ்வேலைக்கான காரியதரி சியாகவும், பொருளாளராகவும் இருப்பதற்கு யார் கர்த்தருடைய தெரிந்து கொள்ளுதலின்படியானவர்கள் என்று தங்களால் நம்பப்படுகிறவர்களின் தெரிந்தெடுத்தலுக்கானதாகும்.

[தவறான புரிந்துகொள்ளுதலின் காரணமாக எங்கள் பிரதிநிதி, மாநாடுகள் சிலவற்றில் லெப்டினன்டுகளை நியமித்துவிட்டதற்காகவும், பின்னர் லெப்டினன்டையும், காரியதரிசியையும் தேர்ந்தெடுக்கும்படியாக எங்களிடமிருந்து வந்த கடிதமானது சில குழப்பத்தை ஏற்படுத்தினது என்பதற்காகவும் நாம் வருந்துகின்றோம். சொசைட்டியின் பிரதிநிதிகள் முறையாய் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்; ஆனால் சபையார்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்திலும் அவர்களது தெரிவு அல்லது எங்களது தெரிவிற்கு அவர்களது ஒப்புதல்தான் முடிவாய் இருக்கும்.]

இவ்வூழியத்திற்கு அவசியப்படும் மிதமான செலவுகளைச் சந்தித்துக் கொள்வதைச் சபையார் சிலாக்கியமாகக் கருதுவார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அப்படியாக இல்லையெனில் மற்றும் அக்காரியம் கவனிக்கப்படவில்லையெனில், அதையும் மாதாந்தரத் தகவல் அறிக்கையில், மிகக் குறிப்பாய்க் குறிப்பிட்டு,கீழ் இடம்பெறும் முகவரிக்கு எழுதி தெரிவித்திடுங்கள்.

அனைத்துத் தகவல் அறிக்கைகளும் லெப்டினன்டினாலும் மற்றும் காரியதரிசி – பொருளாளரினாலும் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இந்த முதலாம் கூட்டம் நடைபெற்ற உடனே, கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கைக் குறித்தும், லெப்டினன்டாகவும், காரியதரிசி – பொருளாளராகவும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களையும் குறித்தும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

உங்கள் முதலாம் கூட்டமானது, நீங்கள் ஒருவரோடொருவர் பழகிடுவதற்கும், இவ்வேலைத் தொடர்பான உங்களது ஆர்வத்தைத் தூண்டிடுவதற்கும் மற்றும் எவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் மற்றும் எப்படிச் சிறப்பாய்ப் பயன்படுத்திடலாம் என்று கணக்கிடுவதற்கும் உதவுகிறதாய் இருக்கும். எங்கெல்லாம் அனுப்ப முடியுமோ, அங்கெல்லாம் ஒழுங்குப்படுத்துவதற்கும் மற்றும் பிரித்து வகைப்படுத்துவதற்கும் மற்றும் நாங்கள் வெற்றிகரமான செயல்முறையெனக் கண்டுகொண்டுள்ளவைகளை விளக்குவதற்குமென்று சகோதரி Genevieve Sanford அவர்களை நாம் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம். சகோதரி உங்களுடனே காணப்பட்டார்களானால், நாங்கள் இங்கு அளிக்கும் விவரங்கள் உங்களுக்கு அவ்வளவுக்கு முக்கியமாய் இராது; எனினும் சகோதரி கடந்து போய் விட்டப்பின்பு, இவைகளைத் தகவல் குறிப்புகளாக வைத்துக் கொள்வதற்கு விரும்புவீர்கள். ஆனால் ஒருவேளை ஏதேனும் காரணத்தினால் சகோதரி Sanford அவர்களால் உங்களிடத்திற்கு வரமுடியவில்லையெனில், நீங்கள் கர்த்தரையே அதிகமாய்ச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்றும், அனைத்து [R5985 : page 332] ஏற்பாடுகளிலும் உங்களது சிறந்த ஞானத்தையும், நீதியையும், அன்பையும் செயல்படுத்திட வேண்டியிருக்கும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். “ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாதிருங்கள்.

இரண்டாம் கூட்டத்தில்

இக்கூட்டமானது நீண்ட நாள்களுக்கென்று தள்ளிப்போடப்படக்கூடாது – அதாவது “இரும்பு சூடாக இருக்கும்போது welding / வெல்டிங் பண்ண வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் சிறந்த பலன்களை அடைவதற்கு ஒழுங்குமுறை அவசியமென்பதை முதலாவது நினைவில்கொள்ள வேண்டும். இரண்டாம் கூட்டத்திற்கு முன்னதாக லெப்டினன்ட் முடிந்தமட்டும் தெளிவாயும், துல்லியமாயுமுள்ள பட்டணங்களுக்கான நான்கு நிலப்படத்தையும் (maps) மற்றும் பட்டணத்தின் தெருக்களுக்கான நான்கு அட்டவணை புத்தகங்களையும், ஒரு சிவப்புப் பென்சிலையும், ஒரு நீல பென்சிலையும், எழுதுவதற்குரிய கடினமான தாள்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். லெப்டினன்ட் தனக்கென முதல் நிலப்படத்தைத் (map) தயார்படுத்திக்கொண்டு, பிற்பாடு மற்ற மூன்று நிலப்படங்களை ஆயத்தமாக்கிக்கொள்ளத்தக்கதாக உதவி செய்பவர்களிடம் மாதிரியாய்க் கொடுத்திட வேண்டும்.

உங்கள் பட்டணத்தை ஒரு நிற பென்சிலைக்கொண்டு பிரித்துக் கொள்ளுங்கள். இப்படியாக நிலப்படத்தைப் பிரித்துக்கொண்டப் பிற்பாடு, மற்ற நிற பென்சிலைக் கொண்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு எண்கள் இட்டுக் கொள்ளுங்கள்.

சொசைட்டியினால் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சில பெயர்கள், அட்டைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்றும் அவைகளின் முகவரியினை சகோதரிகளில் சிலர் நிலப்படத்தில் அடையாளம் கண்டுபிடிப்பதற்கெனச் சொல்லப்படலாம். அவர்கள் எந்தப் பட்டணத்தார்கள் என்று கண்டுபிடிக்கப்படும் போது, வண்ண பென்சிலினால் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணானது, அட்டைகளில் குறித்துக்கொள்ளப்பட வேண்டும். இன்னும் உங்களுக்கு வேறு சில பெயர்கள் அட்டவணையில் அனுப்பப்பட்டிருக்கும் மற்றும் இவைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு அட்டைத்தாளில் எழுதப்பட வேண்டும் மற்றும் அடுத்ததாக ஒவ்வொரு முகவரிக்கும், அதன் மாவட்டத்திற்குரிய வண்ண பென்சிலினால் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணானது குறித்துக்கொள்ளப்பட வேண்டும்.

கடினமான தாள்களை வசதியான அளவுகளுக்கு, அதாவது சிறு அஞ்சல் அட்டைகள் அளவுக்கு வெட்டப்படுவதன் வாயிலாகக் குறைந்த செலவில் கோப்பு அட்டைகளை (file cards) தயார் செய்துகொள்ளலாம். Photo Drama Card – லிருந்து அல்லது வேறெந்த நினைவுக்குறிப்புகளிலிருந்து அல்லது முகவரியிலிருந்து உடனடியாகப் பெயர்களை இந்தக் கோப்பு அட்டைகளுக்கு மாற்றிட வேண்டாம். முகவரிகளைக் கண்டுபிடித்து, அவைகளின் மாவட்டங்களை மாத்திரம் குறித்துக்கொள்ளுங்கள். அந்த முகவரியிலுள்ளவர்களின் ஆர்வம் குறித்து உறுதிப்படுத்திக்கொண்ட பிற்பாடு, முகவரியானது கோப்பு அட்டைகளுக்கு மாற்றப்படலாம்.

சபையார் மத்தியிலுள்ள ஒவ்வொரு சகோதரியினுடைய முகவரியையும் பெற்றுக்கொள்ளுங்கள் மற்றும் இவர்களுடைய பெயர்களுடன் கோப்பு அட்டைகளைத் துவங்கிடுங்கள் மற்றும் அவள் சத்தியத்தில் இருக்கிறாள் என்பதைச் சிவப்பு நிறச் சிலுவைக் குறியீட்டினால் குறித்துக்கொள்ளுங்கள். அவளது மாவட்டமும், நிலப்படத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு சிறு “X” குறியீடானது அவளது இடம் இருக்கும் இடத்தினைத் துல்லியமாய்ச் சுட்டிக்காண்பித்திட வேண்டும்.

திறமைக்கேற்பவும் மற்றும் பாரப்பட்சம் இல்லாமலும் லெப்டினன்ட் மாவட்ட வேலையாட்களைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலையாளுக்கும், அவள் வாழும் இடத்தினை அல்லது பக்கத்து மாவட்டத்தினை அல்லது அருகாமையில் காணப்படுகின்றதான மாவட்டத்தினை, அவள் வேலை புரியும் களமாகக் கொடுக்கப்பட வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு அதிகமான உதவியாளர்கள் இருப்பார்களானால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர் புத்தகங்கள் இரவலாகக் கொடுக்கும் பணியினைப் பார்த்துக்கொள்ளலாம் மற்றும் இன்னொருவர் முகவரிகளிலுள்ளவருக்கு அழைப்புகள் விடுக்கும் பணியினைச் செய்திடலாம்; ஆனால் ஒருவேளை போதுமான வேலையாட்கள் இல்லையெனில், முதலாவது அழைப்புகள் விடுக்கும் பணியானது செய்யப்படட்டும் மற்றும் புத்தகங்கள் இரவலாகக் கொடுக்கும் பணியானது, அடுத்தப்படியான வேலையாக இருப்பதாக; எனினும் அழைப்பு விடுக்கப்பட்ட நபர் புத்தகங்களைப் பெற்றிராமலும், இரவலாகத் தொகுதி ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பிடும் தருணங்களில் புத்தகம் இரவலாகக் கொடுக்கும் பணியானது செய்யப்படலாம்.

சகோதரிகள் விவரங்களை லெப்டினன்டுக்கு ஒரு வாரத்திற்குள்ளாகத் தகவல் கொடுத்திட வேண்டும். வேலையாட்களாகக் காணப்படும் சகோதரிகளில் சிலர் வியாதிப்பட்டதினாலோ அல்லது அவர்கள் எதிர்ப்பார்த்த நேரம் அவர்களுக்குக் கிடைக்காததினாலோ தடைகள் அடைந்திட்டதை நீங்கள் காணலாம் அல்லது சிலர் தளர்ந்துபோய், சாமார்த்தியமற்றவர்களாய் நிரூபிக்கப்பட்டிருக்கலாம்; சிலருக்குக் கூடுதலான விவரங்களும், ஆதரவுகளும் தேவைப்படலாம். ஒரு வாரத்திற்குள்ளாகத் தகவல் கொடுக்கத் தவறிடும் சகோதரி ஒருவருக்கு, அவளை உற்சாகப்படுத்தியும், அவள் ஏற்கெனவே செய்திருப்பவைகளைக் குறித்துப் பாராட்டுத் தெரிவித்தும், அவள் எதிர்க்காலத்தில் மேம்பட்ட வளர்ச்சியினைக் காட்டுவாள் என்ற உங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியும் மற்றும் அவள் எதையேனும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் காணப்பட்டால், அது தொடர்பாக அவள் உங்களைத் தொடர்புகொள்ள தெரிவித்தும் அன்புடன் கடிதம் ஒன்றை எழுதுங்கள். ஊழியங்களைக் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சகோதரிகள் தங்கள் தங்கள் மாவட்டங்களில் தங்கள் சந்திப்புகளை நிறைவு செய்கையில், எவ்வித ஆர்வம் காட்டிடாதவர்களின் அட்டைகளில் அல்லது அட்டவணைகளில் உள்ள முகவரிகள் லெப்டினன்டினால் அழித்துப் போடப்படவேண்டும் பின்னர் ஆர்வத்தினைக் காட்டுபவர்களின் முகவரிகளானது மூன்று கோப்பு அட்டைகளில் எழுதப்பட வேண்டும் – ஒன்று உங்களது கோப்பில் (file) வைத்துக் கொள்வதற்கும், ஒன்று புரூக்கிளின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கும் மற்றும் மற்றொன்று மேலுமுள்ள பயன்பாட்டிற்கென மாவட்ட வேலையாட்களிடம் காணப்படுவதற்கும் ஆகும். எந்த முகவரிகளும் தொலைந்து போகாதபடிக்கு, அட்டைகளைக் கவனமாய்க் கையாள வேண்டுமெனச் சகோதரிகளுக்குப் புரியவைத்திடுங்கள். இப்படி முகவரியினைக் கோப்பு அட்டையில் எழுதும் காரியமானது, முடிந்தமட்டும் காலந்தாழ்த்தாமல் செய்யப்பட வேண்டும்.

சில மாவட்டங்களில் இப்பணித் துவங்கின இரண்டு வாரத்திற்குள்ளாக தெய்வீகத் திட்டம் விளக்கவுரைக் கொடுத்திடுவதற்குச் சூழ்நிலை ஆயத்தமாகிடும். மிகுந்த கிறிஸ்தவ அன்புடன், கிறிஸ்துவுக்குள்ளான உங்களது சகோதரன் மற்றும் ஊழியக்காரன், சி. டி. ரசல்.

குறிப்பு: மாதாந்திர தகவல் அறிக்கை வெற்றுத் தாள்களை நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைக்கின்றோம். இதை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் புரூக்கிளினுக்குக் கீழ் இடம்பெறும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுங்கள்.

Pastoral Work Department,
c/o. Mrs. Genevieve Sanford,
122 Columbia Hts., Brooklyn, N. Y.

இவ்வேலை தொடர்புடைய விஷயத்தில் மாவட்ட வேலையாட்களுக்கான குறிப்புகள்

உங்களது முகவரி அட்டைகளையும், நினைவுக்குறிப்புகளையும் அகரவரிசையில் (alphabetically) வரிசைப்படுத்திக்கொள்ளுங்கள். அவற்றை
இந்த அகர வரிசையில் ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு அகர எழுத்திற்கும் கீழ் நான்கு முதல் ஐந்து பெயர்களை எழுதுவதற்குரிய இடம் விட்டுக்கொள்ளுங்கள். பின்னர்த் தொடர்புக்கொள்கையில் உங்கள் சௌகரியத்திற்கேற்ப அட்டைகளை அடுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை [R5985 : page 333] அட்டைகளில் ஏதேனும் அட்டையானது அவ்வளவுக்குத் தோற்றத்தில் தெளிவாய், நேர்த்தியாய் இல்லையெனில், திருப்தியற்ற நிலைகளில் அவைகளைப் பயன்படுத்திடுவதற்குப் பதிலாக, மறுபடியுமாக புதிதாய் அட்டையில் எழுதிக் கொள்ளுங்கள்.

இந்த அட்டைகளில் அல்லது நினைவுக்குறிப்புகளில், அந்நபர் ஏற்கெனவே சத்தியம் குறித்த புத்தகங்களின் விஷயத்தில் என்ன பெற்றிருக்கின்றார் என்பது பற்றின அடிக்குறிப்பு / குறிப்புரையை முடிந்தமட்டும் பெற்றிருக்க வேண்டும்; இது நீங்கள் தொடர்புகொள்ளும்போது, நீங்கள் என்ன பேசிடலாம் எனும் விஷயத்திற்கு உதவியாகக் காணப்படும். சந்திக்கச் செல்கையில், உங்களது நேரம் வீணாக்கப்படாத விதத்தில் அட்டைகளை ஒழுங்குப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சந்திப்பிற்குப் பிற்பாடு, அட்டையில் சந்திப்புக்குறித்த சிறுகுறிப்புகளை எழுதிடுங்கள்; உதாரணத்திற்கு “ஆர்வம் இருக்கின்றது; தெய்வீகத்திட்டம் விளக்கவுரைகளில் கலந்துகொள்வார் அல்லது “ஆர்வமில்லை அல்லது “இடம் மாறிவிட்டனர் என்பதுபோன்று எழுதிடலாம். ஒவ்வொரு அட்டையிலுமுள்ள இந்த விவரங்களை நீங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை லெப்டினன்டிக்குக் கொடுத்திட வேண்டும்; இதை அவள் தனது கோப்பில் (file) பதிவுசெய்து, “இடம் மாறிவிட்டனர் அல்லது “ஆர்வமில்லை என்று காண்பிக்கும் முகவரிகளை, அழித்துப்போடுவாள்.

நடத்தப்படப்போகும் கூட்டங்களானது I. B. S. A சபையாரின் மூப்பர்களினால் மேற்பார்வையிடப்படும் என்றாலும், நாமும் தொடர்பில் காணப்பட விரும்புகின்றோம். ஆகையால் கூட்டங்களில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையையும் மற்றும் உதவிக்கரமாய்த் தோன்றும் எதையும், புத்தகங்களை வாங்கினவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் பெயர்களையும் அஞ்சல் அட்டை மூலம் வாரந்தோறும் லெப்டினன்டுக்குத் தயவாய்த் தகவல் அளித்திடுங்கள். ஜனங்கள் புத்தகங்களை வாசிக்கும் விஷயத்தில் மிகவும் கருத்தூன்றிக் கவனம் கொடுக்கத்தக்கதாக, புத்தகங்கள் விலைக்கொடுத்து வாங்கப்படும் விஷயம் நலமானதாய் இருப்பினும், சத்தியத்தை வியாபாரம்பண்ணும் எந்த எண்ணமும் அங்கீகரிக்கப்படக்கூடாது என்பதை நினைவில்கொள்ளுங்கள். புத்தகங்களை விற்பதற்கு முயற்சிக்கும் தோற்றத்தைக் கொடுப்பதற்குப்பதிலாக, இரவலாகக் கொடுக்கப்படும் என்று சொல்லிடுங்கள்; ஆனால் ஒருவேளை ஒருவர் விலைக்கொடுத்து வாங்கிட விரும்பிட்டால், அதிலும் நமக்கு மகிழ்ச்சியே.

மாவட்ட வேலையாட்களின் ஆய்வு / Canvass

“காலை வணக்கம்! இங்குத்தான் திருமதி உட் அவர்கள் வாழ்ந்து வருகின்றார்களா?”

“ஆம் “

“வீட்டு வேதாகம ஆராய்ச்சிக்காக நான் உலா நூலகம் (Circulating Library) தொடர்பாக வந்திருக்கின்றேன். சில காலங்களுக்கு முன்னதாக, தாங்கள்
இதில் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளீர்கள் என்று எண்ணுகின்றேன். உங்களுக்கு விருப்பமானால், இக்காரியம் குறித்து உங்களிடம் பேச விரும்புகின்றேன்.”

உள்ளே வரும்படிக்கு வரவேற்கப்பட்டப் பிற்பாடு நீங்கள் தொடர்ந்து:

“அப்போது தாங்கள் வேதாகம பாடங்கள் என்று அழைக்கப்படும் தொகுதிகளை திருமதி உட் அவர்களே வாங்கியுள்ளீர்கள் என்று நான் நம்புகின்றேன். அதில் எதுவேனும் உங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டினதா அல்லது இல்லையா என்று நான் தெரிந்துகொள்ளலாமா?”

இது உரையாடலுக்கான ஒரு துவக்கம் மாத்திரமே மற்றும் இது சந்தர்ப்பங்களுக்கேற்ப, அதாவது அட்டையில் குறித்துவைத்திருக்கும் குறிப்புகளுக்கேற்ப மாறிடும். இதற்கு மேலாக என்ன பேச வேண்டும் என்பது, அங்கு ஏற்படும் சூழ்நிலைப் பொறுத்ததாகும். சிலசமயம் எதுவும் அந்நபருக்கு ஆர்வம் மூட்டினதாக இருக்கவில்லை என்றும், மிகவும் ஆர்வத்துடன் காணப்படும் சிலரை அறிவார்கள் என்றும் பதில் வரலாம். இப்படியாக மற்றவர்களுடைய முகவரியையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். அநேகமாக சிறு ஞானமான உரையாடலின் வாயிலாக, நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் அந்நபரின் ஆர்வத்தினை நீங்கள் தூண்டிவிடலாம்; அல்லது அவர்களுக்கான சிரமம் தவறான அபிப்பிராயமாக, தவறாய் விவரம் கேட்டிருப்பதாகவோ காணப்படலாம். தவறாய் மனதில் பதியப் பெற்றவைகளைச் சரி செய்வதற்குரிய இத்தகைய வாய்ப்புகளானது மிகவும் விலையேறப் பெற்றவையாகும். சரியானவைகளைப் பேசிடுவதற்குரிய ஞானத்திற்காகவும் மற்றும் நீதிக்கு இசைவாய் இருக்கும் யாவருக்கும் தன்னுடைய வார்த்தைகளானது சுகந்த வாசனையாகவும், அபிஷேகிக்கும் தைலமாகவும் காணப்படத்தக்கதாக இருதயத்தில் சாந்தம், பொறுமை, அன்பு எனும் கர்த்தரிடத்திலிருந்து வரும் கிருபைக்காகவும் ஒவ்வொரு வேலையாளும் ஊக்கமாகவும், தொடர்ச்சியாகவும் ஜெபம் ஏறெடுத்திட வேண்டும்.

ஒருவேளை அந்தப் பெண்மணியிடம் வேதாகம பாடங்களினுடைய புத்தகங்கள் இல்லையெனில், தொகுதியை அப்பெண்மணி இரவலாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவியுங்கள் மற்றும் அந்த மாவட்டத்தில் சீக்கிரத்தில் “தெய்வீகத் திட்டம் விளக்கவுரை நடைப்பெறப் போவதைக்குறித்துத் தெரிவியுங்கள். வேதாகமம் நாம் புரிந்துகொள்ளத்தக்கதாகவும் மற்றும் புதிய புத்தகமாக ஆகத்தக்கதாகவும், எப்படி யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தின் வரைப்படமானது வேதாகமத்தைத் திறக்க உதவிடும் என்று அப்பெண்மணிக்கு விளக்கிடுங்கள். நீங்கள் இரவலாகக் கொடுப்பதாகக் கூறிடும் தொகுதியானது, அவளது ஆர்வத்தை வெகுவாய்த் தூண்டிடும், காரணம் அது மற்ற மதரீதியான புத்தகங்களினின்று வேறுபட்டது என்றும், அது வேறுமாதிரியானது என்று நம்மில் சிலர் ஊகித்திருப்பினும், அது வசனங்களையும், வேத அதிகாரங்களையும் குறிப்பிட்டு, அது உண்மையிலேயே தேவனுடைய வார்த்தையின் செய்தியாய் இருக்கின்றது என்று காண்பித்துத் தருகின்றது என்றும் அப்பெண்மணிக்கு உறுதிப்படுத்திடுங்கள். தெய்வீகத் திட்டம் விளக்கவுரை வகுப்பு ஏற்பாடுபண்ணப்படும் போது, அதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்படுவதற்கு அவள் விரும்புகின்றாளா என்று கேட்டுக்கொள்ளுங்கள். அடுத்தமுறை வருகையில், அவள் அதிகம் வாசித்திருந்து, ஆழமாய் ஆர்வம் கொண்டவளாகக் காணப்படுவாள் என்று நீங்கள் நம்புவதாகவும் விடைப்பெறும்போது தெரிவித்துக்கொள்ளுங்கள்.

அடுத்த நபரைச் சந்திக்கப் போவதற்கு முன்னதாக உங்களது முகவரி நினைவுக்குறிப்பில் இந்தச் சந்திப்பின் சுருக்கமான விவரங்களை எழுதிடுங்கள். தெய்வீகத் திட்டம் விளக்கவுரையில் கலந்துகொள்வதற்குப் போதுமான ஆர்வம் கொண்டிருப்பவர்களை உங்களது மாவட்டத்தில் சுற்றித் தேடி அறிந்துகொள்கிற அதேவேளையில், கூட்டத்தை நடத்துவதற்கான ஓர் இடத்திற்காகக் கர்த்தருடைய வழிகாட்டுதலுக்கு நாடிடுங்கள் – அதாவது விருப்பத்தைத் தெரிவித்தவர்களாகவும், சாதகமாய்க் காணப்படும் பெரிய வரவேற்பறையை அல்லது உட்கார்ந்திருப்பதற்கான அறையை உடையவர்களாகவும் இருக்கும் ஓரிடத்திற்காக நாடிடுங்கள். ஒருவேளை அப்படிக் கண்டுகொள்ளும்போது, “நீங்கள் ஒருவேளை இங்கே கூட்டத்தை நடத்த விரும்புவீர்களானால், இத்தகைய கூட்டங்களுக்கு இந்த அறை எவ்வளவு சௌகரியமாய் இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன். இது மிகவும் பொருத்தமான இடமாக இருக்கும் அல்லது இருக்காது என்று நான் திட்டவட்டமாய்ச் சொல்லிட முடியாது, எனினும் இங்குக் கூட்டம் நடத்திடுவதற்கு நீங்கள் விரும்புவதாக ஒப்பந்தம்பண்ணுவது ஏற்புடையது என்று நீங்கள் எண்ணிச் செய்வீர்களானால், நாங்கள் மகிழ்ச்சிக்கொள்வோம் என்று நீங்கள் சொல்லிடலாம்.

நீங்கள் கண்டுகொண்டவைகளையும், கூட்டத்தினை நடத்துவதற்குரிய மிகப் பொருத்தமான நேரத்தையும் மற்றும் மிகப் பொருத்தமான இடத்தையும் குறித்து லெப்டினன்டிக்குத் தகவல் கொடுங்கள் மற்றும் இது விஷயத்தில் திட்டவட்டமான தீர்மானத்தை எடுக்கும் சபையினுடைய மூப்பர்களிடத்தில் தொடர்பில் காணப்படும் லெப்டினன்ட் மூப்பர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள்.
[R5986 : page 333]

தெய்வீகத் திட்டம் விளக்கவுரைக்கான வகுப்புகள் தொடர்பான தீர்மானத்திற்குள் வந்தவுடன், ஆர்வத்துடன் காணப்படுவதாகத் தெரிபவர்களை மறுபடியுமாகத் தொடர்புகொள்ளுங்கள். அவர்களிடம் ஏற்பாடுகள் குறித்துத் தெரிவித்து, அவர்கள் அங்கு வருவார்களென எதிர்ப்பார்த்திடலாமா என்று கேட்டுக்கொள்ளுங்கள். இதோடுகூடக் கூட்டத்திற்கு முந்தின நாள் சென்று சேரும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சல் அட்டைகளை எழுதி அனுப்புங்கள். அதில் பின்வருமாறு எழுதப்படலாம்: “நாம் நாளை, வியாழன் மாலையன்று, யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரையினைக் கேட்பதற்கென 122, வெஸ்ட் சார்லஸ் தெருவிலுள்ள திருமதி உட் அவர்களின் இல்லத்தில் வைத்து 7.30 p.m.-கு சந்திக்கப்போகின்றோம் என்று நினைப்பூட்ட விரும்புகின்றேன். உங்கள் இல்லமானது திருமதி உட் அவர்களின் இல்லத்திலிருந்து ஒன்பது வீடுகள் தாண்டிதான் காணப்படுகின்றது. நீங்கள் வண்டியில் ஏறி இங்கு வந்து இறங்கிவிடலாம் என்று எழுதி, நீங்கள் கையெழுத்திட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரை வகுப்புகள் ஒவ்வொன்றிலும் நீங்கள் நிச்சயமாய்க் கலந்துகொள்ள வேண்டும் மற்றும் ஆர்வமுடன் காணப்படுபவர்களை ஆர்வத்தில் நிலைக்கொள்ளப் பண்ணத்தக்கதாக தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள்; எனினும் நீண்ட நேரமாய்ப் பேச வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வாரமும் அஞ்சல் அட்டை அனுப்பி ஞாபகப்படுத்தவும் செய்யுங்கள்.

தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரை தொடர் வகுப்புகள் நிறைவடைகையில், தெய்வீகத் திட்டம் வரைப்படம் தொடர்பான ஒரு கேள்வி கூட்டம் நடத்தப்படுவது முறையாய் இருக்கும் மற்றும் இது குறித்து விளக்கவுரை கொடுத்தவரே அறிவிப்புக் கொடுத்திடலாம். இந்த முக்கியமான ஊழியத்திற்கும் ஞானமுள்ள மற்றும் திறமையுள்ள சகோதரர்களை மாத்திரம் மூப்பர்கள் தெரிந்துகொள்ளும்படிக்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். ஒருவேளை அங்குக் காணப்படுபவர்களில் அதிகமானவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தக் கூட்டத்தில் முதலாம் தொகுதியின் பெரோயா ஆராய்ச்சியானது துவங்கப்படும் என்று தெரிவிக்கப்படலாம்.

இதற்கிடையில் ஒருவேளை தெய்வீகத் திட்டத்திற்கான விளக்கவுரை வகுப்புகள் நடத்தப்பட்ட ஸ்திரீயின் இல்லத்தில் தொடர்ந்து பெரோயா ஆராய்ச்சிகளானது நடத்தப்படுவதற்கு ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லையெனில், பெரோயா ஆராய்ச்சியினை, தனது இல்லத்தில் வைத்து நடத்துவதற்கு விரும்பிடும் வேறு ஏதேனும் பெண்கள் இருக்கின்றார்களா என்று விசாரித்து வைத்துக்கொள்ளுங்கள். பெரோயா ஆராய்ச்சியானது, வேத மாணவர்களில் ஒருவரின் இல்லத்தில் நடத்தப்படுவது விரும்பத்தகுந்தது. கேள்விக் கூட்டத்தில், அதாவது தெய்வீகத் திட்டத்திற்கான விளக்கவுரை வகுப்புகளுக்கான நான்காவது இரவில் – நான்காவது வாரத்தில், முதலாம் தொகுத்திக்கான பெரோயா ஆராய்ச்சிக்கென்று வாக்கு (vote) எடுக்கப்படுவதாக.

பெரோயா வகுப்புச் சரியாய்த் துவங்கின பிற்பாடு, நீங்கள் கொஞ்சம் சுதந்தரமாய்க் காணப்படலாம் மற்றும் வேறு ஏதேனும் முக்கியமான வேலை வந்திட்டாலும், அவற்றைச் செய்திடலாம். வகுப்புடன் தொடர்பில் காணப்படுங்கள்; மற்றும் வகுப்பில் யாரேனும் இரண்டு வாரங்களாகக் கலந்துகொள்ள தவறுவார்களானால், மூன்றாம் கூட்டத்திற்கு முன்பாக அவர்களைத் தொடர்புகொள்ள பார்த்திடுங்கள்.

இந்த வகுப்புகளில் உள்ளவர்களின் ஆர்வம் வளர்ந்து வருகையில், இவர்களுக்குச் பொது விரிவுரையாற்றல்கள் அனைத்தையும் குறித்துத் தகவல் கொடுக்கப்பட வேண்டும் மற்றும் I. B. S. A – இன் சபைக்கூட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவேண்டும், வழக்கமாய்க் கலந்து கொள்ளும் வேதமாணவர்களில் அநேகர் இந்தத் தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரை வகுப்புகளிலும் மற்றும் பெரோயா ஆராய்ச்சிகளிலும் ஆரம்பத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது விரும்பப்படத்தக்கதாகும்; ஏனெனில் இவர்களது வருகையினால், புதியவர்கள் தர்மச்சங்கடத்திற்குள்ளாகக் கூடும் மற்றும் அறையிலும் கூட்ட நெருக்கடி காணப்படக்கூடும்; மேலும் புதியவர்கள் தாராளமாய்க் கேள்விகள் கேட்கத்தக்கதாகவும், இடறலுக்குள்ளாகும் அபாயம் இல்லாமலும் காணப்படத்தக்கதாகவும், மூப்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அனுபவமுள்ள சகோதரனாலேயே வழிநடத்துதலும் மற்றும் விரிவுரைகளும் – அனைத்தும் செய்யப்படுவதாக.

தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரை வகுப்புகளிலும், பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளின் துவக்கத்திலும் பாடல் எதுவும் பாடப்பட வேண்டாம் என்று நாம் அறிவுரை கூறுகின்றோம். ஒவ்வொரு கூட்டமும் சுருக்கமான ஜெபம் ஒன்றுடன் முறையாய்த் துவங்கப்படுவதாக. கூட்டங்கள் உடனடியாகத் துவங்கப்பட வேண்டும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட வேண்டாம். இவைகளை வழிநடத்துபவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

தெய்விகத்திட்டம் குறித்த விளக்கவுரை கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் உங்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்பதற்காக அக்கூட்டத்தில் எதையும் விற்பனை செய்யாதீர்கள்; அவர்கள் ஒருவேளை புத்தகங்களைப் பெற்றிருக்க வில்லையெனில், புத்தகங்களை வாங்கும்படிக்கு யோசனை கூறிடுவதற்கு அவர்களது இல்லங்களே சரியான இடமாக இருக்கும்.

இத்தகைய வகுப்புகளுக்கு, கேள்விப் புத்தகங்களை சொசைட்டியானது லெப்டினன்ட் வாயிலாக இலவசமாக அளித்திடும்.

ஒவ்வொரு மாவட்ட வேலையாளும், மாவட்டத்தில் முதலாவதாக சந்திக்கச் செல்கையில் தன்னிடத்தில் வேதாகமப் பாடங்களினுடைய முதலாம் தொகுதி ஒன்றினை வைத்திருக்க வேண்டும்; இதனால் அதைக்காட்டி, “இந்த ஆராய்ச்சியே வேதாகமத்தின் விஷயங்களிலுள்ள உங்களது கவனத்தினை ஈர்த்திடும் என்று நான் நம்புகின்றேன் என்று கூறிடலாம். பின்னர் அப்புத்தகம் குறித்து விரிவுரை அளிப்பதற்கு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் மற்றும் கேட்கிறவர் ஆர்வம் கொள்ளும் பட்சத்தில் அதை இரவலாகக் கொடுப்பதாகத் தெரிவித்திடலாம்.

நேரே சென்றோ அல்லது கடிதத்தின் மூலமாகவோ மேய்ப்பருடைய லெப்டினன்டிடம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையேனும் மற்றும் விரிவுரைகள் (lectures) நடந்து கொண்டிருக்கும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் தகவல் கொடுங்கள்.

உங்களுக்கு உதவி ஏதேனும் தேவைப்படும் பட்சத்தில் நீங்களே துணைக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க முற்படாதீர்கள்; ஆனால் முழுப் பொறுப்பையுடைய மேய்ப்பரது லெப்டினன்டிடம் இதைக் குறித்துத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மாவட்டத்தில் வசிக்கும் வேதமாணவர் சகோதரிகளைத் தொடர்பு கொள்ளவும். அவர்கள் உங்களுக்குச் சில தகவல்களைக் கொடுக்க முடிகிறவர்களாய் இருப்பார்கள். இப்படியாக தொடர்பு கொள்ளும் போது சாதாரணமான சம்பாஷணைகளுக்கு இடம் கொடாமல் உங்களது வேலை குறித்து மாத்திரம் பேசுகிறவர்களாக இருந்து முன்மாதிரியாய் இருங்கள். ஒருவேளை சூழ்நிலைகள் சாதகமாக அமைகையில் இத்தகைய சகோதரியுடன் ஜெபம்பண்ணிடுவது சரியான காரியமாகவே இருக்கும். ஒருவேளை அச்சகோதரி எந்த ஊழியத்திலும் ஈடுபடாதவராக, ஆனால் அதற்கான நேரம் உடையவளாக இருப்பாளானால் அவள் எவ்வேலைக்கு நன்கு பொருத்தமாய் இருப்பாளென்று மனதில் சிந்தித்து வைத்துக்கொண்டு, அக்காரியத்தைக்குறித்து லெப்டினன்டின் கவனத்திற்குக்கொண்டு வாருங்கள்; மேலும் அச்சகோதரியினுடைய நேரம், ஆரோக்கியம், வயது, இனம், செயல்பாடுகள், [R5986 : page 334] திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா முதலானவைகள் குறித்தும், அவளது ஆவிக்குரிய நிலைமைக் குறித்தும் மற்றும் சத்தியத்தில நன்கு தேறினவளா அல்லது இல்லையா என்பதுகுறித்தும் மற்றும் சத்தியத்தைத் தெரிவித்திட திறமையுள்ளவளா என்பதுகுறித்தும் முழு விவரங்களையும் கொடுத்திடவும். இந்தத் தகவல்களையெல்லாம் அச்சகோதரியைச் சலிப்படையப்பண்ணாத விதத்தில் அல்லது துருவி கேள்விக் கேட்காத விதத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடிந்த மட்டும் நாடுங்கள். இன்னுமாக அச்சகோதரி சாந்தத்தின் ஆவி உடையவளாக இருக்கின்றாளா அல்லது இல்லையா என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்வதற்கும், வீட்டில் முடங்கிக்கிடப்பவர்களுக்கு வாசிப்பதற்கும், துண்டுப்பிரதிகளை மடிப்பதற்கும் அல்லது தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரை வகுப்புகளில் Photo Drama – இல், விரிவுரைகள் ஆற்றப்படுகையில் தேவையானவைகள் வழங்கிடுவதற்கும் பொருத்தமான நபர்களை எதிர்க்காலத்தில் வரும் ஏதேனும் வேலைகளுக்கென்று தெரிந்தெடுப்பதற்கு மேற்கூறிய தகவல்கள் லெப்டினென்டிற்கும் பிரயோஜனமாய்க் காணப்படும்.

தெய்வீகத் திட்டத்தின் மகிமையான காரியங்கள் மற்றும் நமக்கான வியத்தகு வாய்ப்புகள் மற்றும் சிலாக்கியங்கள் தொடர்புடைய விஷயத்தில் நம்முடன் தொடர்புக்குள் வருபவர்கள் அனைவரையும் மற்றும் சத்தியத்தில் காணப்படும் சகோதரிகளையும் ஊக்கமூட்டுவது தொடர்புடையதான உங்களது சிலாக்கியத்தினைக் குறித்து எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இங்கு நாம் சொல்லியிருப்பவைகளிலிருந்து புத்தகங்களை இரவலாய் வழங்கும் வேலையானது முற்றிலும் வேறுபட்ட ஒரு வேலையாகும்; எனினும் எங்கு உதவி புரிகிறவர்கள் அதிகமான எண்ணிக்கையிலும், ஆர்வம் காட்டுகிறவர்களின் முகவரி அட்டைகள் குறைவாகவும் காணப்படுகின்றதோ அங்கு மாவட்ட வேலையாட்கள் புத்தகங்களை இரவலாய்க் கொடுக்கும் வேலையையும் சேர்த்துச் செய்வதற்கு லெப்டினன்டின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய வேலையை மேற்கொள்வதற்கு முன்னதாக – இந்த வேலையானது கர்த்தரால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க அல்லது அவருக்குப் பிரியமாய் இருக்கக் காணப்படுவதற்கு முன்னதாக – இருதயமும், ஜீவியமும் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணிப்புடன் காணப்பட வேண்டியதின் முக்கியத்துவத்தைக் குறித்து நாம் முன்வைக்கின்றோம். அர்ப்பணமானது தொடர்ந்து காணப்பட வேண்டும். ஒவ்வொரு காலையிலும் திவ்விய ஆசீர்வாதமும், வழிக்காட்டுதலும் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்; மற்றும் ஒவ்வொரு மாலையிலும் தேவையின் பொழுதெல்லாம் சகாயம் செய்யும் கிருபையை நாம் அடையத்தக்கதாக நம்முடைய மகிமையான தலையானவரிடத்தில் நம்முடைய பிரயாசங்கள் குறித்தும், தோல்விகள்குறித்தும் மற்றும் வாஞ்சைகள்குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். நாம் தொடர்புகொண்ட ஒவ்வொருவரும் அன்பின் பரிசுத்த ஆவியை நாம் வெளிப்படுத்தினதில் தொடப்பட்டவர்களாகவும், பரிசுத்த ஆவி மாத்திரமே நம்முடைய சந்திப்பை ஏவியுள்ளது என்றுமுள்ள உண்மையினாலும் தொடப்பட்டவர்களாகவும் காணப்பட வேண்டும். எவ்விதத்திலும் நல்வாஞ்சையுடையவர்களாகக் காணப்படுபவர்கள் அனைவரிடத்திலும், திருச்சபை மயமான சார்ந்திருத்தலை ஆழமாய்க் கொண்டிருப்பவர்களிடத்திலும் (churchianity) நாம் அனுதாபம் கொண்டிருக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் மேலானவைகளின் மீது ஆர்வம்கொண்டிருப்பவர்களாகக் கண்டுகொள்வதில் நாம் மகிழ்கின்றோம்; திருச்சபை மயமான சார்ந்திருத்தலிலிருந்து திரும்பி வந்துள்ளவர்களிடத்திலும் நாம் அனுதாபங்கொள்ள வேண்டும். காரணம் தற்போதைய சபை சூழ்நிலைகளின் கீழ் விசுவாசத்தினைத் தக்கவைத்துக்கொள்வது என்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் அறிவோம்; மற்றும் தவறான அபிப்பிராயம் கொண்டுள்ள மற்றவர்களிடத்திலும் நாம் அனுதாபங்கொள்ள வேண்டும். காரணம் வெதுவெதுப்பாய் இருப்பதைக்காட்டிலும் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்க விருப்பங்கொள்ளப்படுகிறதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உங்கள் உண்மையுள்ள ஊழியக்காரன்,
சி. டி. ரசல்.

சில கேள்விகளுக்கான பதில்:-

இவ்வேலை தொடர்பாக நாங்கள் பெற்றுக்கொண்டதான கேள்விகள் சிலவற்றிற்கு இங்குப் பொதுவில் பதிலளிப்பதற்குரிய வாய்ப்பினை எடுத்துக்கொள்கின்றோம்.

(1)இந்த வேலையில் சகோதரர்களும் ஈடுபட்டுக்கொள்ளலாமா? இந்த வேலையில் ஈடுபடும்படிக்குச் சகோதரர்களை நாங்கள் அழைக்கவில்லை ஏனெனில் சகோதரிகளால் செய்யமுடியாததும், ஆனால் சகோதரர்களால் செய்யமுடிகிறதுமான அநேக மற்றக் காரியங்களைச் சகோதரர்கள் பெற்றிருக்கின்றார்கள் என்று நாம் எண்ணுகின்றோம். இந்த வேலையில் நன்மை செய்கிறதைப்பார்க்கிலும், பாதகம் செய்கிறதற்கு ஏதுவான நிலையில் சாமார்த்தியமற்றச் சகோதரிகள் இருப்பினும், மிகவும் உதவிகரமாக, மிகவும் ஞானமாக சில சகோதரர்கள் காணப்படுகின்றார்கள் என்பது உண்மையாக இருப்பினும், சகோதரர்களைப் போலவே அல்லது அவர்களுக்கும் அதிகமாகவே சாமார்த்தியத்தை வெளிப்படுத்த முடிகிறவர்களாகச் சகோதரிகள் காணப்படுகின்றார்கள் என்று நாம் நம்புகின்றோம்; நாம் பொதுப்படையான வார்த்தைகளில் மாத்திரம் பேசுகின்றோம் மற்றும் சகோதரர்களால் இவ்வேலையைச் செய்யமுடிகிறதைக் காட்டிலும் சகோதரிகள் இவ்வேலையைச் சிறப்பாய்ச் செய்ய முடியும் என நம்புகின்றோம் மற்றும் இவ்வேலையானது இராஜாவுக்கான சேவையில் விசேஷமான ஒன்றினைச் சகோதரிகள் செய்வதற்கு இடமளிக்கின்றதாய் இருக்கின்றது.

(2) இம்மாதிரியான ஒரு வேலையில் மேய்ப்பர் ஒரு சகோதரியைத் தனது லெப்டினன்டாகத் தேர்ந்தெடுப்பது சரியான மற்றும் வேதவாக்கியங்களின் அடிப்படையிலான காரியமாக இருக்குமா?

இப்படியாகச் சகோதரிகள் பயன்படுத்தப்படலாம் என்பது கர்த்தருடைய போதனைகளுக்கு முழு இசைவிலே காணப்படுகின்றது என்று நம்புகின்றோம். ஏற்கெனவே சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது போன்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட அனைவருமே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கின்றனர். ஒரு சகோதரி பிரசங்கித்திடலாம் என்பதற்கான சூழ்நிலைகளை வரையறைக்குள்ளாக்குவது தகுதியானது என்று கர்த்தர் பரிசுத்த பவுலடிகளார் வாயிலாகக் கண்டுகொண்டுள்ளார் – அதாவது அவளது பிரசங்கித்தலானது பொது இடங்களில் பண்ணப்படும் ஊழியத்தின் தன்மையில் காணப்படக்கூடாது மற்றும் அவள் சபையில் போதகராகக் கருதப்படக்கூடாது. இதில் எதுவும் இங்கு நாம் குறிப்பிட்டுள்ளதான தனிப்பட்ட வகையான இவ்வேலையில் அவள் ஈடுபடுவதில் தடைவிதிப்பதில்லை.

(3) வேதாகம ஆராய்ச்சிக்கான வகுப்புகளைச் சகோதரிகள் ஒழுங்குப்பண்ணின பிற்பாடு, ஒருவேளை சபையில் அர்ப்பணிக்கப்பட்ட சகோதரன் யாரும் இல்லையெனில் அல்லது தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைக் கொடுப்பதற்கோ அல்லது வேறு ஏதேனும் உரைக்கொடுத்திடுவதற்கோ தகுதியானவர் யாரும் இல்லையெனில் என்ன செய்யப்பட வேண்டும்?

இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் இவ்வுதவியினை ஆற்றத்தக்கதாக அருகாமையிலுள்ள சபையார், தங்கள் மூப்பர்களில் ஒருவரை அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை அருகாமையில் சபை இல்லையெனில் அல்லது யாரும் உதவி செய்ய வரமுடியவில்லையெனில், சகோதரிகள் தங்களில் ஒரு சகோதரியைத் தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைக் கொடுப்பதற்கும், பிற்பாடு பெரோயா வேதாகம ஆராய்ச்சியினைத் தொடங்குவதற்கும், மேய்ப்பரது representative / வேலையாளாக செயல்படும்படிக்குத் தேர்ந்தெடுப்பதற்கு மேய்ப்பர் அங்கீகாரம் அளிக்கின்றார். அவள் தனது தலைக்கு முக்காடிட்டுக்கொண்டு தனது கடமைகளைச் செய்திட வேண்டும் மற்றும் இதன் முக்கியத்துவத்தைக்குறித்துக் கூட்டத்தாருக்கு விவரித்திட வேண்டும் மற்றும் சூழ்நிலையினுடைய தேவைக் காரணமாகவும், சில அர்ப்பணிக்கப்பட்ட சகோதரர் வழிநடத்துபவர் ஆகிடுவதற்கு அவசியமாய் இருக்கும் அறிவிலும், தகுதிகளிலும் வளர்வதுவரையிலும் மாத்திரமே, தான் இவ்வூழியம் புரிவதாக தெரிவித்துக்கொள்ள வேண்டும். இன்னுமாக அங்குக் கூடியிருப்பவர்கள் யாவருக்கும், சகோதரிகள் சபையில் போதிக்கக்கூடாது என்றுள்ள அப்போஸ்தலரின் கட்டளையை நினைவுபடுத்திட வேண்டும் மற்றும் கேள்விகளுடன் வந்திருக்கும் கூட்டத்தார் அடங்கிய ஒரு வகுப்பானது வேதமாணவர்களின் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சபையாகவோ அல்லது ஒரு எக்ளீசியாகவோ அல்லது கிறிஸ்துவின் சரீரமாகவோ புரிந்துகொள்ளப்படாமல், மாறாக சீக்கிரமாய் முதிர்ச்சி நிலைக்கு வளர்ந்திடுவார்கள் என்று நம்பப்படுகின்றதான கற்றுக்குட்டிகள் அடங்கிய வகுப்பாக மாத்திரமே புரிந்து கொள்ளப்படவேண்டும் என்றும் அவர்களுக்கு அவள் நினைப்பூட்டிட வேண்டும்.

(4) புதிய சகோதரர்களில் சிலரை அவ்வப்போது இவ்வகுப்புகளில் உரையாற்றிட வைப்பதின் மூலம் இவ்வேலையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படலாமா?

நிச்சயமாகவே இந்த வேலையில் கற்றுக்குட்டிகள் அறிமுகப்படுத்தக் கூடாது. கர்த்தர் இருதயத்தின் நல்நோக்கங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்கின்றார்; ஆனாலும் வசனத்தினுடைய அறிவுரைகளை வைத்துப்பார்க்கையில் நல்நோக்கங்களுக்கும் மேலாக அதிகமான விஷயங்கள் அவருக்கு ஊழியம் புரியும் விஷயத்தில் தேவைப்படுகின்றது. பொது ஊழியங்களுக்காகப் பேசுவதற்கான ஆற்றல் உடையவர்களும், இதோடுகூடச் சத்தியம் குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருப்பவர்களும், போதகசமர்த்தனாய் இருப்பவர்களும் மாத்திரமே – இத்தகையவர்கள் மாத்திரமே, சத்தியம் குறித்த அறிவில் சமீபக்காலமாகத்தான் கொஞ்சம் வந்திருப்பவர்களும், தப்பறையான கருத்துக்களினால் ஏறக்குறைய தவறான அபிப்பிராயமுள்ள மனங்களை உடையவர்களுமான ஜனங்களை ஆர்வமூட்டும் இந்த முக்கியமான வேலைக்காய் நியமிக்கப்பட வேண்டும். சபையிலேயே மிகவும் திறமிக்கவர்கள் இவ்வேலைக்குப் பொருத்தமானவர்களாய் இருப்பார்கள்.

சபையில் ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது வேறு ஏதோ சமயங்களிலோ பொது விரிவுரையாற்றுவதற்குக் கற்றுக்குட்டிகளானவர்கள் அழைக்கப்படுவதும் முற்றிலும் தவறான காரியமாய் இருக்கும். கர்த்தருடைய ஜனங்களும், பொது ஜனங்களும் bore / சலிப்பூட்டப்படக்கூடாது. சில தாலந்துகளை வெளிப்படுத்தும் இத்தகைய சகோதரர்கள் கற்றுக்கொள்வதற்கும், பயிற்சி எடுப்பதற்கும் ஊக்கம் ஊட்டப்பட வேண்டும். எனினும் மற்றவர்கள் மத்தியிலில்லாமல் தங்கள் மத்தியிலேயே பயிற்சி பண்ணிக்கொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே பரிந்துரைத்ததை மீண்டுமாகப் பரிந்துரைக்கின்றோம். அது என்னவெனில் கர்த்தருக்கான ஊழியத்திற்கென்று தாங்கள் தாலந்துகள் பெற்றிருப்பதாக உணர்ந்துகொள்ளும் அனுபவமற்றச் சகோதரர்கள், அவர்களைப்போன்றவர்கள் (தாலந்துகள் பெற்றிருப்பதாக உணர்ந்துகொள்ளும் அனுபவமற்றச் சகோதரர்கள்) மத்தியில் கூட்டங்கள் நடத்திட உற்சாகம் ஊட்டப்பட வேண்டும். இக்கூட்டங்களில் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கும், அவர்களது பாணி, தொனி, விதம், உபதேச ரீதியான அறிவு, வாதம் முதலானவைக்குறித்து அன்பாய் விமர்சனம் அளிக்கவும், நடுவராக ஓர் அனுபவமிக்க சகோதரனைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். இவ்வகுப்பில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் விமர்சிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும், எனினும் எளியவர்கள் சோர்வடைந்து மேலும் பிரயாசம் எடுக்காமல் போய்விடாதபடிக்கு விமர்சனங்கள் மிகவும் கடுமையாய்ப் பண்ணப்படக்கூடாது.

இந்தக் கற்றுக்குட்டிகள் தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரை ஆற்றுதலைப் பயிற்சி பண்ணிக் கொள்வது, அவர்களுக்கு நன்கு கற்பித்துக் கொடுக்கின்றதாய் இருக்கும் மற்றும் இது தெய்வீகத் திட்டத்தை எப்படி முன்வைப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்கான மிகவும் திறமிக்க வழிகளில் ஒன்றாய் இருக்கும் என்று நாம் பரிந்துரைக்கின்றோம். இவர்கள் தெய்வீகத் திட்டம் குறித்த செய்திகளுக்கான (outlines) குறிப்புகளைக் கவனமாய்ப் பின்பற்றிடுவதற்கு ஊக்கமூட்டப்பட வேண்டும்.

தெய்வீகத் திட்டம் குறித்த விளக்கவுரைக்கான வகுப்புகளின் நான்காம் இரவின்போது, கூட்டத்தார் வரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதான தெய்வீகத் திட்டத்தினுடைய ஒவ்வொரு அம்சம் தொடர்பாக கேள்விகள் எழுப்பும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும். மேலும் இத்தகைய ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு திறமிக்க ஆசிரியரே பதில் கொடுக்க முடிகின்றவராய் இருப்பார். இதற்குக் கற்றுக்குட்டியைவிட மிக அதிகமான நிலைமையில் காணப்பட வேண்டும் மற்றும் கர்த்தருடைய ஜனங்களில் முதிர்ச்சியடைந்து காணப்படுபவர்கள்கூடத் தொடர்ச்சியாய்ப் படிப்பதன் மூலமாய்த் தங்கள் மனங்களைப் புத்துயிர் பண்ணவேண்டியவர்களாய்க் காணப்படுகின்றனர்.