R1136 (Page 5)
வேதவாக்கியங்களானது தனிப்பட்ட குருமார் வகுப்பாரை அங்கீகரிப்பதில்லை, மாறாகக் கிறிஸ்துவின் முழுச்சபையாருமே ஆசாரியக்கூட்டத்தாராய் இருக்கின்றனர் என்றும், அப்போஸ்தலர்கள் மற்றும் கர்த்தர் கட்டளையிட்ட எதையும் தங்களுக்கு இருக்கும் திறமைக்கேற்ப செய்திடுவதற்கு ஒவ்வொருவருக்கும் மற்றும் அனைவருக்குமே ஒரே மாதிரி அதிகாரம் காணப்படுகின்றது என்றும் நாம் சுட்டிக்காண்பிக்கையில், நாம் ஒழுங்கின்மையை வலியுறுத்துவதாக யாரும் அனுமானித்திட வேண்டாம். ஒவ்வொரு சபையாரும், தங்கள் மத்தியில் நன்கு தகுதியுடையவர்களாய்க் காணப்படுபவர்கள் சிலரை இந்த ஊழியங்களுக்கெனத் தேர்ந்தெடுப்பது தகுதியானதேயாகும். ஆனால் இப்படியாக ஊழியம் புரிகிறவர், அவரை இப்படி ஊழியம்புரியும்படிக்குத் தேர்ந்தெடுத்த அவரது சகோதரரைக் காட்டிலும் உயர்ந்த ஒரு வகுப்பாருக்கு அல்லது ஜாதியாருக்கு உட்பட்டவர்களல்ல என்று எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். “கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.” சபையின் இத்தகைய ஊழியக்காரன் மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் பயபக்திக்குரியவரென அல்லது புனிதமானவரெனக் கருதப்படக்கூடாது; ஒருவேளை அவர் மிகவும் உண்மையுள்ள மற்றும் கிறிஸ்துவுக்கொத்த சாயலுடைய ஊழியக்காரனாகக் காணப்பட்டாலுங்கூட, அவர் “அவரது கிரியைகளினிமித்தமாக” மிக உயர்வாய் எண்ணப்பட வேண்டும்; காரணம் அவரது அன்பான மற்றும் உண்மையான ஊழியத்தினாலே ஒழிய, வேறெந்தக் காரணத்தினாலுமல்ல (1 தெசசோனிக்கேயர் 5:13). அவர் தேவனுடைய பார்வையில் “குருவாய்” இருப்பதில்லை; ஏனெனில் இத்தகைய எந்த வகுப்பாரையும் தேவன் அங்கீகரிக்கிறதில்லை மற்றும் அவரது வசனமானது இத்தகைய எந்த வேறுபாட்டையும் அங்கீகரிக்கிறதில்லை.
சபையின் இத்தகைய ஓர் ஊழியக்காரன் அல்லது வேலைக்காரன் பெற்றிருக்கும் எந்த “அதிகாரமும்,” அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரமாகவே இருக்கின்றது; கர்த்தருடைய சகோதரரில் எளிமையான சகோதரனாய்க் காணப்படுபவர் பெற்றிருப்பதைக்காட்டிலும் அதிகமான எந்த அதிகாரத்தை இந்த ஊழியக்காரர் பெற்றிருப்பதில்லை; சுவிசேஷத்தை அறிவிக்கவும் மற்றும் வேதவசனமானது செய்யும்படிக்குக் கட்டளையிடும் எதையும் அல்லது எல்லாவற்றையும் அவனவனுடைய தாலந்துகள், வாய்ப்புகளுக்கு ஏற்ப செய்திடுவதற்கு மற்றும் ஊழியம் புரியும்படிக்கு சகவிசுவாசி விரும்பிடுவதற்கும் ஏற்ப செய்திடுவதற்கு, முழுச்சபையிலுள்ள யாருக்கும் வேதவசனத்தினுடைய அதிகாரம் காணப்படுகின்றது (மத்தேயு 28:19,20). பிரசங்கித்திடுவதற்கோ அல்லது வேறுவிதத்தில் ஊழியம்புரிந்திடுவதற்கோ அதிகாரம் என்பது மற்ற ஊழியக்காரர்களாலோ அல்லது குருமார் பேரவைகளாலோ கொடுக்கப்பட முடியாது. ஒவ்வொரு இராஜரிக ஆசாரியன், அதிகாரத்தின் விஷயத்திலும், ஆசாரியத்துவத்திற்குரிய மதிப்பின் விஷயத்திலும் ஒருவருக்கொருவர் இணையானவர்களே; ஆனால் தாலந்துகள், அறிவு முதலானவைகளிலும், திறமை விஷயத்திலும் இவர்கள் ஒருவருக்கொருவர் சமமாய்க் காணப்படுவதில்லை. அனைவருக்கும் ஊழியக்காரர்களாய் ஊழியம்புரிந்திடுவதற்கென ஒருவர் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் காரியமானது, இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுக்கு இப்படியாய் உயர்வான ஊழியம்புரிந்திடுவதற்குரிய ஏதோ தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவை அனைவருக்குமான ஊழியத்திற்காகவும், பிரயோஜனத்திற்காகவும் அவர்களால் மனமுவந்து மற்றும் மனப்பூர்வமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது அல்லது சுட்டிக் காட்டுகின்றதாய் இருக்க வேண்டும்.