R4359 (page 93)
பவுலையும், பர்னபாவையும் தவிர அந்தியோகியாவில் மூன்று (சத்திய தூதளிக்கிறவர்கள்) பேச்சாளர்கள் இருந்தார்கள் என்றும், இவர்கள் சுயத்தை வெறுத்தும், [R4360 : page 94] ஊழியம் செய்தும் கொண்டிருக்கையில், மற்றவர்களுக்குத் தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் விசேஷித்த வேலையைப் பர்னபாவும், பவுலும் செய்திட வேண்டும் என்று பரிசுத்த ஆவியானது திருவுளம்பற்றினது என்று நம்முடைய இந்தப் பாடம் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இதிலிருந்து, தேவைக்கும் அதிகமாகவே (சத்திய தூதளிக்கிறவர்கள், பேச்சாளர்கள்) போதகர்கள், பெரோயா பாட வழிநடத்துனர்கள் முதலானவர்கள் காணப்படும் எந்த இடத்திலும் நாடப்பட வேண்டிய சரியான வழிமுறை தொடர்புடைய ஆலோசனையை நாம் பெற்றுக்கொள்கின்றோம். விலையேறப்பெற்ற நேரத்தையும், ஆற்றலையும் வீணடிப்பதற்குப் பதிலாக, அனைவருமே காரியத்தினுடைய உண்மையினை அடையாளம் கண்டுகொண்டு, இப்பாடத்தினுடைய அறிவுரைகளுக்கு இணங்கி, சிலரைக் கிறிஸ்தவத்தைப் பரப்பும் விசேஷித்த பிரயாசத்திற்காகப் பிரித்திட வேண்டும். கர்த்தருடைய வேலையின் மற்றும் ஊழியத்தின் சிலாக்கியங்களுடைய ஆழத்தினைக் கவனிக்கத் தவறுதல் என்பது சிலருக்குச் சோதனையாக அமைந்து, ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பதற்கும், பரிவோடு உதவுவதற்கும், கர்த்தருடைய சந்தோஷத்தில் பெருகிடுவதற்கும் மற்றும் சத்தியத்தைப் பரப்புவதற்கும் பதிலாக, குற்றம் கண்டுபிடிப்பதற்கும், சண்டையிடுவதற்கும், இருதயத்தைக் காயப்படுத்துவதற்கும் மற்றும் மனத்தளர்வடைவதற்கும் நேராய் வழிநடத்திவிடுகின்றது. கிறிஸ்துவின் ஒவ்வொரு அங்கத்தினனும், விசேஷமாகப் போதிக்கும் திறமையுள்ள ஒவ்வொருவரும், கர்த்தருடைய வேலைதொடர்புடைய விஷயத்தில் முடிந்தமட்டிலுமான பரந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொள்ளவும் மற்றும் சக ஊழியக்காரர் ஒவ்வொருவருடைய பிரயாசங்களை மிகவும் அன்பாயும், மனதார பாராட்டும் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளவும் நாட வேண்டும். இவ்வழிமுறையானது ஒருவரையொருவர் கட்டியெழுப்புவதற்கு ஏதுவாய் வழிநடத்திடும்; ஆனால் வேறுவிதமான வழிமுறையானது, உணர்வற்ற நிலைமைக்கும், வளர்ச்சியற்ற நிலைமைக்கும் வழிநடத்தி, ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்துப் போடுவதற்கும் நேராய் வழிநடத்திவிடும்.
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பிடும் இந்த ஊழியத்திற்குச் சபையார் அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்கள். கைகளை வைத்தல் என்பது ஏதேனும் ஆவிக்குரிய அல்லது மாய வல்லமைக் கொடுக்கப்பட்டதையும் குறிக்கிறதில்லை. அது அவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டதையும் குறிக்கிறதில்லை. இது அந்தியோகியாவிலுள்ள கர்த்தருடைய சபையார், இந்த இரண்டு மனுஷர்களையும் தேவனுடைய ஊழியக்காரர்களாக அங்கீகரித்ததையும் மற்றும் தங்களது பிரதிநிதிகளென அவர்கள் கடந்துபோவதற்குத் தாங்கள் அங்கீகரித்ததையும் மற்றும் தங்களது செலவில் அவர்கள் மற்றவர்களுக்குச் சுவிசேஷத்தின் செய்தியை எடுத்துச் செல்வதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆசாரியர்கள், பலியில் தங்களை அடையாளப்படுத்துகின்றதான விலங்குகள் மீது தங்கள் கைகளை வைப்பதுபோன்று சபையாரும், சத்தியத்தின் ஊழியத்தில் தங்களது பிரதிநிதியாகக் காணப்படப் போகின்றவர்கள் மீது தங்கள் கைகளை வைத்தார்கள்.
நற்செய்தியைப் பிரகடனப்படுத்துவதற்கெனப் பயண ஊழியர்களை அனுப்புகையில், பரிசுத்த ஆவியின் கட்டளை என்று நாம் நம்புகிறதையே இன்று நாம் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம். இவர்களும் “பிரசங்கிப்பதற்கு” நாங்கள் மனுஷனாலோ அல்லது மனுஷர்களாலோ அல்லது மனித அமைப்புகளாலோ அதிகாரமளிக்கப்படாமல், மாறாக “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் – அதாவது முன்புபோல் யூதர்களை மாத்திரமல்லாமல், சகல ஜாதிகளிலுமுள்ள ஜனங்களையும் – சீஷராக்குங்கள் என்று கூறினவராலே அதிகாரமளிக்கப்பட்டுள்ளோம்” என்ற காரியத்தை அப்போஸ்தலர்கள் போன்று தெரிவித்துக் கடந்துபோகின்றனர். “எங்களுடைய ஒப்புதலுடன், நீங்கள் எங்களது பிரதிநிதிகளாகக் கடந்து செல்லுங்கள் மற்றும் உங்களது செலவுகள் அனைத்தும் Tract -நிதியிலுள்ள எங்களது நன்கொடைகளினால் சந்திக்கப்படும். கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்யுங்கள் மற்றும் சொசைட்டியின் வழிவகைகள் வாயிலாக எங்களுக்குத் தகவல் அறிக்கைக் கொடுங்கள்” என்று சொல்வது, சபையார் பயண ஊழியர்கள் மீது கைகளை வைக்கின்றதாய் இருக்கின்றது.