காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1883 (page 247)

காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்

VIEWS FROM THE TOWER

கிறிஸ்துவின் சபையானது மற்றக் காரணங்களினால் என்பதைவிட, வழிநடத்துபவராக ஆகிடுவதற்கான பதவி ஆசை மற்றும் பெருமையின் காரணங்களினாலே அநேகமாக மிகவும் பாடுபட்டுள்ளது. தங்களில் யார் பெரியவனாய்க் கருதப்பட வேண்டுமென்று வாக்குவாதம் பண்ணினதற்காகச் சீஷர்கள் அவ்வப்போது கடிந்துகொள்ளப்பட்டார்கள் மற்றும் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ளும் இத்தகைய ஆவியானது, இதைப் பெற்றிருக்கும் அனைவரையும் வாக்களிக்கப்பட்ட இராஜ்யத்திற்குப் புறம்பாக்கிடும் என்று நமது கர்த்தர் அவர்களுக்குக் கூறினார். அவர்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் (மத்தேயு 20:25-28).

கிறிஸ்துவின் சபையில் உயர்ந்த ஸ்தானம் என்பது, “ஊழியக்காரனாய் இருப்பதாகும் மற்றும் தாம் சபையின் பிரதான ஊழியக்காரராய் அல்லது பணிவிடைக்காரராய் இருப்பதை அவர்தாமே கூறியுள்ளார். மேலும் “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள் என்றால் – அப்படியானால் கூட்டங்களை வழிநடத்துபவர்கள் தொடர்புடைய மற்றும் கர்த்தருடைய காரணங்களுக்கடுத்த நலன்கள் பற்றின மற்ற அனைத்துக் காரியங்கள் தொடர்புடைய கர்த்தருடைய சித்தம் குறித்த தங்களது பகுத்துணர்தலை வெளிப்படுத்திடுவதற்குச் சகோதரர்கள் அனைவரும் சமமான உரிமைப்பெற்றிருக்க வேண்டும். ஒரே போதகரான கிறிஸ்துவினால் சமமான நிலையில் வைக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆளுகைகளோ, தலைமைத்துவங்களோ, ஆதிக்கங்களோ காணப்படக்கூடாது. இருண்ட காலங்களில் சபையில் “குருமார் வகுப்பார் மற்றும் “சாதாரண வகுப்பார் என்று காணப்பட்ட பிரிவானது, கர்த்தரிடமிருந்தும், அப்போஸ்தலர்களிடமிருந்தும் உண்டாகாமல், மாறாக மாபெரும் சத்துருவாகிய சாத்தானால் வளர்க்கப்பட்ட பதவி ஆசையினால் உண்டானவையாகும்.

தற்கால சத்தியத்தில் களிகூரும் சகோதரர்களும், சகோதரிகளும், கடந்தகாலங்களில் கர்த்தருடைய காரணங்களுக்கு அதிகளவில் ஊறுவிளைவித்த அந்த நிலைமைகளுக்கு எதிராய் விழிப்பாய் இருப்பார்கள் என்று நாம் விசுவாசிக்கின்றோம்; கடந்த காலங்களில் கர்த்தருடைய காரணங்களுக்கு அதிகளவில் ஊறுவிளைவித்த அந்தக் காரியங்களானது, கண்ணுக்குப் புலப்படாமல் துவங்கி, பின் வழக்கமாக மாறி, பின் வழக்கமானது அடிமைத்தனமாகுவது வரையிலும் வளர்ந்தது; இந்த அடிமைத்தனமானது தேவனுடைய ஒழுங்குமுறையை மாறுபடுத்தி, அவருடைய பிள்ளைகள் அநேகருடைய தாலந்துகள் வளர்வதைத் தடைப்பண்ணி, சபையாரில் ஒன்று அல்லது இரண்டுபேர் தேவனுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆண்டிடுவதற்கு அனுமதிக்கின்றது, அதாவது (பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதலின் கீழ்) சபையார், தேவவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான ஊழியத்திற்கான தகுதிகளை உடையவர்களாய் யார் காணப்படுகின்றனர் என்று தங்களுக்கெனத் தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமையினைப் பெற்றிருக்கின்றனர் எனும் காரியத்தினை அடையாளம் கண்டுகொள்ளாமல் – இறுமாப்பாய் ஆண்டிடுவதற்கு அனுமதிக்கின்றது.

தேவனுடைய மந்தைக்கு ஊழியம்புரிவதற்குரிய தகுதியும், வைராக்கியமும் பெற்று, அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றதான சகோதரர் யாவரும், கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு உண்டாக்கின சுயாதீனங்களில் தலையிடுவதைக் கவனமாய்த் தவிர்த்துக்கொள்ளும்படிக்கு வலியுறுத்துகின்றோம். கனம்பண்ணுவதிலே ஒருவருக்கொருவர் முந்திகொள்கின்றதான தன்னடக்கத்தை மற்றும் தேவையான தாலந்துகள் காணப்படுவதற்கேற்ப, மற்றவர்கள் ஒவ்வொருவரையும் ஊழியத்தில் ஈடுபட வைக்க உதவுவதற்கு நாடுகின்றதான தன்னடக்கத்தைப் பெற்றிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம் மற்றும் ஈடுபலியின் மீது விசுவாசம் கொண்டிருப்பதாகவும், கர்த்தருடைய ஊழியத்திற்கென முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளதாகவும் அறிக்கைப்பண்ணுகிறவர்களில் பெரும்பான்மையானவர்களாகிலும், ஒருவரால் வழி நடத்தப்படும்படிக்கான விருப்பத்தினை வெளிப்படுத்தினால் தவிர, மற்றப்படி யாரும் ஒரு சிறு கூட்டத்தாரைக் கூட வழிநடத்திடுவதற்கு மறுத்திடும் தன்னடக்கத்தைக் கொண்டிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம். மேலும் இந்தத் தெரிந்தெடுத்தலானது, நிரந்தரமான ஒன்றாய்க் காணப்படக்கூடாது; தேவனுடைய ஜனங்களின் மனம் குறித்து அறிந்திடுவதற்குக் குறைந்த பட்சமாக வருடந்தோறுமாகிலும் நாடப்பட வேண்டும் மற்றும் பெரும்பான்மையானவர்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர் என்று எண்ணிடுவதற்குக் காரணங்கள் இருக்குமானால் (அதை அறிந்திடுவதற்கு) அடிக்கடி நாடப்படவேண்டும். மந்தையினுடைய சுயாதீனங்களைப் பாதுகாத்திடுங்கள்; ஏனெனில் அவை உங்களுடையதாய் இராமல், கிறிஸ்துவின் காரணங்களுக்கான சுயாதீனங்களாகும். “கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” (மத்தேயு 23:8).