R5703
பல்வேறு திசைகளிலிருந்து, பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளானது பெருகிவருகின்றதென நாம் கேள்விப்படுகின்றோம். இது மிகுந்த மனநிறைவைக் கொடுக்கின்றது; ஆனால் அதே சமயம் இது சில குறிப்பிட்ட சிரமங்களுக்குள்ளும் வழிநடத்துகின்றது. சபையின் எண்ணிக்கை இருபதுக்கு மேலாகக் காணப்படுகையில், இவ்வகுப்புகளானது சமாளிக்க முடியாதவைகளாகக் காணப்பட்டு, குறைவான ஆசீர்வாதத்தையும், உதவியையுமே அளிக்கின்றதாகுகின்றது. எவ்வளவுதான் திறமிக்கவராக வழிநடத்துபவர் காணப்பட்டாலும், குறைவான மணி நேரங்களில் பெரிய எண்ணிக்கையிலுள்ள சபைக்குப் பிரயோஜனம் உண்டுபண்ணிட முடியாது. நாம் அளிக்கும் யோசனை என்னவெனில்: முழுச்சபையாருமே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிடுவதற்கான விசேஷித்த ஒரு நேரத்தை அல்லது பல நேரங்களை ஒதுக்கி, அதில் திறமைகளை வெளிப்படுத்தும் சகோதரர்கள் பலரால் ஒன்று அல்லது அநேகம் சுருக்கமான உரைகள் அளித்திட ஏற்பாடு பண்ணப்படலாம். பின்னர் வாரப்பகுதிகளில், வகுப்புகளை வழிநடத்துவதற்கான திறமைகளை வெளிப்படுத்துகிற பல்வேறு சகோதரர்களின்கீழ்ப் பட்டணத்தினுடைய பல்வேறு பாகங்களிலுள்ள இல்லங்களில் வகுப்புகளை நடத்திடுங்கள். பத்து முதல் பதினைந்து பேரைக் கொண்டிருக்கும் இந்தப் புதிய வகுப்புகளானது, வளர்வதற்குரிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வார்கள் மற்றும் காலப்போக்கில் பிற்பாடு தனிச் சபைகளாகிடுவார்கள். இப்படியாகச் சத்தியத்தின் சாட்சியானது, அநேகம் எண்ணிக்கையானவர்களிடம் கடந்துசென்றிடும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஊழியம் நடைபெறும்; ஒவ்வொருவரும் எல்லாக் கூட்டங்களிலும் பங்கெடுப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிருப்பார்கள்.
இதே விதியானது புதன்கிழமை மாலை நடைபெறும் ஜெபம், துதி மற்றும் சாட்சிக் கூட்டத்திற்கும் பிரயோஜனமாய் இருக்கும். அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு சகோதரனுக்கும், சகோதரிக்கும் ஆராய்ச்சி வகுப்புகளிலும், சாட்சிக் கூட்டங்களிலும் பங்கெடுப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதன் முக்கியத்துவத்தினை நாம் ஒருபோதும் மறந்துபோக வேண்டாம். “உந்தன் இருதயத்தில் நீ விசுவாசிப்பாயானால், அதை நீ உன் வாயினாலே அறிக்கையிடு என்பதே தகுதியான உண்மைதன்மைக்கான கர்த்தருடைய ஆலோசனையாக இருக்கின்றது. இப்படியாய் உண்மையாய்க் காணப்படுபவர்களே பொதுவாக மிகுதியான ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்கிறவர்களாய் இருப்பார்கள்.