R241 (Page 2)
ஆவியினுடைய அபிஷேகித்தலைப் பெற்றுக்கொண்டு மற்றும் இப்படியாய்க் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கத்தினர்களாய் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அனைவருமே பிரசங்கிக்க வேண்டும் என்று நாம் பதிலளிக்கின்றோம். தலை போலவே ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் – “சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கென அவர் என்னை அபிஷேகித்துள்ளார்” என்பது உண்மையாகவே இருக்கின்றது. நாம் ஒவ்வொருவருமே மற்றவர்களிடமிருந்து வேறுப்பட்ட விதத்தில் தாலந்துகளையும், வரங்களையும் பெற்றிருக்கின்றோம் மற்றும் நம்மில் எவருமே, நமது தலைப்போன்று பூரணமானவர்கள் அல்ல; ஆனாலும் ஒவ்வொருவனும் தன்னால் முடிந்தமட்டிலும் பிரசங்கிப்பதற்குரிய பொறுப்பினை உடையவனாய் இருக்கின்றான். சிலருக்குத் திரளான ஜனக்கூட்டங்களுக்குப் பிரசங்கிக்க முடியும்; வேறுசிலருக்கு இரண்டு அல்லது மூன்று பேருக்குப் பிரசங்கிக்க முடியும்; சிலருக்கு வீடு வீடாய்ச் சென்று பிரசங்கிக்க முடியும்; சிலருக்கு ஏற்றகாலத்தில் சில வார்த்தைகளைச் சொல்லிட முடியும்; சிலருக்குப் பிரதிகளை விநியோகித்திட முடியும்; சிலருக்கு மற்றவர்கள் பிரசங்கிக்க உதவத்தக்கதாக தங்களது உக்கிராணத்துவத்தின் கீழ்க்காணப்படும் அர்ப்பணிக்கப்பட்ட பணத்தைக்கொடுக்க முடியும். சிலருக்கு இவைகளில் அநேகவற்றைச் செய்ய முடியும் மற்றும் சிலருக்கு இவைகள் அனைத்தையும் செய்திட முடியும், மற்றும் அனைவராலுமே மறுரூபமாகுதலுக்கு ஏதுவான நற்செய்தியின் வல்லமையினைத் தங்கள் வாழ்க்கை மற்றும் வழக்கங்கள் மூலமாகப் பிரசங்கிக்க முடியும்; ஏனெனில் நாம் அனைவரும் மனுஷர் அனைவராலும் அறியப்படும் மற்றும் வாசிக்கப்படும் நிருபங்களாய் இருக்கின்றோம்.
நீங்கள் பிரசங்கித்துக்கொண்டிருக்கின்றீர்களா? பிரசங்கிப்பவர்களே அல்லாமல் வேறு எவரும் சிறுமந்தையில் காணப்படமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். உங்கள் தாலந்துகள் அனைத்தையும் கொண்டும் மற்றும் உங்கள் முழுப்பெலத்தோடும் நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்களா? பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஏற்ற காலத்தில், “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்று சொல்லக் கேட்பீர்கள். ஒருவேளை பிரசங்கிக்கவில்லையெனில் இப்போதே துவங்குங்கள்; நீங்கள் அபிஷேகிக்கப்படுவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்துவிட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் அர்ப்பணித்ததில் ஒரு பகுதியைத் திரும்ப எடுத்து வைத்துக்கொண்டு, உங்களால் ஜெயங்கொண்டவர்கள் ஆகிடமுடியாது.